August 20, 2007

தண்ணீரே வேண்டாம்! பெப்சி, கோகோ-கோலா போதும்!!

இன்று தண்ணீரே வேண்டாம். கோலா கோலா என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள், காலம் பூராவும் கோலாவையே குடித்து (அது பெப்சி கோலாவாக இருக்கட்டும் அல்லது கொக்கோ கோலாவாக இருக்கட்டும்) 100 வருடங்கள் சுகதேகியாக வாழ்வார்களா? 100 வயது வரை வேண்டாம். குறைந்த பட்சம் 80 வயது வரையாவது ஆரோக்கியமாக, கோலா கோலா என்று அலையும் நாளைய சமுதாயம் வாழுமா?

பெற்றோர்கள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை, பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே பழக்கினால், பல பாரதூரமான பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாமல்லவா? தண்ணீரின் அற்புதம் பற்றி இவர்கள் முழுமையாக அறிவது மிக அவசியம். பல உலக நாடுகளில், பல கோடி மக்கள் , நல்ல குடிநீர் இன்றி அவஸ்தைப்படுவதை இவர்கள் அறிவார்களா? சுத்தமான, நல்ல தண்ணீர் வசதி தாரளமாக இருக்க, இனிப்பும் வண்ணமும் சேர்த்து அதிக விலையில் விற்கும், மென்பானங்களை வாங்கி, நமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதை இனியாவது நிறுத்துவோமே.
ஐந்து இந்திய மாவட்டங்கள், பகுதியாகவும், ஒரு மாவட்டம் முழுமையாகவும், பெப்சி, கோகோகோலா என்ற இரு நிறுவனங்களின் மென்பானங்களின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளமை, பரபரப்பான செய்தித் தலைப்பாகி இருந்தது. கடைகளில் விற்பனையாகும் இந்த மென் பானங்களில் கிருமி நாசினிகளின் கலவை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், இது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதே இவர்கள் குற்றச்சாட்டாக இருக்கின்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...

அமைதி எப்படி கிடைக்கும்?

"தவறான வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவ்வாறு சேர்க்கப்பட்ட பொருள் நிலைக்காது. எவன் ஒருவன் நியாய வழியில் சம்பாதிக்கிறானோ, அவனே அனைவரிலும் நல்லவனாக திகழ்கிறான். அவனது வாழ்க்கையே நல்வாழ்க்கையாக இருக்கிறது"

-புத்தர்

ஆமடா சின்னத் தம்பி! திரு.ரமணன்

இசைக் கவி ரமணனின் இன்னொரு பாடல் இங்கே. நாட்டு நடப்புகளை, உள் மனத்தின் ஆற்றாமைகளை, ஏக்கங்களை, நம்முடன் கவிஞர் பகிர்ந்துகொள்கிறார்; வருத்தம் தோய்ந்த இந்த வரிகள், உங்கள் செவியோரம் இதோ வலம் வருகின்றன....... இந்த இணைப்பில் சென்று பாடலைக் கேளுங்கள்
http://tamil.sify.com/columns//fullstory.php?id=14451388

இந்தப் பாடலைப் பாடியவர்கள்: கவிஞர் ரமணன், சர்ஜனா.முதலில் பாடலைக் கேளுங்கள்: நேர அளவு: 4.42 நிமிடங்கள்உங்கள் கணினியில் இசை கேட்கும் அமைப்பு இல்லாதவர்களின் வசதிக்காக அந்தப் பாடலை எழுத்திலும் தருகிறோம்:


ஆமடா சின்னத்தம்பி!

ஆமடா சின்னத்தம்பி

அறிவுரொம்ப வளந்திருச்சி

அன்புமட்டும் மனசெவிட்டுக் குருவிபோலப் பறந்திருச்சி!

சாஞ்சி காலெ நீட்டுறாப்புலெ ஆயுளெயும் நீட்டிக்கலாம்

சட்டெதுணி மாத்துறாப்புலெ காலுகையெ மாத்திக்கலாம்

நட்டநடு வானத்துலெ நாடகம் நடத்திக்கலாம்

நாலு எண்ணி முடிக்குமுன்னெ நம்மவூரு போயிவரலாம்

ஆனாக்க நமக்குமட்டும் ஆழாக்கு அரிசியில்லெ

மானமில்லெ மதிப்புமில்லெ மண்ணுலே உரிமெயில்லே

மண்ணுல உரிமெயில்லே மானத்துல மாளிகெயாம்! (ஆமடா)


தப்பாமெ கணக்குப்போடும் பொல்லாத பூதங்களாம்

பத்தாளு வேலெகளெப் பாத்துக்குற ராச்சசனாம்

அப்பன் ஆயி வேணாமாம் செப்புக்குள்ளெ கொழந்தெகளாம்

ஆத்தாடி கல்லுகளுக்கும் நம்மப்போலெ உசிரிருக்காம்!

ஒழெக்கிற சாதிக்கும் உசிரு இருக்குதின்னு

பொழெக்கிற சாதிக்குப் புரியாமெ போகுறதென்ன?

குள்ளநரி அறிவாலே கோழிக்கு லாபமென்ன?

மண்ணுல போதாமத்தான் மானத்தெச் சொரண்டுறாய்ங்க

மானத்துக்கும் நம்மளெத்தான் மாரடிக்கக் கூப்பிடுவாய்ங்க.

இன்றைய குறள்

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும், இல்லையேல் அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

  • இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி உடன்பாட்டை மேலெடுத்துச் செல்லக் கூடாது என இந்திய இடதுசாரிகள் தொடர்ந்து வற்புறுத்துகின்றன
  • துருக்கியின் புதிய அதிபருக்கான தேர்தலில் முக்கிய வேட்பாளரான வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பற்றி பல மாதங்களாக நீடித்த சர்ச்சைகளுக்கு பின்னர் புதிய அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளன. மேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 20 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews