June 03, 2007

விமலா ரமணி

இளைஞர்கள்
வெண்சாமரம் போன்றவர்கள்
அவர்களை ஒட்டடை அடிக்கப்
பயன் படுத்தாதீர்கள்
அவர்கள் நெம்புகோல்கள்
பல் குத்தப் பயன்படுத்தாதீர்கள்
அவர்கள் வெடிகுண்டுகள்
பொக்ரானில் வெடிக்க வேண்டியவர்கள்
கோவையில் பயன்படுத்தாதீர்கள்..........
இன்றைய எழுத்தாளர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு நேர்முகம். வியாபாரமாகிப்போன இன்றைய எழுத்துலகில், எழுதுபவர்களையெல்லாம் 'கட் அன் பேஸ்ட்' கவிஞர்கள் எனக் 'கமென்ட்' அடிக்கும் கர்வமிக்க எழுத்தாளர்களுக்கு நடுவில், "நான் எழுத்தாளர்களைப் பார்ப்பதை விட எழுத்துக்களைத்தான் பார்க்கிறேன்" என்கிறார். இப்படியும் ஒரு எழுத்தாளர்... தொடாந்து பேட்டியைப் படியுங்கள். அழுத்தவும்.
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews:

Today's Quote

Are you unselfish?
That is the question.
If you are, you will be perfect without reading a single Religious Book,
without going into a single Church or Temple.

"தமிழோசை"

இன்றைய 'BBC' (ஜுன் 03 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

"இன்றைய குறள்"

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

"பழமொழி"

பழம் என்று ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கலாம். இந்தக்காய் சாப்பிட்டால் சூடு, அந்தக் காய் சாப்பிட்டால் அரிப்பு இப்படியாக சொல்லி எதைச் சாப்பிடுவதென்ற குழப்பங்கள் ஏற்படும் வேளையில், பழங்களைப் பற்றி யாரும் அப்படிச் சொல்வதில்லை. ஏனெனில் பழங்கள் எல்லாமே உடலுக்கு நல்லதுதான். அதனால்தான் மொழிகளுக்குள் பழம் நுழைந்து "பழமொழி" யாகிச் சுவையாகி நமது கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் நாசுக்காகச்சொல்லிப் புரியவைக்கிறது. பழமொழிகளைப்பற்றி நூல்கள் அவ்வளவாக இல்லை, "பழமொழி நானூறு" போன்ற சொற்ப நூல்கள் மட்டுமே உள்ளன. காரணம் இவையெல்லாம் பேச்சு வழக்கில் பெரிதும் புலக்கத்தில் இருந்ததால் எழுதிவைக்காமல் போயிருக்கலாம். கிராமங்களில் இன்றும் பழக்கத்தில் இருந்தாலும் நாளடைவில் மறைந்தோ, மறந்தோ போகலாம். ஆனால் அவ்வாறு போகக்கூடாதென்று ஒரு அருமையான நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறது (It's different - News, Views & Music(KZSU Stanford 90.1 FM radio show)
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் எனது அருமை நண்பரும், உங்களின் அபிமானத்துக்குரிய நண்பருமான திரு.ஸ்ரீ அவர்கள். நிகழ்ச்சியில் விருந்தினராக வந்து மிகத்தெளிவாக பழமொழிகளைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் நம்மோடு பகிர்ந்துகொண்டவர் திருமதி.டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள். மேலும் இதுபோன்ற அரிய நிகழ்ச்சிகளைத் தமிழகத்தில் ஏன்? இந்தியத் தொலைக்காட்சிகளிலோ அல்லது வானொலியிலோ ஒளி அல்லது ஒலி பரப்பியதாக எனக்கு நினைவு இல்லை. ஆனால் அமெரிக்காவில் கேட்கமுடிகிறது என்றால் நம்பமுடிகிறதா? அது மட்டுமின்றி ஒலிபரப்பிய பாடல்களும், தொகுத்து வழங்கிய விதமும் என்னை மிகவும் பிரமிப்புக்குள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியைக் கேட்கும்பொழுது நாம் நமது கிராமங்களில், ஒலிபெருக்கிகளில் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அந்தப் பசுமையான வயல்களில், ரம்மியமான உணர்வுகளோடு செல்வது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. இந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சியைக் கேட்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் கேட்டு உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்வதோடு, நேரடியாக வானொலி நிலையத்தாருக்கும் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி (itsdiff@gmail.com). நன்றி. நிகழ்ச்சியைக் கேட்க கீழேயுள்ள இணைப்பை
அழுத்தவும்.
Archives
Archives
Archives