October 23, 2007

பார்வையற்றோர் பயன்படுத்த வசதியாக கம்ப்யூட்டர் மென்பொருள் கண்டுபிடிப்பு

சென்னை: பார்வையற்றோர் கம்ப்யூட்டர் நிபுணராக வளர பயன்படும் மென்பொருளை மும்பையைச் சேர்ந்த் கம்ப்யூட்டர் நிபுணர் தயாரித்துள்ளார். இதுகுறித்த விளக்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பார்வையற்றோரும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கான புதிய மென்பொருளை கண்டுபிடித்த மும்பை கிருஷ்ணகாந்த் மானே, சென்னையில் உள்ள பார்வையற்றோர் மத்தியில் மென்பொருளை பயன்படுத்துவது குறித்து நேற்று விளக்கினார். இந்த நிகழ்ச்சிக்கு `எல்காட்' ஏற்பாடு செய்திருந்தது. சென்னை நந்தனம் ` எல்காட்' வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் `எல்காட்' மேலாண் இயக்குனர் உமாசங்கர் பேசுகையில் கூறியதாவது: மும்பை, டாடா அடிப்படை ஆய்வு மைய ஆலோசகர் கிருஷ்ணகாந்த் மானே பார்வையற்றவர். இவர் தனது முயற்சியால் தற்போது பார்வையற்றவர்கள் எளிதில் கம்ப்யூட்டரை பயன்படுத்துதல், `புரோகிராமிங்' செய்தல், இ- மெயில் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கான பிரத்யேக மென்பொருளை கண்டுபிடித்துள்ளார். தற்போது பூந்தமல்லி அரசு உயர் நிலைப்பள்ளி பார்வையற்ற மாணவர்கள் மற்றும் லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் என 70 மாணவ, மாணவியருக்கு இங்கு புதிய மென்பொருளை பயன்படுத்துவது பற்றி பயிற்சியளிக்கிறார். கம்ப்யூட்டர் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த மென்பொருளை மேம்படுத்துவதற்கான பணிகளில் இவர்களும் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.

முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் செயல்பட வேண்டும்: ஒசாமா அழைப்பு

கெய்ரோ: "ஈராக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும்" என அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் வேண்டுகோள் விடுத்துள்ள `ஆடியோ டேப்' வெளியாகி உள்ளது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பேசிய `ஆடியோ டேப்' அல்-ஜசீரா `டிவி'யில் ஒளிபரப்பானது. அதில், பின்லேடன் பேசியிருப்பதாவது: ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் தனித்து செயல்படுவது கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறு செய்கின்றனர். உங்களில் சிலர் கடமைகளை மறந்து செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனால், நமது சகோதரர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும். தனித்தனியாகச் செயல்படுவோர் ஒரே அணியில் இணைவதைக் காண முஸ்லிம்கள் காத்திருக்கின்றனர். உங்களுக்கான கடமையிலிருந்து தவற வேண்டாம். அனைத்து இடங்களிலும் உள்ள அல்-குவைதா அமைப்பின் சகோதரர்கள் குழுக்களாக பிரிந்து பயங்கரவாதத்தைச் செயல்படுத்தக் கூடாது. தலைவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக போராடக் கூடாது. அதற்கு பதிலாக முஜாகிதீன்களின் வழியை பின்பற்ற வேண்டும். முஜாகிதீன்கள் இந்த நாட்டின் செல்வங்கள். இறைவன் கட்டளையை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பின்லேடன் பேசியுள்ளார். சமீபகாலமாக ஈராக்கில் போராடி வரும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து கொண்டு, அல்-குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டே, பின்லேடனின் பேச்சு அடங்கிய `டேப்' வெளியிடப்பட்டுள்ளது என அமெரிக்க ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இந்த `ஆடியோ டேப்' எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரங்களை அல்-ஜசீரா வெளியிடவில்லை. இது பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தெரியாத நபர் நுழைந்தது சரியா? : சட்டம் ஒழுங்கு எங்கே?

விடுதலைப்புலிகள் விசயத்தில் திமுக மற்றும் அதிமுக-வின் நிலை

கற்றது தமிழ் / தமிழ் எம்.ஏ : இயக்குனர் ராம்

இன்றைய குறள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும், தீயொழுக்கம் தீராத துன்பம் தரும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை

"சாமானிய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. அவர் எழுதியது வட்டாரத் தமிழ், சுத்தத் தமிழ் அல்ல என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பேச்சுத் தமிழ்தான் ஜீவ சக்தி என்று புதுமைப்பித்தன் அனைவருக்கும் உணர்த்தினார். இளைய தலைமுறையினர் புதுமைப்பித்தன் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்" - ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில்...

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 1

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 2

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ : கலிபோர்னியா மாகாணம், சான்டியாகோ - 3

படியில் பயணத்தைத் தவிர்க்க தமிழக அரசு புதிய அதிரடி நடவடிக்கை


"Please Click to Enlarge"