July 17, 2007

எழுத்தாளனுக்குக் கொந்தளிப்புத் தேவைதான், ஆனால் அந்தக் கொந்தளிப்பிலேயே அவன் ஆழ்ந்துவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது

- பிரபஞ்சன்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.7. சினம் இன்மை

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து



- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை


சினத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒருவனை, அந்தச் சினமே சுட்டெரிந்து கொல்லுவதால், கற்றுணர்ந்த பெரியவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Placidity

As the angry words which a man speaks, opening his mouth unguardedly, continually burn him, so those who possess that knowledge which arises from oral instruction and incessant search after truth will never be angry and utter burning words of fury.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது

அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

இலங்கையில் தற்போதைய உள் நாட்டு நிலைமைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் போர், அதனைத்தொடர்ந்த மக்களின் இடப்பெயர்வுகள், சமாதான முயற்சிகள், அதில் திருச்சபையின் பங்கு ஆகியவை உட்பட பலவிதமான விடயங்கள் குறித்து கத்தோலிக்க ஆயர் வணக்கத்துக்குரிய கிங்ஸிலி சுவாம்பிள்ளை "BBC" க்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். கேட்க இணைப்பில் செல்க, BBCTamil.com மேலும் இன்றைய (ஜுலை 17 செவ்வாய்க்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

கண்ணுக்குக் கண் -- பல்லுக்குப் பல்

இளம் இசைக்கலைஞர் வேதாந்த் பரத்வாஜ்