July 10, 2007

இன்றைய குறள்

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது, இன்பமும் ஆகாது
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

பெரியார்

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று, "அய்யா! பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்" என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட,
பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு சொன்னாராம்.
“சரியாத்தான் போட்டிருக்கானுங்க, ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்” என்று சொல்லிச் சொன்னாராம்,
“படிக்காத காமராசர்" உருவாக்கிய பள்ளிக்கூடத்தில், 'படித்த காமராசர்' பேசுவார் என்று போட்டிருக்கணும்" என்றாராம்.

எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது. இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்கள்.BBCTamil.com
முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது. மேலும் இன்றைய (ஜுலை 10 செவ்வாய்க்கிழமை) தமிழோசை நிகழ்ச்சிகளைக் கேட்க BBCTamil.com Radio Player