June 19, 2007

திரு.சிவா என்ற ஒரு நண்பர் கேட்ட கேள்விகளும் நான் அவருக்கு அளித்த பதில்களும்

1. இன்றைய விருந்தோம்பல் பற்றி உங்கள் கருத்து?

விருந்தோம்பல் என்பது அருமையான தமிழ்வார்த்தை : அதைப்போல் விருந்தோம்பல் மிகச்சிறப்பானது. நாம் எப்படி விருந்தோம்பல் செய்கிறோம் என்பதைப் பொறுத்து நமக்கு விருந்தோம்பல் கிடைக்கும். விருந்தோம்பலுக்கு வடை, பாயாசம் தேவையில்லை. பச்சைத்தண்ணீர் பருகுவதற்குப் பரிவோடு கொடுத்தாலே அது விருந்தோம்பல்தான். ஆங்கிலத்தில் அதனை ஹாஸ்பிடாலிடி என்றுகூடச் சொல்லலாம்.

2. உங்களைப் பொருத்தவரை எது ரொம்ப கஷ்டம்?


சும்மா இருப்பது

3. ஹிட்லரை பார்க்க வாய்ப்பு கொடுத்தால் எதை பற்றிப் பேசுவீர்கள்?

உங்களைப் பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு நீங்கள் எப்படி மற்றவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பினீர்கள் என்றும், உங்களுக்கு இன்ஸ்பிரேசன் (மண்ணிக்க தமிழ்வார்த்தை தெரியவில்லை) யாரென்றும் கேட்பேன்.

4. வாழ்க்கையில் நிறையப் பேர் மிருகமாக இருக்கிறார்கள். அதற்கு மூல காராணமாக இருப்பது எது?

மனிதர்கள்தான்

5. மனிதன் என்பதற்கு அடையாளம்?

பிறர் துயர் பார்த்துக் கண் கலங்குபவன். "காயத்திற்கு மருந்துவேண்டாம், கனிவான பார்வைபோதும்". மொத்தத்தில் "மனிதம்" எவனிடம் உள்ளதோ அவனே மனிதன்.

"ஹைகூ"

சொந்தமண்ணிலிருந்து

துரத்தப்பட்ட அகதிகளாய்…

துடுப்பற்ற பரிசலாய்…



...................பிறைநிலா

மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் உண்மையில் மேலும் 18 கொலைகள் நடக்க காரணமாகிறார்கள். மரணதண்டனையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் 18 கொலைகளை தடுக்கிறார்கள். Please 'click' the link Thinnai

திரைப்பட இயக்குனர் "வசந்த்" நேர்முகம்

இன்றைய குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தி (ஜுன் 19 செவ்வாய்க்கிழமை) கேளுங்கள், சேது சமுத்திரம் பற்றிய ஒரு பெட்டகம் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக. BBCTamil.com Radio Player

என் அபிப்பிராயத்தை மறுக்க
உங்களுக்கு உரிமையுண்டு
ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு
- பெரியார்