May 06, 2007

இந்த வாரம் ஹரிஹரனின் குரலில்..



தவிப்பு

கையிலொரு குழந்தை
இடுப்பிலொரு குழந்தை - அந்தத் தாய்
சாலையின்

பாதியைக் கடக்கும்போது
'க்ரீன்' சிக்னல்...........

- நவநீ

உன்னி கிருஷ்ணன்

கர்நாடக இசையும் திரைப்பட இசையும் அவ்வப்போது சங்கமித்துக்கொண்டாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசையாகவே திரைப்படம் இருந்தால், 'பார்க்கும் கூட்டம் புரியாமலே தலையாட்டும் கூட்டமாக மட்டுமே இருக்கும்' என்று சொன்ன ஒரு கவிஞனின் வார்த்தை நிரூபனமாகிவிடும். எனவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, எந்தவகையில் கலந்திருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்று கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னனிப் பாடல் என்ற இரண்டிலுமே தேர்ந்த திரு.உன்னி கிருஷ்ணன் சொல்வதைப் பார்ப்போம்.