April 02, 2007

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
Dr.S.Jayabarathi

"கவிதைப்பக்கம்"

தன்னம்பிக்கையாளனுக்கு மின்மினிப் பூச்சிகூட
இன்னொரு சூரியன்தான்

புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு
மனிதனின் இதயமும் கல்லறைதான்

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கை குறைந்து போவதில்லை

பாறைகள் தடுக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை

பாலா - சென்னை

ஹைக்கூ

வண்டுக்காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்ப் பனித்துளிகள்...

நவநீ - சென்னை

"உயிர் உண்டியல்"

அமைதிக்காக
ஆலயத்தினுள் அறிவு ஜீவிகள்
வயிற்றுக்காக வாசலில்
வறுமைக்கோடுகள்
பிச்சைக்காரர்கள்....

நவநீ - சென்னை

"அழகி"

கனவுகள்கூட
கனவு காண்கிறது
உன் கண்களில் வரவேண்டுமென்று....

நவநீ - சென்னை

"கவிதைப்பக்கம்"

நம்பிக்கையோடு
வெறுந்தரையில்
நீரூற்றினால்கூட
முளைவிடக் காத்திருக்கிறது
சில விதைகள்....

- பாலா, சென்னை