December 22, 2007
இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து
உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
ஆற்காடு வீராசாமிக்கும் இராமதாசுக்கும் இடையே நடப்பது என்ன?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:00 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
December 21, 2007
இராமதாசு 2011-ல் பதவிக்கு வருவாரா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
தமிழகத்தில் இன்றைய காங்கிரசின் நிலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
திருநெல்வேலி இளைஞர் அணி மாநாடு : அடுத்த முதல்வர் ஸ்டாலினா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 195 - ம் குறள்
கல்லூரி - தமானா
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
நிலைக்கண்ணாடி போல இருப்பவர் வைரமுத்துதான்" - மு.கருணாநிதி
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:19 PM
0
comments (நெற்றிக்கண்)
இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 20, 2007
இன்றைய குறள்
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 194 - ம் குறள்
கருணாநிதி சோனியா சந்திப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:14 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
சிப்ஸ் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தை
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: தகவல் : வெப்துனியா
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு
இந் நிலையில், சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம், அந்தக் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறைக்கு ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரையும் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி, இந்த மூன்று கைதிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:58 PM
0
comments (நெற்றிக்கண்)
நம் தேசியக்கொடியும், தேசியகீதமும் மங்கையரின் உள்ளாடைக்குள்!



Posted by
Manuneedhi - தமிழன்
at
1:06 AM
1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
இந்தியர்களை மலேசியா வெறுத்து பழிவாங்குவது ஏன்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:02 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
December 19, 2007
இன்றைய குறள்
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 193 - ம் குறள்
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:45 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இசை - சர்.சி.வி.ராமன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:40 PM
0
comments (நெற்றிக்கண்)
"மத்திய மாநில அரசுகள் ஒத்துழைத்தால் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்" - பிரதமர் மன்மோகன் சிங்
இந்திய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்காக கால வரையறையுடனான செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 18, 2007
மூன்று ஹிஜிரி வருடங்களைக் கொண்ட 2008
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: துபாய், நன்றி : முதுவை ஹிதயத்
இன்றைய குறள்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 192 - ம் குறள்
கல்லூரி நண்பர்கள் - பாலாஜி சக்திவேல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
பிரதமர் மன்மோகன் சிங் - தமிழக முதல்வர் கருணாநிதி சந்திப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:37 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
மேக்கப்-புக்கு மூன்று வருடமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: தகவல் : டெய்லி டெலிக்ராப்
இந்திய முன்னாள் அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு சீக்கியக் கலவரத்தில் பங்கு விவகாரம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 17, 2007
இன்றைய குறள்
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 191 - ம் குறள்
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:44 PM
0
comments (நெற்றிக்கண்)
எழுச்சியுறும் இந்தியா
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:36 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
மலேசிய தமிழர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
பிரமோத் மஹாஜன் கொலை வழக்கில் அவரது சகோதரர் குற்றவாளியாக அறிவிப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:27 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 16, 2007
கீரிப்பிள்ளை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:34 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
இன்றைய குறள்
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:28 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 190 - ம் குறள்
ஹைக்கூ கவிதைகள்
1.வாழ்க்கைச் சுமைகளை
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….
குட்ஸ் வண்டி
2.வண்டுக் காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….
பனித்துளிகள்
3.அழுதவானம் எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….
நீரோடை
4.இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....
இலங்கை
5.சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்
பிறைநிலா
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : வார்ப்பு
விவாகரத்து : இலக்கிய ஆர்வம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:17 PM
0
comments (நெற்றிக்கண்)
இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த "செய்மதி தொழினுட்பத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார். செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார். 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான "சாஹித்ய ரத்னா", "வித்யா ஜோதி", மற்றும் "லங்கா அபிமான்ய" போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:01 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
டாக்டர் பத்மஸ்ரீ PB.ஸ்ரீனிவாஸ்
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:20 AM
0
comments (நெற்றிக்கண்)
"ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்'* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்
குவான்டனாமோ: "ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை அவன் மீது வழக்கு நடத்தப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அவனை மீண்டும் நீதிபதி முன் நிறுத்த ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன் அவனிடம் விசாரணை நடத்தி, அவனது வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அதில் அவன் கூறியிருப்பதாவது:நான், ஒசாமா பின்லாடனின் டிரைவர் மற்றும் பாதுகாவலன். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் விமானம் மூலம் தகர்க்கப்பட்ட போது, காந்தகாரில் உள்ள ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரையும், அவரது மகன் ஒட்டமானையும், நான் தான் காரில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றேன். அமெரிக்கர்கள் பிடியில் அவர் சிக்கி விடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள், ஒவ்வொரு நகராக அவரை நான் தான் அழைத்து சென்றேன். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது, குறைந்தது ஆயிரத்து 500 பேராவது இறப்பர் என ஒசாமா எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மேலும் இறப்பு எண்ணிக்கை இருந்ததால், மிகவும் திருப்தி அடைந்தார். அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நான் பிரமாணம் எடுத்துள்ளேன். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் அவரிடம் பணியாற்றினேன்.இவ்வாறு ஹாம்தான் கூறியுள்ளான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:10 AM
0
comments (நெற்றிக்கண்)
கடிகார முட்களைப்போல் தி.மு.க.,வில் அழகிரி, ஸ்டாலின் செயல்பட கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:58 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
December 15, 2007
இன்றைய குறள்
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 189 - ம் குறள்
உன்னதமான சங்கீதம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:41 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழக மீனவர்கள் ஆந்திராவில் கைதாகி விடுதலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
அவசரகால நிலையை அகற்றினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்
பாகிஸ்தான் அதிபர் பெர்வேஷ் முஷாரஃப் அவர்கள் கடந்த மாதம் முதல் நாட்டில் போட்டிருந்த அவசரகால நிலையை விலக்கியுள்ளார். கூடவே அரசியல் சாசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் தன்னால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிற்கு நாட்டின் முக்கிய நீதிபதிப் பதவிகளுக்கான சத்தியப் பிரமாணங்களையும் செய்து வைத்துள்ளார். இப்படியொரு நிலையில் அவசரகாலச் சட்டத்தை விலக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்கள் அதிபரை விமர்சிப்பவர்கள். அவசரகால நிலைமையின் போது பதவி விலக்கப்பட்ட பக்கச்சார்பற்ற நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படப் போவதில்லை. கூடவே செய்தி ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கப் போகின்றன. இந்த முன்னெடுப்புகள் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில் வந்துள்ளன.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 14, 2007
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:36 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:30 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 188 - ம் குறள்
தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல - டாக்டர் ராமதாஸ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:10 PM
0
comments (நெற்றிக்கண்)
புவி வெப்பமடைதல் தொடர்பிலான ஐ.நா. மாநாடு நிறைவு நேரம் தாண்டியும் நீடிக்கிறது
புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் சமரச உடன்பாடு ஒன்றைக் காண்பதற்கான முயற்சியில் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பாலியில் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு இரவாகியும் தொடர்கிறது. மாநாடு முடிவடைவதற்கான கால எல்லை கடந்துவிட்ட நிலையில், சட்ட ரீதியான இலக்குகளை நிர்ணயிக்க முடியுமா என்பதற்கான முட்டுக்கட்டைகளை நீக்க முடியும் என்பதில் சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த இலக்குகளை நிர்ணயிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. 2020 அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் 40 வீதம் வரை கட்டாயமான வெட்டு வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகின்றன. வறிய நாடுகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக அவற்றுக்கு உதவுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஒரு புதிய ஒப்பந்த வேலைகளுக்கான நிதி ஆகியவை உட்பட இறுதி ஆவணத்துக்கான பெரும்பாலான எழுத்து வேலைகள் எல்லாம் உடன்பாடு காணப்பட்டு விட்டதாக பாலியில் இருக்கின்ற பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகிறார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 13, 2007
பொண்ணுங்க மாறிட்டாங்க!
“ஸோ…நீங்க டவுட் பட்டா நாங்க பேசிறணுமா? மொதல்ல இந்த மாதிரி காலேஜ் காம்பஸ்-குள்ள இன்டீசன்ட்டா நடந்துக்கறத ஸ்டாப் பண்ணு. ப்ளீஸ்.. என்னெ தொந்தரவு பண்ணாத. ஒன்னோட ஃப்ரண்ட்ஸ் சொன்னதுல எந்த டவுட்டும் இல்ல. நான் இன்னொருத்தர லவ் பண்றேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன். வர்ற செமஸ்டர் முடிஞ்சதும் கல்யாணம். சாரி….ராஜேஷ்! நீ அந்த மாதிரி நெனச்சு இத்தனை நாளா எங்கிட்ட பழகிருந்தா என்னெ மன்னிச்சுரு. எனக்கும் ஒம்மேல அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனா நான் தனியா திங்க் பண்ணிப் பாத்தப்போ அவருதான் எனக்கு பொருத்தம்னு தோணுது. இனி என்னெப் பாக்காத, பேசாத. எக்ஸ்ட்ரீம்லி சாரி” ஸ்வேதா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
இதை ராஜேஷ் கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவனாய் வாய் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு கண் கலங்க நகர்ந்தான்.
“ஏய்!…இதெல்லாம் ஒனக்குத் தேவையாடா? நீ காலேஜ்-ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி என்னடா செய்ய? அவ்வளவு பேருக்குமே நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கணு தெரியுமேடா. இப்ப என்ன செய்யப்போற? போய் தூக்குமாட்டிட்டு சாவுடா. டேய்! இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பாதடா, பொண்ணுங்க முன்னாடி மாதிரி இல்ல, இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாளுங்கடான்னேன். கேட்டியா நீ! இப்ப முட்டிகிட்டு சாவுடா”. நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் ஒருமையில் அவளையும் சேர்த்துத் திட்டினார்கள்.
“இவளுக்குத்தான் அறிவு இல்ல, அந்த டாபருக்கு புத்தி எங்கடா போச்சு. நீங்க லவ் பண்றது தெரிஞ்சும்... இவளோட சுத்துறான்னா, அவன் சரியான சோமாறிடா. மச்சான் அவன் எந்த ஏரியாடா? அட்லீஸ்ட் எந்தக் காலேஜ்-னாச்சும் யாருக்காவது தெரியுமாடா? மவனே அந்தப் பொறம்போக்கெ தீத்துடுவோம் மச்சான்.
“ஏய்! அதெல்லாம் வேணாண்டா. எனக்காக நீங்க எதாச்சும் செய்யணுன்னா ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்கடா. அவங்கிட்ட என்னோட மேட்டர மட்டும் பக்குவமா சொல்லி, அவள விட்டுறச் சொல்லுங்கடா. அவன் மனசு வச்சா நடக்கும் மச்சான் ப்ளீஸ்” ராஜேஷ் வெட்கத்தை விட்டுச் சொன்னான்.
“தோடா! என்ன காதல் பிச்சையா? இதெல்லாம் வேலைக்கி ஆவாது மச்சான். மவனே! கையக் கால எடுத்துருவோம் எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆள் இருக்குடா” ஒரு மேதாவி சொல்லி முடித்தார்.
ஒரு வழியாக ராஜேஷ்-ஸ்வேதா விசயத்தை அவனிடம் பக்குவமாகச் சொல்ல ஒத்துக்கொண்டார்கள். செமஸ்டர் தொடங்கியது. அனைவருமே படிப்பிலும், தேர்விலும் மும்முரமாக இருந்தனர். ஒரு நாள் கல்லூரி முடிந்து மொத்தமாக வெளியே வந்த ராஜேஷின் நண்பர்கள் அந்தக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர்.
ஒரு பார்வையற்ற வாலிபனுக்கு உதவுவதற்காக, அந்த வாலிபனின் கையைப்பிடித்துக்கொண்டு, போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை, ராஜேஷ் கடந்து கொண்டிருந்தான். ஸ்வேதாவோடு அஷ்டலட்சுமி கோவிலில் பார்த்த அந்த வாலிபன் பார்வையற்றவன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.
அடுத்த நாள் கல்லூரி சென்ற ராஜேஷ் தன் நண்பர்கள் யாருமே தன் கண்ணில் படவில்லையென்பதால் அனைவரையும் ஒரு வழியாகத் தேடிக் கண்டுபிடித்தான்.
“மச்சான் என்னெ மன்னிச்சுருங்கடா! ஒங்களயெல்லாம் என்னால மறக்க முடியாதுடா. நீங்க நெனக்கிறமாதிரி எனக்கு ஒங்கமேல கோபம் இல்லடா. ஒரு தப்பான தகவல் ஏன் குடுத்தோம்னு நீங்க ஃபீல் பண்றது எனக்குப் புரியுது மச்சான். ஆனா தப்பு அங்க இல்ல மச்சான், எம்மேலதான்டா. ஸ்வேதா என்னெ முழுசா லவ் பண்ணலடா. அப்படி ஒரு ஃபீலிங் இருந்ததென்னமோ உண்மைதான்டா. ஆனா இப்ப எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சுடா. இனிமே அவளை நான் நெனைச்சுப் பாக்கக்கூட அருகதை இல்லடா. அவ ரொம்ப பெரிய மனசு உள்ளவ மச்சான். நீங்க சொன்ன மாதிரி பொண்ணுங்க ரொம்ப மாறிட்டாங்கடா. முன்னாடி மாதிரியெல்லாம் இல்லேங்கறது நூத்துக்கு நூறு உண்மைடா.
“டேய்! என்னடா புதிர் போடுற? என்னடா ஆச்சு ஒனக்கு? மாறிட்டாங்கங்குற, பெரிய மனசுங்குற.. ம்ம்...என்ன?”
ஆமடா மச்சான்! அவ அந்த ஹீரோவ லவ் பண்றாடா. பார்வை இல்லேன்னு தெரிஞ்சும் எந்தப்பொண்ணுடா லவ் பண்ணுவா? நம்மதான்டா பொண்ணுகள தப்பாவே கணக்குப்போட்டு வச்சுருக்கோம். அவ, அவளோட வாழ்க்கையையே அவனுக்கு குடுக்க நெனைக்கிறப்போ, ஆஃப்டர் ஆல் என்னோட லவ் என்ன மச்சான் பெருசு? அவனுக்கு எதோ ஜாப் சம்மந்தமா எக்ஜாம் எழுதறதுக்கு ஹெல்ப் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கு. இவ ஹெல்ப் பண்ணிருக்கா. அவனுக்கு அந்த வேலை ஓகே ஆயிடுச்சு. அப்பறம் அவனுக்கு நெறைய எய்ம் இருக்கு மச்சான், ஐஏஎஸ் எழுதணுங்கறான். ப்ரிபேர் பண்ணிகிட்டுருக்கான். இன்னும் என்னென்னமோ சாதிக்கணுங்கறான். இப்படிப்பட்ட பார்வையில்லாத ஒரு இளைஞனோட கனவுகள முழுசா பூர்த்தி செய்ய ஸ்வேதா முழு மூச்சா இறங்கிட்டாடா. பார்வை இல்லாட்டிக்கூட அவனோட தைரியம், லட்சியம், கனவு, இவளோட ஹியூமானிடி இதெல்லாம் பாக்கறப்போ நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம் மச்சான். காதல் கீதல் எல்லாத்தயும் விட வாழ்க்கையில எதையாவது சாதிக்கணுங்கற ஒரு வைராக்கியந்தான்டா முன்னாடி நிக்கிது. அவனுக்கு நெறைய உதவிகள் செஞ்சுகிட்டுருக்கா மச்சான். அப்படியே அவங்களுக்குள்ள நல்ல ஒரு அன்டர்ஸ்டேன்டிங் ஆகி, அது மேரேஜ் வரைக்கும் போய்டுச்சு… எப்படியோ நல்லாருக்கட்டும் மச்சான். ஷீ இஸ் ரியலி க்ரேட் மச்சான். ராஜேஷால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
நண்பர்களின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : திண்ணை.காம்
இன்றைய குறள்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:55 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 187 - ம் குறள்
ஜெயலலிதா சொல்கிறார்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:52 PM
0
comments (நெற்றிக்கண்)
இலங்கைக்கான பிரிட்டனின் தூதரின் கருத்துகளுக்கு இலங்கை அரசு கண்டனம்
இலங்கை அரசின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹனஇலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் டொமினிக் சில்கோட் கடந்த திங்களன்று ஒரு கூட்டத்தில் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு தனது முறையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. விடுதலைப்புலிளின் கோரிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்ட சில்கோட் அவர்கள் , தமிழ்த்தாயகம் என்ற அரசியல் அபிலாஷையே நியாயத்தன்மையற்றது என்று தான் கூறமாட்டேன் என்று கூறியிருந்தார். சில்கோட்டை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்த இலங்கை ஆட்சியாளர்கள், அவர்களது அதிருப்தியை வெளியிட்டனர். பிரிட்டிஷ் அரசு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை உறுதியாக நிராகரித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசியல் அபிலாஷைகள் நியாயமான வழிகள் மூலம் தெரிவிக்கப்படவேண்டும் என்ற பொருள்படவே தான் இதைக் கூறியிருந்ததாக சில்கோட் கூறினார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 12, 2007
சரண்யா பாக்யராஜ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:38 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 186 - ம் குறள்
ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 11, 2007
இன்றைய குறள்
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:44 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 185 - ம் குறள்
ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க அறிவித்தது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
மின்சார பற்றாக்குறை விவகாரம்: பாமக - திமுக முறுகல்
திமுக-பாமக தலைவர்கள்தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை மட்டுமன்றி, அரசியல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது. தமிழக மின்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி பகுதியில் தனியார் மின் நிறுவனத்தின் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பாக திமுக – பாமக இடையே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஆர்க்காடு வீராசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
மலேசியத் தமிழர்களின் போராட்டம் தேவையா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:02 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
December 10, 2007
மு.க.ஸ்டாலின் முதல்வராவாரா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 184 - ம் குறள்
சரண்யா பாக்யராஜ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
கிசு கிசு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
சர்வதேச சமூகம் குறித்து பாகிஸ்தான் நீதிபதி வருத்தம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
அமைதிக்கான நோபல் பரிசு அல்கோருக்கு வழங்கப்பட்டது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:11 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 09, 2007
"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
இன்றைய குறள்
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 183 - ம் குறள்
சிறந்த வணிகத்தலைவருக்கான விருது - திரு.சையது முகமது சலாஹீதின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:56 PM
0
comments (நெற்றிக்கண்)
வார்ப்பில் ..... எனது கவிதை
1.விஞ்ஞானம் தோற்கிறது!
என்னவள்
உள்ளிழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்று
கார்பன் டை ஆக்ஸைடாம்
யார் சொன்னது?
பிறகெப்படி நான்
இத்தனை நாள் உயிரோடு!?
2.தண்ணீர்ப் பஞ்சம்
என்னவளே!
உன் புருவங்களின்
ஓரத்தில் பொதிந்து நிற்கும்
அந்த வியர்வை
முத்துக்களைச் சற்றே
உன் சுண்டுவிரலால்
சுழற்றிவிடு!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும்
இந்தத் தமிழகத்தில்!
3.அவளுக்காக!
என்
இதயத்துடிப்பைச் சற்றே
நிறுத்திவைத்தேன்
என்னவள்
எந்தன் மார்பில்
முகம்புதைத்தபோது!
அவள் தூக்கம்
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக!
சென்னை நவின்,
இர்வைன், கலிபோர்னியா (USA)
http://www.vaarppu.com/view.php?poem_id=935
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:48 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : வார்ப்பு
நாம் எங்கிருக்கிறோம்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:33 PM
0
comments (நெற்றிக்கண்)
மலேசியாவில் மீண்டும் ஒரு பேரணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ, தனது போதகர் அங்கியின் கழுத்துப்பட்டையை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெட்டி எறிந்துள்ளார்
ராபர்ட் முகாபேவும் அவரது நிர்வாகமும், ஜிம்பாவே மக்களை பட்டினி மற்றும் பயத்தில் தள்ளியுள்ளனர் என்பதை ஆப்ரிக்க தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் உகாண்டாவில் பிறந்தவரான ஆர்ச்பிஷப் ஜான் செண்டாமூ கூறியுள்ளார்.
இதற்கிடையே, லிஸ்பனில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க ஐரோப்பிய மாநாட்டில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ராபர்ட் முகாபே, ஐரோப்பா முரட்டுத்தனமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஜிம்பாவே நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பிரிட்டனும், அமெரிக்காவும் முயலுவதாகவும் அவர் தெரிவித்தார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 08, 2007
இன்றைய குறள்
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 182 - ம் குறள்
வர்த்தகத் துறையில் இந்தியா பீடுநடை போடுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை
இதுதொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் வரை, தமிழ்நாட்டில் மின்சாரம் உபரியாக இருந்தது. மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் முதல் காற்றாலைகள் மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரம் 1500 மெகாவாட்டும், மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் 1000 மெகாவாட்டும் கிடைக்காத காரணத்தால், தற்போது தமிழகத்தில் தாற்காலிகமாக மின்தடை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே எண்பது லட்சம் நுகர்வோர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 18 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம்தான் தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்று, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கியுள்ளார் அமைச்சர். அதே நேரத்தில், கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாடு வராத அளவுக்கு, அஸ்ஸாம், ஹரியானா, கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து தேவையான மின்சாரத்தை வாங்கி, தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார். மின் தட்டுப்பாடு குறித்தும், அமைச்சர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாகவும், கோவையில் உள்ள தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் கே. செல்வராஜு அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
இந்தியாவில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைக்குமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:36 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 07, 2007
திடீரென எனக்கு மாரடைப்பு வந்தது....
Dear colleagues, I am working in Blore Software City ... I wanted to share an incident of my life with you, hoping that it may be an eye opener to you so that you can live more years.
On 27th October afternoon, I had severe heart attack symptom and I was rushed to the hospital.
After reaching to the hospital, the doctors prescribed a test called angiogram. This test is basically to identify blood flow of heart arteries. When they finished the test they found a 94% block in the main artery, please see the image below with red circle.At this point, I wanted to share my living style, which has caused this block in my heart arteries. Please see the below points of my life style, if any of these points are part of your life style then you are at risk, please change yourselves.
1. I was not doing any physical exercise for more than 10 years , not even walking 30 minutes a day for years .
2. My food timings are 11:00 AM Breakfast or no Breakfast, 3:00 PM to 4:00 PM Lunch and dinner at 11:00 PM to 12:00 AM.
3. Sleeping in very odd timings, going to bed between 12:00 AM and 3:00 AM. Waking up at between 9:00 AM and 10:30AM ....... Some times spending sleepless nights.
4. I used to eat heavily because of long gaps between lunch and dinner and I used to make sure that Non-Veg is available most of the time, there were times when I did survey on city hotels to find delicious Non-Veg dishes. I was never interested in vegetable and healthier food.
5. Above all I was chain smoker from years.
6. My father passed away due to heart problems, and the doctors say the heart problems are usually genetic.
Once they identified the major block they have done immediately a procedure called angioplasty along with 2 Stints, mean they will insert a foreign body into the heart arteries and open the blocked area of arteries. Please see the below image after the procedure.

Doctors instructions:
- Need to have physical exercise for minimum of 45 minutes daily.
- Eat your food at perfect timings , like how you eat during your school days. Eat in small quantities more times and have lot of vegetables and boiled food, try to avoid fry items and oily food. Fish is good than other non-vegetarian food.
- Sleep for 8 hours a day, this count should complete before sun rising.
- Genetic problems, we cannot avoid but we can get away from it by having regular checkups.
- Find a way to get relived from the stress (Yoga, Meditation,Talk with ur frnds etc).
So I urge you all to please avoid getting into this situation, it is in your hands to turn the situation up side down, by just planning / changing your life style, by following simple points above. Because life is wealth and GOD gives you life only once. I pray to GOD that no one should face this situation. If you find it's useful you can forward this mail to your friends and loved ones.....
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : காதல் குழுமம்
இன்றைய குறள்
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 181 - ம் குறள்
பின்னனிப்பாடகர் கிரிஷ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:45 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
அப்துல் கலாமின் ஆதரிசக் கனவுகளை இதுபோன்ற சிறுவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்குச் சிறைத் தண்டனை: இந்தியாவில் புதிய சட்டம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
நிஜக் கரப்பான் பூச்சிகளை ஏமாற்றிய இயந்திர கரப்பான்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
நீதிமன்றத்துக்கு வருமாறு இராமருக்கும் அனுமானுக்கும் உத்தரவு
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
கவிஞர் மீராவுடன் ஓர் நேர்காணல் - அப்துல் ரகுமான்
"அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும் மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசிஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார்- இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம், நான் செத்தாலும் வாழ்வேன்." என்று தனது புத்தகத்துக்கு முன்னுரையில் எழுதிய கவிஞர் மீரா இன்று இல்லை.ஆனால் அவரது சிந்தனைகளும், செயல்களும் இன்னுமிருக்கிறது. என்றென்றும் இருக்கும்.அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நேர்காணலை இவ்விதழில் தருகிறோம். இனி..அப்துல் ரகுமானும் மீராவும் பேசுகிறார்கள். மீரா காற்று. ஓரிடத்தில் நிற்க மாட்டார். அவரை என் வீட்டில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து உரையாடினேன். அதிலிருந்து சில பகுதிகள்....
எப்போது கவிதை எழுத தொடங்கினீர்கள்? அதற்கான தூண்டுதலாக இருந்தது எது? அல்லது யார்?
பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு இருந்தது. அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோரின் எழுத்துக்கள் என்னை எழுதத்தூண்டின. கல்லூரி நாட்களில் சுரதா, தாகூர், கலீல் ஜிப்ரானில் ஈடுபாடு ஏற்பட்டது. என் முதல் கவிதை 'தீபன் குன்றம்' பாரதி பற்றியது. அது 1959 இல் 'தாமரை'யில் வெளிவந்தது. அது மரபுக் கவிதை. எண்சீர் விருத்தம். பாரதிதாசன் பாதிப்பு அதில் தெரியும்.
அறிஞர் அண்ணா உஙகள் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அறிவேன், அவரோடு எப்படி அறிமுகம் ஆனீர்கள்?
'திராவிட நாடு', 'திராவிடன்', 'முரசொலி', 'தென்றல்', 'இன முழக்கம்', 'மன்றம்' இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன, எல்லாம் அரசியல் கவிதைகள், வேழவேந்தன் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பேசும்போது - 1964 என்று நினைக்கிறேன். திராவிட இயக்கக் கவிஞர்கள் என்று சிலர் பெயர்களைப் பட்டியலிட்டார். அதில் 'மீ.இராசேந்திரன் என்ற ஒருவர்' என்று என் பெயரைக் குறிப்பிட்டார், 'தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்' என்ற என் வரியை இருமுறை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். 'பொங்கல் கொண்டாட வேண்டும்' என்று கூறும் என்னுடைய மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில், 'சாவா சந்திப்போம் : வாழ்க்கை நமக்கென்ன, பூவா புறப்படுபோம்: புல்லியரைத் தூள் செய்வோம்' என்ற என் கவிதை வரியை எடுத்துக்காட்டி எழுதியிருகிகிறார். ஒருமுறை நேரில் சந்திக்க முயன்றேன். முடியாமல் போய் விட்டது.
கலைஞரோடு எந்த அளவில் தொடர்பு?
"முரசொலி'யில் கவிதை எழுதியிருக்கிறேன். கலைஞர் தலைமையில் கவியரங்கத்தில் பாடியிருக்கிறேன். ஆசிரியர் போராட்டத்தின் போது அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். எனக்கு வேறு இடத்தில் வேலைக்காகத் துணைவேந்தராக இருந்த மு.வ.விடம் பரிந்துரைத்திருக்கிறார். 1983-ல் மதுரை எட்வர்ட் ஹாலில் பாரதி நூற்றாண்டு விழாக் கவியரங்கம். அப்போது எனக்குப் பொதுவுடைமைக் கோட்பாட்டுச் சார்பு ஏற்பட்டிருந்தது. கலைஞர் பேச வந்திருந்தார். 'நீ லெனினைப் போல் புரட்சித் தலைவனாக வேண்டும்' என்று பாடினேன். கலைஞர் பேசும்போது 'தான் போனதுமல்லாமல் என்னையும் தூக்கிக்கொண்டு போகப் பார்க்கிறார். அவர் எங்கள் வண்டலில் விளைந்த பயிர் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்' என்று கூறினார்.
தி.மு.க.வில் இவ்வளவு தீவிரமாக இருந்த நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் எப்படிப் போனீர்கள்?
தி.மு.க. உணர்வோடு இருந்கபோதே பொதுவுடைமைக்கோட்பாட்டையும் நான் விரும்பினேன். 'ஐனசக்தி' படிப்பேன். பேராசிரியர் தர்மராஐன் தொடர்பால் நான் மார்க்சீயத்தின் பக்கம் போகத் தொடங்கினேன். மேலும் தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி எதிர்ப்புப் போன்றவற்றில் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் இவையெல்லாம் சேர்ந்து என்னைப் பொதுவுடைமைப் பக்கம் தள்ளிவிட்டன.
புதுக்கவிதை எழுதத் தொடங்கியது எப்போது? எதனால்?
கல்லூரி நாட்களிலேயே தாகூர் கவிதைகளை வி.ஆர்.எம். செட்டியார் மொழிபெயர்ப்பில் படித்தபோது வசன கவிதை என்னை ஈர்த்தது. டி.எஸ். எலியட் 'வேஸ்ட் லேண்'டும் படித்தேன். முற்றிலும் புரியவில்லை என்றாலும் இந்தப் புதுமைப் போக்குப் பிடித்திருந்தது. தாகூர் 'காதல் பரிசின் பாதிப்பில் 1959-ல் 'காதல் கனி' என்ற வசன கவிதை எழுதினேன். இதுவே என் முதல் வசன கவிதை முயற்சி. தொடக்கத்தில் புதுக்கவிதையை வெறுத்த பொதுவுடைமையர் தி.க.சி 'தாமரைப் பொறுப்பேற்று (1970) வசன கவிதையை ஆதரித்த பிறகு, அதன் பக்கம் திரும்பினர். கைலாசபதியும் புதுக்கவிதை பற்றிய தம் வெறுப்பை மாற்றிக்கொண்டிருந்தார். 'வானம்பாடி'யும் வந்தது. இந்தக் காலக் கட்டத்தில்தான் முதலில் 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' பிறகு 'ஊசிகள்' எழுதினேன்.
முற்போக்குத் திறனாய்வாளர்கள் பொதுவாகவே பெண்ணைப்பற்றி, காதலைப் பற்றி எழுதினால் கடுமையாக விமர்சிப்பர் 'க.க.கா' எழுதியபோது நீங்கள் இதைப் பற்றி நினைக்கவில்லையா?
நினைத்தேன். ஆனால் இடையிடையே, 'நிலத்தை மீட்கப்போனேன்,' 'நான் ஏங்கல்ஸின் மாணவன்,' 'புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப் படங்களில் பார்த்து மலைக்கும், ஓர் இந்திய உழவனைப் போல்...'' என்ற வரிகளை இணைத்திருந்தேன். அதனால் முற்போக்கு வட்டத்தில் வரவேற்பே இருந்தது. தி.க.சி. பாராட்டிக் கடிதம் எழுதினார். 'தேசம் தழுவும் பொதுவுடைமைக்கு, வரவேற்புரை எழுதும்போதும், தேகம் தழுவும் எனக்கு-என் தனியுடைமைக்கு வாழ்த்துரை எழுதும் போதும்' என்ற வரியை மட்டும் 'இளவேனில்' கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார். பொதுவாகப் பொதுவுடைமைச் சார்புப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
நீங்கள் சிவப்பு வட்டத்துக்குள் இருக்கும் கவிஞர் என்பதால்தான் இந்தப் பாராட்டு. இந்த வட்டத்துக்கு வெளியே இருப்பவன் 'க.க.கா' போல ஒரு நூலை எழுதியிருந்தால் கிழித்திருப்பார்கள். சோவியத்தை நீங்கள் ஆழமாக நேசித்தீர்கள். அது சிதறி உடைந்துபோன போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
என் கனவுலகம் உடைந்ததுபோல் இருந்தது. தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட போது ஏற்பட்டதுபோல் மனத்தில் கலவரம் ஏற்பட்டது.
சோவியத் சிதைந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கார்ப்பச்சேவ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுதான் காரணம். மேலும் மக்களுக்கும் மேற்கத்திய கன்ஸ்யூமரிஸத்தில் ஒரு மோகம் இருந்ததும் காரணம்.
இது மட்டும்தான் காரணமா? ஊழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாயினும் ஆட்சி, அதிகாரம் என்று வந்துவிட்டால் அவனுக்கும் ஆளும் வர்க்கத்தின் குணங்கள் வந்துவிடும் என்பது என் கருத்து. அளவுக்கு மீறிய அதிகாரத்தைப் பயன்படுத்திச் சில அடிப்படை மனித உரிமைகளை ஒடுக்கினார்கள். உள்ளே குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டது. இல்லை?
அதுவும் உண்மைதான் சோவியத் காலப்போக்கில் ஒரு 'ப்யூரக்ரேட் ஸ்டேட்'ஆக மாறிப்போய்விட்டது.
'க.க.கா' படிக்கும் போது அது கற்பனையாகத் தெரியவில்லை. சுயஅனுபவத்தின் கனல் தெரிகிறது சரிதானா?
சரிதான். கல்லூரி மாணவனாக இருந்தபோது எனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்தில் மலர்ந்ததுதான் 'க.க.கா.' இருந்தாலும் அதை வெறும் மானுடக்காதலாகச்சொல்லாமல் ஓர் ஆன்மீகப் பரிமாணமும் தந்திருக்கிறேன். பெண்ணை வெறும் பெண்ணாக அல்லாமல் ஓர் இலட்சிய சமூக அமைப்பின்- பரிபூரணத்தின் குறியீடாகவே கையாண்டிருக்கிறேன்.
பதிப்பாளர் மீராவால் படைப்பாளர் மீராவுக்குப் பாதிப்பு உண்டானதுப் பற்றி நினைத்து வருந்தியதுண்டா?
நான் பணியாற்றிய சிவகங்கை மன்னர் கல்லூரியில் பிரச்சினைகள் உண்டாகிப் போராட்டம் வெடித்தபோது இருமுறை நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். இதனால் நிரந்தரமாக வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. அதனால் நான் விரும்பிய பதிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். அதற்கு நீங்களும் காரணம். 'அபி'யின் கவிதைகளை வெளியிடவிரும்பி நாம் சில பதிப்பாளர்களை அணுகியபோது, 'கவிதையா? விற்காதே' என்று அவர்கள் புறக்கணித்ததைக் கண்டு கொதித்துப்போய், 'நாமே பதிப்பித்தால் என்ன?' என்று நீங்கள் கூறினீர்கள். பதிப்பகத்திற்கு 'அன்னம்' என்ற பெயரும் நீங்கள்தான் சூட்டினீர்கள். நீங்களும், நானும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 'அன்னம்' தொடங்கினோம். விளையாட்டாய்த் தொடங்கியது வினையாகிவிட்டது. நான் அதிலேயே மூழ்கிப்போனேன். அதனால் எழுதமுடியாமல் போய்விட்டது. அதனால் எனக்கு வருத்தம் தான். 'அன்னம்' பொருளாதார வகையில் தோல்விதான் என்றாலும் தரமான புத்தகங்களை அழகாக வெளியிட்டவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருப்பது ஆறுதலாக இருக்கிறது.
'அன்ன'த்தின் சாதனையாக எதைக்கருதுகிறீர்கள்?
இரண்டு. ஒன்று, புதுக்கவிதைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. 'வானம்பாடி' பத்திரிக்கையாக இருந்து புதுக்கவிதைக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்தந்தது. 'அன்னம்', பதிப்பகமாக இருந்து அதே பணியைச் செய்தது. 'கவிதை எனறால் விற்காது' என்ற கருத்தை உடைத்தது. இரண்டு, கரிசல் இலக்கியத்தைப் பிரபலப்படுத்தியது. கி.ரா. மட்டுமல்லாமல் இன்னும் 5, 6 பேர்களுடைய நூல்களை அன்னம் வெளியிட்டது.
'அன்னம் விடு தூது' ஒரு நல்ல பத்திரிக்கையாக வந்துக்கொண்டிருந்ததே. ஏன் நிறுத்தினீர்கள்?
சிற்றிதழாக இல்லாமல் 'மிடில் மேகசினா'கக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். ஏஜென்டுகள் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். விளம்பரங்களும் பெற முடியவில்லை. அதனால் கையைக் கடிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாது என்ற நிலை வந்தபோது வேறு வழியின்றி நிறுத்திவிட்டேன்.
கவிஞர், உரையாளர், கல்லூரி ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், ஆசிரியர் போராட்டத்தளபதி, பதிப்பாளர், அச்சக உரிமையாளர் என்று பல பணிகளில் முத்திரை பதித்திருக்கிறீர்கள். இன்னும் நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா? ஏதேனும் வருங்காலத்திட்டம்?
நிரந்தரமாக நிற்கும்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வசனகவிதையில் நாடகமாகவோ, காவியமாகவோ ஒரு நூல் எழுதும் எண்ணம் இருக்கிறது. அதிகமாக படைக்காமல் போனதை இதன் மூலம் ஈடு செய்ய விரும்புகிறேன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:38 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : வார்ப்பு
கடமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:01 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : திண்ணை.காம்


