October 28, 2007

வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்

"உயரே செல்லச் செல்ல பூமி ஒரு புள்ளியாகிவிடுவது போல், அறிவில் உயர உயர மனிதகுலம் அன்பை இழந்து கொண்டிருக்கிறதா? நம் தொழில்நுட்பம் அமெரிக்காவை அடுத்த வீடு ஆக்கிவிட்டது. ஆனால், அடுத்த வீட்டை அமெரிக்காவாக்கிவிட்டது. வயிறு, மூளை, இதயம் மூன்றுக்கும் சமபந்தி வைப்பது போல்தான் கல்வி. தொழில்நுட்பக் கல்வி பெற்ற பலர் அமெரிக்க, ஐரோப்பியக் கனவுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தாய்நாடு தந்த அறிவை இந்த தாய்நாடே முதலில் அனுபவிக்கட்டும். வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்"

- வைரமுத்து

இன்றைய குறள்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!!

கறும்புலிகள் புதைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கருத்து

  • சமீபத்தில் அநுராதபுர விமானதள தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்கள் முறையான நீதிமன்ற உத்தரவின்றி புதைக்கப்பட்டு விட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில், இந்த சடலங்களை புதைக்கும் முடிவை தாம் எடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இந்த சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜெயசேன. போதுமான குளிர்பதன வசிதியில்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் இந்த சடலங்களை வைக்க தங்களுக்கு வசதியில்லை என்றும் அதனால் பேரிடர் ஏற்படும்போது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைக்கேற்ப தற்காலிகமாக உடல்களை புதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சடலங்களை புதைக்க நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் அது போன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கும் அஜித் ஜெயசேன, தாம் உள்ளிட்ட பிரேதப் பரிசோதனை செய்த குழுவினர் இந்த 21 சடலங்களை தற்காலிகமாக புதைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். இந்த சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் விரும்பினால் அது சாத்தியம் என்றே தாம் நினைப்பதாகவும், இந்த சடலங்களை பொறுப்பானவர்கள் எடுத்துச்செல்லும்வரை அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு புதைத்து வைத்த முடிவுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இந்தியாவில் ஆடை தயாரிக்க குழந்தை தொழிலாளர் பயன்படுத்தப்பட்டது குறித்து 'கேப்' நிறுவனம் அதிர்ச்சி : இந்தியாவிலிருந்து 'கேப்' நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க சில இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகளை அனுப்பும் நிறுவனங்களை சர்வதேச ஆடை நிறுவனமான 'கேப்' அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆடைகளை தயாரிக்க குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றுவந்த தகவல்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள் அழிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பிபிசி நிறுவனத்துக்கு கிடைத்த தொலைக்காட்சி படத்தில்,'கேப்' நிறுவனத்திற்கான ஆடைகளை தயாரிக்கும் ஒரு துணை ஒப்பந்ததாரரின் தொழிற்சாலையில் ஒரு சிறுவன் 'கேப்' நிறுவனத்தின் அச்சு பொறுத்தப்பட்ட உடையை தைப்பது தெரிந்தது.
  • நெஞ்சம் மறப்பதில்லை - ஆறாம் பாகம் : ஒரு மூலக் கதையை திரையில் சுவாரஸ்யமாக அளிக்கும் வகையில் திரைக்கதை அமைப்பதில்தான் ஒரு இயக்குநரின் திறமை அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். திரைக்கதை அமைப்பதில் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டை இயக்குநர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள்; கதைக்கு ஏற்ப அழகான முறையில் பாத்திரங்களை உருவாக்கி சம்பவங்களைக் கோர்த்து கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்கிறார் சம்பத்குமார். அண்ணாதுரையின் கதை வசனத்தில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான 'நல்லதம்பி' திரைப்படமானது, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற பிரச்சாரங்களை செய்வதாகவும் சமதர்ம சமுதாயத்தை இலக்காகக் கொண்ட படமாகவும் விளங்கியது. அவர்கள் இயக்கிய 'பராசக்தி' திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல். கருணாநிதியின் கணல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜி கணேசனின் ஆக்ரோஷ நடிப்பும், புரட்சிக் கருத்துகளும் அடங்கிய படமிது. கிருஷ்ணன்-பஞ்சு படங்களில் கனமான கதையம்சம், உணர்ச்சிப்பூர்வமான பாத்திரப்படைப்பு, கண்ணியமான காட்சியமைப்பு இருந்ததை நெஞ்சம் மறப்பதில்லை ஆறாம் பாகம் எடுதியம்புகிறது.
  • நிலச் சீர்திருத்தம் கோரி தில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் : இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருந்திரளாக கூடியுள்ளனர். நான்கு வார காலம் நடைப் பயணமாக 325 கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் மேற்கொண்டு வந்துள்ள இவர்கள் விவசாய நிலங்களில் தமக்கும் பங்கு கேட்டு போராடுவதற்காக தில்லி வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிலமற்ற பழங்குடியின மக்களும் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளும் அடங்கிய இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நிலச் சீர்திருத்தம் வரவேண்டும், விவசாய நிலங்களின் மீதான உரிமை குறித்து தெளிவான சட்டங்கள் வரவேண்டும் என்று கோருகின்றனர். தெளிவான சட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே தொழிலாளிகளுக்கு நிலம் கிடைப்பதில்லை என்றும் நடைமுறையிலுள்ள விதிமுறைகளும் பெரு நில உரிமையாளர்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். கிராமத்து ஏழை மக்களிலேயே மிகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களடங்கிய இந்த ஊர்வலத்தினர் தமது கோரிக்கையை அதிகார உயர்மட்டத்துக்கு கொண்டுசெல்ல விழைகிறார்கள்.
    மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை அவர்கள் ஏற்கனவே சந்தித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாளை திங்கட்கிழமை அவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். நில மறு பங்கீட்டு கோரிக்கை என்பது இந்திய அரசியல் அரங்கின் வழமையான ஒரு அங்கம்தான் என்றாலும் தற்போது கோரிக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனோநிலையில் அரசாங்கம் இருப்பதுபோல் தெரிகிறது. நில மறு பங்கீட்டு ஆணைக்குழு இதோ வந்துகொண்டிருக்கிறது என்று அரசு வாக்குறுதியளித்துள்ளது. தில்லி நிலச் சீர்திருத்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தியாளர் ஜதிந்தர் சித்து வழங்ய தகவல்களின் தமிழ் வடிவத்தையும் இந்திய விவசாய நிலங்களின் தற்போதைய நிலைமை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • இலங்கை மோதல்களில் புலிகள் 14 பேர், இராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் : இலங்கையின் வடக்கே இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • இராக்-துருக்கி நெருக்கடி ஆபத்தானது: இராக் வெளியுறவு அமைச்சர்
    இராக் மற்றும் துருக்கி இடையிலான எல்லைப் பகுதியில் குர்த் இன பிரிவினைவாத இயக்கம் பி.கே.கே நடத்திய தாக்குதல் காரணமாக இருநாடுகள் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு 'மிக ஆபத்தானது' என்று இராக்கி வெளியுறவு அமைச்சர் ஹொஷ்யார் ஸெபாரி கூறியுள்ளார்
  • ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் 80 பேரை கொன்றுள்ளதாக அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் அறிவிப்பு : ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் சுமார் 80 பேரை கொன்றுகுவித்திருப்பதாக அங்குள்ள அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் கூறுகின்றன
  • பாகிஸ்தானில் தொடரும் மோதல் : சமீப காலமாக பதற்றம் நிலவி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தாக்குதல் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் செயல்படும பாகிஸ்தானிய படையினரும் - இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்

ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்



இதயத்தைப் பிழியும், உயிர்வலிக்கும் நம் சகோதரர்களின் சோககீதம்