February 29, 2008

லீனா மணிமேகலைக்கு சர்வேதச விருது

மாத்தம்மா பறை மற்றும் பலிபீடம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்த யதார்த்த ஆவணப்படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. அவருடைய 'தேவதைகள்' எனும் ஆவணப் படத்துக்கு சர்வேதச தங்கச் சங்கு விருது கிடைத்துள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடை பெற்றது.
"தேவதைகள்" மூன்று சாதாரணப் பெண்களைப் பற்றிய அசாதரணப் படம். இது ஒப்பாரியும், சுடுகாடும் கடலுமாய் வாழும் மூன்று பெண்களைப்பற்றிய ஆவணப்படம். ஆண்கள் மட்டுமே செயல்படுகிற அவர்களே செய்யத்தயங்குகிற மூன்று வெவ்வேறான வேலைகளில் மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழகியல் உணர்வுடன் படம் பிடித்துள்ளார். பாடல் பாடும் ஒரு பெண் அவளுக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தில் இல்லாதவர்களுக்கு உதவுவதும், குரங்கு, நாய் போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட்டு செல்வதும் மனித நேயத்தின் வெளிப்பாடு. சுடுகாட்டில் பிணம் புதைக்கும் வேலை செய்பவர் முதலில் தன்னை எதிர்த்தவர்களையே உடன் வைத்து வேலை வாங்குகிறார்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பெண் கடலும் கடற்கரையும் மீனவனுக்கே சொந்தம் என்று ஆர்ப்பரிக்கிறார். மூவருமே பெண்கள். துணிச்சலானவர்கள் என்பதையும் மீறி மூவருமே விரும்பி ஏற்காமல் தன்மேல் திணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை எவ்வளவு அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்த ஆவணப் படத்தின் கதை. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=676&Itemid=67