August 31, 2007

அமெரிக்கப் பண்பலை வரிசையில் தமிழ் பாடல்கள்!

அமெரிக்க மண்ணில் வாழும் இந்தியர்கள் அதிவேக வாழ்க்கையில் இருந்தாலும் தமிழ் பாடல்களை அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்புக்கள் உள்ளதென்று நினைக்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நண்பர் திரு.ஸ்ரீ மற்றும் திரு.இராஜன் அவர்கள். இந்த நிகழ்ச்சி மாபெரும் இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றியது.
Powered by eSnips.com

ஞானி என்பவர் யார்?

ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ஒரு சாஸ்திர நூல். "மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும். முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும். அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும். இதன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும்" என்கின்றன ஆன்மீக நூல்கள்.

பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் இந்திய நண்பர்களே எச்சரிக்கை!

கறுப்பு பட்டியலில் 45 பஹ்ரைன் கம்பெனிகள் : ஊழியர்களை மோசமாக நடத்துவது, ஊதியம் வழங்காமை போன்ற மோசடியில் ஈடுபடும் 45 பஹ்ரைன் நிறுவனங்களை இந்திய தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பஹ்ரைனில் உள்ள பல கட்டுமான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் பல நிறுவனங்கள் உள்ளூர் சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காமலும், அவர்களுக்கு மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்களை அளித்தும் அவர்களை மோசமாக நடத்துவதாக கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய தூதரகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் 45 பஹ்ரைன் கம்பெனிகளை இந்திய தூதரகம் அடையாளம் கண்டு அவற்றை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரி செய்யாதவரை, அந்நிறுவனங்கள் இந்தியப் பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்கான அனுமதியை இந்தியத் தூதரகம் அளிக்காது என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார். மேலும் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள 45 பஹ்ரைன் நிறுவனங்களின் உரிமையாளர்களோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
துபாய்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 ஆகஸ்டு 2007 ( 15:07 IST )
(மூலம் - வெப்துனியா)

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் சோனியா, இந்திரா நூயி

உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களில் சோனியா, இந்திரா நூயி
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்டு 2007 ( 15:42 IST )
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களின் பட்டியலில் சோனியா காந்திக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒன்று உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (தொடர்ந்து இரண்டாவதாண்டாக) முதலிடத்திலும், சீனாவின் துணை பிரதமர் வூ யி இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான காங்லோமெரேட் 3 வது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்க அமைச்சர் கண்டலிசா ரைஸ் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆறாவது இடமும், பிரபல பெப்சி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமெரிக்க இந்தியருமான இந்திரா நூயிக்கு 7 வது இடமும் கொடுத்துள்ளது அப்பத்திரிகை.

'அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி'

நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று மாலை உதயமானது. புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து சரத்குமாரும் அரசியல் களம் கண்டுள்ளார். தனது கட்சி இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் சரத்குமார். அதன்படி இன்று மாலை சென்னை வடபழனி பத்மாராம் கல்யாண மண்டபத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சரியாக இன்று (31-08-2007) மாலை 6.30 மணிக்கு தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தனது புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டியுள்ளார் சரத்குமார். கட்சியின் தலைவராக சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் - முருகன் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொதுச் செயலாளர் - கரு. நாகராஜன் துணைத் தலைவர் - எர்ணாவூர் நாராயணன். பொருளாளர் - செல்வராஜ். துணை பொதுச் செயலாளர் - சுந்தரேசன் கொள்கை பரப்புச் செயலாளர் - மருது அழகுராஜா. கட்சிப் பெயரை அறிவித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை அரசியல் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறோம். அதை ஏற்படுத்தக் கூடிய தகுதி படைத்தது எங்களது கட்சி மட்டும்தான். மற்ற கட்சிகளுக்கு அந்த அருகதை கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் தங்களது சுய லாபத்திற்காக தொடங்கப்பட்டவை. நாங்கள் அப்படி இல்லாமல், இன்றைய இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் அரசியலில் ஈடுபடுத்தி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காட்டிய வழியில்தான் நாங்கள் போகப் போகிறோம். அவர் கண்ட கனவையே நாங்களும் காணுகிறோம். எங்களது முக்கிய நோக்கம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அதே நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம்தான். எனவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் சரத்குமார்.

உயிரை பறிக்கும் "செல்போன்"


20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் "செல்போன் பயங்கரம்"

விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் 'ஸ்பிரிங்' போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு 'ரிங்டோன்' தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல்போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. காதில் 'ஹெட்போனை' வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் 'பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு அலையுது" என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது?சிகாகோவைச் சேர்ந்த 'மார்ட்டின் கூப்பர்' என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல 'மோட்டோரல்லா' கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்து 'முர்ரேஹில்' பகுதியில் உள்ள 'பெல்' லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை 'மோட்டோரல்லா' கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது 'நோக்கியா' நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.


வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.'அதிர்ச்சி' இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள். செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து 'ஆம்' என்று கூறியிருக்கிறது.கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் 'ரேடியேசன்' என்ற கதிர்வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இத்தகைய ஆபத்து. காதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற 'ஆக்யூஸ்டிக் நியூரோம்ஸ்' என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம். அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்டகாலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள். எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலைவலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும். - 'இப்பவே கண்ணைக்கட்டுதே"


எச்சரிக்கை டிப்ஸ்: செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர்கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந்தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள். நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசாதீர்கள். போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும். ஒரே சமயத்தில் பல போன்களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

வெறிநாய்கள் ஜாக்கிரதை!

ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது.
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய்களாலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி! கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது. முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர். நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன. மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV) ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV) திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன. கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை. நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும். உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று. காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரால் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும். அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும். எரிச்சல் உண்டாக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது. கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது. மருத்துவரை உடனே அனுகவும். முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.


நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை

கவிப்பேரரசு வைரமுத்துவிலிருந்து காமெடியரசு விவேக் வரை

விருமாண்டி நேர்முகம்

இன்றைய குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
அறத்துப்பால் : இனியவை கூறல்

முதலில் உனது பயத்திலிருந்து உன்னைச் சுதந்திரமாக்கு! பிறகு ஒவ்வொருவரும் சுதந்திரத்தைச் சுவாசிப்பார்கள்!

இந்தியப் பொருளாதரம் தொடர்ந்து வளர்ச்சி

  • இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் வளர்ந்து வருகிறது. அரசு கணக்கீடுகளின்படி கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஒன்பது சதவீதமாக இருக்கிறது.
    கடந்த இருபது ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வளர்ந்துள்ளது.
    இந்தியாவின் பொருளாதாரம் சரியாக 9.3 சதவீதம் வளர்ந்தாலும் அது அரசை கவலையில் ஆழ்த்தக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
    இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
    கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியா ஏழு சதவீதம் வளர்ந்து வருகிறது என்பதும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பத்தாண்டுகளுக்கு முன் மறைந்த டயானாவுக்கு மக்கள் அஞ்சலி:
    பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த வேல்ஸ் இளவரசி டயானா
    வை நினைவு கூறும் முகமாக இன்று மத்திய லண்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது
  • மத்திய கிழக்கின் காசா நிலப்பரப்பில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போரட்டங்கள், வன்முறையில் முடிந்திருக்கின்றன.
  • இராக்கின் ஆயுத குழுக்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் என்று, இராக் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

பின்னனிப் பாடகர் சங்கீதா - 1

பின்னனிப் பாடகர் சங்கீதா - 2

பின்னனிப் பாடகர் ஜெயதேவ் 1

பின்னனிப் பாடகர் ஜெயதேவ் - 2

குடும்பப் பின்னனியால் இல்லாமல் திறமையை மட்டுமே நம்பி வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடிகர்