February 29, 2008

லீனா மணிமேகலைக்கு சர்வேதச விருது

மாத்தம்மா பறை மற்றும் பலிபீடம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்த யதார்த்த ஆவணப்படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. அவருடைய 'தேவதைகள்' எனும் ஆவணப் படத்துக்கு சர்வேதச தங்கச் சங்கு விருது கிடைத்துள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடை பெற்றது.
"தேவதைகள்" மூன்று சாதாரணப் பெண்களைப் பற்றிய அசாதரணப் படம். இது ஒப்பாரியும், சுடுகாடும் கடலுமாய் வாழும் மூன்று பெண்களைப்பற்றிய ஆவணப்படம். ஆண்கள் மட்டுமே செயல்படுகிற அவர்களே செய்யத்தயங்குகிற மூன்று வெவ்வேறான வேலைகளில் மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழகியல் உணர்வுடன் படம் பிடித்துள்ளார். பாடல் பாடும் ஒரு பெண் அவளுக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தில் இல்லாதவர்களுக்கு உதவுவதும், குரங்கு, நாய் போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட்டு செல்வதும் மனித நேயத்தின் வெளிப்பாடு. சுடுகாட்டில் பிணம் புதைக்கும் வேலை செய்பவர் முதலில் தன்னை எதிர்த்தவர்களையே உடன் வைத்து வேலை வாங்குகிறார்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பெண் கடலும் கடற்கரையும் மீனவனுக்கே சொந்தம் என்று ஆர்ப்பரிக்கிறார். மூவருமே பெண்கள். துணிச்சலானவர்கள் என்பதையும் மீறி மூவருமே விரும்பி ஏற்காமல் தன்மேல் திணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை எவ்வளவு அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்த ஆவணப் படத்தின் கதை. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=676&Itemid=67

February 27, 2008

"ஈழத்தமிழர்களுக்காக நான் சாகும்வரை சிறையில் இருக்கத் தயார்" - திருமாவளவன் ஆவேசம்

சுஜாதா படைப்புகள் ஒரு பார்வை

இளம் வயதிலிருந்தே கவிதைகள், கதைகள் மீது காதல் கொண்டவர் எழுத்தாளர் சுஜாதா. குறிப்பாக அவருக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் மீதுதான் அதீத நாட்டம் இருந்தது. பின்னாளில் எழுத்தாளராக பிரபலமான பின்னர் அவர் ஏராளமான கதைகள் எழுதியபோதும், அவர் எழுதிய என் இனிய இயந்திரா, ஜீனோ உள்ளிட்ட சயின்ஸ் பிக்சன் கதைகளும் அதிக பாப்புலராயின.

என் இனிய இயந்திரா மற்றும் ஜீனோ ஆகிய கதைகளைத்தான் இயங்குநர் ஷங்கர், ரஜினிகாந்த்தை வைத்து ரோபோட் என்ற பெயரில் படமாக்குகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்காக ஏவுகணை தொழில்நுட்பம்-கடத்தலை அடிப்படையாக வைத்த திரைக்கதையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்தைத் தாங்காத தமிழ் இதழ்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சாதாரண இதழ்கள் முதல் இலக்கிய வட்டங்களில் மட்டுமே புழங்கும் இதழ்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுஜாதாவின் படைப்புகள் அலங்கரித்துள்ளன. காரணம் வசீகரிக்கும் வகையில் அமைந்த அவரது தமிழ்.

பாமரரர்களும், அறிவுஜீவிகளும் ஒரே நேரத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியும். அந்த அளவுக்கு தமிழை திறமையாகக் கையாண்டவர் சுஜாதா. ஒரு காலத்தில் அவரது தொடர் கதைகள் இடம் பெறாத பத்திரிகைககளே இல்லை என்று கூறும் அளவுக்கு எந்த இதழைப் பார்த்தாலும் சுஜாதாவின் கதைகளாக இருந்தன. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=675&Itemid=164

எண்பது வயதுக்காரனா தமிழனின் தலையெழுத்தை நிர்ணயிப்பது?" தமிழருவி மணியம் ஆவேசம்

"கன்னத்தில் சதை தொங்கிவிட்டதால் கதாநாயகன் வாய்ப்பில்லை. சினிமாவில் செல்லுபடியாகாது. அரசியலில் 80 வயதிலும் ஓய்வில்லை என்று தெரிந்துகொண்டே எவன் எவனோ தமிழனின் தலையெழுத்தை எழுத நினைக்கிறான்". தமிழக அரசின் "அண்ணல் அம்பேத்கார் விருது" பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 22.02.2008 அன்று, பெரியார் திடலில் அளித்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட தமிழக திட்டக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் பிரமுகருமான தமிழருவி மணியம் அவர்களின் சொற்பொழிவு: தொடர்ந்து சொற்பொழிவின் அனைத்துப்பகுதியையும் கேட்க இணைப்பில் செல்க. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=163

18 வயதிற்குள்

1. Post these rules before presenting your list.
2. List 6 actions or achievements you think every person should accomplish before turning 18.
3. There are no conditions on what can be included on the list.
4. At the end of your blog, choose 6 people to get tagged and list their names.
5. People who are tagged write their own blog entry with their 6 suggestions.
6. Don’t forget to leave them a comment telling them they’re tagged.
*******
1. Finish your highschool education, with complete focus on learning atleast 3 languages(before you turn 8, wish you had learned three languages). Book knowledge is necessary as long as the wisdom is tagged with it). Education is the only treasure which cannot be stolen, invest in it NOW.
2. ASK QUESTIONS. Never be ignorant of anything. Listen to your elders about the stories they've learned, and the things they've learned in life. Remember, they have survived many years in this beautiful, raw, rugged, tough teacher of life aka PLANET EARTH. Be humble, and open minded about their stories. In later part of life you will know the relevance of the stories, tid-bits, nuances of their talks.
3. Travelled to different parts of the same country, to expose yourself to people from different walks of life(meeting kids of different ethnicity, socio-economic status).
4. Make friends, good friends who help you and be supportive of you. By 18 you should've known what friendship means. As Thiruvalluvar has mentioned in Friendship in one of his chapter with 10 verses "Neither familiarity nor frequent association maketh friendship between two persons; verily, it is the silent intellectual understanding between them assures their friendship." and in another one he explains, "Friendship hastens in mishaps, like a hand that picks up the dress that slips" (The tamil version of this verse is one of all time favorites).
5. Learn an art form, as a part of your education, or atleast as a Hobby(if your education does not involve art). Everyone should learn about an art, or have it as a Hobby.
6. Spirituality, learn about life and death. Learn about things in life which are a part of the adolescent life. DO indendent investigation of truth which is totally different from any religion
(Read, investigate, ask questions).

February 24, 2008

பதவி விலகுகிறார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப் பதவி விலகுகிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப்பை ஆதரித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சிகளான பெனாசிர் பூட்டோ கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் பெருவாரியான வெற்றி பெற்றன.

இதனை அடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் முஷாரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும்கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.

எம்.ஜி.ஆர். தரப்பு மணமகன் : ஜெயலலிதா தரப்பு மணமகள்

எம்.ஜி.ஆர். பெயர் சூட்டிய ஆண் குழந்தை மணமகனாகவும், ஜெயலலிதா பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் ஜெயலலிதாவின் 60-வது பிறந்த நாள் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த ஜெயலலிதா பேசுகையில்:- போயஸ் தோட்டத்திலிருந்து இந்த புனித ஜார்ஜ் பள்ளியை நோக்கி நான் வருகின்ற வழியெல்லாம் கண்டது மனித நதிகள். இந்த திடலுக்கு வந்த உடன் நான் காண்பது மக்கள் கடல்.

என் தந்தை தனது 42-வது வயதில் மறைந்தார். என் தாயார் 41வது வயதில் மறைந்தார். என் அண்ணன் 49-வது வயதில் மறைந்தார். நான் இன்று 60 வயது நிரம்பி, 61-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இதற்கு என் தாயாரின் ஆசியும், என் அரசியல் ஆசான் எம்ஜிஆரின் அருளாசியும்தான் காரணம். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்புதான் காரணம்.

என்னிடத்தில் நீங்கள் என்னை பார்க்கவில்லை. உங்களை பார்க்கிறீர்கள். உங்களிடத்தில் நான் என்னையே பார்க்கிறேன். இந்த பாசப்பிணைப்புதான் நம்மிடையே இன்று இந்த அன்பு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைம்மாறு கருதாத இந்த பாசப்பரிமாற்றத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என் 60-வது பிறந்த நாள் விழாக் கோலமா? இல்லை 65 ஜோடிகளின் மகத்தான மணவிழா கோலமா? என்றால் இரண்டும்தான். அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த 60 மணமக்களுக்கும் அம்மா வீட்டு சீர்வரிசையாக 60 விதமான பொருட்களை வழங்கி இருக்கிறேன். இப்படி இலவச திருமணங்களை நடத்துவதில் இணையற்ற வரலாறு படைத்தது அதிமுக என்பதை இந்த நாடே அறியும். மற்றவர்கள் இந்த சாதனையை படைத்ததுண்டா? வாங்கியே பழக்கப்பட்ட கைகள் பிறருக்கு கொடுக்குமா? எப்படி பெறலாம் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு, எப்படி தரலாம் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு. ஈந்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆரின் வாரிசுகள் நாம். வாங்கி சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

இந்த 60 ஜோடி மணமக்களில் எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை ஒன்று மணமகனாகவும், நான் பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் இப்பொழுது வீற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் வளமோடு இருந்து இன்னொரு காலத்தில் வாடிப்போகும் மரமல்ல நமது இயக்கம். இது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதற்கு குறிவைக்க முடியாது. எந்த விஷ அம்புகளாலும் இதனை காயப்படுத்த முடியாது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=635&Itemid=52

February 05, 2008

எழுத்தாளர் பாமரனின் "பஞ்ச்" பதில்கள்!

அன்புமிக்க தோழமைகளுக்கு.... வணக்கம். கடந்த 15 நாட்களுக்கும் மேலாய் சுற்றுப்பயணங்கள்... கருத்தரங்குகள்... எழுத்துப் பணிகள்.. நண்பர்களது சந்திப்புகள்... எனக் கழிந்ததால் எனது பதில்களுக்கான சாத்தியப்பாடுகள் தள்ளிக்கொண்டே போய் விட்டது என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மையில் ஒரு வெங்காயமும் இல்லை. உங்கள் நண்பனது "பலங்களை" எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ அப்படி அவனது பலவீனங்களையும் புரிந்து கொள்வதே நட்பின் அடையாளம்.. வேலை இருந்தாலும் இல்லாவிடினும் அடிப்படையில் சோம்பேறி நான். இந்த சோம்பேறித்தனம் மட்டுமே என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.. இல்லாவிடில் இதுவும் ஒரு அலுவலகமாய்... குடும்பமாய்... நிறுவனமாய்... சீரழிந்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் அநேகம் இருக்கிறது. இத்தகைய சாத்தியப்பாடுகள் கடந்து நமது தோழமை தொடரவேண்டும் என்பதே எனது கவனம். தொடர்வோம்... வழமையாய் அறிவிக்கப்படும் நாட்களைத் தகர்த்து...

தோழமையுடன்
பாமரன்

பாலா.
பாமரன் அவர்களே, தங்கள் எழுத்தை நேசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை...நேற்று வரை ஈழப்பிரச்சினையில் அமைதியாக இருந்த கலைஞர், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.... நன்று... அதை வரவேற்றோம்...ஆனால் அதே நிகழ்வுக்கு தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பேரணியும், கூட்டங்களும் நடந்தன...ஆனால் அங்கெல்லாம் அமைதியாயிருந்து விட்டு சென்னை யில் நடக்கவிருந்த பேரணிக்கும், கூட்டத்திற்கும் தடை விதித்ததன் மூலம் "காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலுக்கு கலைஞர் பணிந்து விட்டாரோ என்று எண்ணத்தோணுகிறது...." கலைஞரின் இந்த முடிவு இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா.. இல்லை ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளூம் எண்ணமா?


வணக்கம் பாலா....எனக்கு ஈழத்து வாசகம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. "ஈழத்தில் மொழிக்காகப் போராடியவர்கள்போராட்டத்திற்குப் பிறகு போராளிகள் ஆனார்கள்தமிழகத்தில்மொழிக்காகப் போராடியவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மந்திரிகள் ஆனார்கள். "கலைஞர் ஆகட்டும்... எவராகட்டும்...ஈழப்பிரச்சனைக்காக ஆட்சியை துறக்கும் அளவுக்கு தியாகிகள் அல்லர். ஓட்டு அரசியலில் இருப்பவர்கள், இந்த அளவிற்காவது முணுமுணுத்தார்களே என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் அவ்வளவே.

மணி செந்தில்
தற்போது வெளிவரும் திரைப் படங்கள் எவ்வாறு இருக்கின்றன...? எப்படி இருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்...?

பார்க்கப் பார்க்கவே "பரலோகத்திற்கு" டிக்கெட் வாங்கும் அளவிற்கு இருக்கிறதுமனைவியின் தங்கையை பிராக்கட் போட "ஆசை".....தம்பியின் மனைவியை தள்ளி கொண்டு போக "வாலி".....கணவனின் தம்பியை கவிழ்த்துப்போட "உயிர்".....இனி அப்பா - மகள் அம்மா - மகன் உறவு மட்டும்தான் மிச்சம்.

சுசித்ரா
வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

"எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால்ஆடுகளுக்கு விடுதலை உண்டாகுமா? அதை போலவே ஆண்களால் பெண்களுக்கு ஒருபோதும் விடுதலை உண்டாகாது..." என்று பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.போன நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மார்புக்கு மேலே சேலையை போடுவதற்கே போராட வேண்டி இருந்தது. பிற்பாடு கல்விக்கான போராட்டம்..... அதன் பிறகு பணி இடங்களுக்கான போராட்டம்....பால்ய விவாகம்..... உடன்கட்டை ஏறுதல்..... என கணக்கற்ற தடைகளைத் தாண்டியே வந்திருக்கிறது பெண் இனம். இப்படி சகலத்தையும் முறியடித்த பெண்ணிணம் பணி இட பிரச்சனைகளையும் நிச்சயம் தானே எதிர் கொண்டு முறியடிக்கும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு மெல்லிய கைகுலுக்கல்.

கொலைவாளினை எடடா
ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறார்கள், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம். இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம், மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றுகொண்டு இருக்கின்றன.....2020யில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள் வல்லரசு எதைபதை எதை வைத்து முடிவுசெய்கிறார்கள்?

சரியான கேள்வி. தவறான இடத்திற்கு வந்திருக்கிறது. இதை அப்படியே.....டாக்டர்.அப்துல்கலாம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு, redirect செய்கிறேன் தோழா..

ருத்ரா
தவறு செய்தால் சாமி கண்களை குத்திவிடும் என்று சொல்கிறார்கள் அதிக தவறுகள் நடந்துகொண்டு இருக்கின்றன் கடவுளின் சக்தி கேள்விக்குறியாகிறது?
இதில் உங்களின் கருத்து உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது நண்பா. அந்த சாமி....., இந்த சாமி....., சொந்த சாமி..... நொந்த சாமி..... எதுவும் காப்பாற்றாது நம்மை. எனக்கு தெரிந்த "ஒரே சாமி" ஈ.வே.ராமசாமிதான்..


கருணாநிதி
வணக்கம் தோழரே, உங்கள் பகிரங்க கடிதங்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனது கேள்விகள் :
1. இன்றைய தலித்துகளின் உண்மை நிலை பற்றி?

2. திராவிடம் பேசும் திராவிட கட்சிகள் இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க முன்வருவது இல்லையே?

3. கடல் தாண்டி உள்ள தமிழர்காக கண்ணீர் விடும் சில தலைவர்கள் (வைகோ, நெடுமாறன் மற்றும் பலர்) உள்ளூரில் கொடுமைக்கு உள்ளாகும் (தலித்) மலம் அல்லும் மனிதர்களை மறந்து போவது ஏன்?

4. அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி?
நன்றி தோழரே. தலித்துகளின் இன்றைய நிலையை எழுத்தில் வடிக்க இந்த இணையத்தின் பக்கங்கள் போதாது. "இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க திராவிடக் கட்சிகள் முன்வருவது இல்லை...நெடுமாறன் போன்றவர்கள் ஈழத்துக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்..." என்பதை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நாம் இந்நிலை மாற துணை நிற்பதே முதல் வேலை.. அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம். மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவல நிலை மாறாத நாள் வரை யாரும் விஞ்ஞானி என்றோ.... எழுத்தாளன் என்றோ...கவிஞன் என்றோ சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை. இந்த அவல நிலை குறித்து திரு.மதிவண்ணன் அவர்கள் "உள் ஒதுக்கீடு சில பார்வைகள்" என்கிற நூலை அண்மையில் வெளியிட்டு இருகிறார் (கருப்பு பிரதிகள் பதிப்பகம், B-74 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5) வாங்கி - வாசித்து - செயல்படுவோம் வழி பிறக்கும்.

ஆர்த்தி
தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?

இருக்கிற பார்வையும் தொலைந்ததுதான் மிச்சம். Always Making new

வணக்கம் நண்பரே..தமிழனுக்கு சாதி தேவையா தேவையில்லையா?இல்லையெனில் தமிழனை அடையாளம் கொள்வது எப்படி?
வந்தேறிகள் அதிகமாகிவிட்ட இச்சூழ்நிலையில் எவ்வாறு அவர்களை இனம் காணுவது?.. கட்-அவுட்களூக்கு எங்கெங்கு பாலாபிசேகம் நடக்கிறதோ... வாஸ்துகளின் பெயரால் எங்கெங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதோ...சோதிடத்தின் பெயரால் வாழ்க்கை எங்கெங்கெல்லாம் தொலைக்கப்படுகிறதோ....அங்கெல்லாம் இளித்து கொண்டு நிற்பவன் எவனோ அவனே தமிழன்..தமிழனை இனம் காண்பதில் அப்படி என்ன சிக்கல் உங்களுக்கு?


ஜீவானந்தம்
தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு (இதற்கு ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை) விற்பனைக்காக பாமரன் தேவைப்படலாம். பாமரன் போன்ற புரட்சியாளர்களுக்கு குமுதம் தேவையா?
ஐய்யய்யோ.... என்னைப் புரட்சியாளன் என்று யாரோ உங்களூக்கு தவறான தகவல் தந்துவிட்டார்கள். பாவம்... குமுதம் தவிர வேறு பத்திரிக்கைகள் எதுவும் படிப்பதே இல்லையா நீங்கள்?

ஜெயபிரகாஷ் வேல்
தோழரே, உங்கள் எழுத்து நடை சற்று சலிப்பூட்டுவது போல் உள்ளது. ஓரே மாதிரி எழுதுவது உங்களுக்கு எப்படி உள்ளது?

உண்மை தான். ஞானிகளின் நண்பர்களுக்கு பாமரர்களின் நடை சலிப்பூட்டுவதில் ஆச்சரியங்கள் ஏதும் இல்லை

பாரதி
தோழரே ஈழத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்.........

மதுரை மச்சான்!


தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு இப்படி ஒரு கருத்து நிறையப்பேரிடம் இருக்கிறது!!!! எதனால் என்று கூறமுடியுமா? பாமரன் அவர்களே!!

25 வருடங்களாக எங்கள் வீட்டில் வாங்கி கொண்டிருக்கிறார்கள் இப்படி அவர்களுக்கு தோன்றியதாக எனக்கு தெரியவில்லை!!!

February 01, 2008

மதத்தின் பிடியில் அப்துல் கலாம்!?

பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்துகொண்டிருப்பவர். இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல். ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளையெல்லாம் கொஞ்சம் கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார். இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும், சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது. அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர்விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது. அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154