July 09, 2007

இன்றைய குறள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

மலேசியா வாசுதேவன் ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

மலேசியா வாசுதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

மலேசியா வாசுதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

Part IV

மலேசியா வாசுதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

உலக வரலாறுகளைத் திருப்பிப்போட்டவை

தமிழோசை

சவுதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான இறுதி முயற்சிகள். மேலும் இன்றைய "BBC" செய்திகள் (ஜுலை 09 திங்கட்கிழமை) கேட்க இணைப்பில் செல்கBBCTamil.com Radio Player



இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா?
இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி) தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு -தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது।
இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...
- பெரியார்