July 02, 2007

அவன் அன்று
நட்ட மரங்கள்
நிமிர்ந்து விட்டன
இவன் நடும்போது
குனிந்தவன்தான்,
இன்னும் நிமிரவே இல்லை...

எங்கள் அரசியல்வாதிகளின் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை 'பந்தா'. இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். அந்தஸ்தில் ஒரு இந்திய அரசியல்வாதி இருந்தால் அவர் இருக்கும் பகுதிப் பக்கம் கூட என்னைப் போன்ற ஒருவர் போக முடியுமா என்பது சந்தேகம்.

மலேசிய எழுத்தாளர் வீ.செல்வராஜ் அவர்களின் நேர்முகம் Please visit the link Interview with V Selvaraj

மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்

மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. Thenseide - HOME

பழ. நெடுமாறன் உரை

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், அந்த ஒரு துப்பாக்கியும், அருமைத் தம்பி பிரபாகரனின் நெருங்கிய தோழன் பண்டிதர். பண்டிதரின் தாயார் ஒரே ஓரு பசுமாட்டை வைத்து பால் கறந்து விற்று குடும்பத்தை காத்து வந்த நிலையில், அந்த பசுமாட்டை தன் தாயாருக்கு தெரியாமல் பண்டிதர் ஓட்டிச் சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று மரபு வழி இராணுவமாக வளர்ந்து, சிங்கள கடற்படையை ஓட ஓட விரட்டியடிக்கும் கடற் புலிப்படையை தன்னகத்தேக் கொண்டு, இன்று வரன் புலிகளையும் பறக்க விடும் அளவிற்கு முப்படைகளோடு வளர்ந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும். இலண்டன் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. மேலும் ஒலிப்பதிவில் இடையிடையில் தடங்கல் இருக்கும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும்.Thenseide - HOME

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம் தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும், கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

- பெரியார்

தமிழோசை

அமெரிக்க அணு ஆயுதக் கப்பலை அனுமதித்ததால் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல் கட்சிகள் பற்றிய சென்னை செய்திகள் மற்றும் இன்றைய "BBC" (ஜுலை 02 திங்கட்கிழமை), செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

நாட்கள் வருவதையும் போவதையும் கண்டு, அதை உணராமல் எப்போதும் இப்படியே வந்துபோகும் என்று சந்தோசமாக இருப்பவர், தன் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து போனது என்பதை அறிந்து உணராதவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Although they daily see the passing away of days, yet they think not of it, and daily rejoice over the present day, as if it would last for ever, for they do not consider the past day to be one day added to the portion of their life that has expired.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?


அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்