May 08, 2007

ப்ரகாஷ்ராஜ் பேட்டி

வேற்றுமொழிக்காரராக இருந்தாலும் மொழியின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதானால்தான் இன்றும் அவரால் தனக்கென ஒரு இடத்தைப் பற்றிக்கொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் அவர் ஒரு நல்ல நடிகன், கலைஞன் என்பதையும் தாண்டி நல்ல ஒரு ரசிகன். நான் நேரில் பார்த்த ஒரு காட்சி, நான் கடந்த ஆண்டு சென்னையிலிருந்த போது எனது நண்பனின் படத்திற்கு 'கால்ஷீட்' சம்பந்தமாக பார்க்கப் போயிருந்தோம். அன்று பலத்த மழை, காரை நிறுத்திவிட்டுப் பார்த்தால் 'மனிதர் மழையில் நனைந்துகொண்டு' எதையோ நினைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இது வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஒரு நல்ல கலை ரசனையுடைய, இந்த உலகத்தை ரசிக்கக் கூடிய ரசிகன் என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல முடியும்? சரி அவர் 'மொழி' பற்றி என்ன சொல்கிறார்....Please click'Heading'

புதிய கட்சி

எதிர்பார்த்தபடியே நடிகர் சரத்குமார் வெகுவிரைவில் (இரண்டு மாதத்திற்குள்) புதிய அரசியல் கட்சி துவங்குகிறார்.

"வீதிக்கொரு கட்சி உண்டு
ஜாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி கேட்க மட்டுமிங்கு நாதி இல்ல
இது நாடா இல்ல வெறுங்காடா?
இதைக்கேட்க யாருமில்லை தோழா"

வேறென்ன பாடுவது?...சரி பொருத்திருந்து பார்ப்போம்.

சுதந்திரம் எப்போது?? - திபெத்

திபெத்

சுதந்திரம் எப்போது?? - திபெத்