November 22, 2007

பாகிஸ்தானில் அடுத்து என்ன? - ஒரு ஆய்வு

பாகிஸ்தானில் எல்லாமே அதிபர் முஷாராஃப் அவர்களின் திட்டப்படிதான் சென்று கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அங்கு சுதந்திரமாகச் செயற்பட்ட நீதிபதிகள் மாற்றப்பட்டு அவருக்கு இசைவாக செயல்படும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுளார்கள். நானே தொடர்வேன் என்கிறார் முஷாரஃப்இதன் காரணமாக அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு ஏற்பட்டிருந்த உடனடியான அச்சுறுத்தல்களை அவர் புறந்தள்ளியுள்ளார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் பதவியில் தொடரும் தனது அபிலாஷையில் அவர் வென்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும். தான் பதவியில் தொடருவது உறுதியாகியுள்ள நிலையில், பலர் அவரிடம் எதிர்பார்த்த தேவைகளை, சலுகைகளை இறுதியாக அவர் அளிக்கக் கூடிய நிலையில் இருக்கிறார். அதாவது இராணுவத் தலைவர் பதவியை அவர் துறப்பது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரக் கூடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிபர் பக்கம்சரி இவைவெல்லாம் அவரை எங்கே அழைத்துச் செல்கின்றன? அவர் நெருக்கடி நிலையை அமல்படுத்திய போது சர்வதேச கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா உட்பட தமக்கு ஆதரவளிக்கும் நெருங்கிய சக்திவாய்ந்த நாடுகளின் கோபத்துகு ஆளானார். இதனிடையே காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் இன்று கூடி காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடை நீக்கம் செய்வது குறித்து ஒரு முடிவினை எடுக்கவுள்ளார்கள். இந்த நிலையில், தம்மிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் பாதியளவை தாம் நிறைவேற்றியுள்ளதாக அவர் வாதிடக் கூடும். பாகிஸ்தானில் திட்டமிட்டபடி தேர்தல்கள் நடைபெற வேண்டும், அதிபர் முஷாரஃப் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அமெரிக்கா முன்னர் கோரியிருந்தது. இந்த இரண்டும் தற்போது நடைபெறுகின்றன. நெருக்கடியின் கெடுபிடிகள்அங்கு அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இருந்தபோதிலும் இன்னமும் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் கவலைகள் உள்ளன. அங்கு நடைபெறவுள்ள தேர்தல்களின் பிரச்சார காலம் முழுவதும், அடிப்படை அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் எவ்வளது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்? தேர்தல்களை புறக்கணிக்கப் போவதாகக் கூறுகிறார் புட்டோதமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில், எதிர்கட்சிகள் நடைபெறவுள்ள தேர்தல்களில் பங்கேற்க மறுத்தால், புதிதாக தேர்தெடுக்கப்படவுள்ள நாடாளுமன்றம் எந்த அளவுக்கு சட்டபூர்வ தன்மை கொண்டதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே இருக்கும் நிலையில், அவர்களால் அதிபர் மீது எந்த வகையான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் விதிக்க முடியும்... இருந்தாலும் கூட தற்போது உள்ள நிலையில் முஷாராஃபே ஆளச் சிறந்தவர் என அமெரிக்கா போன்ற நாடுகள் நினைக்கின்றன. அவர்களுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மைய அவர் அளிப்பார் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களது அழுத்தங்கள் தொடரவே செய்யும்.
எனினும் அரசியல் சூட்டைத் தணிக்கும் நடவடிக்கையில் அதிபர் முஷாரஃப் வெற்றியடைவார் என்றே தோன்றுகிறது.

இன்றைய குறள்

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
அறத்துப்பால் : அழுக்காறாமை

காவல்துறை = மனிதாபிமானம்

"போலீஸாரின் சேவை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், நேசம் மிக்கதாகவும், ஊழலற்றதாகவும் இருக்க வேண்டும். மக்கள் நலனைக் காப்பதில் மிகவும் பொறுமையோடு சிறப்பாக செயலாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நேரத்துடன் செயலாற்றுவதோடு மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவர்களாக போலீஸார் செயல்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மனிதாபிமானம் என்பது உயர் அதிகாரிகளிடமிருந்து உருவாகி அது கீழ்நிலை காவலர்கள் வரை தொடர வேண்டும்" - அப்துல்கலாம், முன்னால் இந்திய குடியரசு தலைவர், காவல்துறையின் 150வது ஆண்டு நிறைவுவிழாவில்

முஷாரஃப் காட்டில் மழை

  • முஷாரஃப் அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதை எதிர்க்கும் இறுதி வழக்கையும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃபுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த நீதிபதிகளை அவர் விலக்கிய பிறகு அமைக்கப்பட்ட புதிய உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் குழு அவர் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட இறுதி வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. இது அவர் இராணுவத் தலைவர் பதவியிலிருந்து விலக அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவெற்ற வழிவகுக்கிறது. அவர் இராணுவத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்பது அவரது எதிரிகள் மற்றும் பாகிஸ்தானின் மேற்குலக கூட்டணி நாடுகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது. தமக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடக்கூடும் என்கிற ஊகத்தில் அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் அமல்படுத்திய நெருக்கடி நிலை இன்னமும் தொடருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நெருக்கடி நிலையை விலக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்ய விருப்பததாக அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
  • இராக் மோதல்கள்: முப்பதுக்கும் அதிகமானோர் பலி : இராக்கில் பாதுகாப்புப் படையினருக்கும் அல்கைதா போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் முப்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்
  • ஐரோப்பாவில் கொகெய்ன் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது - கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை : கொகெய்ன் போதைமருந்து பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளிலும் வேகமாக அதிகரித்துவருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது
  • ஜிம்பாப்வே விவகாரம்: தென்னாப்பிரிக்கா சமரச முயற்சி : தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ ம்பெகி ஜிம்பாப்வே சென்றுள்ளார்.
    காமன்வெல்த் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா செல்லும் முன்னர் ஜிம்பாப்வே அரசாங்கத்துடனும் எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்காக அவர் அங்கு சென்றார்
  • சோமாலியாவில் புதிய இடைக்கால பிரதமர் : நூர் ஹசன் ஹுசைன் சோமாலியாவின் செம்பிறைச் சங்கத்தின் தலைவரான அந்நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி : இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது