July 16, 2010

இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் - தமிழக அரசு சின்னத்திற்கு அவமரியாதை

இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் - தமிழக அரசு சின்னத்திற்கு அவமரியாதை

எனது பையன் தனது ஆங்கிலச் சிறுகதையில் ஒரு வரி சொல்லிப் போனான். அதன் பொருள் ‘நாம செய்கின்ற தவறை எல்லாரும் சரின்னு சொல்லனும்னா அந்த தவறை அனைவரையும் செய்ய வைத்து விடனும்’. ஊரெல்லாம், தமிழ் நாடெல்லாம் சேர்ந்து கொண்டாடி முடித்துவிட்ட செம்மொழி மாநாடு ஒரு ஆயிரம் பக்க நாவல் போல. எத்தனைதான் குறை சொன்னாலும் எவ்வளவு மோசமான எதிர் கருத்தியல் உடையவரும் கூட ஆயிரம் பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை, பக்கத்து எழுத்தை வாசித்து சிலாகிக்க நேர்ந்து விடும். அப்படியிருக்க வாசிப்பவர்கள் ஆயிரம் பேராய் இருக்கின்ற பட்சத்தில் ஒட்டு மொத்த நாவலும் பாராட்டப்பட்டது என்று சொல்வதற்கான சாத்தியங்களும் எல்லாரும் பாராட்டினார்கள் என்று சொல்லி விடக் கூடிய அபாயமும் எப்படி அந்நாவலுக்கு நேருமோ அப்படித்தான் செம்மொழி மாநாட்டு விசயத்திலும் நிகழ்ந்து போனது.

நிகழ்ந்து முடிந்த மிகப்பெரும் விழாவில் ஏதாவது ஒரு விசயத்தையாவது பாராட்ட எல்லாருக்கும் நிறையவே இருந்தது என்பதற்கு அப்பால் அதன் இலக்கின்மை, தன் முனைப்பு, மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டு, தன் அடையாளமாய் நிறுவிக்கொண்டது, கோவை நகரமே ஒரு வார உற்பத்தி அற்றுப் போனது, ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி, துணைவிமார்களின் கையே, இத்யாதி, இத்யாதி என்பதெல்லாம் அடிபட்டுப் போனது கூட வருத்தமில்லை. ஆனால் ஒரு அரசாங்கப் பேருந்தில் தனியார் விளம்பரம் ஒட்டுவதற்கு அனுமதி கிடையாது என்றிருக்கின்ற ஒரு அரசாங்கத்தின் சொத்தின் மேல் அந்த அரசாங்க சொத்தை விட பெருமதிப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் அரசாங்கச் சின்னத்தின் மேல் கூசாமல் ஒரு மாநாட்டு விளம்பரப் பதாகையை, லோகோவை எப்படி ஒட்ட முடியும்?

சாதாரண ஒரு குடிமகன்கூட தன் வீட்டுச் சுவற்றில் விளம்பரம் ஒட்டினால் சண்டைக்கு வருகின்றான். ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ஒரு அரசியல் தலைவரின் பேரின் மேல் அல்லது படத்தின் மேல் இன்னொரு எழுத்தோ போஸ்டரோ ஒட்டப் பட்டால் நஸ்டஈடு கேட்கிறார்கள். எனது மருத்துவமனை திறப்புவிழா போஸ்டரை சுவற்றில் எழுதப்பட்ட தொல்.திருமாவளவன் பேரின் மேல் ஒட்டி விட்டார்கள் (ஒட்டியவர்கள் எழுதப் படிக்கத் தெரியதவர்கள் என்பது வேறு விசயம்) என்பதற்கு மருத்துவமனையில் வந்து தகராறும் நஸ்டஈடும் பெற்றுச் சென்றார்கள். ஒரு மத அடையாளத்தின் மேல் இன்னொரு அடையாளம் விழுந்து விட்டால் குத்துப் பலி கொலைப் பழி ஆகி விடுகிறது. அப்படியிருக்க அரசே தம் சின்னத்தின் பெருமை உணராது ஒட்டி விட முடியுமா? பேருந்தில் இருக்கின்ற தமிழக அரசின் சின்னத்தை படமெடுத்து தரவேண்டுமென்ற என் கோரிக்கையைத் தொடர்ந்து புகைப்படக்காரர் கேட்டார் ‘திருவள்ளுவர் சிலையிருக்கின்ற படத்தையா?” என்று. அதிர்ந்து போனேன் மனங்கள் எப்படி மாற்றப்பட்டு விட்டது என்று.

ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு விட்டதாலேயே அல்லது அரசாங்க சின்னத்தின் மீது மறைத்து ஒட்டப்பட்டு விட்டதாலேயே சனங்களின் கவனமும் அதில் கேள்வி எழுப்ப மறந்து போனதா?

சில மாதங்களுக்கு முன் தேசியக்கொடியை கேக்கில் போட்டு வெட்டியபோது எழுந்த சமூகக் கோபங்கள் சின்னத்தின் மேல் பசையிட்டு மறைத்து ஒட்டப்பட்டு விட்ட பதாகைகளின் மேல் எழுந்திருக்க வேண்டாமா?

பேருந்தில் மாநாட்டுப் பதாகைகள் சரி, அரசாங்கமே மொழியின் சார்பில் முன்னின்று நடத்துகின்ற பெருமைமிகு விழாவின் பதாகைகள் தமிழக மூலை முடுக்கெல்லாம் சென்று சேர சரியான இடம், வழி, பேருந்துகளில் ஒட்டுதல் என்பது சரிதான். அதைச் சரியாக தமிழக சின்னத்தின் மேலே அடித்து ஒட்டுவது என்பது அதீதமான தவறானது அல்லவா?

தவற்றை காண்கின்ற இடமெல்லாம் செய்து விட்டதால் சரியென்று ஆகி விடுமா என்ன?

தனியார்கள் இதைச் செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசே செய்ததால் இது சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டதா?

பொதுமக்களின் முணுமுணுப்பாய் இருந்து கொண்டிருக்கிற கேள்வி, ஏன் அரசியல் சமூகத் தலைவர்களிடம் எழும்பாமல் போயிற்று?

ஆயிரம் பக்க நாவலில் ஏதாவது ஒரு சம்பவத்தை அல்லது எழுத்தை வாசகன் பாராட்டி விட்டுப் போக வேண்டியிருப்பது போல மக்களுக்கு ஒரு நிர்பந்தமா?

செம்மொழி மாநாட்டை பிரபலப்படுத்தும் “ஆர்வக் கோளாறில்” நேர்ந்து விட்ட பிழையா?” அல்லது

ஆளுக்கொரு பக்கத்தைப் பாராட்டிவிட்டுப் போக அதைக் கண்டு மிரண்டு நிற்கின்ற வியப்பில் தவறுகள் அடிபட்டுப் போவது போல அரசின் தப்பித்தல் மனோபாவமா?

ஒரு அரசாங்கச் சின்னம் அதற்கு நடந்திருக்கின்ற அவமரியாதையை மக்கள், சமூக விமர்சகர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் பார்த்திருந்து இயல்பென கடந்து போனது சுயமரியாதை, பகுத்தறிவு இவ்வார்த்தைகளால் உருவாகிய கட்சிகள் அதை மறந்து விட்டு நடத்தும் ஆட்சி என்பதாலா?

"மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி"

பின் குறிப்பு : தமிழக அரசின் சின்னம் இந்து மத அடையாளத்தை தாங்கியிருக்கத்தான் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப் பட்டதன் விளைவாக சப்தமில்லாது, அரசு சின்னத்தை மாற்றி விடுவதற்காக பார்க்கும் ஒத்திகையா இது என்று சந்தேகத்தை கிளப்பியிருப்பதுவும் மறுப்பதற்கில்லை.

- திலகபாமா

July 06, 2010

அதிகாலை இன்றைய சூடான செய்திகள்

கருணாஸ் ஹாலிவுட் 3-டி படத்தில் கதாநாயகனாகிறார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20015&Itemid=68

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இந்தியா வருவதாக இல்லை : இரா.சம்பந்தன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20012&Itemid=57

சரத் பொன்செகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை : மெர்வின் சில்வா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20008&Itemid=57

விடுதலைப்புலிகளை எதிர்க்க கருணாநிதிக்கு துணிச்சல் இல்லை : ஜெயலலிதா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20005&Itemid=55

லக... லக... Part II : 'தாடி'யும் 'தல'யும் ஒன்று சேருமா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20000&lang=ta&Itemid=70

புர்ச்சி தமிலரின் புது லொள்ளும் பழைய ஜொள்ளும்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20002〈=ta&Itemid=70

வீடு - ஞாபகச்சிதறல் : த.ஜீவராஜ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18404&lang=ta&Itemid=192

கனிமொழி, அறிவுநிதி, பின் கலைஞரின் பேரன் அருள்நிதி திரையுலக பிரவேசம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19984&Itemid=177

கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? : அசின் ஆக்ரோஷம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19973&lang=ta&Itemid=68

July 04, 2010

அதிகாலை இன்றைய சூடான செய்திகள்

கனிமொழி, அறிவுநிதி, பின் கலைஞரின் பேரன் அருள்நிதி திரையுலக பிரவேசம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19984&Itemid=177

கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? : அசின் ஆக்ரோஷம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19973&lang=ta&Itemid=68

கேரள பேராசிரியர் கை துண்டிப்பு : நபிகள் நாயகம் மீதான அவதூறுக்கு தண்டனை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19980&Itemid=54

'கிழக்கே போகும் ரயில்' கதாநாயகன் சுதாகர் 'கோமா' நிலையில் கவலைக்கிடம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19978&Itemid=68

நாடு முழுவதும் இன்று பந்த்:டீசல் விலையுயர்வால் ரயில்களுக்கு இனி பயோடீசல்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19972&Itemid=54

கரும்புலிகள் மாவீரர்கள் நாள் : லட்சியப்பாதையில் விடுதலைப்புலிகள்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19970&Itemid=57

சென்னையில் போத்தீஷ் பணம் 81 லட்சம் கொள்ளை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19959&Itemid=55

மானுடம் போற்றும் மனிதநேயம் வாழும் மகத்துவமிகு மாதா ட்ரஸ்ட்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19958&Itemid=167

July 03, 2010

2010 அமெரிக்க சுதந்திர தின வாழ்த்துக்கள்"

'காணொலி'க்குத் தலைப்பை அழுத்தவும்

July 02, 2010

கருணாநிதியை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - ஜெயலலிதா

இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் சபை விசாரனை குழுவினரை அதிமுக வினர் சந்தித்து இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படுகிறார்களோ, அதைப் போல தமிழக முதல்வரும் போர்க் குற்றவாளிதான் என அறிவிக்க வேண்டும் கோரிக்கை வைப்போம் என என அதிமுக பொதுச்செயலார் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை : இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின்இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழை விசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. மஹிந்தா ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக்கூடாது. பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஷேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் “உண்ணாவிரதத்தை”நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழக மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும்" என சர்வதேச சட்டம் கூறுகிறது. போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர். ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான். ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும் போது, அதிமுகவைச் சேர்ந்த குழு ஐக்கிய நாடுகள் குழுவைச் சந்தித்து, கருணாநிதி ஒரு போர் குற்றவாளி என்று பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19926&lang=ta&Itemid=52