August 15, 2007

இன்றைய குறள்

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்

அறத்துப்பால் : அன்புடைமை

"சமண மதத்தைச் சார்ந்த பெருமக்கள் இன்றும் கதிரவன் மறைவிற்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளாமைக்குக் காரணம், இரவில் சாப்பிடும் பொழுது தவறியும் பறக்கும் பூச்சிகள் உணவில் விழுந்து இறந்து விடக்கூடாது என்னும் அருள் தன்மையே"

தமிழோசை

இந்திய சுதந்திரத்தின் 60 வருட நிறைவைக் கொண்டாடும் நிகழ்வுகள், இன்று, புதன்கிழமை நாடெங்கிலும் இடம்பெற்றன. தலைநகர் டெல்லியில், செங்கோட்டையில் நடந்த வண்ணமிகு விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் பிரதமர் மன்மோகன் சிங். இன்றைய (ஆகஸ்ட் 15 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews