December 18, 2007

மூன்று ஹிஜிரி வருடங்களைக் கொண்ட 2008

"நம்மை நெருங்கி வரும் 2008 ஆங்கிலப் புத்தாண்டில் மூன்று ஹிஜிரி இஸ்லாமிய வருடங்களைக் கொண்டதாக இருக்கும். ஹிஜிரி 1428-ஆம் வருடத்தின் கடைசி மாதமான துல்ஹஜ்ஜின் கடைசி ஒன்பது நாட்கள் ஜனவரி 2008-லும், ஹிஜிரி 1429-ஆம் வருடம், அதனைத் தொடர்ந்து ஹிஜிரி 1430 டிசம்பர் 2008-ல் ஆரம்பமாகும். இதுபோன்ற நிகழ்வு 33 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கும். அடுத்து 2041-ஆம் ஆண்டில்தான் மூன்று ஹிஜிரி வருடங்களைக் காணலாம்"

இன்றைய குறள்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

கல்லூரி நண்பர்கள் - பாலாஜி சக்திவேல்

பிரதமர் மன்மோகன் சிங் - தமிழக முதல்வர் கருணாநிதி சந்திப்பு

தமிழக முதல்வர் மு. கருணாநிதி இன்று மாலை புதுடெல்லி வந்தார். சிறிது நேரத்தில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்ததாகத் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் மீண்டும் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுமாறு பிரதமர் யோசனை தெரிவித்தாக கருணாநிதி தெரிவி்த்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பேச்சு நடத்தி அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியபோது, மீண்டும் பேசுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அவரது யோசனையை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார். அதனால் பயன் ஏற்படுமா என்று கேட்டபோது, பயன் இருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் பிரதமர் பேசச் சொல்லியிருக்கிறார் என்றார் கருணாநிதி. இலங்கைக்கு ராணுவ உதவிகளை அளிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்த இந்திய அதிகாரிகள் குழு ஒன்று கொழும்பு சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறித்தும், மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்தும் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை, மலேசிய பிரச்சினைகளை மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கு ஆவன செய்து வருகிறது. மத்திய அரசு விவகாரங்களில் குறுக்கிட விரும்பவில்லை என்றார் முதல்வர். மலேசியாவைப் பொருத்தவரை அது அவர்களது உள்விவகாரம் அதைப்பற்றி நான் பேச விரும்பிவில்லை என்றும், அவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வதையும் கெடுக்க விரும்பவில்லை என்றும் முதல்வர் கருத்துத் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி தர வேண்டும் என்று பிரதமரிடம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேக்கப்-புக்கு மூன்று வருடமா?

"ஒரு திருமணத்திற்கோ அல்லது ஒரு விருந்து அழைப்பிற்கோ செல்லுமுன்பு தங்களை ஒப்பனை செய்துகொள்வதற்கு சராசரியாக ஒரு மணி நேரமும் 12 நிமிஷங்களும் ஆகிறதாம். மொத்தத்தில் தங்கள் ஆயுள் காலத்தில் சுமார் மூன்று வருடத்தைப் பெண்கள் அவர்கள் வெளியில் செல்லும்போது தங்களை அலங்கரித்துக் கொள்வதில் செலவிடுகிறார்களென மிகவும் உபயோகமான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது"

இந்திய முன்னாள் அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு சீக்கியக் கலவரத்தில் பங்கு விவகாரம்

புதிய விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு : இந்தியாவில் இருபது வருடங்களுக்கு முன்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் புதிய விசாரணைகளுக்கு தலைநகர் தில்லியிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்துவரும் முக்கிய சாட்சியான ஜஸ்பிர் சிங்கின் வாக்குமூலத்தை மத்திய புலனாய்வுத்துறை-சிபிஐபதிவுசெய்யவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களுக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியதில் டைட்லருக்கு பங்கு இருந்தது என்பதற்கு நம்பக்த்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அரசு விசாரணையில் தெரியவந்ததை அடுத்து டைட்லர் கட்டாயத்தின் பேரில் பதவி விலகினார். இக்குற்றச்சாட்டினை டைட்லர் மறுக்கிறார்.