July 30, 2007
வைத்தார்கள் ஆப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:40 PM
0
comments (நெற்றிக்கண்)
நாலடியார்
1. அறத்துப்பால்
1.11 பழவினை
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்
- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை
போன பிறவியில் செய்த நன்மை தீமையின் பலனால் வந்துசேரும் துன்பத்தைப் போக்க முனிவர்களால் கூட முடியாது. பெறக்கூடிய இன்பமும் அப்படியே! விதி வசத்தால் அமையும். மழையைப் பெய்ய வைப்பாரும் இல்லை. மழை அதிகமாகப் பெய்தால் நிறுத்துவாரும் இல்லை
- ஆதியக்குடியான்
ஆங்கில விளக்கவுரை
To avoid those things which are to happen, or to detain those who are to depart, is alike impossible even to saints, even as there is none who can give rain out of season, or prevent its falling in season.
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:52 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:03 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 59 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:02 PM
0
comments (நெற்றிக்கண்)
வானம் வசப்படும்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:45 AM
0
comments (நெற்றிக்கண்)
சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது.
இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் உசைன் பைலா பணிப்பெண்ணின் பெற்றோருடன் சவுதி சென்றார்.
அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து றிசானாவை மன்னித்து விடுதலையாக்கும்படி கேட்டபோதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசானாவின் பெற்றோரும் பிரதி அமைச்சர் உசைன் பைலாவும் நாடு திரும்பி விட்டனர்.
இத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பெண்ணாவார். இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து சர்வதேச மன்னிப்பு சபையிடம் புகார் செய்துள்ளனர்.
இலங்கைப் பெண்ணான ஹெல்மா நிஸ்ஸா அவரது கணவன் நௌஸாப் மற்றும் இலங்கையரான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவருமே சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இம்மூவரும் சவூதி அரேபியாவில் பொலிஸாரின் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளான நிலையும் காணப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு தற்போது மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள்வதன் காரணமாக இவ்வாண்டு இதுவரை 103 பேர் மரண தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை, சிரச்சேதம் செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thinakkural