July 15, 2007

"கறுப்பு தினம்"

எத்தனை அப்துல் கலாம்,
எத்தனை அன்னைத் தெரெசா,
எத்தனை காந்தி மகான்,
எத்தனை இந்திரா காந்தி,
எத்தனை விவேகானந்தர்,
எத்தனை ஆல்வா எடிசன்,
எத்தனை ஜான்சிராணி,
எத்தனை பாரதி,
எத்தனை பகத்சிங்??

கருகிப்போயினரோ??

கருவுக்குள் இருக்கும் போதே காலம்
கருக்கிவிட்டதே
அந்தக் கருப்புத் தினத்தை
கண்களை விட்டும் இதயத்தை விட்டும்
என்றென்றும் அழிக்க முடியாத நாள்.
இந்த நாள் இனி வேண்டாம்!
என் இளைய சமுதாயமே!
எத்தனை ஏக்கங்கள்! லட்சியங்கள்!
இவையத்தனையும் உங்களோடு
சேர்ந்தே பொசுங்கி விட்டதே!
உங்களின் மறைவால் எனது பாரதம்
முன்னேற்றத்தில் பத்தாண்டுகள் தள்ளிப் போனதே! வேண்டாம் இந்த விபரீதம்!
இனியும் வேண்டாம்!
அஞ்சலி செலுத்தவேண்டாம் இந்த ஆத்மாக்களுக்கு!
ஒரு சொட்டுக்கண்ணீர் விடுங்கள்
அவையனைத்தும் சேர்ந்துபோய்
அந்தக் கொடூரத் தீயை அணைக்கட்டும். பச்சிழங்குழந்தையைத் தாயின்
கையைவிட்டுப் பறித்துக் கண்முன்னே நெருப்பில் தூக்கியெறிந்த இயற்கையின் கொடூரம் என்றுமே இப்பாருக்கு வேண்டாம்.
கண்ணீருடன் கடந்தபோன ஆண்டுகளின்
இதே நாளை நினைவலைகளை நிறுத்தி….

தமிழோசை

இன்றைய (ஜுலை 15 ஞாயிற்றுக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே க்ளிக் செய்க
BBCTamil.com Radio Player

Kumaraswamy Kamaraj - Karma Veerar

15 July 1903 - 2 October 1975

" சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான் பிறந்த
அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார்,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்"

கண்ணதாசன்

"Sensible comedy is the key to my success"


Y.Gee.Mahendra

திரையுலகம், சின்னத்திரை மட்டுமல்லாது நாடக உலகத்திலும் கிட்டத்தட்ட 55 வருடங்களாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் திரு.ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் அமெரிக்கா வந்திருந்தபோது அவரோடு பகிர்ந்துகொண்ட வானொலி நேர்முகம். எனக்கு மிகவும் நல்லதொரு பரிச்சையமான மனிதர். ஒருமுறை நான் அப்போதிருந்த ஜே.ஜே.தொலைக்காட்சி (இப்போதைய ஜெயாத் தொலைக்காட்சி) நிகழ்ச்சியொன்றில் நண்பர்களோடு சேர்ந்து நடிக்கும்போது நடுவராக வந்திருந்த திரு.ஒய்.ஜி.மகேந்திரன் என்னை மிகவும் பாராட்டி, அவரது அலுவலகத்தில் வந்து சந்திக்கச் சொன்னார். காரணம் நான் எடுத்துக்கொண்ட பாத்திரமே அவருடைய "இரகசியம் பரம இரகசியம்" என்றதொரு நாடகத்தில் உள்ள நகைச்சுவைக் காட்சிகள்தான். சினிமாவில் உள்ளவற்றைப் பிரதிபலிப்பதுதான் வழக்கம். 1996-1997 ல் தொலைக்காட்சிகள் இன்றைய அளவுக்கு பிரபலமாகாத நேரம் ஆதலால் நான் இவரது நாடகத்திலுள்ள காட்சிகளை நடித்து கைதட்டு வாங்கியதால், பிரமித்துப்போய் என்னை வாரியணைத்துக்கொண்டார். பிறகு நானும் பலமுறைச் சந்தித்திருக்கிறேன், அவரால் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடித்த நாட்களை இன்றும் நினைவுகூர்ந்து பார்க்கிறேன். மிகவும் ஒரு நல்ல மனிதர். நிஜத்திலும் இவர் ஒரு நகைச்சுவையான மனிதர். இவரின் அலுவலகத்திற்கு யார் எப்போது போனாலும் விருந்துபசரிப்பு உண்டு. பிறகு நான் தொடர்ந்து சந்திக்க வாய்ப்புக்களில்லை. இவரின் மகளும் இவரும் சேர்ந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில்கூட நான் பொதிகைத் தொலைக்காட்சியில் பங்கேற்று பரிசு பெற்றேன். எவ்வளவு உயரத்தில் சென்றாலும், நகைச்சுவையுணர்வோடும், எளிமையோடும் பழகக் கூடிய எத்தனையோ திரையுலக நண்பர்களில் திரு.ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர் என்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இனி தொடர்ந்து அவரது பேட்டியைக் கவனிப்போம். உடன் உரையாடுபவர் KZSU பண்பலை வானொலிக்காக எனது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள்.

Powered by eSnips.com

இன்றைய குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல


பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது


அறத்துப்பால் : இல்லறவியல்

* பிறரைக் கஷ்டப்படுத்தித் தான் சுகமடைய விரும்புபவன், மனம் என்ற விலங்கிடம் சிக்கி, விடுதலை அடைய முடியாதவனாகி விடுகிறான். சுகமாக வாழ வேண்டிய ஜீவன்களை வதைப்பவன், சாவிற்குப் பிறகு கூட நலம் பெறுவதில்லை


- புத்தர்

மனிதனால் முடியாததென்று ஒன்றுமேயில்லை

மனிதனால் முடியாததென்று ஒன்றுமேயில்லை