October 25, 2007

கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ. இயக்குனர் ராம்

இன்றைய குறள்

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

உயர்ந்தோர் ஏற்றுக்கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • இந்தியாவில் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய சட்ட விதிகளை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்த ஒரு விவாகரத்து வழக்கு, தற்போது தேசிய அளவில் இதுபோன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிப்பதற்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது. சீமா என்பவர், தனது கணவர் அஸ்வினிகுமாரிடமிருந்து விவாகரத்து கோரி கடந்த 2005 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்தபோது, திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டது. அதை அவர்களால் தர முடியவில்லை. இதையடுத்து, திருமணங்கள் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் சீமா. இந்திய திருமணம் ஒன்றில் குதிரையில் வரும் மணப்பெண்அதே நேரத்தில், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், இருதரப்பினரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் திருமணங்களைத் தடுக்கவும், குறைந்தபட்ச திருமண வயதை உறுதி செய்யவும் திருமணப் பதிவுகள் உதவிகரமாக இருக்கும் என்று தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளும் கருத்துத் தெரிவித்திருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மதத்தினரும் திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பாக மாநிலங்கள் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மூன்று மாதங்களுக்குள் அதைச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், அந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், திருமணப் பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்து, அதற்குரிய விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. பல மாநிலங்கள், திருமணப் பதிவை இந்துக்களுக்கு மட்டும் கட்டாயமாக்கியிருப்பது குறித்து சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,இந்த திருமணப் பதிவுகள் இந்துக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
  • இராணுவ அரசின் பிரதிநிதியை சந்தித்துள்ளார் அங் சான் சூ சீ: பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி அங் சான் சூ சீ கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பான்மையான காலத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தன் வீட்டிலிருந்து இராணுவ அரசின் உறுப்பினர் ஒருவரை சந்திப்பதற்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
  • பிபிசி செய்தியாளர் கடத்தப்பட்ட அனுபவம் குறித்த பெட்டகம் : மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில் செயற்படுகின்ற ஜிகாத் அமைப்பான இஸ்லாத்தின் இராணுவம் என்னும் அமைப்பால் கடத்தப்பட்ட பிபிசியின் முன்னாள் காசா நிருபர் அலன் ஜோண்ஸ்டன் அவர்கள், தான் கடத்தப்பட்டபோது தனக்கேற்பட்ட அனுபவங்களை முதல் தடவையாகப் பேசியுள்ளார்
  • இரான் மீது அமெரிக்கா புதிய தடைகள் : இரான் மீது அமெரிக்கா ஒருதலைபட்சமான மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இரானிய இராணுவத்தின் சில பிரிவுகள் மீதும், மூன்று வங்கிகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தடைகள் அமெரிக்காவின் நலன்களை காப்பதாக இருக்கும் என்று அரசுத்துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்தார்
  • பிகேகேயின் நடவடிக்கைகளை சகிக்க முடியாது என்கிறார் துருக்கிய அதிபர் : வட இராக்கில் இருந்து செயல்படும் துருக்கிய குர்து இன இயக்கமான பிகேகே துருக்கி பிரதேசத்துக்கள் நடத்தும் எவ்வித தாக்குதலையும் தன்னால் சகித்துக்கொள்ளமுடியாது என்று துருக்கிய அதிபர் அப்துல்லா குல் கூறியுள்ளார்
  • பாகிஸ்தான் தாக்குதலில் 33 பேர் பலி : பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு வாகனம் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலில் 29 படையினர் உட்பட குறைந்தபட்சம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • இன்றைய (அக்டோபர் 25 வியாழக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

சர்க்கரை குறைபாடு

வயதான சங்கரன் பல வருடங்களாக நீரிழிவு நோய்க்கு மருந்துகள் எடுத்து வருகிறார். அமெரிக்காவில் பிள்ளை வீட்டில் தங்கி இருக்கும் போது, ஒரு நாள் மதிய உணவு சற்று தாமதமானது. நினைவு தப்பிவிடுகிறது! உடனடியாக குளூகோ மீட்டரில் சர்க்கரை அளவு பார்க்கப்படுகிறது. சர்க்கரையின் அளவு 30.54 வயது சரஸ்வதி அம்மாளுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. குறிப்பாக, காலை வேளையில் மிகவும் குறைந்து அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறது. இதனுடன், எடை குறைதலும் வெகுவாக ஏற்படுகிறது. எப்போதும் கையில் சர்க்கரையும் பழச்சாறு மாகவே பயணிக்கிறார். பலமுறை பரி சோதனை செய்தபின் சர்க்கரை அளவு குறைவாகவும், இன்சுலின் அளவு மிக மிக அதிகமாகவும் இருப்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர் செய்யப்பட்ட MRI ஸ்கான் செய்ததில் கணையத்தில் (pancreas) கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. 35 வயது குமாருக்கு, சாப்பிட்டு 2 அல்லது 3 மணி நேரத்திற்குப் பிறகு தலை சுற்றல் ஏற்படுகிறது. வியர்வை பெருகுகிறது. சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, பின்னர் பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஏனென்று தெரியாமல், ஆனால் உடனடித் தீர்வுக்கு இனிப்புப் பண்டங்களுடன் வாழ்க்கையை வாழ்கிறார். 5 வருடங்களுக்குப் பின்னர், குமாருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 45 வயதான மேரி மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவ்வப்போது மயங்கி விழுந்துவிடுவார். பரிசோதனையில் நீரிழிவு நோயாளிக்கான மருந்துகளின் அளவு ரத்தத்தில் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. 75 வயதான வெங்கடேசன், ஒரு நாள் திடுமென்று மயங்கி விழுகிறார். சர்க்கரை அளவு 40. தெரியாமல், தனது நீரிழிவு நோய் மாத்திரைகளை இரண்டு முறை எடுத்துக் கொண்டது தெரிய வருகிறது. 65 வயதான அம்புஜம் அம்மாள் பல வருடங்களாக இன்சுலின் எடுத்து வருகிறார். வழக்கத்திற்கு மாறாக, காலை முக்கால் மணி நேரம் நடந்து சென்றார். மதியம் ஒரு மணி சுமாருக்கு, தொலைக்காட்சி பார்த்த வண்ணம் பேச்சு மூச்சின்றி விழுகிறார். ஒரு பக்கம் பக்கவாதம் போல் இழுத்துக் கொள்கிறது. 911 அழைத்ததில், சர்க்கரை அளவு 20. உடனடியாக இரத்த நாளங்களில் 'dextrose' செலுத்தப்படுகிறது. பக்கவாதம் முற்றிலும் குணமாகிவிடுகிறது.
மேற்கண்ட எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்டது ஒன்றுதான்: ரத்தத்தில் சர்க்கரை குறைந்துவிடுதல். நீரிழிவு நோய் பற்றி அறிந்தவர்கள் சர்க்கரை குறைபாடு பற்றியும் அறிய வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்குமே யானால் அது hypoglycemia என்று சொல்லப்படுகிறது. இது பெரும்பாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மருந்துகளின் மூலம் ஏற்படும். ஒரு சிலருக்கு நீரிழிவு நோய் இல்லாமலேயே இந்த அறிகுறி ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறி வேறு சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதைப் பற்றி இப்போது விவரமாகக் காணலாம்.
சர்க்கரை குறைபாட்டின் அறிகுறிகள் உடலில், குறிப்பாக மூளையின் அணுக்கள் சர்க்கரையின் உதவியிலேயே வேலை செய்கின்றன. உடலின் அணுக்களுக்கு சக்தி தருவதற்குச் சர்க்கரையின் அளவு சரியாக இருப்பது அவசியமாகிறது. ஆகவே, சர்க்கரை அளவு குறைந்தால் மூளை வேலை செய்வது பாதிக்கப்படுகிறது.
அதற்கான அறிகுறிகள்:
  • குழறலாகப் பேசுதல்
  • தலை சுற்றல்
  • மயங்கி விழுதல்
  • கண் பார்வை மங்குதல்
  • வலிப்பு ஏற்படுதல்
இவை தவிர வேறு சில அறிகுறிகளும் ஏற்படலாம்.
  • இதயத் துடிப்பு அதிகரித்தல்
  • படபடப்பு
  • கை உதறுதல்
  • வியர்வை பெருகுதல்
  • பசித்தல்
இந்த அறிகுறிகள் ஏற்படுமேயானால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பார்த்தல் உசிதம்.
சர்க்கரை அளவு குறைவது எப்படி? நாம் உண்ணும் உணவு வகைகளை மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என்று மூவகையாகப் பிரிக்கலாம். இதில், மாவுச் சத்தாகிய கார்போஹைட்ரேட்கள் சர்க்கரை அணுக்களாகச் செரிக்கப்படுகின்றன. இந்த சர்க்கரை பேரணுக்கள் (molecule) உடலின் சதையில் உள்ள செல்களுக்குச் சக்தியைத் தருகின்றன. இந்த சர்க்கரையை செல்கள் உபயோகப்படுத்த இன்சுலின் என்ற இயக்கு நீர் (hormone) தேவைப்படுகிறது. இன்சுலின் அதிகமானால் சர்க்கரை வேகமாக உபயோகப்படுத்தப்பட்டு அளவு குறையலாம். ஆக, hypoglycemia ஏற்படுவதற்கு இன்சுலின் அளவு அதிகமாதல் ஒரு முக்கியக் காரணம். இன்சுலின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கும், இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்குமே நீரிழிவு நோய் உருவாகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு hypoglycemia ஏற்படக் காரணங்கள்:
  • மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட்ட பின்பு சாப்பிடத் தாமதமாதல் வழக்கத்தை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தல்
  • சரியான சமயத்தில் சாப்பிடாமல் இருத்தல் (இன்சுலினில் அதிக நேரச் செயல்பாடு உடையவை உண்டு)
  • சிறுநீரகக் கோளாறு
  • ஈரல் கோளாறு (liver failure)
  • அதிகமாக மது அருந்துதல்
இவை தவிர நீரிழிவு நோய் இல்லாதவர்களிலும் இந்த வகை அறிகுறிகள் ஏற்படலாம்.
  • கணையம் என்ற நாளமில்லாச் சுரப்பியில் கட்டி ஏற்படுதல் (Insulinoma).
  • பிட்யூட்டரி, அட்ரினல், தைராய்டு போன்ற சுரப்பிகள் குறைவாக வேலை செய்தல்
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இந்தக் கோளாறு காணப்படலாம். இதை impending Diabetes என்று சொல்வதுண்டு. வயிறு காலியாக இருக்கும் காலை வேளையில் சர்க்கரை அளவு குறைவதுண்டு. ஆனால் ஒரு சிலருக்கு, சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுரக்கப்பட்ட இன்சுலினின் அளவு தேவைக்கு அதிகமாகி, 'reactive hypoglycemia' ஏற்படுவதுண்டு. Whipple's Triad
1. அறிகுறிகள் ஏற்படுதல்
2. இரத்ததில் அளவு குறைவாக இருத்தல்
3. சர்க்கரை கொடுக்கப்பட்ட பின்னர் அறிகுறிகள் சரியாகுதல்
இந்த மூன்றும் ஒரு நோயாளிக்கு இருக்குமேயானால், மேலும் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

பரிசோதனைகள்:
1.வெறும் வயிற்றில், 8-12 மணி நேர பட்டினி இருந்தபின் எடுக்கப்படும் இரத்தத்தின் சர்க்கரை அளவு
2.Glucose Tolerance test: சர்க்கரைத் தண்ணீர் அருந்திய பின்னர் 2 மணி நேரத்தில், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவு எடுக்கப்படலாம்.
3.அதே நேரத்தில் இன்சுலின் அளவு எடுக்கப்படும்.
4.தைராய்டு, அட்ரினல் போன்ற மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் அளவுகள்
5.நீரிழிவு நோயின் நிவாரண மருந்துகளின் அளவுகள்
6.வயிற்றுப் பகுதியின் CT ஸ்கேன் அல்லது MRI தேவைப்படலாம்.
நோய் தீர்க்கும் முறைகள்:
உடனடித் தீர்வு: சர்க்கரையின் அளவு குறைவது, மிகவும் ஆபத்தானது. அளவு அதிகரிப்பதை விடவும், குறைவது குறுகிய காலக்கட்டத்தில் உடலில் பாதிப்பு ஏற்படுத்த வல்லது. ஆகையால், இதற்கு உடனடியாக சர்க்கரையை வாய் வழியாகவோ, இரத்த நாளங்கள் வழியாகவோ செலுத்த வேண்டும். உடனடித் தேவைக்கு இனிப்புப் பண்டங்களும், குளிர் பானங்களும் பயன்படும். மாவுச் சத்து உணவு உண்பதால், ஒரு சில மணி நேரத்திற்குப் பலன் ஏற்படும்.
சிகிச்சை: உடனடியாகச் சர்க்கரையின் அளவை அதிகரித்த பின்னர், இந்த அறிகுறிகளுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வை மருத்துவர் கண்டறிவர். மருந்துகள் காரணமாக இருந்தால், அவற்றை மாற்ற வேண்டி வரும். கணையத்தில் கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். குறிப்பாக Endocrinologist என்ற நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.
மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைதளங்கள்: www.mayoclinic.com/hypoglycemia www.hypoglycemia.org

நம்முடைய தனித்துவம்

"நம்முடைய தனித்துவம், 60 சதவீதம் கலை, கலாசாரம் மூலமும், 30 சதவீதம் வரை உணவு மூலமும், 10 சதவீதம் உடை மூலமும் பிரதிபலிக்கப்படுகிறது. இதைப் பேணிக் காக்க வேண்டும்" - பேராசிரியர் T.E.S. ராகவன்