August 09, 2007

கார்ப்பண்யம்
மனத்தின் கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக் கொண்ட தளர்வும் துயரமும் அதன் கண் உண்டு"

- சுவாமி சித்பவானந்தர்

தமிழோசை

  • இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
  • மடுமாதா ஆலயத்திற்கான மடுக்கோவில் வீதி திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு
  • சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்க இலங்கை உத்தரவாதம்
  • இலங்கையின் கிழக்கே மிதிவெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்.... தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 08, 2007

இன்றைய குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
அறத்துப்பால் : மக்கட்பேறு

"உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் இரகசியம் முழுவதும் அடங்கியுள்ளது"

- சுவாமி விவேகானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 08 புதன்கிழமை 2007) "BBC" கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

புதிதாக வரப்போகும் டாடாவின் டைட்டேனியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை பற்றிய ஒரு கண்ணோட்டம்

Part II

August 07, 2007

  • 'நான்' எங்கிருந்து வருகிறேன்?
  • 'நான்' எதனை நோக்கிப் பயணிக்கிறேன்?
  • இந்த 'முதலுக்கும்' 'முடிவுக்கும்' இடையில் 'நான்' யார்?
  • எத்தனை கல்பகாலத்திற்கு 'நான்'?
  • விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான்' லீலைகளின் பிரதானமா?
  • பிரளயமற்றவனா?
  • முடிவென்பதில்லையா?
  • அனந்த சயனமற்ற உயிரா 'நான்'?
  • 'பிறவி பற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ' 'சுமந்து செல்கிறாய்.
  • உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்..
  • 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது.
  • ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை

அசட்டுப்பிள்ளையே! உன் பாதை முழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம்? கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ' அறிவாயாக!

- நீலக்கடல்

நாகரத்தினம் கிருஷ்ணா

இன்றைய குறள்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 07, செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஓவிய(ம்)த்தில் பெண்க(ளில்)ள்!!

August 06, 2007

இன்றைய குறள்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொல் கேளா தவர்

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

அறத்துப்பால் : மக்கட்பேறு

கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.

"பண்பட்ட மனதும், சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்துளதோ அவனே ஆரியன். இது போன்று துரை, ஜென்டில்மேன், அந்தணன், சாஹிப் முதலிய சொற்கள் மேன் மக்களது பண்பைக் குறிக்கும்"
- சுவாமி சித்பவானந்தர்

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 06 திங்கட்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள், வளைகுடாப் பகுதியில் உள்ள தமிழ்ப் பண்பலை வரிசையில் (KZSU Stanford 90.1 FM radio show) சமீபத்தில் தொகுத்து வழங்கிய "இசையும் ரசனையும்" என்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. அவரைப்பற்றி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர், நான் சமீபத்தில் 'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக எடுத்த நேர்முகத்தில், அவரைப்பற்றி ஏராளமான விசயங்கள் பகிர்ந்து கொண்டார். நீங்களும் படித்திருப்பீர்கள். அவருக்கு தற்போது வயது 72, இந்த வயதிலும் அவருடைய சுறுசுறுப்பு, தெளிவு, குரல்வளம், மொழிப்பற்று, தேர்ந்த அறிவு இன்னும் எவ்வளவோ! ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அவர் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி மற்றும் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் ஏற்கனவே தொகுத்து வழங்கிய 'பழமொழி' என்ற நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பான, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியையும் கேட்டுத் தங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அருமை நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். பாராட்டுக்கள் நண்பர் ஸ்ரீ அவர்களே!
Powered by eSnips.com

August 05, 2007

'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களை நான் எடுத்த செவ்வி

என்னைப் பொறுத்தவரை அவசியத்தின் காரணமாய் இடம் மாறினாலும் என் கொள்கையைப் பொறுத்தவரை நான் என்றுமே தமிழ்க் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பாதவள். இதனால் நான் அமெரிக்கக் கலாச்சார விரோதி என்பது பொருளல்ல. அவரவர் கலாச்சாரத்தைப் பின்பற்ற அவரவர்க்கு உரிமை உண்டு. "திணிக்கப் படுவதல்ல கலாச்சாரம்". நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தியையே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். லண்டனில் வட்டமேசை மாநாட்டிற்கு ஒரு இந்தியராகவே உடை அணிந்து சென்றது இந்தத் தலைமுறையினருக்கு எந்த அளவிற்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. பாரம்பரியக் கலாச்சாரம் அழிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதனால் நான் ஒரு conservative என்று முடிவெடுத்து விடவேண்டாம். "புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்ளவேண்டாம்" என்பதுதான் என் கருத்து. தொடாந்து படிக்க இணைப்பில் செல்க..

சென்னையிலிருந்து மும்பைக்கு ஆட்டோவில் பயணம்!

76 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, லண்டன் போன்ற 8 நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்கு சுமார் 1921 கி.மீ. தூரம் 3 மாநிலங்களின் வழியாகச் செல்கின்றனர். சமூக சேவையை கருத்தில்கொண்டு நடைபெறுகிறது. நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல், கிராம மக்களிடம் நெருங்கிப்பழகுதல் போன்றவை இந்தப்பயணத்தில் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள்!

தமிழோசை

  • இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
  • அகதிகளாக வந்த 19 பேர் இராமேஸ்வரத்திலிருந்து தப்பி மன்னார் சென்றுவிட்டனர்
  • புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் லண்டனில் நாடகம்
  • பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கு மேல் மக்கள் இடம் பெயர்வு
  • ஏராளமானோர் வீடிழந்தனர்
  • பலி எண்ணிக்கை உயர்வு போன்ற
  • இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலின் ஆகஸ்ட் மாதத் திருவிழாவையொட்டி, ஒரு வருடகாலமாக மூடப்பட்டிருந்த நேரடியாகச் செல்லும் வீதி வரும் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது போன்ற

இன்றைய (ஆகஸ்ட் 05 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" கேட்க செய்திகள் இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்

அறத்துப்பால் : மக்கட்பேறு

"நான் ஒரு வெண்மேகம் எனக்கு வடிவம் கிடையாது, பாதை கிடையாது. மனமோ எதிர்காலமோ கிடையாது. இங்கே, இப்போது மட்டும் இருப்பது. காரணமற்ற ஒரு மனமே மதி உணர்வுள்ளது. சொந்தமான தடம் கிடையாது. அலைந்து திரிவது"
- ஓஷோ

இந்திய மற்றும் தமிழகச் சாலைகள் பற்றிய ஒரு அலசல்

இட ஒதுக்கீடு பற்றிய ஒரு பார்வை

பொருளாதார வளர்ச்சிபற்றிய ஒரு ஆய்வு

நீங்கள் ஒருவருக்கு பணிந்து நடக்கும் சூழ்நிலை வந்தால், அவர்களிடமிருந்து விலகி வேண்டுமானால் இருக்கலாம். அதற்காக பயந்து ஒதுங்கிவிடக்கூடாது. உங்களது முழு வலிமை, நேர்மை மற்றும் பொறுமையை பயன்படுத்தி அச்சத்தை மனதில் இருந்து அறவே விலக்கிவிட வேண்டும். அச்சம் கொண்டுள்ளவர்களைக் கண்டால், கோழை கூட மிரட்டி விளையாடுவான். எனவே, அச்சம் தவிருங்கள்.

- ஸ்ரீஅன்னை

இன்றைய குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

அறத்துப்பால் : மக்கட்பேறு

August 04, 2007

மரணதண்டனை அல்லது தூக்குத்தண்டனை தேவையா?

நான் கடந்த வாரம் பதிவு செய்த "மனிதம் ஏன் மரணதண்டனையை எதிர்க்கிறது" என்ற பதிவிற்கு வந்த மாற்றுக்கருத்தை இங்கே தருகிறேன். படித்துவிட்டு நீங்கள் வேறு ஏதாவது சொல்ல நினைத்தால் அதனை இங்கே தயவு செய்து பதிவு செய்யவும்.
மரியாதைக்குரிய திரு.சம்பத் அவர்கள் எழுதியது....
"மரண தண்டனை பற்றிய விளக்கம்..படித்தேன்.. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால்.. உங்களின் மனித உணர்வை என் கருத்துக்கள் பாதிக்கலாம்..
ஒரு 3 வயது சின்ன சிறு பெண் குழந்தையை..கற்பழித்து..சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி..சாக்கடையில் போட்ட ஒருத்தனுக்கு என்ன தண்டனை..கொடுக்கலாம்..ஒரு 5 வருடம்..அல்லது ஆயுள் தண்டனை போதுமா..?..3 வயது சிசுவை கொன்ற அந்த கொடியவனை, எப்படி கொன்றாலும் தப்பில்லை..

250 பேரை குண்டு வைத்து கொன்ற கொலைகாரனுக்கு..தூக்கு தண்டனை கொடுப்பது தவறா?...அதை எப்படிகொடூரத்தின் உச்சம் என்று சொல்ல முடியும்??..ஒரு நரகாசுரனைக் கொன்று மக்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகத்தான் கருதப்படவேண்டும்..

நன்றியுடன் : சம்பத் (ஆதியக்குடியான்) - சவூதி அரேபியா



அதாவது சமீபத்தில் நான் படித்த ஒரு ஆராய்ச்சிக்குறிப்பொன்று, "மரணதண்டனையின் மூலமாக குற்றங்கள் குறைவதாகத் தெரிவிக்கிறது".


ஆனாலும் குற்றம் புரிந்த அந்தக் குற்றவாளி திருந்தி வாழ ஒரு வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில், இந்த அற்புதமான மனிதப் பிறவியை அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்ற மனிதாபிமானம் மேலோங்கி நிற்பதால்தான் மரணதண்டனை வேண்டாம், அதனைக்குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி, நடந்த தவற்றை உணரவைக்கலாம் என்பது இந்தச் சிறியேனின் தாழ்மையான கருத்து என்பதை இங்கே சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 04 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்கhttp://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இன்றைய குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களில் விளைவாக வரக்கூடியவை

அறத்துப்பால் : மக்கட்பேறு

து(ப்)பாய்!!?

துபாயில் பணிபுரிய ஆசைப்படும் ஒவ்வொரு இந்தியனும் பார்க்கவேண்டிய ஒரு பதிவு இது. அது சிலருக்குச் சொர்க்கம்! பலருக்கு நரகம்!! பிரமிக்க வைக்கும் நகரம்!!! அழுத்துக! பெட்டிக்குள் உள்ள து(ப்)பாய்
து(ப்)பாய்
து(ப்)பாய்.pps
Hosted by eSnips

பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

August 03, 2007

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இந்த மின்னஞ்சலைக் கட்டாயம் படியுங்கள்!!
Date: Aug 3, 2007 11:08 AM
Subject: iConnect
Dear Customer,Recently you must have seen reports of phishing attacks on several Banks' websites. The customer is led to believe that the emails are sent from an authentic site which resembles the Banks' website. Phishing is a technique employed by scamsters to illegally procure personal information like account numbers, debit card numbers, Internet banking user ids and passwords, etc. The most frequently used method is to send a spam email to a large database of email ids say, all gmail ids or all yahoo ids. The spam email is designed in such a way as to look exactly like an email sent by the targeted company / bank. We would also like to inform you that our Bank's name will be soon changed to AXIS BANK LTD. Citing the name change, in case you receive any e-mail or a phone call claiming/appearing to be from the bank, requiring to provide your personal sensitive informations pertaining to your bank account (such as account number, debit card number, iConnect login ID & password), we request you to ignore the same. PLEASE DO NOT PROVIDE ANY SENSITIVE INFORMATION. PLEASE ALSO REPORT THE DETAILS OF SUCH SUSPICIOUS E-MAIL TO THE NEAREST BRANCH OR MAIL TO ibrm@utibank.co.in . It is our bank's policy not to seek/send such information through email OR phone call.
Please be assured that our commitment towards customer satisfaction is absolute and shall endeavor ourselves to bring to your notice any such suspicious activity to protect our bank and our customers. Meanwhile, we also expect you to follow some safe Banking practices.
Tips for password security:
1.Access iConnect only by visiting our website http://www.utibank.com\
2.It is advisable to have different login and transaction passwords.
3.Change your passwords at frequent intervals.
4.Never disclose your passwords to anyone, including family, friends and people claiming to be bank employees.
5.If your passwords are lost or stolen immediately, report to the nearest branch or call our phone banking unit or mail at mailto:ibrm@utibank.co.in\
We assure you of our best services and attention and look forward towards having you as our esteemed customer.
Regards
IBRM Desk

அற்புதமான கட்டுரை





நாலடியார்

1. அறத்துப்பால்

1.12 மெய்ம்மை


இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை
தன்னிடம் இல்லாத ஒரு பொருளை இல்லை என்று சொல்லிவிடுவது எவருக்கும் தீமை அல்ல, அது இயற்கைக் குணமாகும். அவ்வாறு இல்லாமல் தருவேன் என்று பேச்சளவில் சொல்லி, அப்படிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருவர் செய்த நன்றியை மறந்தவர் செய்யும் தவறுக்கு ஒப்பாகும்


- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை
To say he has not that which he does not really possess is no harm to any one. It is the usage of the world.To lie standing or running, that the desire (of others) may fail, O thou who hast rows of bracelets! hath evil more than that of those who have destroyed a good thing done


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இந்தியச் சாலைகள், குறிப்பாகத் தமிழகத்தின் சாலைகள் பற்றிய ஒரு ஆய்வு

"மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணம் ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்த செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எனவே, அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. அஞ்சாமையே ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும். எனவே, அச்சம் எனும் நோயை விரட்ட வேண்டும்"

- ஸ்ரீஅன்னை

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 03 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்" ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தையென்ன? பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். முன்னால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவர்களுடைய பத்திரிகைகளில் கவனம் செலுத்தப்போகிறாராம்....பார்க்க வீடியோ!

August 02, 2007

தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி

பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள். நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை" இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"

தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி

பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை"
இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"

அமெரிக்கா : மினியாபொலிஸ் I 35 என்ற நெடுஞ்சாலை பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ

அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ

அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்த.... வீடியோ

"பாதையைத் தேடாதே.. உருவாக்கு"
உலகத்தின் புனிதமான நீர் உழைப்பாளனின் வியர்வை

- புரட்சியாளர் லெனின்

இன்றைய குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்படையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது

அறத்துப்பால் : மக்கட்பேறு

தமிழோசை

சில மணி நேரங்களுக்கு முன்...

அமெரிக்காவின் மினியாபோலிஸ் என்ற இடத்தில் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் இடிந்து மிஸிசிபி ஆற்றுக்குள் விழுந்து ஏராளமானோர் பலி, மிகவும் வாகன நெருக்கடியான நேரத்தில் இடிந்து விழுந்ததால் பலர் போன இடம் தெரியவில்லை.
மிகவும் பரிதாபத்துக்குரிய அமெரிக்க விபத்துக்களில் இதுவும் ஒன்று. இதுபற்றிய செய்தியை முழுவதுமாகப் பார்க்க இந்த இணைப்பில் செல்க...http://abcnews.go.com/

August 01, 2007

இன்றைய குறள்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

அறத்துப்பால் : மக்கட்பேறு

"மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்!"

- காந்தியடிகள்

தமிழோசை

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 153 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, மதானி விடுதலை : மதானி விடுதலை செய்யப்பட்டிருப்பதை தாம் எதிர்பார்த்ததாகக் கூறிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல. கணேசன், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மதானிக்கு எதிராக வலுவான வாதங்களை வைத்து வாதாடத் தவறிவிட்டதாகத் தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இன்றைய (ஆகஸ்ட் 01 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

July 31, 2007

எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். இந்தப்பிஞ்சு ஒரு அன்னைத் தெரசாவாகலாம், அன்னை இந்திராவாகலாம்.... என்று மாறும் இந்த அவலம் நமது இந்திய மண்ணில்?





"பிடித்தவைகளைப் பிடித்துக்கொண்டு, பிடிப்போடு, பிடித்தவைகளுக்கே பெருமை சேர்க்கும் கீதாவை பல கிரீடங்கள் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை"


இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal

எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி சேர்ந்து பாடியவை

Powered by eSnips.com

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டா தரணி பகுதி 3

"தயாநிதி மாறனும் தற்போதைய மந்திரியும்" IV

மலையாள நண்பர் ஒருவரின் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்!!

Powered by eSnips.com

படித்ததில் கனத்தது!!


இன்றைய குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

மனிதம் ஏன் மரண தண்டனையை எதிர்க்கிறது?

"மரண தண்டனை என்பது"
  • மனித உரிமையை முற்றிலும் அழிக்கிறது.
  • மனித வதையின் (Torture) எல்லை
  • கொடூரத்தின் உச்சம்
  • சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடு அரசால் நடத்தப்படும் கொலை
  • குற்றம் சாட்டப் பெற்றவருக்கு மறு சீர்திருத்தம் அடியோடு இல்லாமல் போகிறது.
  • பெரும்பாலான சமயங்களில் இதற்கு ஆட்படுவோர் படிப்பறிவு அற்றவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், இனப் போராளிகள் மற்றும் மதப் பற்றாளர்கள் மட்டுமே
  • சில சமயங்களில் நீதி தவறும் பட்சத்தில், தண்டிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பே இல்லை.
- மனிதம்

சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கால சிறை தண்டனை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டார். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில், 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கு மீதான தீர்ப்பு படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள், குண்டுவெடிப்புக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை, சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே. 56 ரக துப்பாக்கி மற்றும் 9 எம்எம் பிஸ்டல் ஆகியவை வைத்திருந்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு சிறை தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார்.
முதல் முறை குற்றம் புரிந்தவர்களுக்கான பாதுகாப்பு சட்டப்படி தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
மெசப்பட்டோமியா :

உலகின் மிகப் பழமையான் நாகரீகங்களில் மெசப்பட்டோமியா நாகரீகமும் ஒன்று. இன்றைய இராக் பகுதிதான் அன்றைய காலத்தில் மெசப்பட்டோமியா என்று அழைக்கப்பட்டது. அந்த நாகரீகம் மற்றும் வளர்ச்சியில் டைகரிஸ் மற்றும் யூபிரிட்டிஸ் நதிகள் பெரும் பங்கு வகித்தன. இவ்வாறு வரலாற்று சிறப்பு வாய்ந்த டைகரிஸ் நதியில் இன்று பிணங்கள் மிதப்பது சர்வசாதாரணமான காட்சியாக இருக்கிறது. தினம் தினம் பலரது உடல்கள் அந்த நதியில் இருந்து கண்டெடுக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்த பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.தொடர்ந்து இன்றைய தமிழோசை (ஜுலை 31 செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

நாமக்கல் கவிஞர்

"இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.

அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.

புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.

July 30, 2007

செல்போனா! ஐயோ வேண்டாம்!! எச்சரிக்கை!!!

நன்றி : நண்பர் தொண்டி முகமது அலி - சவூதி அரேபியா (NPC)

செல்போன் என்பது அத்யாவசியமான ஒன்றாகிப்போன இன்றையச் சூழலில், கோவில் வாசலில் பிச்சைக்காரர்களிடம் சில்லறை இல்லையப்பா என பத்து ரூபாய் நோட்டைக் காட்டினால், அவர் "சார் கொஞ்சம் இருங்க!...... ஹலோ! தம்பி நான் கோயில் வாசல்ல இருந்து "குருசாமி" பேசுறேன், ஒரு பத்து ரூபாய்க்கி சில்லறை எடுத்துட்டு வா, நான் சாயாந்தரம் வந்து மொத்தமா கணக்க சரி பண்ணிர்றேன்" என்று தன் செல்போனில் யாரிடமோ பேசி நொடிப்பொழுதில் பையன் சில்லறையோடு வந்து நிற்க, அடுத்த நொடியில் நமது கையில் ஒரு ரூபாய் போக ஒன்பது ரூபாய் பாக்கியைக் கணகச்சிதமாகத் திணித்துவிட்டு போகச்சொல்லும் காலமாகி விட்டது. என்ன செய்ய? அனைவரும் அவரவர் தொழிலில் அதிபர்களாகி விட்டனர். ஆனால் ஆபத்து எங்கு காத்திருக்கிறதென்றால், நீண்ட நேரம் காதுகளில் செல்போனை வைத்துப்பேசி, கழுத்து ஒரு பக்கம் இழுத்து, காக்காவலிப்பு வந்தவர்போல நடப்பது போய், மூளையில் கட்டி, புற்றுநோய் அளவுக்குக் கொண்டுபோய்விடுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
எனது மரியாதைக்குரிய நண்பர் முகமது அலி (NPC) அவர்கள் சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பி வைத்த இந்தத் தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபற்றி முழுமையாகத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க:http://navneethsmart.googlepages.com/MobilePhoneAlert.tif

வைத்தார்கள் ஆப்பு

அமெரிக்காவில் 'ஸ்பைக்' (Spike) என்றொரு தொலைக்காட்சிச் சேனல் இருக்கிறது. அதில் "The World's Amazing Videos and The World's Wildest Police Videos” என்றொரு நிகழ்ச்சி. உலகத்தில் நடந்த மிக அபூர்வமான விசயங்களை யாராவது வீடியோவில் திட்டமிட்டோ, எதிர்பாரா விதமாகவோ பதிவு செய்து வைத்திருந்தால் அதனை இவர்கள் விலைக்கு வாங்கித் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சாதாரணமாக திருடு, கொலை, கொள்ளை, கத்திமுனையில் கடத்தல், வாகன விபத்து, போலீஸ் விரட்டிப்பிடிப்பது, மழை, வெள்ளம் மற்றும் தீ விபத்துக்களின் போது சிக்கிக்கொண்டவர்களை தீயணைப்பு வீரர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டுக் காப்பாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க முடியும். மேலும் பல நாடுகளில் நடந்த அரசியல் கட்சிகளின் வேலைநிறுத்தம், ஊர்வலம், கலவரம், அவ்வப்போது நடைபெற்ற அடிதடி, பாராளுமன்ற, சட்டமன்ற வளாகங்களுக்குள் நடக்கும் கோமாளித்தனம் அனைத்தும் பார்க்க முடியும்.


இந்த நிகழ்ச்சியின் முக்கியக் காரணங்கள் : குற்றங்களைக் குறைப்பதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான். இதில் பல நாடுகளின் பாராளுமன்ற சண்டைக்காட்சிகள் இடம்பெறுவதுண்டு. நான் இந்தியாவில் இருக்கும்போது நமது சட்டமன்ற, பாராளுமன்றக் காட்சிகளை சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் படித்ததோடு சரி, திரைப்படங்களில் சில காட்சிகளையும் பார்த்ததுண்டு. ஆனால் நடந்த உண்மைச் சம்பவங்களை நான் பார்த்ததில்லை. “நல்லவேளை! நமது இந்தியா இப்படியெல்லாம் இல்லை! நடந்திருக்கும! ஆனால் இவ்வளவு மோசமாக இருக்காது என்று சில காட்சிகளைப் பார்க்கும்போது நினைத்துப் பெருமைப்பட்டிருக்கிறேன். வைத்தார்கள் ஆப்பு. சமீபத்தில் வேறொரு ஊடகத்தின் வாயிலாக நான் அந்த வீடியோவைப் பார்த்து ஆடிப்போனேன்! உங்களுக்கு "எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல” என்பது போல் இருந்தது. நீங்களும் பாருங்கள்!!


நாட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருக்கையில்.....பாராளுமன்றம் செல்பவர்களின் சொகுசு வாழ்க்கையையும் தெரிந்து கொள்வோம்.

Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000
Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free
Electricity costs at home : Free up to 50,000 units
Local phone call charge : Free up to 1 ,70,000 calls.
TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]
TOTAL expense for 5 years : 1,60,00,000

For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES…..

This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:




நாலடியார்

1. அறத்துப்பால்

1.11 பழவினை

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை
போன பிறவியில் செய்த நன்மை தீமையின் பலனால் வந்துசேரும் துன்பத்தைப் போக்க முனிவர்களால் கூட முடியாது. பெறக்கூடிய இன்பமும் அப்படியே! விதி வசத்தால் அமையும். மழையைப் பெய்ய வைப்பாரும் இல்லை. மழை அதிகமாகப் பெய்தால் நிறுத்துவாரும் இல்லை


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
The effect of actions done in a former birth.
To avoid those things which are to happen, or to detain those who are to depart, is alike impossible even to saints, even as there is none who can give rain out of season, or prevent its falling in season.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

1992 ஆம் வருஷம் எவரெஸ்ட் ஏறத் தேர்வானேன். அந்த வருஷம் மே 12 ஆம் தேதியை மறக்கவே முடியாது. காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டு, கடவுளை நினைத்துக் கொண்டு ஒருவழியாக ஏறிவிட்டேன். அந்த உயரத்துல எனக்கு எதுவுமே புரியலை. அந்த உயரத்துக்குப் போன பிறகுதான் மனிதர்களான நமது எல்லைகள் என்னங்கிற பயம் வந்தது. கரணம் தப்பினா மரணம்-ங்கிற நிலமையில் ஒருவழியாகக் கொடியை ஏற்றி விட்டுத் திரும்பி விட்டேன். கடவுளுக்குப் பக்கத்துல போய் வந்த மாதிரி ஓர் உணர்வு
சந்தோஷ் யாதவ்
எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால் பதித்த உலகின் முதல் பெண்

இன்றைய குறள்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 30 திங்கட்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

வானம் வசப்படும்!!

"சாதனையாளர்கள் செய்வதைப் புதுமையாகச்செய்வர்"
(Winners Dont Do Different Things But They Do Things Differently) என்பார் ஷிவ் கேரா. மனிதப்பிறவி என்பது மகத்தானது, அதிலும் எந்தக் குறையுமில்லாமல் பிறப்பதென்பது கடவுள் சித்தம் என்று நாம் நினைக்கிறோம். மனிதப்பிறவி மகத்தானதுதான். ஆனால் குறை என்பது மனதில் மட்டுமே இருக்கக்கூடாது, மனதில் தன்னம்பிக்கையும், உறுதியும், விடாமுயற்சியும், பொறுமையும் இருந்தால் சிகரம் என்ன? வானமே வசப்படும்!! இது வெறும் வாய் ஜாலம் இல்லை. இந்த வீடியோப் பதிவைப்பார்க்கும்போது கண்களின் கடைசி விளிம்பில் கண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லைதான்! ஆனால் இதயத்துக்குள் எங்கோ ஒரு மூலையில் மின்சாரம் பாய்வதையும் மறுக்க முடியவில்லை. நன்றி : நெடுவாசல் சுரேஷ் - பூனா, இந்தியா

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் : ஆனால் இங்கு "உயிருக்கு உயிர்"
இந்தியா போன்ற பாரம்பரியமும், மனிதாபிமானமும் மிக்க நாடுகளில் கடும் துன்பம் இழைத்த, கொடூரமான தீவிரவாத செயல்கள் புரிந்த எத்தனையோ குற்றவாளிகளுக்குக்கூட, தூக்குத்தண்டனை மற்றும் மரணதண்டனை போன்றவற்றைக் குறைத்து தவறிழைத்தவர்களுக்கு, திருந்தி மறுபடியும் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப் பரிந்துரைத்துப் போராடிவரும் மனித உரிமை மற்றும் தன்னார்வக்குழுக்கள் அன்றாடம் முளைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கணினிக் காலத்தில், மனித உயிரின் மதிப்புத்தெரியாத அவலம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மனிதாபிமானத்துக்கும் சவூதி மக்களுக்கும் தூரம் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது!! ஒரு குழந்தை இறந்ததற்குக் காரணம் இன்னொரு குழந்தை உண்மைதான் என்றாலும், கொலைக்குக் காரணமான குழந்தையையும் கொன்றுவிடுவதால், கொலைசெய்யப்பட்ட குழந்தை திரும்பி வரப் போகிறதா என்று ஒரு கணம் அந்தப் பெற்றோர் யோசித்திருந்தால், இன்னொரு சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுவிடும். மேலும் மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்....எல்லாவற்றுக்கும் மேலாக புனிதர் நபிகள் நாயகம் நடமாடிய இந்தச் சவூதி மண்ணில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பறிக்கப்படப்போகிறதோ??
ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி?
இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மறுத்துவிட்டதால் அவரைக் காப்பாற்றும் இலங்கை வெளிநாட்டமைச்சின் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது.

இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் உசைன் பைலா பணிப்பெண்ணின் பெற்றோருடன் சவுதி சென்றார்.

அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து றிசானாவை மன்னித்து விடுதலையாக்கும்படி கேட்டபோதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசானாவின் பெற்றோரும் பிரதி அமைச்சர் உசைன் பைலாவும் நாடு திரும்பி விட்டனர்.
மூவருக்கு மரண தண்டனை:
சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பெண் குழந்தை ஒன்றை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரு இலங்கையர்கள் உட்பட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பெண்ணாவார். இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து சர்வதேச மன்னிப்பு சபையிடம் புகார் செய்துள்ளனர்.

இலங்கைப் பெண்ணான ஹெல்மா நிஸ்ஸா அவரது கணவன் நௌஸாப் மற்றும் இலங்கையரான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவருமே சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இம்மூவரும் சவூதி அரேபியாவில் பொலிஸாரின் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளான நிலையும் காணப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு தற்போது மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள்வதன் காரணமாக இவ்வாண்டு இதுவரை 103 பேர் மரண தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை, சிரச்சேதம் செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

July 29, 2007

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க.முத்து உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க.முத்து. இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்க விரும்பிய மு.க. முத்து, முரசொலி மாறனின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட "பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது, எம்.ஜி.ஆருக்கு இணையாக மு.க. முத்துவை களம் இறக்க கருணாநிதி முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு, "பூக்காரி', "சமையல்காரன்', "அணையா விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். அதன்பின்பு, திரைத்துறையில் இருந்து விலகினார். அரசியல் வானில் தனது தந்தை மின்னினாலும், அதன் கவர்ச்சியில் ஈர்க்கப்படாமல் ஒதுங்கியே இருந்தார். 1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் சேர்ந்தார் மு.க.முத்து. அப்போது, அவருக்கு ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதி வழங்கினார். அதிமுகவில் இணைந்தாலும், கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி, டாக்டராக உள்ளார்.
உடல்நலக் குறைவு: கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை மு.க.முத்து சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்தவுடன் காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு நேரில் சென்று மு.க.முத்துவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டாக்டர் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, தங்கை தேன்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிகள் ரத்து: மு.க.முத்துவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை மாலையில் இருந்து தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். மு.க. முத்துவின் அருகிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என எழும்பூர் நீதிமன்ற விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

"கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறை மனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது"

- சுவாமி சித்பவானந்தர்

ஒரே குடியரசுத்தலைவன்!

இவன்
முதல்க்குடிமகன் மட்டுமல்ல,
கடைசிக்குடிமகனும்கூட
ஆம்!
எங்களுக்கு வேண்டாம்
இனியொரு குடியரசுத்தலைவன்,
இந்த சிரிப்பழகன்,
சிகரம் தொட்டவன் போதும்
எங்கள் இந்தியாவை
நாங்கள் கற்பனைக்கெட்டாத்
தூரத்துக்குக்கொண்டு செல்வோம்!
இந்த வாழும் தெய்வம்
பிறந்த மண்ணில் பிறந்ததற்காகவும்,
அவனருகிலேயே
வசிக்க முடிந்ததற்காகவும்
பெருமையடைகிறேன்! பேறு பெற்றேன்!!
ஜெய்ஹிந்த்!!
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த அன்றே சென்னைக்கு அப்துல் கலாம் வந்திறங்கிய போது முகம் கொள்ளாத சிரிப்போடு இருந்தார். அவரைச் சந்திக்க வரிசையில் நின்றிருந்த விசிட்டர்களில் ஒரு பெண்மணி, கலாமிடம் உற்சாகமாக சில வார்த்தகளைச் சொன்னபடியே, அழகிய ஜரிகைக் காகிதத்தில் சுற்றிய ஏதோ ஒரு பரிசுப் பொருளை அவரிடம் அளிக்க... "என்ன இது" என்று கேட்டார் அப்ல்கலாம். ஏதோ "ஒரு விலை மதிக்கமுடியாத பரிசு" என்று அந்தப் பெண்மணி சொல்ல... படக்கென்று கலாமின் முகத்திலிருந்த சிரிப்பு மாறியது. “இப்படியெல்லாம் செய்யக் கூடாது” என்று சற்றே கடுமயாகச் சொல்லி... பரிசை அந்தப் பெண்மணியிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, வேகமாக அவரைத் தாண்டிப் போனாராம். அன்று இரவே கிண்டி அண்ணா பல்கலக்கழகத்தின் விருந்தினர் மாளிகைக்குப்போன கலாம், மறுபடி ஜாலி மூடுக்குத் திரும்பியிருந்தார். ஜனாதிபதி “புரோட்டோகால்” இல்லாத அந்தச் சுதந்திரத்தை வெகுவாகவே ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தார். தன்னை நெருங்கிய பேராசிரியர் கஷீம் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் உற்சாகமாகக் கை குலுக்கி, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார். சிலர் பாசத்தோடு கட்டியணைக்க... அதற்கும் பிகு எதுவும் இல்லாமல் அனுமதித்தார். உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஐயா! அஞ்சு வருஷத்க்கு முன்னாடி, குடியரசுத் தலைவர் பதவிக்கு, உங்க பெயர் பரிந்துரைக்கப்பட்டதுமே அதை முதல்ச் செய்தியாகச் சொன்னது நான்தான். அதுவும் இதே இடத்தில்தான் சொன்னேன்... டெல்லிக்கு உங்களுக்கு லைன் போட்டுக் கொடுத்ததும் நான்தான்” என்று மலரும் நினவூட்ட... கலாம் கண்கள் லேசாகப் பனித்தன. ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கே உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் அனத்தும் அண்ணா பல்கலைக் கழக விருந்தினர் வளாகத்தில் செய்யப்பட்டிருக்க, அந்த ஏரியா டெபுடிபோலீஸ் கமிஷனர் சேஷசாயியை அழைத்த கலாம்... “நீங்கதான் எல்லாம் கவனிக்கப் போறீங்களா... குட்! நான் மாதத்தில் சில நாட்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டி வரும். அந்தச் சமயத்தில் என்னைத் தேடி வர்றவங்களில் பெரும்பாலும் மாணவர்கள்தான் இருப்பாங்க. சந்தேகம் கேட்கணும்-னு என்னிடம் வந்துகிட்டே இருப்பாங்க. பாகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அவங்க மனசு நொந்து போயிடக்கூடாது. நீங்கதான் எல்லா காவலர்களுக்கும் அத எடுத்துச் சொல்லணும்” என்று நட்புடன் சொன்னார்.

"டாக்டர் அப்துல்கலாம் இணைய தளம்

புதுதில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனக்கான தனி இணைய தளத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். அதன் முகவரி: http://www.abdulkalam.com
இதில் அவரைப் பற்றிய தகவல்களும் படங்களும் அவரின் படைப்புகளும் கேள்வி பதில்களும் மேலும் பலவும் இடம்பெற்றுள்ளன. அவரைத் தொடர் புகொள்ளும் வாய்ப்பினையும் இந்த இணைய தளம் அளிக்கிறது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போது www.presidentofindia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைகள் வெளியிட்டிருந்தார். இவை தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைப் படித்து அவர்களுக்குப் பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கியிருந்தார். இதனால் அந்தத் தளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் அப்துல் கலாம் 3 நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் பதவி ஏற்றார். அப்துல்கலாம் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதால் குடியரசுத் தலைவருக்கான அந்த இணைய தளத்தில் இருந்த அவரது கட்டுரைகள், கவிதைகள், மாணவர், ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் அனைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.

இன்றைய குறள்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 29 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

இசையை ரசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஒரு வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்தான். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை என்று சொல்லி நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கும் விதத்தில் மயங்காத தமிழ் நெஞ்சங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொலைக்காட்சி, சினிமாக்கள் இன்றைய அளவுக்குப் பிரபலமடையாத அந்தக்காலத்தில் ஒரே ஒரு பொழுது போக்குச் சாதனம் வானொலி ஒன்றுதான். இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தால் நம்மையறியாமலே மனதில் ஒரு திருமண வீடு போன்ற குதூகலம் பிறக்கும். நெடுநாளைக்குப்பின் அந்த அனுபவத்தை இப்போதும் இந்த ஒலிப்பதிவைக் கேட்கும்போது உணரமுடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான, இனிமையான மலரும் நினைவுகளை நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருக்கிறார் அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர். அந்த இனிமையான குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. இப்போது இலங்கை வானொலியில் இவருடைய குரலைக் கேட்க முடியாவிட்டாலும், நமது தமிழகத்தில் "சூரியன் பண்பலை" வரிசையில் இரவு நேரத் தொகுப்பாளராக மிக அருமையாகவும், அற்புதமாகவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைக் கேட்போம். திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நன்றி

Powered by eSnips.com

இலங்கை வானொலி நினைவலைகள் பகுதி II

Powered by eSnips.com

July 28, 2007

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

கொட்டாவி நல்லதா கெட்டதா?

ஆவ்வ்வ்வ்... என்று, கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பவர்களை பார்த்தால், "என்ன, சரியா துங்கலியா?" என்று சிலர் கேட்பர்.
கொட்டாவி மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினத்துக்கும் வரும்.

சோர்வு மற்றும் துõக்கத்துக்கான அறிகுறி என்று தான் இதுவரை, கொட்டாவியை பற்றி டாக்டர்கள் பலரும் சொல்லி வந்தது! ஆனால், சமீபத்தில் அமெரிக்க நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், புது தகவல்கள் கிடைத்துள்ளன.

நியூயார்க் அல்பேனி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்கள், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அவர்கள் கூறியது :

கொட்டாவி, நல்லது தான். துõக்கமில்லாமல் இருப்போருக்கு வருவது தான் கொட்டாவி, அதனால், சோர்வு தான் ஏற்படும் என்று சொல்வதெல் லாம் சரி தானா என்ற கேள்வியை, இப்போது கிடைத்துள்ள மருத்துவ உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.

உடலில், ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு அளவில் மாற் றம் ஏற்படும் போது, கொட்டாவி ஏற் படும். கொட்டாவி விடுவதில் இருந்து தான் இந்த இரண்டின் அளவுகள் சீராகின்றன என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால், கொட்டாவி ஏற்பட, ஆக்சிஜனோ, கார்பன்-டை-ஆக்சைடோ காரணம் அல்ல என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளை இயக்கத்தை சீராக்கவே, கொட்டாவி வருகிறது. மூளை இயக் கம் துவண்டு போகாமல், அதை மேலும், வலுப்படுத்தவே, கொட்டாவி வருகிறது என்பது தான் உண்மை என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

நாங்கள் 44 பேரை வைத்து, இதற்கான சோதனையை செய்தோம். அவர்களில் சிலர், சிரித்தபடி இருந்தனர். சிலர், வீடியோ படம் பார்த்தபடி இருந்தனர். இப்படி ஆளாளுக்கு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். எல்லாரும் சில முறையாவது கொட்டாவி விட்டனர். மூக்கில் வெற்றிடம் உள்ளது. அதில் உள்ள ரத்த நாளங்கள், மூளைக்கு குளிர்ந்த ரத்தத்தை அனுப்பும் போது, இப்படி கொட்டாவி ஏற்படுகிறது என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு. ஏ.சி. அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும். வீடியோ பார்ப்பது, படிப்பது, எழுதுவது போன்ற செயல்களின் போதும், கொட்டாவி வரும்.

சங்கீத ஜாதிமுல்லை பாடலைப் பாடிய இந்தச் சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு, சங்கீதக் கலாநிதி, பத்மபூசன் டாக்டர் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் விருதும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார். ஆனால் இந்தச் சிறுவனுக்கு இதைவிட பெரிய பரிசே கொடுத்தாலும் தகும்

அபர்ணா

இன்னொரு திறமையான பாடகி உருவாகிக்கொண்டிருக்கிறார்

குதிரை வண்டி தான் இவரின் சொகுசு கார் புதுச்சேரி
உலக உருண்டையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வாகனங்களை பயன் படுத்துவதை குறைக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளில் சைக்கிள்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ருத்ரமூர்த்தி என்பவர், தனது போக்குவரத்திற்கு தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்திய ரேக்ளா குதிரை வண்டியை பயன் படுத்தி வருகிறார். "எங்கள் குடும்பத்தில் தாத்தா காலத்தில் இருந்தே குதிரை வண்டிகளை பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு, காருக்கு ஆகும் டீசல் செலவுத் தொகையை பயன்படுத்தி, குதிரை வண்டியில் ஒரு மாதத்திற்கு பயணம் செய்யலாம். கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் என எங்கு செல்ல வேண்டி இருந்தாலும் குதிரை வண்டி சவாரிதான். தொடர்ச்சியாக 50 கி.மீ. பயணம் செய்து விட்டு, குதிரைக்கு சற்று ஓய்வு கொடுத்துப் பின்னர் பயணத்தை தொடர்கிறேன். குதிரைக்கு அரை கிலோ கொள்ளு மற்றும் ஏழு கிலோ அருகம்புல் ஆகியவைதான் உணவு' என்கிறார் ருத்ரமூர்த்தி

இன்றைய குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 28) "BBC" செய்திகள்கேட்க இணைப்பில் செல்க
BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.10 ஈகை

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

எல்லோருக்கும் கொடுத்துத் தானும் இசைபட வாழும் நற்பண்பைக் கொண்டவர், மக்கள் நிறைந்த ஊரின் நடுவே உள்ள, நல்ல பழம் கொடுக்கும் பெண் பனை மரம் போன்றவர். தான் மட்டும் உண்டு பிறருக்குக் கொடுத்து உதவாத மனிதர்நட்ட நடுக்காட்டில் உள்ள ஆண் பனை மரம் போன்றவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Those who give are like the female palm tree surrounded by the terrace in the midst of the village. They live beloved by many. Men who eat without giving to others, though their family is flourishing, are like the male palm in a burning-ground


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

July 27, 2007

டாக்டர் மேதகு அப்துல் கலாம் பேட்டி

கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற அப்சல் குரு தாக்கல் செய்த கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காதது ஏன்? இதுதொடர்பாக உங்கள் மீது விமர்சனமும் எழுந்ததே?
பதில்:- அப்சல் குருவின் கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய, அந்த அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் கடைசிவரை, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை பதில் வந்திருந்தால், அதை நான் பரிசீலித்து இருப்பேன்.
கேள்வி:- அதுபோல், நீங்கள் வெளிநாட்டில் இருந்தபடி, பீகார் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியதே?
பதில்:- அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்போது நான் ரஷியாவில் இருந்தேன். அங்கிருந்தபடியே, பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினேன். அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர் இரண்டு தடவை என்னுடன் அதுபற்றி விவாதித்தார். எனக்கு தேவையான விவரங்கள் எல்லாம் ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், நான் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்தேன்.
கேள்வி:- ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை நீங்கள் திருப்பி அனுப்பியதும் சர்ச்சை உண்டாக்கியதே?
பதில்:- அதுவும் சரியான முடிவுதான். முதலில் அதை நான் பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பினேன். மத்திய அரசு அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியது. அந்த மசோதா தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேள்வி:- எதிர்காலத்தில், பிரதமர் பதவிக்கு பொது வேட்பாளர் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா?
பதில்:- இந்த கேள்வி உங்களுக்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு கற்பனையாக தோன்றுகிறது. எனக்கு 5 கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
கேள்வி:- முதல்முறையாக பெண் ஜனாதிபதி கிடைத்து இருப்பது பற்றி?
பதில்:- இது உண்மையிலேயே நல்ல செய்தி.
கேள்வி:- வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகிய இரண்டு பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இருவருமே திறமையானவர்கள், சிந்திக்கும் வகையை சேர்ந்தவர்கள், பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுபவர்கள். அவர்களுடன் எனக்கு சிறப்பான உறவு நிலவியது. மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
கேள்வி:- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டுமா?
பதில்:- தேவை இல்லை. அரசியல் சட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சோதனைகளை தாங்கி நிற்கிறது. என்னை பொறுத்தவரை எனது பணியில் எந்த முட்டுக்கட்டையும் இருக்கவில்லை.
கேள்வி:- 27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையை சமாளிக்க வழி என்ன?
பதில்:- கல்வி நிறுவனங்களில் `சீட்'களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கேள்வி:- இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?
பதில்:- அணுசக்திக்கு நம்மை நாமே சார்ந்திருப்பதுதான் ஒரே வழி. நம்மிடம் நிறைய தோரியம் இருக்கிறது. அதை வைத்து அணுசக்தி உற்பத்தி செய்ய ஈனுலைகள் அமைக்க வேண்டும்.
கேள்வி:- தற்போதைய அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அரசியல் நிலைமை கவலை அளிக்கிறது. முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவது இல்லை. வளர்ச்சி பற்றி போதுமான அளவு பேசப்படுவது இல்லை. அதற்கு உயர் முன்னுரிமை கொடுப்பது இல்லை. உதாரணமாக, எந்த ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று எந்த கட்சியும் இலக்கு நிர்ணயிப்பது இல்லை.எல்லா அரசியல் தலைவர்களும், வளர்ச்சிரீதியான அரசியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. வளர்ச்சி பணி அடிப்படையில் தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

* மனிதர்களை களங்கப்படுத்தும் செயல்களில் எல்லாம் அச்சம் பிரதானமாக இருக்கிறது. அது, இறைவன் உங்களுக்கு கொடுத்த கடமையைக்கூட எளிதாக முடிக்க விடாமல் தடுக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் கொடுத்திருக்கிறார். மனதில் பயம் இருப்பவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை

- ஸ்ரீஅன்னை

இன்றைய குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக்கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டாதரணி நேர்முகம் பகுதி II

கேபிள் டிவி-யும் ஆளும் கட்சியும்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 27 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாமின் பத்து கட்டளைகள்

வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற,
10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர்.


மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்தினார்.

"நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, "நம்மால் முடியும்'' என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். ""சுகோய்-30'' ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, "அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்'' என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்' என்றார் கலாம்.

July 26, 2007

இழுக்க இழுக்க இன்பம்!!

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டாதரணி அவர்களின் நேர்முகம் பகுதி I

இசையையும் தமிழையும் எப்படிப் பிரிக்க முடியும்? எத்தனையோ இசைப் பாரம்பரியங்களையும், இசைத்தலைமுறைகளையும் பார்த்த நம் தமிழ் திரையுலகம், தொடர்ந்து நல்ல முத்துக்களைக் கண்டெடுத்துக் கொண்டுதானிருக்கிறது. அடுத்தொரு அருமையான இளம் பாடகி மதுமிதா பகுதி I

மதுமிதா பகுதி II

பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி I

பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி II

இன்றைய குறள்

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி, நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

* பயமில்லாமல், உண்மையைக் கூறுவதால், உங்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வரும் எனத் தெரிந்தாலும், அதற்காக கலங்கிவிடாதீர்கள். மனதில் இறைவனை எண்ணி, பயமின்றிச் சத்தியத்தையே பேசுங்கள். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்

- ஸ்ரீஅன்னை