November 13, 2007

புலிகளுக்கு இனி போதாத காலம்தான்

சர்வதேச அளவில் புலிகளின் ஆயுத கடத்தல் `நெட்வொர்க்' - அமெரிக்காவில் இருந்து எல்லா நாடுகளிலும் ஆட்கள் நடமாட்டம் : அவர் முழுப்பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. கே.பி., என்று கூப்பிடுகின்றனர். பார்த்தால் சாப்ட்வேர் நிபுணர் போல இருக்கிறார்; குறுந்தாடி, சிறிய அளவில் திருத்திய மீசை, அதிகம் பேசுவதில்லை.அமெரிக்காவில் இருந்து பல நாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு; மொத்தத்தில் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் போல இவர் இருப்பார்!விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை, பல நாடுகளில் இருந்து வாங்கி, அனுப்பி வந்தவர் அவர் தான். அவர் இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த, `புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் நெட் வொர்க்'கை, அமெரிக்கா துணையுடன் முதன் முறையாக இலங்கை அரசு தகர்த்து உள்ளது. ஆனால், முழுமையாக தகர்த்து விட்டதா என்பதே கேள்விக்குறி.புலிகளுக்கு ஆயுதங்கள் வந்த வண்ணம் தான் இருக் கின்றன. எங்கிருந்து வருகிறது... யார் அனுப்புகின்றனர்... எப்படி புலிகள் கைக்கு சேருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. சில மாதங்களாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடாவில் சிலர் கைது செய்யப்பட் டாலும், புலிகளின் முக்கிய ஆட்களோ, இடைத்தரகர் களோ சிக்கவில்லை. விழுந்தது முதல் அடி:
அமெரிக்காவில், சில மாதங்களாக, ஏ.டி.எம்., மிஷின்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு வந்தது. அவர் களை கண்டுபிடித்து போலீஸ் கைது செய்தது. அதுபோல, சில அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக சிலரை கைது செய்தனர். இவர்கள் எல்லாம், இலங்கையை சேர்ந்தவர்கள், புலிகளுக்கு உதவுபவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்தனர். விடுதலைப்புலிகள் இயக் கத்தை, பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து உள்ளது. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான விசாரணைக்கு அமெ ரிக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் `நெட்வொர்க்' பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள்: இலங்கையில் இருந்து தமிழ்ப்பகுதிகளை பிரித்து, தனி ஈழம் என்ற பெயரில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று, விடுதலைப்புலிகள் 24 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க இலங்கை அரசால் முடியவில்லை. வெளிநாடுகளில் உதவி: புலிகளுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளின் அபிமானிகள் ஆகியோர் உதவியுடன், சர்வதேச அளவில் `ஆயுத கடத்தல் நெட்வொர்க்' ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதில், புலிகளுக்கு சில இடைத்தரகர்கள் உதவுகின்றனர். பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில், சிலர் பைனான்ஸ் செய்தும் வருகின்றனர். லண்டன் வால் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த ஒரு பிரபல பைனான்சியர் மீது அமெரிக்க அதிகாரிகள் கண் வைத்தனர். அவரை கைது செய்ய தயாரான போது, அவர் தலைமறைவாகி விட்டார். புலிகளுக்கு, அவர் ஆயுதம் வாங்க பைனான்ஸ் செய்துள்ளார். இவரை போன்று பல நாடுகளிலும், புலிகளுக்கு ஆட்கள் உள்ளனர். யார் அந்த `பி?' அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ் திரேலியாவில், புலிகளுக்கு ஆதரவாக பல துறைகளின் நிறுவனங்கள், பல கலை, கலாசார அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் உள்ளன. வெளியில் பார்த் தால், புலிகளின் ஆதரவில் தான் இயங்குகின்றன என் பது தெரியாது. ஆனால், புலிகளுக்கு ஆயுத, போதை கடத்தல், பணம் பறிப்பு, கொள்ளையடிப்பு போன்ற விஷயங்களில் துல்லியமாக செயல்படும் அளவுக்கு, இந்த அமைப்புகளில் ரகசியமாக சிலர் இருக்கின்றனர். இப்படித்தான், நியூயார்க்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பெயர், `பி' என்று மட்டும் தரப்பட்டுள்ளது. அவர் பெயரை முழுமையாக சொல்ல போலீஸ் தயாரில் லை. இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால், அவர் பெயர் மறைக் கப்படுகிறது. இன்னொருவர், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத் தில், `லேப்-டாப்' கம்ப்யூட்டர் சகிதம் அவர் கைது செய்யப்பட்டபோது, சாப்ட் வேர் இன்ஜினியர் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால், அவர் புலிகளின் நேரடி ஏஜென்ட் என்று விசாரணையில் தெரிந்தபோது, அதிகாரிகளே அதிர்ந்துவிட்டனர். ஆயுத நிறுவனத்திடம் ஆர்டர் தர தயார் செய்யப்பட்ட பல கோடி பணத்தை போலீசார் கைப்பற்றினர். சீனா, கென்யா, கொழும் புக்கு கடந்த ஐந்தாண்டில், 100 முறை போய் வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
மூன்று ஆர்டர்கள்: இப்படி பல நாடுகளில், பல ஏஜென்ட் கள், இடைத்தரகர்கள் மூலம் ஆயுதங்களை வாங்கி, புலிகளுக்கு அனுப்பியிருந்தவர் தான் கே.பி.,! அவர் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கவே இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. கொள்ளை, பணம் பறிப்பு, ஆள் கடத்தல் மூலம் கோடிகளை குவிக்கும் விடுதலைப்புலிகள், சட்டப்படி ஆயுதங்கள் வாங்குவதற்காக சம்பந்தமே இல்லாத யார் பெயரிலோ பணத்தை, சர்வதேச ஆயுத நிறுவனத்துக்கு செலுத்தும். அதற்கான ஆவணங்களையும் தயார் செய்யும். இப்படித்தான், சமீபத்தில், ஆயுதங்கள் வாங்குவதற்காக, மூன்று ஆர்டர்களை புலிகள் அமைப்பு அளித்திருந்தது. அதற்கான, ஆவணங்களை சட்டப்படி தயார் செய்தனர் ஏஜென்ட்கள். இடைத்தரகர்கள், ஆயுத நிறுவனத்தில் பேசி, அந்த ஆர்டர்களில் இரண்டை முதலில் செயல்படுத்த வைத்தனர்.
சீன துறைமுகத்தில்: ஆயுத நிறுவனத்தில் இருந்து இரண்டு கப்பல் முழுக்க ஆயுதங்கள், சீனாவில் உள்ள டியான்ஜின் என்ற துறைமுகத்தில் ஏற்றப்பட்டன. அந்த கப்பல்கள், அங்கிருந்து, நேரடியாக, இந்தோனேசியாவுக்கு போயின. அங்கு, ஏற்கனவே புலிகளின் இடைத்தரகர்கள் இருப்பதால், அவர்கள் தலையிட்டு, போலி ஆவணங்களை காட்டி, அதிகாரிகளை சம்மதிக்க வைத்தனர். வழக்கமாக, தாய்லாந்து, இந்தோனேசியா கொண்டு வரப்படும் ஆயுத கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புலிகளின் சிறிய படகுகளில் ஆயுதங்கள் ஏற்றப்படும். சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு இருக்காது. அதனால், அங்கிருந்து தப்பி, கடற்படை கண்காணிக்காத நேரம் பார்த்து, இலங்கை கடலில் படகுகள் நுழையும்.
படகுகள் மூலம்: இப்படி சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருவதை கண்டுபிடித்தபோது, அவற்றை குண்டு வீசி இலங்கை கடற்படை அழித் துவிடும். அப்போது மட்டும், மற்ற படகுகளை அனுப்பாமல், இடைத்தரகர்கள் நிறுத்திவிடுவர். சில நாள் கழித்து, மீண்டும் சிறிய படகுகளில் ஆயுதங்கள் கடத்தப்பட்டு, புலிகள் கைக்கு போய்ச்சேரும். இரண்டு ஆர்டர்கள் மூலம் புலிகளுக்கு கிடைத்த ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் தடுக்க முடியவில்லை. மூன்றாவது ஆர்டரை கண்டுபிடித்து, இலங்கை அதிபர் வேண்டுகோள் விடுக்க, ஆயுத ஆர்டரை ஆயுத நிறுவனம் ரத்து செய்துவிட்டது.
ஒடுங்கும் நாள்: இருந்தாலும், புலிகளுக்கு சர்வதேச அளவில் இன்னமும் அமெரிக்கா உட்பட எந்த நாடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கவனம், அல் - குவைதா பயங்கரவாதிகள் மீதுதான் உள்ளது. மேலும், இலங்கைக்கு சர்வதேச அளவில் ஆதரவும் இல்லை. இலங்கை விஷயத்தில் இந்தியாவை மீறி தலையிடவும் யாரும் தயாரில்லை. அல் - குவைதா விவகாரத்துக்கு பின்தான், புலிகள் விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக இறங்கும் என்று தெரிகிறது. மேலும், புலிகள், தனி நாடு கேட்டு போர் செய்து வருவதால், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு உள்ளது. இப்படி சில குழப்பங்கள் உள்ளதால், அதை பயன்படுத்தி, சர்வதேச அளவில் புலிகள், இன்னமும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். சர்வதேச ஆயுத கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்படும் போது, புலிகள் சுருதி அறவே ஒடுங்கி விடும் என்பது நிச்சயம்.
ஆண்டுக்கு 1,500 கோடி குவியுது விடுதலைப்புலிகளுக்கு எப்படி பணம் வருகிறது? இந்த கேள்விக்கு பதில், அவர்கள் பணம் பறிப்பு, கடத்தல் போன்றவற்றின் மூலம் திரட்டுகின்றனர் என்று சொல்லி விடலாம். ஆனால், அதையும் தாண்டி, பல நாடுகளில் லட்சக்கணக்கில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் பணம் கிடைக்கிறது. சிலரிடம் மிரட்டி, சிலரிடம் அன்பாகவும் பணம், புலிகளுக்கு வருகிறது. இந்த பணத்தை சேகரிப்பதும், அவர்களின் ஏஜென்ட்கள்தான். ஆயுதங்கள் வாங்க மட்டும், இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
புலிகள் மற்றும் இலங்கைப் பிரச்னை பற்றிய முக்கிய தகவல்கள்: இலங்கையில், தமிழ் ஈழம் கோரி, 24 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை, 70 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் சில நிறுவனங்களை புலிகள் நடத்துகின்றனர். அங்கிருந்து தான், சட்டப்படி ஆயுதங்கள் வாங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. புலிகள் படையில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் இன்று வரை கிடைக்க காரணம், சர்வதேச அளவில் உள்ள `ஆயுத நெட்வொர்க்' தான். பிரிட்டனில் ஒன்றரை லட்சம், கனடாவில் இரண்டு லட்சம் இலங்கை தமிழர்கள், புலிகளின் ஆதரவாளர்கள்தான். ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை பணம் , புலிகளுக்கு வருகிறது. கடத்தல், மோசடி, கொள்ளை போன்றவற்றில்தான் அதிக பணம் வருகிறது. தாமாக முன்வந்து நன்கொடை வருவது குறைவுதான். அமெரிக்காவில், இரட்டை கோபுரம் உட்பட சில இடங்களில் அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, புலிகள் மீதும் கண்காணிப்பு அதிகமானது. அப்போதில் இருந்துதான், ஆயுதக் கடத்தலில் புலிகள் மீது கண் விழுந்தது. ஆயுதக் கடத்தலையும் தடுக்க இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில், புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை இலங்கை அரசு தீவிரப்படுத்தியதும், பல நாடுகளில் புலிகள் மீதான நல்லெண்ணம் குறைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் கைதான புலிகள் ஏஜென்ட்கள் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி உள்ளதால், புலிகளுக்கு இனி போதாத காலம் தான்.

November 12, 2007

"மொழி என்பது தொடர்புக்குதான் - கனிமொழி

"மொழி என்பது தொடர்புக்குதான். மொழி ஒரு இனத்தின் அடையாளமாக மாறுவதை சிலரால் ஏற்று கொள்ள முடியாததாகவுள்ளது. தமிழ் தொன்மையான மொழி. உலகிலுள்ள மற்ற மொழிகளைவிட 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்தோன்றியது. பல செம்மொழிகள் இருந்தாலும் வாழும் மொழியாக தமிழ் இன்று விளங்குகிறது. நமது கலாச்சாரத்தை சுமந்து வருவதாக தமிழ்மொழி அமைந்துள்ளது. நாம் யார் என்ற புரிதலுடன் இல்லாமல் வானம் வசப்படும் என செயல்படும் போது அடியோடு விழுந்து விடுவோம்" - கனிமொழி

இன்றைய குறள்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்

நமது வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது பதட்டத்துடன் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் அளிப்பதன் மூலம் மருத்துவ உதவிகள் தாமதமின்றி நோயாளிக்குக் கிடைக்க வழி பிறக்கிறது. பல வேளைகளில் மருத்துவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நோயாளியோடு பல காலம் இருக்கும் உறவினர்களே தடுமாறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நோயாளிகள் குறித்த சில அடிப்படைத் தகவல்களை எழுதி வைத்திருப்பது சிக்கலான நேரங்களில் பயனளிக்கும் என்கிறார் மருத்துவர் பால் தக்காஷி.
உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள் :

1. நோயாளிகள் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனை குறித்தும், மருத்துவர் குறித்தும் தெரிந்து வைத்திருங்கள். சிலருக்கு சில மருத்துவர்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை நோய் தீர்க்கும் முதல் நிவாரணி. எனவே அப்படிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி பழக்கமான மருத்துவரெனின் நோயாளியைக் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதனால் மருத்துவ உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க முடியும்.

2. நோயாளியின் பிறந்த நாள் அல்லது வயது தெரிந்திருப்பது நல்லது. மருத்துவ படிவங்களை நிரப்பவும், மருத்துவருக்கு நோயாளியின் உடல் நிலை குறித்த அனுமானங்களுக்கும் அது மிகவும் பயன்படும்.

3. நோயாளிக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதுகுறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4. நோயாளிக்கு தனக்குத் தரப்பட வேண்டிய மருத்துவம் குறித்து ஏதேனும் கருத்து இருந்தாலோ, மத ரீதியான ஏதேனும் கொள்கைகள் இருந்தாலோ அதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

5. மிகவும் முக்கியமாக நோயாளியின் பழைய ஆரோக்கிய நிலை குறித்த அறிவு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், வலிப்பு, இதயம் தொடர்பான நோய் போன்றவை நோயாளிக்கு இருந்திருக்கின்றனவா என்பதைக் குறித்த அறிவு இருப்பது மிகவும் பயனளிக்கும்.

6. நோயாளி என்னென்ன மருந்துகள் உட்கொண்டிருந்தார் என்பது குறித்த தகவல்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உட்கொள்ளும் மருந்துகளுக்கான சீட்டுகளை ஒரு கோப்பில் போட்டு வைத்திருப்பது இத்தகைய சூழலுக்கு பெருமளவில் கை கொடுக்கும்.

7. நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொடர்பு எண்கள் கைவசம் இருப்பதும், பல தகவல்களைப் பெற உதவும்.

8 நோயாளிக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதைக் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நலம் பயக்கும்.

9. இதற்கு முன் நோயாளி ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக தங்கள் இளம் வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தால் அது பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதை அறிந்து வைத்திருப்பது நல்லது.

10. நோயாளியின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக அவருடைய உணவுப் பழக்கம், மது, புகை போன்ற பழக்கங்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பத்து விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவசர தேவை ஏற்படும் போது தடுமாறாமல் சரியான இடத்தில் சரியான சிகிச்சையை வழங்க உதவும். இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு மெத்தப் படித்திருக்க வேண்டியதில்லை, குடும்ப உறவுகளுடன் அன்போடும் உறவோடும் உரையாடி வாழ்ந்தாலே போதுமானது.

"மன்மதராசா" மாலதி

வைகோ மற்றும் நெடுமாறன் கைது

  • தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த முற்பட்டபோது கைதுவிடுதலைப்புலிகள் அமைப்பின் மறைந்த அரசியல்துறைப் பொறுப்பாளராகிய சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கப் பேரணி நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மீறி பேரணி சென்ற வைகோ மற்றும் நெடுமாறன் உட்பட 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரணி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதாகக் கூறி இவர்கள் தற்போது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இன்று சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும், அத்தகைய கட்சிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • மேற்கு வங்க வேலை நிறுத்தத்தால் இயல்புநிலை பாதிப்பு : வேலைநிறுத்தம் சுமூக நிலைமையை வெகுவாகப் பாதித்துள்ளதுஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற அரசியல் வன்செயல்களைக் கண்டித்து அங்கு நடத்தப்படுகின்ற வேலை நிறுத்தம் அங்கு பரந்த அளவில் பெரும் கதவடைப்பாக உருவெடுத்துள்ளது
  • இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி : இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன
  • 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் : 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் நடைபெறும். இந்த முடிவானது கடந்த மூன்று தினங்களாக டில்லியில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது
  • பாலத்தீனக் குழுக்களுக்கிடையே மோதல்: ஐவர் பலி : பாலத்தீனத்தின் காசா நிலப்பரப்பில் நடைபெற்ற ஒரு பேரணியில், போட்டி பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
  • பொதுநலவாய அமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு : பாகிஸ்தான அதிபர் ஜெனரல் பெர்வேஸ் முஷாரப்பாகிஸ்தானில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக சாத்தியமான தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்க காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் கூடியுள்ளனர்
  • இன்றைய (நவம்பர் 12 திங்கட்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 11, 2007

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன

பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு : விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின், `டிவி' சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவர். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ரோஷன் குணதிலகே கூறினார். சமீபத்தில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைத்துள்ளது.

"கிரிவலம்" மகிமை : திருவாளர் சுகி.சிவம் II

தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சித்திட்டங்கள் : ஓர் ஆய்வு

பெரிய நிறுவனங்களின் வருகையால் வேலைவாய்ப்புக்கள் பெருகியுள்ளதா?

தமிழக அரசின் சமீபத்திய தொழில்வளர்ச்சி அறிவிப்புகள் - ஓர் ஆய்வு 3

மு.க.ஸ்டாலின் தாய்லாந்து விஜயம் : சர்ச்சை ஏன்? திமுக-வுக்குள் (குடும்பத்தில்) நடப்பது என்ன? தெளிவான விளக்கம்

மனுஷி - குறும்படம்

இன்றைய குறள்

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்

அறத்துப்பால் : பொறையுடைமை

வாழ்க வளமுடன்

"மனவளக்கலை சமுதாயத்தை வலிமையாக்கக் கூடிய, மதத்துக்கு அப்பாற்பட்ட, ஆண், பெண், சிறுவர், பெரியவர் அனைவரும் பழகக்கூடிய பொதுவான பயிற்சி. வாழ்க்கையில் மலிந்திருக்கும் கோபம், கவலை, வஞ்சம், பேராசை ஆகியவற்றின் தோற்றுவாயை அறிந்து, முழுவதுமாகச் சரிசெய்து கொள்ள எளிமையான வழிமுறைகள் மனவளக்கலைப் பயிற்சியில் கிடைக்கின்றனஅவரவர் எண்ணங்களே அவரவரது வாழ்க்கையைச் செதுக்குகின்றன. மனதைத் தூய்மையாக்கி வளப்படுத்தி வாழ்வோம் வாருங்கள். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்" - ஸ்ரீ சத்யசாய்

தமிழகத்தில் தமிழ்ச்செல்வன் வீரவணக்கக் கூட்டங்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

  • இலங்கை வான்படை தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க கூட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு காட்டத்துவங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒன்று தமிழ்நாட்டின் வேலூரில் ஞாயிற்றுகிழமை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அந்த கூட்டம் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஞானசேகர னின் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினரின் சாலை மறியல் போராட்டங்களும் நிகழ்ந்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் பலர் கைதும் செய்யப் பட்டிருக்கின்றனர். இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்தும், சுப தமிழ்செல்வன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி அஞ்சலி கவிதை எழுதியது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
  • இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வைக் காணவேண்டும் - இந்திய நிதியமைச்சர் : பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் அல்லாது சமாதானப் பேச்சுக்களினூடான அரசியல் தீர்வொன்றினைக் காணவெண்டுமென இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த உரையின் போது கருத்து வெளியிட்டுள்ள திரு. ப.சிதம்பரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கு முன்னர் மத்தியஸ்தம் வகிக்கும்போது விடுதலைப்புலிகளை தனித் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு ஒருமித்த இலங்கைக்குள் தீர்வினைக்காண முன்வரவேண்டுமென்றும், இலங்கை அரசினை அர்த்தமுள்ள சகலாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கும்படி வேண்டியிருந்தது என்றும் இந்தியாவின் அந்த நிலைப்பாட்டில் தற்போதுகூட மாற்றமேதுமில்லை என்றும் தெரிவித்தார்
  • பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் தேர்தல்-முஷாரஃப் அறிவிப்பு : பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதிக்கு முன்னர் பொதுத் தேர்தல்களை நடத்த தாம் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார். இருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க ஏதுவாக அங்கு அமலில் இருக்கும் நெருக்கடி நிலையை தளர்த்த அவர் மறுத்து விட்டார்
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான தூதர் பர்மா விஜயம் : ஐக்கிய நாடுகள் சபையின் பர்மாவுக்கான மனித உரிமைகள் குறித்த தூதர் பர்மா சென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக அவர் அங்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார்
  • இஸ்ரேலியப் பிரதமர் மீது ஊழல் தொடர்பான விசாரணைகள் : இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஓல்மர்ட் அவர்களுக்கு எதிராக கூறப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் தொடர்பாக, அந்நாட்டு காவல் துறையினர் இருபதுக்கும் அதிகமான அரச கட்டிடங்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்
  • சூறாவளியால் ரஷ்யா கப்பல்கள் மூழ்கியுள்ளன : ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையிலான கெர்ச் வளைகுடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் நான்கு கப்பல்கள் நாசமடைந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  • இன்றைய (நவம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 10, 2007

இன்றைய குறள்

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து


தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருதமாட்டார்கள்
அறத்துப்பால் : பொறையுடைமை

"கிரிவலம்" மகிமைபற்றி திருவாளர் சுகி.சிவம்

Get this widget | Track details | eSnips Social DNA

தொடர்ச்சி நாளை

பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்

கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான 'தி நேகட் அண்டு தி டெட்' மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார். நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.
அவருக்கு, 'தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்' மற்றும் 'தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்' ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. இதில் 'தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்'கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது. அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

துபாய் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர பேச்சுவார்த்தை

  • இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி : இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது
  • பாகிஸ்தான் தலைமை நீதிபதியை சந்திக்க பேநசிர் பூட்டோவிற்கு அனுமதி மறுப்பு : பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவி பேநசிர் பூட்டோ பதவியகற்றப்பட்ட நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரியைச் சந்திப்பதை பொலிசார் தடுத்துள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்பு அதிபர் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததிலிருந்து தலைமை நீதிபதி தனது இஸ்லாமாபாத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையை பூட்டோ அம்மையாரும் கூட வீட்டுக்காவலில்தான் கழித்திருந்தார். தனது இஸ்லாமாபாத் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டிருந்த பொலிசார் அகன்று சென்றதை அடுத்து அவர் ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரலெழுப்புவதைத் தொடர்ந்துள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார். ஒரு மாத காலத்தில் அவசரநிலை விலக்கப்பட வாய்ப்புள்ளது என்று மட்டும் கூறியுள்ள பாகிஸ்தான் சட்டமா அதிபர் மாலிக் முகமது கையும் வேறு விபரம் எதனையும் தெரிவிக்கவில்லை
  • மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் மோதல் : மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கும் இயக்கத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோருக்கும் இடையே சனிக்கிழமையன்று ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது
  • துபாய் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர பேச்சுவார்த்தை - இந்திய அமைச்சர் : துபாய் நகரில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த ஐந்து தமிழர்கள் உள்பட ஏழு இந்தியர்களின் குடும்பத்தாருக்கு, போதுமான இழப்பீடு பெற்றுத்தர இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். துபாயின் புறநகர்ப் பகுதியான மரினாவில் பாலம் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை மாலை, கட்டுமானப் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், இந்தியத் தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்தார்கள். 24 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டம் தும்பைபட்டியைச் சேர்ந்த ஷாஜஹான் சம்சுதீன், திண்டுக்கல் மாவட்டம மூங்கில்பட்டியைச் சேர்ந்த கார்த்தி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், கடலூர் மாவட்டம் நத்தமலை கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி கோவிந்தன் மற்றும் மோகன் லட்சுமணன் ஆகிய ஐந்து தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துடன், துபையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அவர்களது உடல்களை விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 120 மாத சம்பளத்தை இழப்பீடாகப் பெற்றுத்தர அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே, உயிரிழந்த ஐந்து தமிழர்களின் குடும்பத்தாருக்கும் இழப்பீடாக தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
  • இராக் தீவிரவாதிகளால் அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளனர் : இராக்கின் சமாரா நகரத்தில் அல்கொய்தாவினர் மீது இராக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பதினெட்டு அல்கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிய காவல்துறையினர் கூறுகின்றனர்

"நான் படைப்பாற்றல் அற்றவன்" : இந்திரன் - எழுத்தாளர்

"மொழிபெயர்ப்பின் மூலம் நான் அடைந்த வாசிப்பு அனுபவத்தை என் சக மனிதர்களும் அடையவேண்டும் எனும் ஆசையில் நான் மொழிபெயர்ப்பு செய்கிறபோது, நான் படைப்பாற்றல் அற்றவன் என்று எங்கே என்னை நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் என் தொடக்க நாள்களில் இருந்தது. இதனால் என் தொடக்க நாள்களின் மொழிபெயர்ப்புத் தொகுதிகளான 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்', 'காற்றுக்குத் திசை இல்லை' ஆகிய நூல்களில் புத்தகத்தைத் திறந்தவுடன் என்னுடைய சொந்தக் கவிதை ஒன்றை வைத்து எனது திறமையை வெளிக்காட்டிவிடுவேன். நாளடைவில் எனது கவிதைத் தொகுதிகள் நிறைய வெளிவந்த பிறகுதான் என்னிடமிருந்து இந்தப் பழக்கம் விலகியது. தன்னம்பிக்கை பிறந்தது" - இந்திரன், எழுத்தாளர், பத்திரிகை பேட்டியில்

நீலம்! (குறும்படம்) - அறிவுமதி

November 09, 2007

இப்பிரபஞ்சப்பாலைவனத்தில் வாழ்க்கை என்பது சிறிது நேரச் செருப்புக்கள்! அதற்குள் இத்தனை அவலங்களா? என்று தணியும் இந்த ரத்தவேட்கை??

இன்றைய குறள்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்
அறத்துப்பால் : பொறையுடைமை

"மன்மதராசா மாலதி"

"அருள் கிடைக்கும்" - சத்யசாய்

"தோளில் சுமையைத் தூக்கிச் செல்லும் ஒருவர், செல்லுமிடத்திற்கு விரைவாகச் சென்று சுமையை இறக்கி வைக்கவே விரும்புவார். காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர், மாலையில் எப்போது வீடு திரும்பலாம் என தனக்குள் கேட்டுக்கொள்வார். அதுபோல நாமும் நம்மை வழிநடத்திச் செல்லும் இறைவனின் அருளை பெற சிந்திக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் அவரது அருள் கிடைக்கும்" - சத்யசாய்

சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை போன்ற வறட்சியான மாவட்டங்களுக்கு காவிரி-வைகை இணைப்பு நீர்வரத்து?!

  • காவிரி-வைகை இணைப்புத் திட்டம்: பூர்வாங்க ஆய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது : காவிரியையும் வைகையையும் வாய்க்கால் மூலம் இணைப்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்துவருகிறதுகாவிரியையும் வைகையையும் இணைத்து வரண்டு கிடக்கும் தென்மாவட்டங்களில் பாசன வசதியைப் பெருக்கலாம் என்று முடிவுசெய்து அதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளைக் கணக்கிலெடுத்துப் பார்க்கையில், பெரும்பாலனா வருடங்களில் காவிரியில் தேவைக்கு அதிகமான நீர்வரத்து இருந்துள்ளது. ஆதலால் இராமநாதபுரம், மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை போன்ற வறட்சியான மாவட்டங்களுக்கு இந்த உபரி நீரை கொண்டுசென்று பயன்படுத்துவது பற்றிய ஒரு விரிவான ஆய்வறிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலர் ஆதிசேஷையா தெரிவித்தார். திட்ட அளவில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதுதான், ஆனால் இருக்கின்ற காவிரிக் கால்வாய்களே சரிவர பராமரிக்கப்படாத நிலையில் புதிய நீர் இணைப்பை உருவாக்கி அதைப் பேணுவதென்பது பெரும் சிரமமென்று சென்னை வளர்ச்சி ஆய்வுமையத்தின் நீர் ஆதாரங்கள் நிபுணர் டாக்டர் ஜனகராஜ் கூறுகிறார்
  • சிங்கள தேசிய வாதம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இடைஞ்சலாய் இருப்பதாக சர்வதேச நெருக்கடிகள் ஆய்வுக்குழு கருத்து : இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.
    ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்றும் சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு கூறியுள்ளது. இந்த கருத்து குறித்து தனது அபிப்பிராயத்தைக் கூறிய இலங்கை அரசியல் பகுப்பாய்வாளரும் தற்போது டோக்யோவில் ஐ.நா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவருமான பேராசிரியர் கீத பொன்கலன் அவர்கள், கடந்த பல வருடங்களாக இனப் பிரச்சினை தீர்க்கப்படாததற்கான முக்கிய காரணங்களில் மிகத் தீவிரமான தேசியவாதப் போக்கும் ஒன்று என்று கூறினார். சிங்கள தேசியவாத நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்ற, ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மதிக்கக்கூடிய சில குழுக்களும் இருக்கின்றன என்று கூறுகின்ற கீதபொன்கலன் அவர்கள், மிகத் தீவிரமான சிங்கள தேசியவாதமே பிரச்சினைத் தீர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்
  • பிரிட்டன்-சௌதியரேபியா ஆயுத வர்த்தக ஊழல்: விசாரணையை நிறுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவு மறுபரிசீலிக்கப்பட வேண்டுமென்கிறது நீதிமன்றம் : பிரிட்டனுக்கும் சௌதியரேபியாவுக்கும் இடையே பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுத வர்த்தகத்தில் நடந்த ஊழல்கள் குறித்து நடந்துகொண்டிருந்த விசாரணையை கடந்த ஆண்டு பிளேர் அரசு நிறுத்தும்படி உத்தரவிட்டது
  • பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேசுவதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவி : பர்மாவில் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் முயற்சிகள் பற்றி தமக்கு நம்பிக்கை இருப்பதாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பர்மிய எதிர்க்கட்சி தலைவி ஒங் சான் சூ சீ அம்மையார் தமது கட்சிக்காரர்களிடம் கூறியிருக்கிறார்
  • புலிகளின் ஆதரவாளர் என்று கூறப்படும் நபர் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் : தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அருணாச்சலம் கிருஷாந்தக்குமார் (சாந்தன்) என்பவர் மீது இன்று லண்டனின் பிரதான குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் பயங்ககரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

November 08, 2007

அன்பிற்கினிய நண்பர்களனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! "இங்கு-க்ளிக்" செய்து "பட்டாசை" வெடிக்கச் செய்யுங்கள்

இன்றைய குறள்

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது
அறத்துப்பால் : பொறையுடைமை

ஆன்மிகம் என்பது..

"ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. ஆசைகளைத் துறப்பதல்ல. முறையான ஆசைகளோடு வாழ்வதும், அதை வாழ்க்கை நலன்களாக மாற்றிக் கொள்வதும் ஆன்மீகம்" - வேதாத்திரி மகரிஷி

இலங்கை ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெட்டிக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

  • கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய: மத்திய அமைச்சரவை பரிந்துரை : கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், தென்னிந்தியாவில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வழி ஏற்பட்டிருக்கிறது
  • வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வாக்கில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் : பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்
  • இலங்கை ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெட்டிக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன : இலங்கையின் தென்மாகாணத்தின் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள ஒசுவின்ன எனும் கிராமத்திலிருந்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு சிவிலியன்களின் சடலங்களை வியாழக்கிழமை காலை பொலிசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்
  • பிரிட்டனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முதல்முறையாய் ஒரு பெண் குற்றவாளியாய் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார் : பிரிட்டனில் அண்மையில் சட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் முதல் பெண் குற்றவாளியாக முஸ்லிம் யுவதி ஒருவர் இன்று குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்
  • கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரும் பட்சத்தில் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா? பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் பதில் : லண்டனில் கைதான இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன
  • விடுதலைப் புலிகள்-நோர்வே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இடையே கிளிநொச்சியில் சந்திப்பு : இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் கடந்த வாரம் அரச படைகளின் விமான குண்டு வீச்சில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கும் நிலையிலும் சமாதான ஏற்பாட்டாளர்களாகிய நோர்வே தரப்பினர் அமைதிகாப்பது குறித்து விடுதலைப் புலிகள் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் கண்டனமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்
  • அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு புதிய ராடார் கருவி மற்றும் படகுகளை வழங்கியுள்ளது : இலங்கை கடற்படையின் கரையோர ரோந்து மற்றும் காவல் நடவடிக்கைகளுக்கு மேலதிக வலுச்சேர்க்கும் நோக்கில் அமெரிக்கா இன்று வியாழக்கிழமை ராடார் பொருத்தப்பட்ட கரையோரக் கண்காணிப்பு கருவியொன்றினையும் ஒரு தொகுதி நவீன படகுகளையும் வழங்கியிருக்கிறது
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்களே இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளமுடியும் என முஸ்லிம் மத விவகார அமைச்சகம் அறிவிப்பு : இலங்கையிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்பவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என முஸ்லிம் மதவிவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் முஸ்லிம்களிடையே பொதுவாக கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது

November 07, 2007

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! - ஏன்தான் வருதோ இந்த திருநாட்கள்?

யப்பா எப்பப்பா வருவேன்னு என் சின்ன பொண்ணும்...

அப்பா அடுத்த தீபாவளிக்காவது வந்துருவியான்னு என் பெரிய பொண்ணும்...

என்னங்க இது உங்களுக்கே நல்லா இருக்கான்னு எம் பொஞ்சாதியும்...

ஏன்டா மகனே நான் சுடு காட்டுக்குப் போறதுக்குள்ளே வந்துருவியான்னு என் ஆத்தாவும்...

கேட்கும்போது ... ....

ஏன்தான் வருதோ இந்த திருநாட்கள்??



- உங்கள் பிரியமுள்ள சம்பத் (சவூதி அரேபியா)

மன்மத ராசா "மாலதி"

இன்றைய குறள்

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது"

"எதிர்கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும். அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை
வரும். இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவதுதான் நல்லது. மூன்றாவது அணி வர வாய்ப்பு இல்லை. எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது" - சோ

கூடுதல் கைகால்களுடன் பிறந்த பெங்களூரு சிறுமிக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

சிறுமியின் எதிர்காலம் குறித்து மருத்துவர் ஷரண் பாடில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் பெங்களூரு நகரில் கூடுதல் கைகள் கால்கள் கொண்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தையின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.
இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை இந்தியாவில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. டாக்டர் ஷரண் பாடில் தலைமையிலான மருத்துவர்கள் குழுவொன்று 24 மணி நேரங்களூக்கும் மேலாக நடத்திய இந்த அறுவை சிகிச்சையின் பின் குழந்தை லக்ஷ்மியின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கைகள் கால்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. 2 வயதுக் குழந்தை லக்ஷ்மி இந்த அறுவை சிகிச்சையை நன்றாக சகித்துக்கொண்டாள் என்றும், இனி அவள் மற்றவர்களைப்போல் இயல்பு வாழ்க்கை வாழமுடியும் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தலைமை மருத்துவர் டாக்டர் ஷரண் பாடில் குறிப்பிட்டார்.

வட இலங்கையில் கடும் மோதல்

  • உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள் : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
  • லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது : சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன
  • பாகிஸ்தான் அவசரநிலைப் பிரகடனத்தை பொதுமக்கள் எதிர்க்க வேண்டும்: பேநசிர் பூட்டோ - பாகிஸ்தானில் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கடந்த சனிக்கிழமை நடைமுறைப்படுத்திய அவசரகால நிலையை எதிர்த்து பொதுமக்கள் கண்டனம் செய்ய வேண்டுமென்று முன்னாள் பிரதமர் பேநசிர் பூட்டோ குரலெழுப்பியிருக்கிறார்
  • செர்பியாவின் தீவிர தேசியவாத தலைவர் செசெல்ஜ் மீது போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு ஆரம்பமாகிறது : செர்பியாவின் தீவிர தேசியவாத கடும் கோட்பாட்டுக் கட்சியின் தலைவர் வொயிஸ்லாவ் செசெல்ஜ் மீதான வழக்கு விசாரணை தி ஹேக்கில் கூடும் அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன் ஆரம்பமாகவிருக்கிறது
  • உலக எரிபொருள் பயன்பாடு 55 சதவீதம் அதிகரிக்கும் - அனைத்துலக எரிபொருள் கழகம் எச்சரிக்கை : உலக நாடுகள் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு 2030ஆம் ஆண்டளவில் 55 விழுக்காடுகள் அதிகரிக்கும் என்றும் இதில் பெருந்தொகையான எரிபொருளை சீனாவும் இந்தியாவுமே பயன்படுத்தும் என்றும் அனைத்துலக எரிபொருள் கழகம் புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது
  • பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது : இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.
    ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கின்னஸ் சாதனை நூல் தெரிவிக்கிறது.
    இந்த ஜெர்மனி தேவாலயத்தின் 25 மீட்டர் உயரமான கோபுரம் 5 பாகைக்கு மேல் சாய்ந்திருப்பதாகவும், இத்தாலிய பைசா சாய்ந்த கோபுரம் 4 பாகைக்கும் குறைவாகவே சாய்ந்து நிற்பதாகவும் கின்னஸ் புத்தகம் சார்பாக பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டார்.
    சூர் ஹுசென் தேவாலயத்திற்கான சான்றிதழ் இவ்வாரம் வழங்கபடுகிறது

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

புலிகள் பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? - கனிமொழி

"ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது"

- கனிமொழி, தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்

November 06, 2007

இன்றைய குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமிமைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த இரண்டு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை

  • கூடுதல் கைகால்களுடனான குழந்தைக்கு பெங்களூரில் அறுவை சிகிச்சை : நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள். இந்தியாவின் பெங்களூரு நகர புறநகர்ப் பகுதியில் ஒரு அசாதாரணமான அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்றுவருகிறது. லக்ஷ்மி தத்மா என்ற அந்தக் குட்டிப் பெண்ணுடைய இடுப்புப் பகுதியில் ஒரு தலையற்ற, முறையான வளர்ச்சியற்ற ஒரு பிள்ளையின் உடல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
    தனது குழந்தையை இந்துப் பெண்தெய்வத்தின் அவதாரமென்று பெற்றோர்கள் பார்க்கிறார்களென்றாலும் அக்குழந்தையைக் காப்பாற்ற அது சிறுபிள்ளையாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று மருத்துவர்கள் கூறுயிருந்தனர்.
    லக்ஷ்மி விவகாரத்தை முதலில் கையிலெடுத்தவரும் இந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ குழுவுக்கு தலைமை ஏற்றிருப்பவருமான டாக்டர் ஷரன் பாடில், நாற்பது மணிநேரம் தொட்ர்ந்து சிகிச்சை நடக்கலாம் என்பதற்காக தங்களைத் தயார் செய்திருப்பதாகக் கூறினார். இந்த நல்ல காரியம் வெற்றிகரமாய் நிறைவடைந்து சிறுமி லக்ஷ்மி சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்வாளென்று இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் அத்தனை பேரும் வாழ்த்துவார்களென்பதில் ஐயமில்லை
  • வரதட்சணைக்கு எதிரான போராட்டம்: மணமகன்களை காக்க முயன்ற காவலர் பலி : இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தும் கூட்டம் ஒன்றில் இருந்து, இரண்டு மணமகன்களை காப்பாற்ற முயன்ற பொலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
  • கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி வரவேண்டும் - ஜனாதிபதியிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை : குமாரசாமியுடன் யெதியூரப்பாகர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பி.எஸ். யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலிடம் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்
  • கருணா அணியிலிருந்து பிரிந்து சென்றிருந்தாகக் கூறப்படும் பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியுள்ளனர் : இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை, குடிவரவு குற்றம் ஒன்றிற்காக தடுத்து வைத்துள்ள பின்னணியில், மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது அணியின் அலுவலகங்கள் பலவற்றை, கருணா அணியினரிடமிருந்து சமீபகாலத்துக்கு முன் முரண்பட்டதாக கூறப்படும் அவரது தளபதிகளில் ஒருவரான பிள்ளையான் அணியினர் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன
  • யுத்த செலவினங்கள் அதிகமுள்ள இலங்கை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு : இலங்கையில் யுத்த செலவினத்தை அதிகமாகக் கொண்டதாகக் கூறப்படும் வரவு செலவுத்திட்டம் நாளை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முக்கிய உரையாற்றவுள்ளார்
  • ஹைட்ரோ கார்பன் வளங்கள் குறித்து இந்தியா-ஆப்பிரிக்கா இடையில் மாநாடு : ஹைட்ரோ கார்பன் துறையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்
  • தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன், மற்ற குழந்தைகளின் அறிவுத்திறனை விட அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலில் காணப்படும் குறிப்பிட்ட ஒரு புரதச்சத்து, குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவித்து, அதன் மூலம், குழந்தையின் அறிவுத்திறன் மேம்படுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை, இந்த ஆய்வின் முடிவு எல்லா குழந்தை களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஞ்ஞான ரீதியான முடிவல்ல என்கிற சந்தேகத்தையும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, தமிழக தலைநகர் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருபவருமான மருத்துவர் ஜெயம் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • சௌதி மன்னர்-போப்பாண்டவரிடையே முதல் சந்திப்பு : சௌதி மன்னர் ஒருவர் முதல் தடவையாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரை வத்திக்கானில் சந்தித்துள்ளார்
  • முஷாரஃபை சந்திக்கப்போவதில்லை என்கிறார் இஸ்லாமாபாத் செல்லும் பேநசிர் பூட்டோ : பாகிஸ்தானில் சென்ற வாரக் கடைசியில் அதிபர் முஷாரஃப் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ள நிலையில், அவரை சந்திக்கப்போவதில்லை என்று எதிர்கட்சி தலைவி பேநசிர் பூட்டோ கூறியுள்ளார்

November 05, 2007

தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார்

"தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்கள் தேர்தலை மனதில் வைத்து தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டக்கூடத் தயங்குகின்றனர். கடந்த காலத்தில் நம்மிடையே இருந்த பழியைத் துடைக்கவும், வருங்காலத்துக்கு வழிகாட்டவும் போராடிய போராளியாக அவர் திகழ்ந்தார். சுயநலத்துடன் குறுகிய வட்டத்துக்குள் இருந்தவர்களை நாட்டின் மீது பற்றுக் கொள்ள வைத்தார்" - தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில செயலர், மதுரையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில்.

இன்றைய குறள்

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியை தேவதாசியாக்க தமிழ்நாட்டில் முயற்சி

  • தமிழ்நாட்டின் திருக்கோவிலூருக்கு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, தேவதாசியாக ஆக்கும் முயற்சியாக, பொட்டுக்கட்டும் சடங்கு ஒன்று இன்று நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிசொல்லும் ஜோதிடக்காரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் அந்த சிறுமியின் பெற்றோரே இப்படி செய்ய முயன்றதாகவும், இந்தச் செய்தி கேள்விப்பட்ட உள்ளூர் காவல்துறையினர், அவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்த சம்பவம் குறித்து, நேரில் விசாரணை நடத்திவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • தமிழ்ச்செல்வன் இரங்கல் - தமிழ்நாட்டில் சர்ச்சை : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ் நாளேடான ஜனசக்தி தனது தலையங்கத்தில், புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருககிறது என்று கூறியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி தமிழ்செல்வனுக்காக எழுதிய இரங்கல்கவிதை கருணாநிதிககும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இருக்கும் ரகசியத் தொடர்பினைத்தான் வெளிப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி, எனவே திமுக அரசு கலைக்கப்படவண்டும் எனக் கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    ஜெயலலிதாவின் கண்டனங்களுக்கு பதில் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஒருவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஓர் அடிப்படை மனிதநேயப் பண்பாடென்று கூறினார். இதனிடையே மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறக்கவும் இல்லை, அவரது கொலையாளிகளை மன்னிக்கவும் இல்லை எனக் கூறியிருக்கிறார். தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருக்கின்றனவே என செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து தங்கள் வேதனையினை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகக் கூறினார்.
  • புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக தியாகம் செய்ய மக்கள் தயார் - பிபிசி கருத்துக்கணிப்பு : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பிபிசி உலக சேவையினால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது
  • விளையாட்டரங்கம் : இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹத்தியில் இன்று திங்கட்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது. இலங்கை – ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையில் ஷேன் வார்ண்- முத்தையா முரளீதரன் ஆகியோரின் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட முடிவாகியிருப்பது ஆகியவை குறித்து இன்றைய விளையாட்டரங்கில் கேட்கலாம்
  • இன்றைய (நவம்பர் 05 திங்கட்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 04, 2007

மருத்துவர் இராமதாசு அவர்களின் இன்றைய உபயோகமான அரசியல் பிரவேசங்கள் மற்றும் கோரிக்கைக்குரல் - ஆய்வு : 01

அரசு ஊழியர்களுக்குச் செய்யும் சலுகையால் ஆதாயம் பெரும் கருணாநிதி : 02

தனியார்மயமாக்குதல் தேவையா? : 03

மருத்துவர் இராமதாசு அவர்களின் இன்றைய உபயோகமான அரசியல் பிரவேசங்கள் மற்றும் கோரிக்கைக்குரல் - ஆய்வு : 04

எப்போது இறைவனை அடையமுடியும்?

"ஓட்டையாக இருக்கும் பானையில் எவ்வளவு முயற்சித்தாலும் நீரை நிரப்பவே முடியாது. மனிதர்களின் மனமும் பானை போன்றதே. அதில், ஆசை என்னும் ஓட்டை இருந்தால், புனித எண்ணங்களை நிரப்பவே முடியாது. ஆகவே ஆசைகளை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் இறைவனை அடையமுடியும்" - சத்யசாய்

இன்றைய குறள்

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ

  • தமிழ்ச்செல்வனின் மறைவு பேரிழப்பு - விடுதலைப் புலிகளின் தலைவர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி மீது வெள்ளிக்கிழமை அரச படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மக்களின் மனங்களை வென்ற ஆழமாக நேசிக்கப்பட்ட தன்னிகரற்ற தலைவன் எனவும், அவர் உட்பட்ட 6 போராளிகளினதும் மறைவு என்றுமில்லாத ஒரு பேரிழப்பாகும் எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சமாதான வழியில், நீதியான முறையிலே தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை என்றும், சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை என்றும் மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசி தமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள நாவலடியில் ஞாயிற்றுகிழமை மாலை வாகனமொன்றின் மீது இனம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • தேர்தல்கள் குறித்து முடிவுவெடுக்கப்படவில்லை - பாகிஸ்தான் பிரதமர் : பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள் அவசரகால நிலை அறிவித்து ஒரு நாள் ஆகியிருக்கும் நிலையில் அங்கே அடுத்த ஜனவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் இனி எப்போது நடத்தப்படும் என்பது இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தானப் பிரதமர் சௌகத் அசீஸ் அவர்கள் கூறியுள்ளார். அத்துடன் சுமார் 300 முதல் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப் படுத்தினார். முன்னாள் பாகிஸ்தான உளவுத் துறை தலைவர் ஹமீத் குல், அரசியல்வாதியாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், வெளிநாட்டில் வாழும் முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் நவாஸ் ஷரீஃபின் கட்சிப் பிரதித் தலைவர் ஜாவீத் ஹஷ்மி ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ
  • வவுனியாவில் ஐவர் சுட்டுக்கொலை : இலங்கையின் வடக்கே வவுனியா தவசிகுளத்தில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஐந்து இளைஞர்களை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • இந்திய மீனவர்கள் விடுதலை : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற குற்றத்திற்காகக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 97 இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்
  • விடுவிக்கப்பட்ட துருக்கியப் படையினர் நாடு திரும்பினர் : குர்த் இனப் போராளிகளால் விடுவிக்கப்பட்ட எட்டுத் துருக்கியப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்
  • சர்வதேச உதவியை கோரும் மெக்சிகோவின் டாபஸ்கோ மாகாணம் : கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நாட்டின் டபாஸ்கோ மாகாணத்தின் ஆளுநர் சர்வதேச உதவியை கோரியுள்ளார். இந்த வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • குழந்தைகளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐரோப்பியர்கள் விடுவிப்பு : ஆப்ரிக்க குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்களையும், நான்கு ஸ்பானிய நாட்டு விமானப் பணிப்பெண்களையும் சாட் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்

November 03, 2007

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

  • பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்
  • பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகள் சிலவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர் : பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் பாகிஸ்தான் அரசப்படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தலிபான்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள், அந்த பகுதியில் இருக்கும் மூன்று தாலுக்கா அளவிலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக கூறியுள்ளனர்
  • பர்மாவிற்கு இரண்டாவது முறையாக செல்கிறார் ஐ.நா விசேடத் தூதுவர் : பர்மாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக பர்மா விவகாரங்களுக்கான ஐ.நா வின் விசேட தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அங்கு விஜயம் செய்யவுள்ளார்
  • மெக்ஸிகோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது : மெக்ஸிகோவில் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தென்பகுதி மாநிலமான டபாஸ்கோவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வானூர்திகள் மூலம் மீட்கும் பெரிய நடவடிக்கை ஒன்று தொடர்ந்து வருகிறது
  • ஹைதியிலிருந்து இலங்கை அமைதிகாப்புப் படையினர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் : ஹைதியில் ஐ,நா.மன்ற அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை துருப்பினர் நூற்று எட்டு பேர் பாலியல் அத்துமீறல்களிலும் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்
  • கர்ணல் கருணா லண்டனில் கைதுசெய்யப்பட்டார் : விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கர்ணல் கருணா, பிரிட்டிஷ் பொலிசார் மற்றும் குடிவரவுத்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையினால் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது
  • தமிழ்ச்செல்வன் மறைவையொட்டி புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரப்பகுதி மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசின் விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வன்னிப்பிரதேசம் எங்கும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • அமெரிக்க விருது பெற்ற தலாய் லாமாவுக்கு புதுதில்லியில் பாராட்டு விழா; இந்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு : திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு, சமீபத்தில் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க காங்கிரஸ். சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு அமெரிக்கா இந்த விருதை வழங்கியது

மனித மொழி பேசிய சிம்பான்சி மரணம்

வாஷிங்டன்: மனிதர்களுடன் சைகை மொழியில் பேச பழக்கப்பட்ட முதல் பெண் சிம்பான்சி குரங்கு இறந்து விட்டது. இது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பது டார்வின் தத்துவம். அதே நேரத்தில் மனிதனுடன் குரங்கு பேச முடியுமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கினர். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள சிம்பான்சி மற்றும் மனித தகவல் பரிமாற்றம் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 1980-ம் ஆண்டு ஒரு பெண் சிம்பென்சி குரங்கு குட்டியை தேர்ந்தெடுத்து வளர்க்க தொடங்கினர். அந்த சிம்பான்சிக்கு `வஷூ' என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். சைகை மொழியில் தகவல் பரிமாற்றம் செய்ய அந்த சிம்பென்சி பல ஆண்டுகளாக பழக்கப்படுத்தப்பட்டது. நாளடைவில் விஞ்ஞானிகளின் சைகையை புரிந்து கொண்டும், அதற்கு உரிய வகையில் செயல்படவும், பதில் அளிக்கவும் `வஷூ' நன்கு பயிற்சி பெற்று விட்டது. மேலும், உலகளவில் `வஷூ'வுக்கு பல மனித நண்பர்களும் உருவாகினர். `வஷூ' நேற்று முன்தினம் இரவு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டது. இதற்கு வயது 42. `வஷூ'வின் மறைவு, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `வஷூ' நினைவாக வரும் 12-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.` இயற்கைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு தெரியப்படுத்த ஒரு துாதராக வந்தாள் `வஷூ'. ஏராளமானவர்களிடம் அவள் மிகவும் அன்பாக பழகினாள். அவளை நாங்கள் இழந்து விட்டோம்' என்று விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். `வஷூ'வின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தனியாக ஒரு இணையதள முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில்,` மனித மொழியை புரிந்து கொண்ட முதல் சிம்பென்சி `வஷூ' தான். தனது வளர்ப்பு மகனுக்கும் அந்த மொழியை அவள் கற்றுக் கொடுத்தாள். `வஷூ' மிகவும் தனித்தன்மை வாய்ந்தது' என்பது உட்பட பல உருக்கமான தகவல்களை பலர் அந்த இணைய தள முகவரியில் வெளியிட்டு வருகின்றனர்

November 02, 2007

இன்றைய குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுன்று, அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

நடிகர்கள்தான் மகாபுருஷர்கள்

"முத்தமிழை வளர்க்க 50 ஆண்டுகளாக இந்தச் சென்னை மணவழகர் மன்றத்தைத் தொடர்ந்து நடத்தியிருப்பது பெரிய விஷயம். இப்போது இளைஞர்கள் வேறு மன்றங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா வசனம்தான் இயல், சினிமா டப்பாங்குத்து பாட்டுதான் இசை, அந்த காட்சிகள்தான் நாடகம், சினிமா விளம்பரம்தான் ஓவியம், நடிகர்கள்தான் மகாபுருஷர்கள் என்று நினைக்கிறார்கள். இதுபோன்று இளைஞர்களை சீரழிப்பவர்களைக் கண்டிக்கும் துணிச்சல் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேண்டும். இதில் நான் மட்டும்தான் அடிக்கடி மாட்டிக் கொள்கிறேன்" - மருத்துவர் இராமதாசு

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் மரணம்

  • விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் வேறு ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்ச்செல்வன் - ஒரு பார்வை : தமிழ்ச்செல்வன் என்றவுடன் பலரது நினைவுக்கும் வருவது அவரது மலர்ந்த புன்னகை பூக்கும் முகம்தான்.
    இந்த மிக மோசமான உள்நாட்டுப்போரில் அவரது எதிரிகளுக்கோ, இந்த புன்னகை என்பது அவரது கொடூரத்தை மறைத்த ஒரு முகமூடி. அவ்வளவுதான். ஆனால் அவரது நண்பர்கள், அவரை ஒரு மதிப்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட போராளியாகவும், ஒரு நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவராகவும் கருதினர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1984-ல் இணைந்த தமிழ்ச்செல்வன் அவர் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிகாக்கும் படைகளை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கியமானவர். 1993-ல் அவர் ஒரு விமானத்தாக்குதலில் காயமடைந்து ஒரு காலில் இருந்து எல்லா சதையும் எடுக்கப்பட்டு, கோல் ஊன்றாமல் நடமாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச்செல்வன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியே தெரிந்த முகமாக விளங்கினார். புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கியதுடன், இலங்கை அரசுடன் நடந்த ஏறக்குறைய எல்லா அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். இலங்கையில் உள்ள மற்ற எல்லா அரசியல்வாதிகளையும்விட ஒருக்கால் மிகவும் அதிகமாக பேட்டி காணப்பட்டவர் அவராக இருக்கலாம். தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஒரு மகன் ஆகியோர் இருக்கின்றனர்
  • இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் மூலம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில், புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • மெக்ஸிகோவில் பெரு வெள்ளம் : மெக்ஸிகோவின் தென்பகுதி மாநிலமான தபஸ்கோவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கில் அகப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்காக, மீட்புப் பணியாளர்கள் மும்முரமாகப் போராடி வருகிறார்கள்
  • இந்தியாவில் சிறார் தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர் : இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை நடத்திய பொலிஸார் அங்கு வேலை செய்த குறைந்தது 70 சிறார்களை மீட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்

சம்பாதிக்க வழியா இல்ல...இவரப்பாருங்க!

November 01, 2007

இன்றைய குறள்

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கடவுள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்

"நெற்றியில் ஏன் இப்படி வீபூதி பட்டை அடிக்கிறீங்க?" என்று கேட்டதற்கு பதில் இப்படி வந்தது.. "வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சுண்ணாம்பு அடிக்கிறோம் அதை போல கடவுள் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்" - கிருபானந்த வாரியார்

வட இலங்கையில் கடுமையான மோதல்

  • இந்தியாவின் அரச மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணை : இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மத்திய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்க்கீடு வழங்கி இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய நடுவணரசு சட்டம் கொண்டுவந்தது.
    இதை எதிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணைகள் இன்று முடிவடைந்திருக்கின்றன.
    தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்த பின்னணியில், சுமார் மூன்று மாதகாலம் நீடித்த, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணைகள் குறித்து, இந்த விசாரணையை தொடர்ந்து அவதானித்து வரும், இந்து பத்திரிகையின் புது தில்லி செய்தியாளர் ஜெ.வெங்கடேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
  • வட இலங்கையில் கடுமையான மோதல்: மக்கள் இடம்பெயர்வு
    இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தின் தென்மேற்கே மன்னார் கட்டுக்கரை மற்றும் வடக்கே யாழ்ப்பாணம் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்
  • இந்தியாவில் அருகிவரும் புலிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் : இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அருகி வருகிறதுஇந்தியாவில் குறைந்துவரும் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஆய்வுக்கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
    தேசிய வனவிலங்குப் பாதுகாப்புக் குழு என்ற அந்தக் குழுவில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர்கள் ரகுபதி, நமோ நாராயண மீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் 17 மாநிலங்களில், 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில், 28 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றை, தேசிய புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஏற்கனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
    இவை குறித்த மேலதிக தகவல்களையும், இந்தியாவில் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கை அருகி வருவதற்கான காரணங்கள் குறித்து, இந்தியாவின் முன்னோடி வன உயிரியல் ஆய்வாளர், டாக்டர் ஏ.ஜே.டி.ஜான்சிங் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • மட்டக்களப்பில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கவலை : மட்டுநகரின் ஒரு தோற்றம்இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் பலவற்றில் அண்மைக் காலமாக ஆயுதமுனையிலான கொள்ளைச் சம்பவங்களும், வீதி வழிப்பறிகளும் மிகவும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • உகாண்டாவின் கிளர்ச்சிக் குழுவினர் அரசுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை துவங்கவுள்ளனர் : ஆப்பிரிக்காவின் மிக மோசமான மற்றும் நெடுநாளைய மோதல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக தேவனின் போராட்டப் படை என்றழைக்கப்படுகின்ற உகாண்டாவின் கிளர்ச்சிக்குழு ஒன்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக தலைநகர் கம்பாலா வந்தடைந்துள்ளனர்
  • இராக்கில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது : இராக்கில் கொல்லப்பட்ட சாமானியப் பொதுமக்களின் எண்ணிக்கையானது அண்மைய மாதங்களோடு ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் குறைவாக இருப்பதாக கடைசியாக பெறப்பட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு மாதங்களாக பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
  • 2005 லண்டன் சுரங்க ரயில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியமைக்காக காவல்துறைக்கு அபராதம் பொலிசாரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி2005 ஆம் ஆண்டு லண்டன் சுரங்க ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த அப்பாவியான ஜான் சார்ல்ஸ் டி மெனசஸ் என்பவரை லண்டன் காவல் துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டதாக, லண்டனின் பிரதான காவல்துறையான லண்டன் பெருநகர காவல்துறை தண்டிக்கப்பட்டுள்ளது
  • ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவப்போன ஜப்பான் கப்பற்படை கப்பல்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன : ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயலாற்றிவரும் தனது இரண்டு கடற்படை கப்பல்களை உடனடியாக தனது பணிகளை இடைநிறுத்திவிட்டு நாடு திரும்பும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது
  • சாட் நாட்டிலிருந்து கடத்த முயற்சிக்கப்பட்ட குழந்தைகள் அனாதைகள் அல்ல: சர்வதேச தொண்டு நிறுவனங்கள் - சாட் நாட்டில் பிரஞ்சு உதவி அமைப்பு ஒன்று குழந்தைகளை கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்க்கு பெற்றோர்கள் இருப்பதாய் தெரியவந்துள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன
  • சொமாலியாவில் மனித அவலம்: ஐ.நா.மன்றம் - சொமாலியாவின் இடைக்கால அரசை ஆதரிக்கும் எத்தியோப்பிய படையினருக்கும், பலமான ஆயுதங்களை தன்னிடம் கொண்டிருக்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையில் சமீபத்தில் உருவாகியிருக்கும் சண்டை காரணமாக, சொமாலிய தலைநகரான மொகதிஷுவில் இருந்து சுமார் தொண்ணூறா யிரம் பேர் வெளியேறியிருப்பதாக, ஐநா மன்றம் தெரிவித்துள்ளது

October 31, 2007

இன்றைய குறள்

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு

  • தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது : உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது
  • பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு : அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷனுக்கு 42-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
  • யுத்தச் செய்தி தணிக்கை வர்த்தமானியை இலங்கை அரசு விலக்கிக்கொண்டது : இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தின்கீழ் உணர்ச்சிபூர்வமான இராணுவச் செய்திகளை வெளியிடுவதற்கும், பிரசுரிப்பதற்கும் தடைவிதிக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் இராணுவ யுத்த செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை மேற்கொண்டிருந்தார்
  • மட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு: 20 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு : மட்ரிட் நகரில் 2004 ஆம் ஆண்டில் சுமார் இருநூறு பேர்வரை பலியாகக் காரணமான ரயில் குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று, பெரும்பாலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேரை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 31 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன் - ஜெயகாந்தன்

''நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரை மகிழ்வித்திருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். பிறரை மகிழ்வித்து நான் துன்புறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? நான் இந்த வாழ்க்கையோடு என்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாக காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது'' - ஜெயகாந்தன்

"நான் நினைக்கிறததான் எடுப்பேன்" - 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க, மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்தவரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்லபடம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம். புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை) இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........
"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"
"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"
"பரசுராம்"
"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"
"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்"
" சரி. கேள்வி கேளுங்க"
"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"
"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்"
"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு?"
"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"
"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா?"
"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"
"ஒரு தடவை"
"எநதத் தியேட்டர்ல?"
"உதயம்"
"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"
"இரண்டு மூன்று தடவை"
"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"
"கஷ்டம்தான்"
"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத்தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல"
"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"
"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"
"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"
"தத்துவத்தின் அடிப்படையில்தான்"
"என்ன தத்துவம்"
"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்"
"சென்னையா?"
"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்"
"தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"
"உங்களுக்கு எப்படி தோணுது?"
"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை"
"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்"
"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"
"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க"
"படம் சுய விவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"
"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆப் காட்-னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்"
"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"
"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"

மிக மிக மெதுவான கேமரா

October 30, 2007

அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்

லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய குறள்

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கவிதையில்தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது

"கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது" - பிரம்மராஜன், எழுத்தாளர்

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

  • நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை : நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார். கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்கக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளை சாட் அரசு கைது செய்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இருந்து நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் அதிகாரிகளை சாட் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
  • நானூறு வயதான சிப்பி : சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்
  • இராக்கில் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வழி செய்யும் சட்டமூலம் : இராக்கில் செயற்படுகின்ற வெளிநாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள், குற்றவிசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வழி செய்யும் தற்போதைய சலுகையை ரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றுக்கு இராக்கிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகாமையில் ஒரு தற்கொலைதாரி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், பலர் காயமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது
  • எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த சவூதி அரசர் : லண்டனில் சவூதி மன்னர்பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அவர்களின் பயணத்தின் முதல் நிகழ்வாக, எலிசபெத் அரசியார் அவரை முறைப்படி வரவேற்றார்
  • இராக்கின் மிகப் பெரிய அணையின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா கவலை : இராக்கில் உள்ள மிகப் பெரிய அணையின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    மோசூல் நகருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதியின் குறுக்காக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது