எழுத்தாளர் பாமரனின் "பஞ்ச்" பதில்கள்!
பாமரன் அவர்களே, தங்கள் எழுத்தை நேசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை...நேற்று வரை ஈழப்பிரச்சினையில் அமைதியாக இருந்த கலைஞர், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.... நன்று... அதை வரவேற்றோம்...ஆனால் அதே நிகழ்வுக்கு தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பேரணியும், கூட்டங்களும் நடந்தன...ஆனால் அங்கெல்லாம் அமைதியாயிருந்து விட்டு சென்னை யில் நடக்கவிருந்த பேரணிக்கும், கூட்டத்திற்கும் தடை விதித்ததன் மூலம் "காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலுக்கு கலைஞர் பணிந்து விட்டாரோ என்று எண்ணத்தோணுகிறது...." கலைஞரின் இந்த முடிவு இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா.. இல்லை ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளூம் எண்ணமா?
தற்போது வெளிவரும் திரைப் படங்கள் எவ்வாறு இருக்கின்றன...? எப்படி இருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்...?
சுசித்ரா
வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?
கொலைவாளினை எடடா
ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறார்கள், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம். இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம், மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றுகொண்டு இருக்கின்றன.....2020யில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள் வல்லரசு எதைபதை எதை வைத்து முடிவுசெய்கிறார்கள்?
ருத்ரா
கருணாநிதி
வணக்கம் தோழரே, உங்கள் பகிரங்க கடிதங்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனது கேள்விகள் :
ஆர்த்தி
தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?
வணக்கம் நண்பரே..தமிழனுக்கு சாதி தேவையா தேவையில்லையா?இல்லையெனில் தமிழனை அடையாளம் கொள்வது எப்படி?
ஜீவானந்தம்
தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு (இதற்கு ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை) விற்பனைக்காக பாமரன் தேவைப்படலாம். பாமரன் போன்ற புரட்சியாளர்களுக்கு குமுதம் தேவையா?
ஜெயபிரகாஷ் வேல்
தோழரே, உங்கள் எழுத்து நடை சற்று சலிப்பூட்டுவது போல் உள்ளது. ஓரே மாதிரி எழுதுவது உங்களுக்கு எப்படி உள்ளது?
பாரதி
தோழரே ஈழத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்.........
மதுரை மச்சான்!
தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு இப்படி ஒரு கருத்து நிறையப்பேரிடம் இருக்கிறது!!!! எதனால் என்று கூறமுடியுமா? பாமரன் அவர்களே!!











