December 12, 2007

சரண்யா பாக்யராஜ்

இன்றைய குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்

தினம் தினம் பேப்பர்களில் வருகிற செய்திகளைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. நிர்வாகப் படிப்பான M.B.A. பயிற்சி தரும் உயர் கல்வி நிறூவனங்களில் (Indian Institute of Management) நுழைவுத் தேர்வில் மாணவர்களுக்குப் பதிலாக கெட்டிக்காரர்களை டம்மியாக அமர்த்தித் தர ஏஜென்ஸிகள் இருக்கின்றனவாம். பீஹார், உ.பி. மாநிலங்களில். இறுதித் தேர்வுக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள் போல. இந்த உயர் படிப்பு “படித்து” வெளி வரப்போகும் மாணவர்கள்தாம் எதிர்காலத்தில் நிர்வாகிகளாக உயர் பதவிகளில் அமரப்போகிறார்கள். ஏற்கெனவே, நமது அமைப்புகளில் நேர்மை கொடி கட்டிப் பறக்கிறது. இனி கேட்கவே வேண்டாம்

இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு

இந்தியாவின் வேலை செய்திறன்களில் ஏற்பட்டு வரும் பற்றாக்குறை பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் அரசியல் தலைவர்களும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று, இந்தியத் தலைநகர் புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய தொழில் துறையின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கலந்துரையாடலில் பேசிய பலரும் கல்வி இன்மையும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையுமே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர். 2012 ஆண்டில், இந்தியாவின் பணியாளர் பற்றாக்குறையை நிறைவு செய்ய வேண்டுமானால், ஐந்து லட்சம் பொறியாளர்களும், ஐந்து லட்சம் மருத்துவர்களும் தேவைப்படுவார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பழமையான தொழிலாளர் நல சட்டங்கள் பாரதூரமான அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோருவதாக, தில்லியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்