July 31, 2007

எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். இந்தப்பிஞ்சு ஒரு அன்னைத் தெரசாவாகலாம், அன்னை இந்திராவாகலாம்.... என்று மாறும் இந்த அவலம் நமது இந்திய மண்ணில்?





"பிடித்தவைகளைப் பிடித்துக்கொண்டு, பிடிப்போடு, பிடித்தவைகளுக்கே பெருமை சேர்க்கும் கீதாவை பல கிரீடங்கள் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை"


இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal

எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி சேர்ந்து பாடியவை

Powered by eSnips.com

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டா தரணி பகுதி 3

"தயாநிதி மாறனும் தற்போதைய மந்திரியும்" IV

மலையாள நண்பர் ஒருவரின் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்!!

Powered by eSnips.com

படித்ததில் கனத்தது!!


இன்றைய குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

மனிதம் ஏன் மரண தண்டனையை எதிர்க்கிறது?

"மரண தண்டனை என்பது"
  • மனித உரிமையை முற்றிலும் அழிக்கிறது.
  • மனித வதையின் (Torture) எல்லை
  • கொடூரத்தின் உச்சம்
  • சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடு அரசால் நடத்தப்படும் கொலை
  • குற்றம் சாட்டப் பெற்றவருக்கு மறு சீர்திருத்தம் அடியோடு இல்லாமல் போகிறது.
  • பெரும்பாலான சமயங்களில் இதற்கு ஆட்படுவோர் படிப்பறிவு அற்றவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், இனப் போராளிகள் மற்றும் மதப் பற்றாளர்கள் மட்டுமே
  • சில சமயங்களில் நீதி தவறும் பட்சத்தில், தண்டிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பே இல்லை.
- மனிதம்

சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கால சிறை தண்டனை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டார். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில், 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கு மீதான தீர்ப்பு படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள், குண்டுவெடிப்புக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை, சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏ.கே. 56 ரக துப்பாக்கி மற்றும் 9 எம்எம் பிஸ்டல் ஆகியவை வைத்திருந்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு சிறை தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார்.
முதல் முறை குற்றம் புரிந்தவர்களுக்கான பாதுகாப்பு சட்டப்படி தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
மெசப்பட்டோமியா :

உலகின் மிகப் பழமையான் நாகரீகங்களில் மெசப்பட்டோமியா நாகரீகமும் ஒன்று. இன்றைய இராக் பகுதிதான் அன்றைய காலத்தில் மெசப்பட்டோமியா என்று அழைக்கப்பட்டது. அந்த நாகரீகம் மற்றும் வளர்ச்சியில் டைகரிஸ் மற்றும் யூபிரிட்டிஸ் நதிகள் பெரும் பங்கு வகித்தன. இவ்வாறு வரலாற்று சிறப்பு வாய்ந்த டைகரிஸ் நதியில் இன்று பிணங்கள் மிதப்பது சர்வசாதாரணமான காட்சியாக இருக்கிறது. தினம் தினம் பலரது உடல்கள் அந்த நதியில் இருந்து கண்டெடுக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்த பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.தொடர்ந்து இன்றைய தமிழோசை (ஜுலை 31 செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

நாமக்கல் கவிஞர்

"இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.

அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.

புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.