September 10, 2007
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் (123) பகுதி 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:00 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
அறத்துப்பால் : இனியவை கூறல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 100 - ம் குறள்
நம்பிக்கை

- விவேகானந்தர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:24 PM
0
comments (நெற்றிக்கண்)
- நவாஸ் ஷெரீப் நாடுகடத்தல் குறித்த சர்வதேசக் கருத்துகள் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரிஃப் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளமை பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இருந்த போதிலும் அங்கு நடைபெறவுள்ள தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடைபெற வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் அரசு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஷெரீப் அவர்கள் மீது ஏதாவது சட்டரீதியான வழக்குகள் இருக்குமாயின், அந்த வழக்கை எதிர்கொள்ள பாகிஸ்தானின் ஒரு நீதிமன்றத்தில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்யறியம் கூறியுள்ளது - வட இலங்கை மோதலில் 6 விடுதலைப்புலிகள் பலி : இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் இன்றும் இடம்பெற்ற வேவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு இராணுவத்தினர் காயமடைந்ததுடன், வவுனியாவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரண்டு பொலிசார் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்துள்ளது
- இராக்கில் வன்முறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மலிக்கி கூறுகிறார் : இராக்கில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, பாக்தாதிலும், மேற்கு இராக்கிலும் வன்செயல்களின் அளவு 75 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராக்கிய பிரதமர் நூரி அல் மலிக்கி கூறியுள்ளார்
- வங்கதேசத்தில் அரசியல் கட்சிகள் மீதான சில தடைகளைத் தளர்த்த நடவடிக்கை : வங்கதேசத்தில் அரசியில் கட்சிகள் தங்களது அரசியல் செயற்பாடுகளை நிகழ்த்தும் முகமாக, சில தடைகளை தளர்த்த அந்நாட்டின் இடைக்கால அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அங்குள்ள அரசியல் கட்சிகள் எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளன
- மேலும் இன்றைய (செப்டம்பர் 10 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்குக் கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:14 PM
0
comments (நெற்றிக்கண்)
Subscribe to:
Posts (Atom)