September 24, 2007

ராமர்பால விவகாரம் பற்றி தா.பாண்டியன்!

மத வெறியைக் கிளப்பி குழப் பத்தை உண்டாக்கிப் பார்க்கும் கூட்டத்தினிடத்தில் இனியும் அமைதி காப்பது இயலாத காரியங்கள் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர் வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டதாவது:இந்திய நாட்டில் மதவெறி சக்திகளின் அராஜகம், திமிர்த் தாண்டவம், ஆணவப் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.விசுவ இந்து பரிசத்தின் தலைவர்களில் ஒருவரும், பாரதீய ஜனதா கட்சியின் முன் னாள் நாடாளுமன்ற உறுப் பினருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமரைப் பற்றி விமர்சித்ததற்காக, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவருக்கு தங்கம் பரிசளிக்கப்படும் எனவும், இந்தப் பரிசைத் துறவிகள் வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார். கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பது என்பது தமிழகத்தின் கழுத் தையே அறுப்பதற்குச் சமமா கும். இந்த மதவெறிக் கும்பல், மதவெறியைக் கிளப்பி, குழப் பத்தை ஏற்படுத்தி கல வரங்களுக்கு விதையூன்றுகிறது.இந்தக் கும்பலின் ஆத்திர மூட்டல்களுக்கு, மக்கள் இனியும் அமைதி காப்பது இயலாத காரியம். மத்திய அரசு உடனடியாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து மத வெறிக் கும்பல்களை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல், இந்திய நாட்டில் அமைதி குலையும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக் கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதனை விட மண்ணுக்கே மரியாதை - தா.பாண்டியன் வேதனை

திருநெல்வேலி : மனிதனுடைய உயிருக்கு கிடைக்கும் மரியாதையைவிட மணலுக்கு தான் அதிக மரியாதை கிடைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நெல்லை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் சுடலைமுத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் தா.பாண்டியன் பேசுகையில், தாமிரபரணியில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைமுத்து கடந்த மாதம் வீரவநல்லூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது வன்மையாக கண்டிக்கதக்கது. சிறைகளுக்கு என்று தனி விதிகள் உள்ளன. 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற காலத்தில், முதல் 14 மாதங்கள் பரோலில் வர அனுமதி கிடையாது. ஆனால் சுடலைமுத்து கொலை தொடர்பாக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் ஒரே மாதத்தில் பரோலில் வெளியே வந்தது காவல்துறையின் அக்கறையின்மையை காட்டுகிறது.

சுடலைமுத்து கொலையில் தொடர்புடையதாக 12 பேரின் பெயர்களை சாட்சியான நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் 4 பேர் மட்டுமே போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சுடலைமுத்துவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மனிதனை விட மணலுக்குதான் மரியாதை. மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய சுடலை முத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அரிகேசவநல்லூர் பஞ்சாயத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அயூப்கான் மட்டும் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அயூப்கானுடன் சேர்ந்து போராடிய தலித் சமூகத்தை சேர்ந்த சுடலைமுத்து கொலை செய்யப்பட்டதன் மூலம் அரசின் கொள்கை கொல்லப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இன்னமும் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பதவியேற்ற சில நாட்களிலேயே சேரன்மாதேவி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய்த் துறையினர் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை நடப்பதற்கு இதுவே சாட்சி.

நெல்லை அருகே ஓமநல்லூரில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஏழை எளிய மக்கள் 56 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களுக்காக நல்லாட்சி செய்வதில் கருணாநிதி உறுதியாக இருப்பது உண்மையென்றால் அவர்கள் மீது போட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் 2

இன்றைய குறள்

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்கவேண்டும்.

அறத்துப்பால் : நடுவு நிலைமை

ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு பதிவு

(ஆங்கிலத்திற்கு மன்னிக்க) : Right to Emergency Care:


The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital. The hospital bears the responsibility of informing the police, first aid, etc.

Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need.

Date Of Judgment: 23/02/2007. Case No.: Appeal (civil) 919 of 2007.

"தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்"

- சுவாமி விவேகானந்தர்

ராமர்பால விவகாரம் பற்றி நல்லகண்ணு!

ராமர் பாலம் எனும் முட்டாள்தனத்தை அரசியல் முதலீடாக்கி சிலர் தமிழகத்தின் பக்கம் திரும்பி யிருக்கிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது‍பெரும் தலைவர் ஆர். நல்ல கண்ணு கூறியுள்ளார். ஆய்வுகளில் உணர்ச்சிக்கு இடம் தராமல் அறிவுக்கு இடம் தர வேண்டும். 7 லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் குழுக்கூட்டமாக வாழ்ந்து வந்தான். இங்கு எப்படி வந்தான்? பாலம் கட்டினான்? நம்முடைய வரலாறே 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் உள்ளது. எனவே, இல்லாத ராமர் பாலம் எனும் முட்டாள் தனத்தை முதலீட்டாக்கி இப்போது தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்றார் நல்லகண்ணு.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு

துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்டு வரும் கலைஞர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக் காரரல்ல. ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் முதலமைச்சர். அத்தகையவருக்கு எதிராகக் கொலை வெறித் தூண்டுவதை அனுமதிக்க முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பெரியார் பிறந்த பூமி என்று எச்சரிக்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பதாவது: தி.மு.கழகம் என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே கலைஞர் சொந்தமானவர் அல்லர்; ஆறரைக் கோடித் தமிழர்களுக்கும் இன்று அவர் முதலமைச்சர். 84 வயதிலும் ஒரு இளைஞரைப் போலத் தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் சிந்தித்து உழைத்துக் கொண்டிருப்பவர். ஒரு பெரும் கொள்கை மரபு வழிக்குச் சொந்தக்காரர். பின் பற்றி வந்துள்ள கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர். அந்த வகையில் அவ்வப்போது துணிச்சலான கருத்துகளை வெளியிட்டு வருபவர். தமிழகம் தந்தை பெரியாரின் பூமி. இன்று தந்தை பெரியார் நம்முடன் இல்லை. ஆனால், அவரது பகுத்தறிவுக் கொள்கை களும், சுயமரியாதைச் சிந்தனைகளும் இன்றைக்கும் தமிழர்களை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன. இங்கே மதத் தீவிரவாதிகளின் சலசலப்பு எடுபடாது என்பதை வேதாந்திகளும், அவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் மதவாதச் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத சக்திகள் மக்களை ஒருபுறம் திசை திருப்பிக் கொண்டிருக்கையில், தமிழர்களைப் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையிலிருந்தும், சிந்தனைகளிலிருந்தும் தடம்புரளச் செய்வதற்கான சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய செயலில் ஈடுபடும் சக்திகளையும் நம் இளைஞர்களுக்கு அடையாளம் காட்ட நாம் தவறிவிடக்கூடாது. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் தந்தை பெரியாரின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்திருப்ப வர்கள் இந்த ஆபத்தையும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.

  • சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி பந்த் : சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரி அக்டோபர் 1 ஆம் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்துவது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் காணப்படும் பாறைத் திட்டுக்கள் இராமரின் வானரசேனையால் கட்டப்பட்ட பாலம் என்றும் சேது சமுத்திரத் திட்டத்திற்காக இந்த அமைப்புக்களை இடிக்கக் கூடாது என்றும் கூறி இந்துத்துவ அமைப்புக்கள் இந்தியாவின் சில பகுதிகளில் போராடி வருகின்றன.
    இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது ராமர் குறித்து மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
    சர்ச்சைக்கு வித்திட்ட கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு, இராமரால் கட்டிய பாலம் என்று பக்தர்களால் நம்பப்படும் பாறைத்திட்டுக்களை உடைக்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.இதற்கு மூன்று மாத கால அவகாசத்தையும் மத்திய அரசு கோரியிருந்தது.
    இதன் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறுமா என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.
    இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன.
    இம்முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காகவே முழு வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.
    இப் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை தனக்கு பெரிய ஏமாற்றத்தையோ, திருப்தியையோ அளிக்கவில்லை என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி கூறினார்
  • 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது :
    முதலாவது 20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இன்று தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி இருபது ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் கவுதம் கம்பீர் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய உமர் குல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • ராகுல் காந்திக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி : ராகுல் காந்திகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    படுகொலை செய்யப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்ற அமேதி தொகுதில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகுல் காந்தி
  • மன்னிப்பு கேட்டார் ஜப்பானியப் பிரதமர் : பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஷின்சோ ஆபே, தாம் இம்மாதத்தின் முற்பகுதியில் எதிர்பாராத ஒரு தருணத்தில் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட குழப்பங்களுக்கான அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்
  • கால நிலை மாற்றம் குறித்து சர்வதேசத் தலைவர்கள் கவலை : பாதிக்கும் சீதோஷ்ணநிலை மாற்றத்தை கையாளும் விதம் பற்றி, உலக நாட்டுத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று, ஐநா மன்றத்தின் தலைமை செயலர் பான்கிமூன் அவர்கள் கூறியிருக்கிறார்
  • விடுதலைப் புலிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் கிளாலி இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களில் 20 விடுதலைப் புலிகளும், ஒரு இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • இன்றைய (செப்டம்பர் 24 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews