December 17, 2007

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

இன்றைய குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

சுழன்றும் ஏர் பின்னது உலகம்

"உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம் விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள், பல்வேறு தரப்பினருடைய உழைப்பு ஆகியவைதான் காரணம். இந்தியாவில் உழைப்பு அதிகமாக உள்ளது" - ப. சிதம்பரம்

எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது. இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம். முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது...Please click the link....http://www.bbc.co.uk/tamil/matri.ram
இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்
இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்

மலேசிய தமிழர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன

மலேஷியாவில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சமீபத்தில் போராடிய இந்திய வம்சாவழித் தமிழர்களில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தற்போது அவர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கள் சில நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 31 பேரில் மாணவர்களான 5 பேர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்கள் சார்பிலான சட்டத்தரணியான சிவநேசன். அதேவேளை ஏனைய 26 பேரைப் பொறுத்தவரை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் முக்கிய குற்றச்சாட்டான, கொலைக் குற்றச்சாட்டு விலக்கப்பட்டு விட்டதாகவும், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளான, சட்டவிரோதமாகக் கூடியமை மற்றும் பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தமை ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இவற்றுக்கான தண்டனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றம் கூடும் போது அறிவிக்கப்படும் என்றும் சிவநேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தப் போராட்டத்தை நடத்திய மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் முக்கிய 5 உறுப்பினர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் ஒரு ஆட்கொணர்வு மனுவையும் தாம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரமோத் மஹாஜன் கொலை வழக்கில் அவரது சகோதரர் குற்றவாளியாக அறிவிப்பு

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரமோத் மஹாஜன் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் குற்றவாளி என்று மும்மையிலிருக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் அமைச்சரான பிரமோத் மஹாஜனை, அவரது சகோதரரான பிரவீன் மஹாஜன் சுட்டுக்கொன்றதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் மும்மையிலிருக்கும் அவரது வீட்டில் சுடப்பட்ட பிரமோத் மஹாஜன், சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் இறந்தார். குடும்பச் சண்டை காரணமாகவே பிரமோத் மஹாஜன் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த கொலையை தான் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிரவீன் மஹாஜன், பின்னர் நீதிமன்ற விசாரணைகளின்போது இதை மறுத்தார். அவருக்கான தண்டனை என்ன என்பதை, நீதிமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை அறிவிக்க இருக்கிறது.