September 13, 2007

இன்றைய குறள்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது
அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

எந்தக் கோடி?

இங்கிலாந்து பிரதம நீதிபதி ஜெம்பரிஸ் என்பவர், ஒரு கைதியைத் தமது பிரம்பால் சுட்டிக்காட்டி, "என் பிரம்பின் ஒரு கோடியில் போக்கிரி ஒருவன் இருக்கிறான்'' என்று மிகுந்த இறுமாப்புடன் கூறினார். உடனே அந்தக் கைதி, "எந்தக் கோடியில் பிரபுவே?'' என்று கேட்டான்.

  • பேராசிரியர். குணசேகரன் செவ்வி : அண்மையில் இங்கு லண்டன் வந்திருந்த புதுவை பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத்துறையின் தலைவர், பேராசிரியர். கே. ஏ. குணசேகரன் அவர்களுடனான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம். தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகளின் இன்றைய நிலை, அவை குறித்து ஏனைய நாடுகளுடனான ஒப்பீடு மற்றும் நாட்டுப்புற இசையை நவீன இசையாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உட்பட நாட்டுப்புறக் கலைகள் குறித்த பல்வேறு அம்சங்களை எமது மணிவண்ணனுடன் கலந்துரையாடுகிறார் பேராசிரியர் குணசேகரன். http://www.bbc.co.uk/tamil/drkag.ram
  • ஐரோப்பிய குடிவரவுக் கொள்கையில் மறு ஆய்வுக்கு வலியுறுத்தல் : ஐரோப்பாவில், வயதான மக்கள் தொகை காரணமாக அதிகரித்துவரும் தொழிலாளர் பற்றாக் குறையை போக்கும் விதமாக, அதன் குடிவரவுக் கொள்கையில் பாரதூரமான மறு ஆய்வுத் திட்டத்தை, ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது
  • இராக்கில் பழங்குடியினத் தலைவர் கொலை : அல்கயீதாவுக்கு எதிரான சுன்னி அரபு பழங்குடியின தலைவர்களில் முக்கியமான ஒருவர், குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாக இராக்கின் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அப்தல் சத்தார் அபு ரிஷா என்கிற பழங்குடியின தலைவரே இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாக்தாதுக்கு மேற்கே, கிளர்ச்சிக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த அன்பர் பிராந்தியத்தில், அமெரிக்க இராணுவத்துடன் இவர் ஒத்துழைத்து வந்தார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் புஷ் அவர்களை இவர் சந்தித்தபோது, இந்த பகுதியிலிருந்து அல்கயீதா போராளிகளை வெளியேற்றுவதற்கு இவர் செய்த உதவிக்காக அமெரிக்கர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். ரமாடி நகரில் இருக்கும் இவரது வீட்டிற்கு அருகே நிகழ்ந்த தெருவோரக் குண்டு வெடிப்பில் அபு ரிஷா கொல்லப்பட்டதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
  • இராக்கின் நிலைமை மேம்படுவதாக அமெரிக்கத் தளபதி கூறுகிறார் : இராக்கின் அன்பர் மாகாணத்தின் பாதுகாப்பு நிலை பிரம்மிக்கத்தக்க வகையில் மேம்பட்டுள்ளதாக இராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரியஸ், அமெரிக்க காங்கிரஸ் அவையில் சாட்சியம் அளித்த ஒரு சில தினங்களுக்குள் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது
  • வஸிரிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் : ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே ஒட்டி, வஸிரிஸ்தானில் இருக்கும் பாகிஸ்தான் இராணுவநிலையை ஒட்டி கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இதில் முப்பது இஸ்லாமியத் தீவிரவாதிகளும், இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக, இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். எட்டு இராணுவத்தினர் காயபமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்
  • குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்ததாக ஐ.நா அறிவிப்பு : ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு வீதம் உலகளாவிய அளவில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் கூறியுள்ளது
  • இன்றைய (செப்டம்பர் 13 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews