November 23, 2007

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 1

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 2

தமிழகத்தின் சமீபத்திய வன்முறைகள் : ஓர் ஆய்வு - 3

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர் - 1

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவாளர்- 2

இன்றைய குறள்

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க

"சிலபேரு மண்வாசனைக்காகப் பண்றோம்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத்தன்மை அதிகமாகப் போய், புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். ஒரு மொழிபெயர்ப்பாளனால எப்படி அந்தப் பேச்சு மொழிய மொழிபெயர்க்க முடியும்?" - அசோகமித்திரன், எழுத்தாளர்

உத்திரப் பிரதேசத்தில் வழக்கறிஞர்களை இலக்குவைத்து தொடர் குண்டுவெடிப்புகள்

  • இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், வாரணாசி, ஃபைசாபாத் மற்றும் தலைநகர் லக்னவ் ஆகிய மூன்று நகரங்களில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்துக்குள், மூன்று இடங்களிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன. நீதிமன்ற வளாகங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ, நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களில் வைத்து இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.
    வாரணாசி மற்றும் ஃபைசாபாத்தில் தலா இரண்டு வெடிகுண்டுகளும், லக்னவ்வில் ஒரு இடத்திலும் குண்டுவெடித்திருப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாரணாசியில் 9 பேரும், ஃபைசாபாத்தில் 4 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த 13 பேரில் நான்கு பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இது தொடர்பில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச மாநில உள்துறைச் செயலர் செம்பர், இந்தக் குண்டுவெடிப்புக்கள் அனைத்தும், திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கின்றன. அனைத்தும், குறித்த நேரத்தில் வெடிக்கக்கூடிய டைமர் கருவிகள் பொருத்தப்பட்டவைஎன்றார். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி, மத்திய புலனாய்வுத்துறை மீது குற்றம் சாட்டினார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த குண்டுவெடிப்பு்ச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
  • காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநீக்கம் : முஷாரஃபுக்கு இது பெரும் பின்னடைவுபாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இடைநீக்கியதாக நேற்று வியாழக்கிழமை இரவு காமன்வெல்த் அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அறிவித்தது ஒரு நியாயமற்ற, முறையற்ற முடிவு என பாகிஸ்தான் கூறியுள்ளது.
    காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை அரசியல் விழுமியங்களை கடுமையாக மீறுவதாக பாகிஸ்தானில் தற்போதைய சூழல் அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் காமன்வெல்த் அமைச்சர்கள் செயற்குழு பாகிஸ்தானை அமைப்பிலிருந்து இடைநீக்குவதாக அறிவித்தது. அவசரநிலை சட்டத்தை விலக்கவும், இராணுவத் தலைவர் பதவியை துறக்கவும் ஜெனரல் முஷாரஃப் தவறிவிட்டார் என்பன இவ்வறிவிப்புக்கான காரணங்கள். காமன்வெல்த் தன்னிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளது என்று முஷாரஃப் கருதுகிறார் என்றாலும் அவசரநிலை இறுதியாக அகற்றப்படாதவரை பாகிஸ்தானை மீண்டும் சேர்த்துக்கொள்ளமுடியாது என்பதில் காமன்வெல்த் தீர்மானமாய் இருக்கிறது
  • பாகிஸ்தானை இடைநீக்கும் முடிவை இலங்கை ஆதரிக்கவில்லை
    பாகிஸ்தானை காமல்வெல்த நாடுகள் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்யும் முடிவுக்கு இலங்கை அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
    நேற்று இரவு பாகிஸ்தானை காமல்வெல்த் நாடுகள் அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யும் முடிவை எடுத்த குழுவில் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவும் இடம்பெற்றிருந்தார்.
    அப்போது இந்த முடிவுக்கு ஆதரவாக அவர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது.
  • பேசாலையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் : இலங்கையின் வடமேற்கே மன்னார் பேசாலையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 17 விடுதலைப் புலிகளும், வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது
  • மத்தியகிழக்கு பற்றிய அமெரிக்க மாநாட்டில் பங்கேற்க சௌதியரேபியா சம்மதம் : அமெரிக்காவின் அன்னாபொலிஸ் நகரில் அடுத்த வாரம் நடத்தப்படவுள்ள மத்தியகிழக்கு பற்றிய மாபெரும் மாநாட்டில் சௌதியரேபியா கலந்துகொள்ளும் என்று அந்நாடு அறிவித்துள்ளது
  • புதிய அதிபரை தெரிவுசெய்ய லெபனான் நாடாளுமன்றம் மீண்டும் தவறியுள்ளது : லெபனானில் புதிய அதிபரை தெரிவுசெய்ய நாடாளுமன்றம் மீண்டும் தவறியிருப்பதால் தலைநகர் பெய்ரூட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது
  • பாக்தாத்தில் குண்டுவெடிப்பு, 13 பேர் பலி: இராக்கிய தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில மாதங்களாக காணப்படாத கொடிய குண்டுத் தாக்குதல் ஒன்று ஜனநெருக்கடிமிக்க சந்தை ஒன்றில் நடத்தப்பட்டபோது 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலருக்கு காயம்பட்டது
  • இராக்கிலுள்ள தமது துருப்பினரை திருப்பியழைக்க புதிய போலந்து பிரதமர் திட்டம் : இராக்கில் இப்போது எஞ்சியுள்ள போலந்து படையினரை இவ்வாண்டின் இறுதிக்குள் திருப்பியழைக்க தாம் திட்டமிட்டிருப்பதாக போலந்தின் புதிய பிரதமர் டோனல்ட் டஸ்க் உறுதிப்படுத்தியிருக்கின்றார்
  • இன்றைய (நவம்பர் 23 வெள்ளிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews