December 10, 2007

இலங்கை

மு.க.ஸ்டாலின் முதல்வராவாரா?

இன்றைய குறள்

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு

அறத்துப்பால் : புறங்கூறாமை

சரண்யா பாக்யராஜ்

கிசு கிசு

எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் 80-வது பிறந்த நாள் விழாவில் விழுந்த கிசு கிசு. ரா.கி.ர.விடம் யார் வேலை கேட்டு வந்தாலும் முதலில் அவர்களது பெயரைக் கேட்பாராம். இப்படித்தான் ஒருவர் தனது பெயர் ரங்கராஜன் என்றதும் ரா.கி. "முதல்ல உன் பெயரை மாத்துப்பா, அப்புறம் நீ நல்ல கதை எழுதி பேர் வாங்கிடுவ, அது நான்தான்னு எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க" என்றாராம். அந்த ரங்கராஜனும் திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல எழுத்தாளர் சுஜாதாதான்

சர்வதேச சமூகம் குறித்து பாகிஸ்தான் நீதிபதி வருத்தம்

பாகிஸ்தானில் நிலவும் நிலைமைகளைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் விமர்சித்துள்ளார். அதிபர் முஷாரஃப் அவர்களால் நெருக்கடி நிலைச் சட்டத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதியான ராணா பகவான் தாஸ் அவர்களே, பிபிசிக்கு அளித்த அபூர்வமான பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். தாமும், தம்முடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, சட்டத்தின் மாட்சிமை மீண்டும் அமல்படுத்தப்படாவிட்டால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமானதாகவும் இருக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். எந்தவிதமான சட்ட முகாந்திரமும் இல்லாமல், தாமும் தமது சக நீதிபதிகளும் ஏறக்குறைய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அமைதிக்கான நோபல் பரிசு அல்கோருக்கு வழங்கப்பட்டது

அல் கோர் உலக பருவநிலை மாற்றம் குறித்த நாடுகள் இடையிலான ஐ.நா.மன்ற செயற்குழுவான ஐ.பி.சி.சி.யும் முன்னாள் அமெரிக்கத் துணையதிபர் அல் கோர் அவர்களும் ஒஸ்லோவில் நடந்த வைபவம் ஒன்றில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர். புவி மொத்தத்துக்குமான ஒரு நெருக்கடி நிலையை உலகம் எதிர்கொள்கிறது என்று அல்கோர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க அமெரிக்காவும் சீனாவும் மிக தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஒருவரின் செயற்பாட்டை குறிப்பிட்டு மற்றவர் சாக்கு சொல்வதை இருநாடுகளும் நிறுத்த வேண்டும் என்றும் அல்கோர் குறிப்பிட்டுள்ளார்