August 31, 2007

அமெரிக்கப் பண்பலை வரிசையில் தமிழ் பாடல்கள்!

அமெரிக்க மண்ணில் வாழும் இந்தியர்கள் அதிவேக வாழ்க்கையில் இருந்தாலும் தமிழ் பாடல்களை அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்புக்கள் உள்ளதென்று நினைக்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நண்பர் திரு.ஸ்ரீ மற்றும் திரு.இராஜன் அவர்கள். இந்த நிகழ்ச்சி மாபெரும் இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றியது.
Powered by eSnips.com

ஞானி என்பவர் யார்?

ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ஒரு சாஸ்திர நூல். "மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும். முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும். அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும். இதன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும்" என்கின்றன ஆன்மீக நூல்கள்.

பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் இந்திய நண்பர்களே எச்சரிக்கை!

கறுப்பு பட்டியலில் 45 பஹ்ரைன் கம்பெனிகள் : ஊழியர்களை மோசமாக நடத்துவது, ஊதியம் வழங்காமை போன்ற மோசடியில் ஈடுபடும் 45 பஹ்ரைன் நிறுவனங்களை இந்திய தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. பஹ்ரைனில் உள்ள பல கட்டுமான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் பல நிறுவனங்கள் உள்ளூர் சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காமலும், அவர்களுக்கு மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்களை அளித்தும் அவர்களை மோசமாக நடத்துவதாக கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய தூதரகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் 45 பஹ்ரைன் கம்பெனிகளை இந்திய தூதரகம் அடையாளம் கண்டு அவற்றை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரி செய்யாதவரை, அந்நிறுவனங்கள் இந்தியப் பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்கான அனுமதியை இந்தியத் தூதரகம் அளிக்காது என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார். மேலும் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள 45 பஹ்ரைன் நிறுவனங்களின் உரிமையாளர்களோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
துபாய்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 30 ஆகஸ்டு 2007 ( 15:07 IST )
(மூலம் - வெப்துனியா)

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் சோனியா, இந்திரா நூயி

உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களில் சோனியா, இந்திரா நூயி
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்டு 2007 ( 15:42 IST )
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களின் பட்டியலில் சோனியா காந்திக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒன்று உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (தொடர்ந்து இரண்டாவதாண்டாக) முதலிடத்திலும், சீனாவின் துணை பிரதமர் வூ யி இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான காங்லோமெரேட் 3 வது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்க அமைச்சர் கண்டலிசா ரைஸ் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆறாவது இடமும், பிரபல பெப்சி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமெரிக்க இந்தியருமான இந்திரா நூயிக்கு 7 வது இடமும் கொடுத்துள்ளது அப்பத்திரிகை.

'அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி'

நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று மாலை உதயமானது. புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து சரத்குமாரும் அரசியல் களம் கண்டுள்ளார். தனது கட்சி இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் சரத்குமார். அதன்படி இன்று மாலை சென்னை வடபழனி பத்மாராம் கல்யாண மண்டபத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சரியாக இன்று (31-08-2007) மாலை 6.30 மணிக்கு தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தனது புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டியுள்ளார் சரத்குமார். கட்சியின் தலைவராக சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் - முருகன் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொதுச் செயலாளர் - கரு. நாகராஜன் துணைத் தலைவர் - எர்ணாவூர் நாராயணன். பொருளாளர் - செல்வராஜ். துணை பொதுச் செயலாளர் - சுந்தரேசன் கொள்கை பரப்புச் செயலாளர் - மருது அழகுராஜா. கட்சிப் பெயரை அறிவித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை அரசியல் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறோம். அதை ஏற்படுத்தக் கூடிய தகுதி படைத்தது எங்களது கட்சி மட்டும்தான். மற்ற கட்சிகளுக்கு அந்த அருகதை கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் தங்களது சுய லாபத்திற்காக தொடங்கப்பட்டவை. நாங்கள் அப்படி இல்லாமல், இன்றைய இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் அரசியலில் ஈடுபடுத்தி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காட்டிய வழியில்தான் நாங்கள் போகப் போகிறோம். அவர் கண்ட கனவையே நாங்களும் காணுகிறோம். எங்களது முக்கிய நோக்கம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அதே நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம்தான். எனவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் சரத்குமார்.

உயிரை பறிக்கும் "செல்போன்"


20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் "செல்போன் பயங்கரம்"

விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் 'ஸ்பிரிங்' போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு 'ரிங்டோன்' தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல்போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. காதில் 'ஹெட்போனை' வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் 'பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு அலையுது" என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது?சிகாகோவைச் சேர்ந்த 'மார்ட்டின் கூப்பர்' என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல 'மோட்டோரல்லா' கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்து 'முர்ரேஹில்' பகுதியில் உள்ள 'பெல்' லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை 'மோட்டோரல்லா' கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது 'நோக்கியா' நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.


வருகிற 2015-ம் ஆண்டு உலகின் 90 சதவீதம் பேரிடம் செல்போன் இருக்குமாம்.'அதிர்ச்சி' இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. ஒருவேளை இந்த செல்போனே உலகை அழிக்க காத்திருக்கும் சுனாமி எமனாக இருக்கலாம்.எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையையும் அது வரும் முன்பே கண்டுபிடித்து உலகுக்கு எச்சரிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும்.அந்த வகையில் செல்போன் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வேகமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம் நடத்திய ஆராய்ச்சியில் செல்போனின் அதீத பயன்பாட்டால் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்தது, எனினும் அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இது ஒரு தற்காலிக முடிவு என்று விட்டுவிட்டார்கள். செல்போன் என்பது சமீபத்தில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பதால் இதுபற்றிய உண்மைகளை அறிய கால அவகாசம் தேவைப்படும் என்று உலக விஞ்ஞானிகள் அறிவித்த பட்சத்தில் உலக சுகாதார மையமும் முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த விஷயத்தில் மூக்கை நுழைத்து 'ஆம்' என்று கூறியிருக்கிறது.கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செல்போனை உபயோகித்து வந்த 3 ஆயிரம் பேரை பரிசோதித்து பார்த்தபோது அவர்களில் 40 சதவீதம் பேருக்கு மூளையில் கேன்சர்கட்டிகள் உருவாகி உள்ளது. இவை 2 விதமான புதிய கேன்சர் நோயாக உள்ளன.பொதுவாக செல்போனில் இருந்து வெளிவரும் 'ரேடியேசன்' என்ற கதிர்வீச்சு மிகக் குறைந்த அளவுதான் என்றாலும் அது மனித உடலின் திசுக்களை ஓரளவு பாதிக்கத்தான் செய்கிறது.செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இத்தகைய ஆபத்து. காதையும் உட்காதையும் மூளையுடன் இணைக்கின்ற 'ஆக்யூஸ்டிக் நியூரோம்ஸ்' என்கிற நரம்பு பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறதாம். அதிக அளவு செல்போன் உபயோகிப்பவர்களுக்கு மூளைச் செயல்பாடுகள், தூக்கம், விழிப்புணர்வு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் உடல் திசுக்கள் முழு வளர்ச்சி அடையாத நிலையில் குழந்தைகளும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் கதிர்வீச்சுகள் இவர்களின் திசுக்களை மிக எளிதாகவே பாதித்துவிடும் என்ற நிலையில் இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நீண்டகாலம் செல்போனை பயன்படுத்தியவர்கள் ஆகிறார்கள். எனவே அதிக ஆபத்து இவர்களைச் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.இதுபற்றி அயிஸ் செல்சின், லாவரிசாலிஸ் என இரு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கிறார்கள்.இதுதவிர உளவியல் ரீதியான ஆராய்ச்சி முடிவு களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களில் 60 சதவீதம் பேருக்கு கோப குணமும், தலைவலியும், பெருகுவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை செல்போனால் கேன்சர் நோய் உறுதி செய்யப்பட்டால் 2015-ல் உலகில் 90 சதவீதமான மக்களின் கதி என்னவாகும். - 'இப்பவே கண்ணைக்கட்டுதே"


எச்சரிக்கை டிப்ஸ்: செல்போன் என்பது அடிப்படை தகவல் பரிமாற்றத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனை நம்மவர்கள் நீண்ட நேர அரட்டைக் கச்சேரிக்காக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பேசுவது காதலியாக இருந்தாலும் கூட ஒருவரிடம் 20 நிமிடங்களுக்கு அதிகமாக பேசாதீர்கள். நட்புகளை வளர்த்துக் கொண்டு அதிகம் பேரிடம் இடைவெளியின்றி பேசாதீர்கள். போதிய ஓய்விற்கு பிறகே அடுத்தவரிடம் பேச வேண்டும். ஒரே சமயத்தில் பல போன்களில் பேசாதீர்கள். வள, வள பேச்சுக்களை தவிருங்கள். இரவில் செல்போனுக்கும் ஓய்வு கொடுத்துவிடுங்கள்.

வெறிநாய்கள் ஜாக்கிரதை!

ஜோஸப் மெய்ஸ்டர் என்பவர் 1885 ஜூலை 4-ம் தேதி ஒரு வெறிநாய் கடியால் கடிப்பட்டார். இங்ஙனம் கடிப்பட்டால் 3 தினங்களில் சாவு நிச்சயம் எனக் கொள்ளலாம். மெய்ஸ்டான் தாய், விஞ்ஞானி லுயிஸ் பாஸ்டரை அணுகினார். அவர் அச்சமயம் வெறிநோய் பற்றி நாய்கள், முயல்கள் மீது பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஜூலை 6-ம் தேதி, அது வரை சோதனைச் செய்யப்படாத ஒரு புது தடுப்பூசி மருந்தை அளித்தார். மெய்ஸ்டர் உயிர் பிழைத்தார். அச்சம் ஊட்டும் வெறிநோய் வெற்றிக் கொள்ளப்பட்டது.
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய்களாலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி! கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது. முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர். நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன. மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV) ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV) திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன. கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை. நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும். உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று. காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரால் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும். அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும். எரிச்சல் உண்டாக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது. கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது. மருத்துவரை உடனே அனுகவும். முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.


நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை

கவிப்பேரரசு வைரமுத்துவிலிருந்து காமெடியரசு விவேக் வரை

விருமாண்டி நேர்முகம்

இன்றைய குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
அறத்துப்பால் : இனியவை கூறல்

முதலில் உனது பயத்திலிருந்து உன்னைச் சுதந்திரமாக்கு! பிறகு ஒவ்வொருவரும் சுதந்திரத்தைச் சுவாசிப்பார்கள்!

இந்தியப் பொருளாதரம் தொடர்ந்து வளர்ச்சி

  • இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் வளர்ந்து வருகிறது. அரசு கணக்கீடுகளின்படி கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஒன்பது சதவீதமாக இருக்கிறது.
    கடந்த இருபது ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வளர்ந்துள்ளது.
    இந்தியாவின் பொருளாதாரம் சரியாக 9.3 சதவீதம் வளர்ந்தாலும் அது அரசை கவலையில் ஆழ்த்தக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
    இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
    கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியா ஏழு சதவீதம் வளர்ந்து வருகிறது என்பதும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பத்தாண்டுகளுக்கு முன் மறைந்த டயானாவுக்கு மக்கள் அஞ்சலி:
    பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த வேல்ஸ் இளவரசி டயானா
    வை நினைவு கூறும் முகமாக இன்று மத்திய லண்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது
  • மத்திய கிழக்கின் காசா நிலப்பரப்பில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போரட்டங்கள், வன்முறையில் முடிந்திருக்கின்றன.
  • இராக்கின் ஆயுத குழுக்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் என்று, இராக் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

பின்னனிப் பாடகர் சங்கீதா - 1

பின்னனிப் பாடகர் சங்கீதா - 2

பின்னனிப் பாடகர் ஜெயதேவ் 1

பின்னனிப் பாடகர் ஜெயதேவ் - 2

குடும்பப் பின்னனியால் இல்லாமல் திறமையை மட்டுமே நம்பி வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடிகர்

August 30, 2007

இன்றைய குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து


அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடிவிடக் கூடியது. அதுபோலச் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"நம் கையிலுள்ள தீப்பொறி வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் பற்றப்போவது பிரபஞ்ச நெருப்பு. இந்தப்பொறி உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நீ தீப்பந்தத்தை ஏந்திப்பிடிக்கக் கற்றுக்கொள், மற்றதை அது முடித்துவைக்கும்"

தமிழோசை

  • காணமல்போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து தவிப்பு
    போர் மற்றும் பல்வேறு கரணங்களினால் காணாமல் போனவர்களை நினைவு கூறும் வகையில் சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இவ் வேளையில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களினால் இது வரை காணாமல் போனதாகக் கூறப்படும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை உறவினர்கள் நினைவு கூறுகின்றார்கள்
  • பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும், தற்போது நாடுகடந்து லண்டனில் வாழும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுக்கும் இடையில், அந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக, பெனாசிர் புட்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.
  • அணு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கருத்து வேறுபாடுகளை களைய குழு அமைக்க முடிவு : இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
  • இன்றைய (ஆகஸ்ட் 30 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நெஞ்சு பொறுக்குதில்லையே!

“அன்னையர் தினம்”

அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம் கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்துசென்றான்
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!
- நவநீ
கருவறை; தாய்மையின் அடையாளம்; கரு உருவாகி, மெல்ல... மெல்ல வளர ஆரம்பித்ததும், அப்பெண்ணின் தன்மையே மாறிவிடும். ஈருயிர், ஓர் உடலாக வாழ்வாள். தனக்காக இல்லாவிட்டாலும், கருவறையில் குடியிருக்கும் குழந்தைக்காக பார்த்து, பார்த்து சாப்பிடுவாள். பிடிக்காதென ஒதுக்கி வைத்த உணவு பொருட்களாக இருந்தாலும், "குழந்தை சத்து போடும்' என நினைத்து சாப்பிடுவாள். பத்து மாதங்கள் தவமிருந்து பெற்ற பின்பும்கூட, குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதற்காக, தனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், தாய் பாலாக்கி ஊட்டுவாள். ஒவ்வொரு தாயும், கடவுளுக்கு சமம்!
ஆனால், இன்றைய சமுதாயத்தில் தாய்மார்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது. பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று சொல்வதற்கேற்ப, முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. கோவை நகரில் அங்கொங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த முதியோர் இல்லங்கள், இன்று புற்றீசல் போல பல இடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோவை நகரில் மட்டும் 60 முதியோர் இல்லங்கள் துவக்கப்பட்டுள்ளன. பொத்தி, பொத்தி பாதுகாக்க வேண்டிய பெற்றோரை, இன்றைய இளைஞர்களில் சிலர், நெஞ்சிரக்கமின்றி தனியார் காப்பகங்களில் விட்டுவிட்டு, தங்களது பொறு ப்பை தட்டிக் கழிக்கின்றனர்.அவர்களும், உற்றார் உறவினர் இல்லாமல், பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ முடியாமல், கண்ணீரோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். "என்னோட பிள்ளை கலெக்டராகணும்; கமிஷனராகணும்; டாக்டராகணும்' என பலவிதமான கனவுகளோடு வியர்வை சிந்தித்து சம்பாதித்து ஒவ்வொரு காசையும், தனது குழந்தையின் கல்விக்காக கொட்டுகின்றனர் பெற்றோர். ஆனால், மெத்த படித்ததும் வெளிநாட்டு கனவில் மிதக்கின்றனர். வேலை கிடைத்ததும், பெற்றோர் ஒதுக்கித்தள்ள "துணிந்து' முடிவெடுத்து விடுகின்றனர்.

"வெளிநாட்டில் அதிகம் குளிர் இருக்கும்; உன்னோட உடம்பு தாங்காது; முதியோர் இல்லத்தில், கொஞ்சள் நாள் இருங்கள்; திரும்பி வந்து உங்களை கூட்டிச் செல்கிறேன்' இதுவே, பெற்றோருக்கு, அக்குழந்தைகள் சொல்லும் கடைசி வார்த்தைகள். அதன்பின், பாசத்துக்கு பதில், பணம் தான் வரும், பராமரிப்பு செலவுக்காக. முதியோர் இல்லங்களை பராமரித்து வருபவர்களிடம் விசாரித்தபோது, "பெற்ற குழந்தைகளை காட்டிலும், பேரன், பேத்திகளே, தாத்தா, பாட்டிகளை அதிகம் வெறுக்க துவங்குகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு முதியோர்களிடம் இருந்தது. இப்போது, இரண்டு வயதானதும், அருகிலுள்ள காப்பகத்தில் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால், தாத்தா, பாட்டிகளின் அருமை தெரியாமல், இக்குழந்தைகள் வளர்கின்றன.

"வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் கூறும் அறிவுரையால் எரிச்சல் அடைகின்றனர்; வயதான காலத்தில் அவர்கள் இருமுவது கூட சிறிய குழந்தைகளுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. தங்களது குழந்தைகளுக்காக, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது' என்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.
மாமியார் மருமகள் இடையே ஏற்படும் பிரச்னை, வயதாகும்போது வரும் உடல் நலக்குறைவு, பேரன், பேத்திகளால் ஓரம் கட்டப்படுவது என பல்வேறு காரணங்களால்,கோவையில் சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. முதியோர் உதவித்தொகையாக, மாதம் ரூ.400 கருணை தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இத்தொகை தனியார் காப்பகங்களில் வசிக்கும் முதியோருக்கு கிடைப்பதில்லை.

"ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குமுன், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்!

அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம்

காமராஜரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சி - 2

ஜாதி அரசியல் - 3

இந்தியத்தேர்தல் - 4

August 29, 2007


சாதனையாளர்கள் செய்வதை வித்தியாசமாகத்தான் செய்வார்கள்!!

இன்றைய குறள்

உடைமையுள் இன்மை விருந்தோமபல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

நீ உன்னைக் கேட்டுக்கொள்ளவேண்டியது, “நான் அறிவாளியா? தகுதியானவனா? என்னால் முடியுமா? என்பவை அல்ல. நான் ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாது? நான் ஏன் தகுதியானவனாக இருக்கக்கூடாது? என்னால் ஏன் முடியாது? என்பவைதான்.

தமிழோசை

  • இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் காலாரா நோய் காரணமாக நுறு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • பாக்தாத் தங்கும் விடுதியில் வைத்து எட்டு இரானியர்களை தவறுதலாக தாங்கள் கைது செய்ததை, இராக்கிலிருக்கும் அமெரிக்க கட்டளைத் தளபதிகள் ஒப்புக் கொண்டிருப்பதுடன், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
  • அப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளால், கடந்த ஆறு வாரங்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 19 தென் கொரியர்களில், 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • இராக்கிய ஷியாக் குழு தனது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது
  • இன்றைய (ஆகஸ்ட் 29 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 28, 2007

லட்சுமண ஐயர்

இடுங்கிய கண்களில் எப்போதும் வழியும் கருணை... வார்த்தைகளில் அன்பின் கதகதப்பு... தொண்ணூறு வயதிலும் துவளாத கம்பீரம், வாழ்க்கை முழுதும் தீராத தியாகம்... இதுதான் லட்சுமண ஐயர்! கோபிச்செட்டிப்பாளயத்தில் இறங்கி, ‘‘ஐயர் வீடு எங்கே இருக்கு?’’ என்று யாரைக்கேட்டாலும், அந்தப் பழைய பிரமாண்டமான வீட்டின் முன் அழைத்துப் போய் நிறுத்கிறார்கள். பழைமையின் அழகில் மிளிரும் அந்த விசாலமான இல்லத்தில், தன் கடைசி மகனுடன் வசித்து வருகிறார் லட்சுமண ஐயர். ‘‘நம்மகிட்டே எதுக்குங்க பேட்டியெல்லாம்... காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒண்ணுமேயில்ல தம்பி..!’’ அடக்கமாக அவர் சிரிப்பதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. ‘‘எங்க அப்பா காங்கிரஸ்காரரு. ‘சுதந்திரப் போராட்டத்துக்கு நிறைய இளஞர்கள் தேவப்படுது. நாட்டுக்காகப் பாடுபடுடா’ன்னு பத்து வயசிலேயே என்னை விடுதலைப் போர்ல கலந்துக்க அனுப்பினார். 1933-ம் வருஷம் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல்ல, ராஜாஜி கட்சியில நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனாக அப்பா! அப்ப, இந்தப் பகுதிகள்ல கூட்டங்களுக்கு வரும் தலவர்கள் நம்ம வீட்டுக்கும் வருவாக. நேரு, நேதாஜி, வினோபாஜி, ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், பெரியார், பக்தவசலம்னு எல்லா அரசியல் தலைவர்களும் இந்த வீட்டுக்கு வந்திருக்காக. அவங்ககூட அரசியல் கூட்டங்களுக்கு நானும் போவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துக்கிட்டதுக்காக என்னைக் கைது செய்து, வேலூர் சிறையில அடச்சாக. என் மனவி, மாமனார், மாமியார் எல்லாரும் ஜெயிலுக்குப் போயிட்டாக. வெளியில் வந்ததும், வார்தா போய்க் காந்தியடிகளைப் பார்த்தேன். ‘சுதந்திரத்துக்காகப் போராட நிறையப் ஆட்கள் இருக்காங்க. ஹரிஜனங்களுக்காக வேல செய்யத்தான் ஆள் இல்ல. நீங்க அவங்களுக்காகப் பாடுபடுங்க’ன்னு காந்திசொன்னார். அதன்படியே கோபிச்செட்டிப்பாளையம் திரும்பினதும், ஹரிஜன மக்களை அழைச்சுட்டுப் போய்ப் பொதுக்கிணற்றுல தண்ணீர் எடுத்தோம். மேல்சாதியச் சேர்ந்தவக எங்களத் தடுத்தாக. நான் நீதிமன்றம் போனேன். ரொம்ப நாள் வழக்கு நடந்தது.
கடைசியில் நான்தான் ஜெயித்தேன்’’ என்று கூறும் லட்சுமண ஐயர், இந்தியாவிலேயே முதன்முதலாககோபிச் செட்டிப்பாளயம் நகராட்சியில் மனிதர் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு எதிராகப் போராடி, அதை நீக்கியதற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார். தலித் மாணவர்களுக்காக இலவச ஐ.டி.ஐ. அநாதை இல்லம், மாணவர்கள் விடுதி ஆகியவற்றை இன்றக்கும் நடத்தி வருகிறார். வசதி இல்லாத, நல்லாப் படிக்கிற தலித் மாணவர்கள எங்க வீட்டு மாடியில் தங்கவெச்சுப் படிக்க வச்சேன். அந்த மூன்று பேரும் ஆசிரியர்களா ஆனாக. அப்புறம் ஹரிஜன மாணவர்களுக்குன்னு ஒரு ஹாஸ்டல் தொடங்கினேன். என் ஹாஸ்டல்ல படிச்ச பல பேர், பல்வேறு இடங்கள்ல இப்ப நல்ல பதவிகள்ல இருக்காக. தோட்டிகள எல்லாம் கூட்டிட்டு வந்து, ஊருக்குள்ள தனியா வீடுகள் கட்டிக்கொடுத்தேன். எங்களுக்கு, கோபியைச் சுற்றி மொத்தம் 650-ஏக்கர் நிலம் இருந்து. இந்தப் பக்கம் வைரவிழா மேல்நிலைப் பள்ளி, வேளாளர் ஹாஸ்டல், பழனியம்மாள் பள்ளி, டி.எஸ்.சாரதா வித்யாலயா, ஸ்ரீராமபுரம் ஹரிஜனக்காலனி, தோட்டிகள் ஹரிஜனக் காலனி, விவேகானந்தர் ஐ.டி.ஐ. எல்லாத்துக்கும் நான்தான் நிலம் கொடுத்தேன். கோபி டவுனில் மட்டுமே 40 ஏக்கர் நிலம் தர்மமாகக் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்லும் லட்சுமண ஐயருக்கு, இப்போ ஒரு சென்ட் நிலம் கூட சொந்தம் இல்லை. ‘‘பாதி தர்மமா கொடுத்தது. பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சு. இந்த வீடும் வங்கிக் கடன் பாக்கிக்காக ஏலத்தில் போயிடுச்சு. ஏலம் எடுத்தவுக என்னப் பத்திக் கேள்விப்பட்டு வீட்ட எனக்கே திருப்பிகொடுத்துட்டாக’’ என்று சிரிக்கும் லட்சுமண ஐயருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ‘‘பிள்ளைகளுக்குன்னு எதுவும் சேர்த்து வைக்காம, எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேனு வருத்தமா இல்லையா?’’ என்றால், ‘‘அவுகளுக்கு வேணும்னா, தானே முயற்சி பண்ணிசம்பாரிச்சிக்க வேண்டியதுதான்’’ என்று சிரிக்கிறார். ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் காந்தி கொடுத்த கடமைய நல்ல படியா செஞ்சுட்டோம்கிற திருப்தியும் சந்தோஷமும் இருக்கு’’ என்றவர், கம்பீரமான குரலில் உணர்ச்சிகரமாகப் பாடத்தொடங்கினார்...

‘‘தண்ணீர் விட்டோ
வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக்இ கண்ணீராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ!’’

இன்றைய குறள்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்
அறத்துப்பால் : விருந்தோம்பல்

“நாம் இயலாதவர்கள் என்பதால் நான் பயப்படவில்லை, நம்மால் எதுவும் இயலும் என்பதால்தான் பயப்படுகிறேன்”
- நெல்சன் மண்டேலா

குளவி கொட்டி பலர் மருத்துவமனையில் அனுமதி

  • இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்பிரசித்திபெற்ற புராதன சின்னங்களில் ஒன்றான சிகிரியா மலைச் சுவரோவியங்களைக் காணச்சென்ற உல்லாசப்பயணிகள்மீது அங்குள்ள குளவிக் கூட்டமொன்று நடத்திய தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
  • அனைவருக்கும் அறிவியல் : அல்சைமர் எனப்படும் மூளை அழுகல் நோய் தொடர்பில் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் சாதகமான சில முடிவுகளை தந்திருக்கின்றன.
  • மதச் சார்பற்ற நாடான துருக்கியின் அதிபராக, இஸ்லாமியப் பின்னணி கொண்ட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பதவியேற்றுள்ளார்.
  • அணு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசுக்கு காலக் கெடு விதிக்கப்போவதில்லை : சி பி ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் துவங்கியது. இந்தியா- அமெரி்ககா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  • ஆப்கனில் கஞ்சா பயிரிடுவது அதிகரிப்பு : ஹெராயின் போதைப் பொருட்களை தயாரிக்க உதவும் கஞ்சா செடிகள் பயிரிடப்படும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக, ஆப்கானிஸ்தானின் போதைப் பொருள் தயாரிப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் வருடாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய (ஆகஸ்ட் 28 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 27, 2007

கம்யூனிஸ்டுகளே திருந்துங்கள்

அமெரிக்காதான் உலகுக்கு எத்தனை நன்மைகள் செய்தது. வியட்நாமுக்கு படைகளை அனுப்பி நன்மைகள் செய்தது ஆப்கானிஸ்தானை காப்பாத்தியது. இராக்குக்கு படைகளை அது அனுப்பவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் என்பதே யாருக்குமே சொல்ல முடியாது! இந்த கம்யூனிஸ்டுகள் இதை எல்லாம் பார்த்து கொஞ்சமாவது அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்தனும். கம்யூனிஸ்டுகளே திருந்துங்கள்! அமெரிக்காவை பற்றிய வீடியோவை பாருங்கள்

இன்றைய குறள்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"எந்தப் பணியைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும், குறிப்பிட்ட காலம் அல்லது நேரத்திற்குள் குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதில் அக்கறை செலுத்தவேண்டும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்கள் துறையிலும், பணியிலும் தோல்வியைச் சந்திக்க நேரிடும், எந்த நிறுவனமானாலும் வாடிக்கையாளர் திருப்திதான் முக்கியமாக இருக்கவேண்டும்"

இப்படிச் சொன்னவர் எந்த நிர்வாகத் துறை வல்லுநரும் அல்ல. மும்பை டப்பாவாலா கூட்டமைப்பின் தலைவர் ரகுநாத் மெட்கே

எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி

  • ரஷியாவில் செய்தியாளர் ஆனா பொலிட்கொவ்ஸ்காயா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னாள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார்கள் என தாம் எண்ணுவதாக ரஷியாவின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
  • இலங்கையின் வடக்கே யாழ் நகரில் படைத் தளத்திற்கு அருகே வசிக்கும் மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்பத்தினரின் புகைப்படங்களை வழங்குமாறும் உத்தரவு.
  • அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஆல்பர்டோ கொன்சாலெஸ் இராஜிநாமா செய்துள்ளார். அவர் அதிபர் புஷ் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவராக இருப்பவர்.
  • வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஷசீனாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
  • இராக்கியப் பிரதமர் நூரி அல்மலிக்கி அவர்களை விமர்சித்து, அவர் பதவி விலக வேண்டும் எனத் தாம் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக இராக்கிய அரசிடம் தாம் மன்னிப்பு கோரவுள்ளதாக பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் கௌஷ்னே தெரிவித்துள்ளார்.
  • பசபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 27 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது - தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன். இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இலங்கைக்கு இந்தியா ராடர் கருவிகளை கொடுத்துள்ளது. அது தமிழர்களை தாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு இந்தியா வழங்கக்கூடாது. இந்த விஷயத்தில் பழ. நெடுமாறனின் போராட்டம் நியாயமானதுதான்.

பொறுத்தது போதும்! பொங்கி எழுவோம்! பட்டினி கிடக்கும் நம் சகோதரர்களுக்கு உணவு, மருந்து கொண்டு செல்வோம்! பழ. நெடுமாறன்

யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு வாழும் ஐந்து இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க சிங்கள அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் 'ஏ9' நெடுஞ்சாலையை அடைத்தது. உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் இன்றியமையாத பொருட்கள் எதுவும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானார்கள். பொருட்களின் விலை பலநூறு மடங்கு உயர்ந்தது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். நோயாளிகளும் முதியோர்களும் குழந்தைகளும் போதுமான மருந்துகள் இல்லாமல் சாவைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். தங்கள் கண் எதிரிலேயே தங்களால் நேசிக்கப்படுபவர்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்து மக்கள் கண்ணீர் சிந்தினர். இந்த செய்திகள் எல்லாம் அன்றாடம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தபோது தமிழக மக்களைச் சோகம் கவ்விக் கொண்டது. துயருறும் தனது சகோதர மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் அளிக்க அவர்கள் துடியாகத் துடித்தனர். ஆனாலும் இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள கடல் அதைத் தடுத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காலஞ்சென்ற எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் புயல் வீசி மக்களுக்கும் சொத்துகளுக்கும் பெரும் சேதம் நேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டவுடன் இந்திய அரசின் அனுமதியை உடனடியாகப் பெற்று இரண்டு கப்பல்கள் நிறைய உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்து உற்றுழி உதவினார் அவர்.


அதைப் போல இப்போதும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் யாழ் மக்களின் பட்டினியைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பாகவே நின்று விட்டது. சிங்கள இனவெறி அரசின் மனித நேயத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. ஆனால் அண்டையில் இருக்கக் கூடிய இந்திய அரசு இதற்குக் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. தமிழக, இந்திய அரசுகளின் இந்தப் பாராமுகப் போக்கினைப் பார்த்து வேதனை அடைந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கிற அமைப்புகள் ஒன்றுகூடி யாழ் மக்களின் துயரைத் துடைக்க முடிவு செய்தன. கடந்த 9.12.06 அன்று யாழ்ப்பாண மக்களுக்கு உணவு, மருந்துகள் திரட்டி அனுப்புவது எனத் தீர்மானித்தனர். அதற்கிணங்க தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாகச் சென்று இரு கையேந்தி மக்களிடம் பொருட்களைப் பெற்றனர். ஏழையெளிய மக்கள் கூட தாமாகவே முன்வந்து தங்கள் சக்திக்கு மீறிய அளவிற்கு பொருட்களை அள்ளித் தந்தனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதைப்போல சாதாரண மக்கள் முன்வந்து கொடுத்த இந்தப் பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாகும். 28.012.07 அன்று இந்தப் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு உதவும்படி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். 9.2.07 அன்று இதற்கான அனுமதியை வழங்கும்படி இந்திய அரசை வேண்டிக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனாலும் மார்ச் மாதம் வரை எவ்வித பதிலும் இல்லை. அதற்குப்பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசு ஆகியோர் பிரதமரிடம் நேரிலும் கடிதம் மூலமும் இப்பிரச்சனையை தெரியப் படுத்தினார்கள். அவரும் அதனைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனாலும் மே மாதம் வரை இந்திய அரசின் அனுமதிக் கடிதம் வரவில்லை. அதற்குப் பிறகு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து பல்லாயிரக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் தொலைநகலிச் செய்திகளும் அனுப்பப்பட்டன. இதற்குப்பின் 5.6.2007 அன்று சென்னையில் அத்தனை அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் உண்ணாநோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். 13.06.07 அன்று ஜெனிவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்குச் சென்று அங்கு தென்ஆசிய பகுதிக்குப் பொறுப்பாளராக இருக்கும் உடோ வாகன் மெய்க் என்பவரை நேரில் சந்தித்து இது குறித்து நான் முறையிட்ட போது அவர் அளவுகடந்த வியப்பு அடைந்தார். செஞ்சிலுவைச் சங்கம் பொதுவான மனித நேய அமைப்பாகும். உலக நாடுகளின் அரசுகள் எதுவாக இருந்தாலும் அதனுடைய தொண்டுகளுக்கு துணை நின்றே வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு அனுமதி தரத் தயங்குவதின் பின்னணி என்ன என்பது குறித்து இந்திய அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார்.


கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நாம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போயின. எளியவர்களான நமது தோழர்கள் வீதிவீதியாக - வீடுவீடாகச் சென்று குருவிகள் சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் பசியால் வாடும் சகோதர மக்களுக்கு அனுப்ப முடியாமல் வீணாகி வருவதைக் கண்டு மனம் நொந்தார்கள். வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்ட அரிசி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போகத் தொடங்கிற்று. மருந்துகள் அதன் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் தேதிகளைக் கடந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் நமது தோழர்களின் உள்ளங்களையும் அள்ளிக் கொடுத்த பொது மக்களின் உள்ளங்களையும் எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு பிறந்தது. கடந்த 04.08.07 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் பேசினார்கள்.


செப்டம்பர் 7ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் நோக்கியும் திருச்சியிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நோக்கியும் இரு அணிகளாகச் சென்று செப்டம்பர் 12ஆம் தேதியன்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்ட முடிவினை நாம் மேற்கொள்வதற்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பாகும். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்தப் பொருட்களை அனுப்புவதற்கு நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிட்ட நிலையில் நாமே அந்தப் பொருட்களை படகில் ஏற்றிக் கொண்டு செல்வது என்பது சட்ட விரோதமாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் கடமை தவறியதாகாது. நமது சகோதர மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த கடமையை நாம் செய்ய முற்படும்போது இந்திய கடற்படை நம்மைத் தடுக்கலாம். சிங்கள கடற்படை நம்மை சுடலாம். எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் நமது கடமையை நாம் துணிந்து செய்வோம். செப்டம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினம், இராமேசுவரம் கரைகளில் கடல் அலைகளோடு மக்கள் அலை போட்டியிடட்டும். கூடுவோம்! உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு செல்வோம்!! பட்டினியால் துடிக்கும் தமிழர்களுக்கு அளிப்போம்!! வரலாற்றுக் கடமையாற்றத் தமிழர்களே திரண்டு வருக!!

August 26, 2007

மக்கள் பார்வைக்கு வந்த நடிகர் சிவகுமாரின் கைவண்ணங்கள்!

ஒரு கலைஞன், உருவாகி புகழ் பெற்ற பின்னர் தனது ஆரம்பகாலப் படைப்புகளைத் திருப்பிப் பார்த்தால், அதிலும் ஒரு வியப்பு இருக்கும். அந்த படைப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பது அதை விட அதிசயமானது தான். திரைப்படத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சிவகுமார், தற்போது சின்னத்திரைகளில் உலா வருகிறார். சிவகுமார் ஒரு நடிகராக மட்டுமல்ல, ஓவியராகவும் இருந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இளம் வயதில் அவர் வரைந்த ஓவியங்கள் (25 முதல் 30 ஆண்டுகளுக்கு முந்தியவை) கோவையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவற்றில் சில ஓவியங்கள் வித்தியாசமானவை. வியப்பானவை. இந்த ஓவியங்களை சிவகுமாரே விளக்கிச் சொன்னபோது, அதில் உள்ள உள் அர்த்தம் வியப்புக்குரியதாக இருந்தது. அழும் குழந்தையின் முகக் கோணல்கள், கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர்த் துளி, சளிமூக்கு எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ள ஓவியம் தான் அழும் குழந்தையின் ஓவியம். கண நேரத்தில் மாறிப் போகும் குழந்தையின் உதடுகள் மற்றும் கண்ணீர்த் துளிகளை வரைவது எளிதானதல்ல. நான் வரைந்துள்ள ஓவியங்களில் கற்பனை எதுவும் இல்லை. எல்லாமே யதார்த்தமானவை. இங்கு இடம் பெற்றுள்ள அழும் குழந்தையின் ஓவியம் கூட கற்பனையில் இல்லை. அழும் சிறுவனை நேரில் கண்டு வரைந்தவையே. இதே போன்று, நீளமில்லாத சிறு சிறு கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஓவியம் தான் காந்தியின் படம். மகாத்மா காந்தி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது அவரது உருவம் எப்படி இருக்கும் என்பதையும், அவர் கூர்ந்து கவனித்திருப்பதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் பதிவு தான் இந்த பென்சில் ஒவியம். ஒரு உருவத்தை உருவாக்கத் தொடர்ச்சியான கோடு போட வேண்டும். ஆனால் இந்த ஓவியத்தில் அப்படி இல்லை. வெறும் கோடுகளே அவரது உருவத்தைச் சொல்லும். ஆங்காங்கே முகத் தோலில் ஏற்பட்டுள்ள மடிப்பு, மூக்குக் கண்ணாடியின் நிழல், மற்றும் புடைக்கும் நரம்புகள் கூட இந்த ஓவியத்தில் தெரியும். ஓவியத்தை நேரில் காண்போர் இதை உணரமுடியும். மேலும், சிறிது தூரத்தில் இருந்து பார்த்தால், படத்தின் தத்ரூபம் தெரியும். இதே போன்ற ஓவியம் தான் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணணின் ஓவியம். அவரது சிரிப்பழகை விவரிக்கிறது இந்த ஓவியம். சிரிக்கும்போது முகத்தில் ஏற்படும் வளைவு நெளிவுகள் அனைத்தும் கோடுகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளது இப்படத்தின் சிறப்பு. முகவமைப்பை வைத்தே அவர் சைவமா அசைவமா என்பதைக் கூட முடிவு செய்து விடலாம் என்றார் சிவகுமார்.
தனது ஓவியங்களை பெரும் கண்காட்சிகளுக்கு அனுப்பிய போது, இந்த ஓவியங்கள் பழங்காலத்து "இல்லஸ்ட்ரேட்டட்" வகையைச் சேர்ந்தவை என புறக்கணிக்கப்பட்டு விட்டன. நவீன ஓவியங்கள்தான் போட்டிக்குத் தகுந்தவை என வருத்தப்படுகிறார் சிவகுமார். சிவகுமார் ஒரு நடிகனாக மட்டுமல்ல, தனது சுயசரிதையை எழுதியதன் மூலம் எழுத்தாளராக, ஒவியராக உருவாகி ஒரு முழுமையான கலைஞனாகத் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய குறள்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்

அறத்துப்பால் : விருந்தோம்பல்

மக்களுக்காக சிந்தித்த மாமேதை மார்க்ஸ் தத்துவம்

"இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவஞானமாகும்"

தமிழோசை

  • ஹைதராபாத் குண்டுத்தாக்குதலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் கண்டனம் : இந்தியாவின் ஆந்திரமாநிலத் தலைநகர் ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற குண்டுத் தாக்குதலை இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கண்டித்துள்ளார்.
  • கிழக்கிலங்கை விஜயம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரியின் செவ்வி : இலங்கையில், தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும், வேறு சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் குழுவாக இணைந்து சமீபத்தில் இலங்கையின் கிழக்குப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
  • உதைப்படும் நேர்மை - பாகம் மூன்று : உலக அளவில் அதிகப்படியான மக்களால் பார்த்து கேட்டு ரசிக்கப்படும் விளையாட்டு கால்பந்து. இந்த கால்பந்து விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல நாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது கால்பந்து ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 26 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 25, 2007

சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? "சோ" பதில்


ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஒன்று. (எங்கோ படித்தது)

சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி. நேற்றைய எதிரி... ஜெயா இன்றைய எதிரி... சன் நாளைய எதிரி... மக்கள் டி.வி-யா?
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட இவரது அரசியல் ஆரூடங்கள் ஆதர்சம்! மனதில் பட்டதைச் சட்டென்று போட்டு உடைக்கிற மனிதர் சோ..! தற்போதைய அரசியல் களம் பற்றி சுடச் சுட பேச ஆரம்பித்தார்.
‘‘தி.மு.க-வின் இன்றைய...?’’
‘‘களேபரம்! அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர முன்வராமல், அதை மறுப்பதன் மூலமே அரசாங்கத்தை நடத்திச் சென்றுகொண்டு இருக்கிறார்கள். விலைவாசி உயர்வா? ‘உயரவில்லை!’, மணல் கொள்ளையா? ‘கொள்ளை அடிக்கப்படவில்லை!’, தனியார் கல்லூரிகளில் பகல் கொள்ளையா? ‘பகலுமில்லை, கொள்ளையுமில்லை. தடுக்க எங்களிடம் அதிகாரமுமில்லை!’ இப்படி எல்லாவற்றையும் மறுப்பதே இந்த அரசாங்கத்தின் வாடிக்கையாகிவிட்டது! துணைநகரம், விமான நிலையவிரிவாக்கம், ஹெல்மெட் சட்டம், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னை என எல்லா விஷயங்களிலும் தெளிவில்லாத ஒரு குழப்பமே தெரிகிறது. தவிர, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கிரிமினல்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு! தென்காசிக் கொலைகள், சிவகங்கை ரிமோட் வெடிகுண்டு என பக்கம் பக்கமாக ரத்தச் செய்திகள். இந்த ஆட்சியில் மட்டும்தான் இது நடக்குதுன்னு சொல்லலை. ஆனா, இந்த ஆட்சியில் வன்முறையின் தாக்கம் அதிகமா இருக்கு என்கிறேன்!’’
‘‘சாத்தான்குளத்தில் டைட்டானியம் ஆலை அவசியமா?’’
‘‘என்னைப் பொறுத்தவரையில் டைட்டானியம் தொழிற்சாலை அமைவதில் தவறில்லை. தொழிற்சாலைகளும் பெருகினால்தான், ஒரு நாடு உண்மையிலேயே முன்னேறியதாக அர்த்தம். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும்போது, விவசாய நிலங்களுக்குச் சற்றே பாதிப்பு ஏற்படுவது இயற்கைதான். ஆனால், டைட்டானியம் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படும்போது நிலத்துக்கு உண்டான உண்மையான மதிப்பை நில உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். டைட்டானியம் விலையுயர்ந்த தாது. டாடா நல்ல லாபகரமான நிலையில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனம். எனவே, ஒரு துண்டு நிலமானாலும் அதற்கு எந்தளவுக்கு அதிகபட்ச விலை கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு கொடுத்து வாங்குவதுதான் முறை. இதனைச் சாத்தியப்படுத்த அரசாங்கம்தான் முனைந்து, முன்நின்று செயல்பட வேண்டும்! அப்படிச் செய்தால் டைட்டானியம் ஆலை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மற்றபடி யாரோ ஒரு தனியார் தொழில் அதிபரை முடக்கவே டாடாவை ஊக்குவிக்கிறார்கள் என்பதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!’’
‘‘அரசாங்கமே கேபிள் டி.வி-யைத் தொடங்குவதை நீங்கள் வரவேற்கிறீர்களா..?’’
‘‘ஜெயலலிதா ஆட்சியின்போது மாறன் குடும்பத்தாரின் சுமங்கலி கேபிள் விஷன், தமிழகத்தில் அதிரடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருந்தது. போட்டிக்கு இருந்த மற்ற நிறுவனங்களை மிரட்டி உருட்டி தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வந்தார்கள். விஜய் டி.வி-யில் செய்தி வாசிக்க முடியாமல், ராஜ் டி.வி புது சேனல்களை ஆரம்பிக்க அனுமதி பெற முடியாமல் பல தடங்கல்கள் உண்டாக்கப் பட்டன. அப்போதே நானும் சிலரும் ‘அரசாங்கமே கேபிள் டி.வி. நடத்தலாம்’ என்று குரல் கொடுத்தோம். அதை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்களோ... மொத்தமா எல்லா தனியார் கேபிள் சேனல்களையும் அரசுடமையாக்க சட்டம் கொண்டு வந்தாங்க ஜெயலலிதா. அதை இதே கருணாநிதி எதிர்த்தார். ஆனால், இப்போது..? ஜெயலலிதா எல்லா சேனல்களையும் அரசாங்க கன்ட்ரோல்-ல கொண்டுவரப் பார்த்தாங்க. ஆனால், இப்போதைய அரசாங்கம் கொண்டுவரப் போறதா சொல்ற ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ என்பது அப்படி அல்ல. மற்ற நெட்வொர்க்குகளுடன் இதுவும் நடக்கும். ஆனால் இது, இன்னொரு சுமங்கலி கேபிள் விஷன் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு நெருக்கமா இருந்தவங்களே மத்தவங்களை மிரட்டமுடியும் என்கிறபோது, அரசாங்கமே கேபிள் நடத்தினால் இன்னும் அதிகமாகவே அது நடக்க வாய்ப்பு இருக்கு! ‘நேற்றைய எதிரி’யாச்சேன்னு ஜெயா டி.வி-க்குக் குடைச்சல் கொடுப்பது, ‘இன்றைய எதிரி’ன்னு சன் டி.வி. ஒளிபரப்பைக் கெடுப்பது, ‘நாளைய எதிரி’ன்னு மக்கள் தொலைக்காட்சிக்கு தொல்லை கொடுக்குறதுனு இந்த ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ செயல்படுகிற ஆபத்து இருக்கு. இந்தக் குறைகள், விரோத மனப்பான்மைகள் எதுவும் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களையும் அரவணைத்து, குறைவான கட்டணத்துடன் அரசின் கேபிள் கார்ப்பரேஷன் செயல்பட்டால் அதை வரவேற்கலாம்!’’
‘‘புது எம்.பி. கனிமொழியின் செயல்பாடுகள் எப்படி?’’
‘‘கருணாநிதி அவர் குடும்பத்துல இன்னும் யாரை விட்டுவைக்கப் போறார்னு தெரியலை. ஸ்டாலினுக்கு கோட்டை, அழகிரிக்கு தென் தமிழ்நாடு, கனிமொழிக்கு டெல்லின்னு ஏதோ ஒரு பேரரசர் தன் வாரிசுகளுக்கு சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொடுக்குற மாதிரி பிரிச்சுக் கொடுத்துட்டு வர்றார். கொஞ்ச காலத்துக்கு முன், கனிமொழியைப் பற்றி விமர்சனம் கிளம்பியதற்கு ‘அவர் அரசியலிலேயே இல்லையே! எதற்கு அவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்?’னு கேள்வி கேட்டார். அது நடந்த ரெண்டாவது வாரமே கனிமொழி எம்.பி-னு அறிவிப்பு வந்தது! ‘அரசியல் அவங்களுக்கு என்ன புதுசா? ரொம்ப நாளா பழக்கமான துறைதானே? அதனால் எம்.பி. ஆக்கப்பட்டுள்ளார்’னு கதையை மாத்தினார். தி.மு.க. தலைவர் பதவியை எந்தளவுக்கு துஷ்பிரயோகம் பண்ண முடியுமோ, அந்தளவுக்குப் பண்ணிட்டு இருக்கார் கருணாநிதி. வேறென்ன சொல்ல?’’
‘‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘தயாநிதி மாறன், அன்புமணி, கனிமொழி போல அரசியலில் திணிக்கப்பட்டவர் அல்ல ஸ்டாலின். அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கி முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன! எமர்ஜென்சி காலங்களில் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர், எம்.எல்.ஏ., மேயர் எனப் படிப்படியாகத்தான் அவர் முன்னேறுகிறார். கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும், ஒரு கட்சியினால் தங்கள் ஆட்சியின் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உள்ள வழி முறைகளின்படியே அவர் தயாராகி வருவதால், அவர் அந்தப் பதவிக்கு வந்தாலும் குற்றம் காண முடியாது’’.
‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’
‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திராகாந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாம் நடத்திய சோதனைகளே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’
‘‘கலைஞர் டி.வி. குறித்தான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?’’
‘‘அந்தப் பெயரே தப்பாகத் தோன்றுகிறது எனக்கு! டி.வி. தொடங்கப்படுவதற்கு முன்னரே அதன்மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது போல இருக்கிறது. தமிழ் சேட்டிலைட் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் சன் டி.வி-தான். அதிகமான எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், பெரிய சினிமா லைப்ரரி, பக்கா புரொஃபஷனலான டீம்னு நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. அதோட போட்டி போடணும்னா, தெளிவான திட்டங்களுடன் தயாராகணும்’’.
‘‘டாக்டர் ராமதாஸ் செய்கிற எதிர்ப்பு அரசியல் பற்றி..?’’
‘‘டெல்லியில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான சர்ச்சைகளில் அன்புமணி சிக்கிக்கிட்டு தவிச்சப்ப, ராமதாஸுக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ தி.மு.க. எதுவும் செய்ய முன் வரவில்லை. அப்போ தன்னைக் கைவிட்டுட்டாங்க என்கிற பெரிய வருத்தத்தில்தான் இதெல்லாம் ஆரம்பிச்சது. இன்னொரு முக்கியமான விஷயம்... விஜயகாந்த்தின் வளர்ச்சி! அரசாங்கத்தை எதிர்ப்பதால்தான் விஜயகாந்த்துக்கு வாக்குகள் விழுது, மக்கள் கிட்டேயும் ஆதரவு பெருகுதுன்னு ராமதாஸ் நினைக்கிறார். இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் அரசாங்கத்துக்கு ஆதரவா செயல்பட்டா, தங்களுடைய வாக்குகளில் கணிசமான அளவை விஜயகாந்த் பிடிச்சுக்குவாரோன்னு பயம். அதனாலதான் இப்படி தினமும் அரசுக்கு எதிரா அறிக்கை மேல அறிக்கை விட்டுட்டு இருக்காரு. மூணாவதா, கலைஞரேகூட அடுத்த தேர்தல்ல தன்னை எப்படி நடத்து வார்ங்கிற சந்தேகமும் ராமதாஸுக்கு வந்திருக்கு. இதெல்லாமேதான் காரணம்!’’
‘‘எதிர்க்கட்சித் தலைவராக வெறும் அறிக்கைகள் மூலமே அரசியல் செய்கிறாரே ஜெயலலிதா... சட்டசபைக்குக்கூட வருவது இல்லையே..?’’
‘‘அ.தி.மு.க-வும் ஆர்ப்பாட்டம், போராட்டம்னு நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதெல்லாம் போதாது. ஜெயலலிதா சட்டசபைக்குத் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டபோது, தன்னந்தனியாக ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று பேசியது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அப்போது கிடைத்த வரவேற்பை அவர் தக்கவெச்சிருக்கணும்!’’
‘‘சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். இந்த அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘கழக இமேஜ் ரொம்ப நன்றாக இருக்கிறதா என்ன..! மெயின் இமேஜே சரியில்லாம இருக்கும்போது இதைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு..?’’ -
சூடாகப் பேசி முடித்து, புன்சிரிப் போடு விடை கொடுக்கிறார் சோ!

ஓணம் நல்வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்! இலைபோட்டு சாப்பிடுவதை மறந்து நெடுநாட்களாகி விட்டாலும், (சாப்பிட வழியில்லை என்பது வேறு விசயம்!) இந்த படத்தை பார்த்தாவது ஆறுதல் அடைந்துகொள்வோம். என்னைப்போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான நண்பர்கள் குடும்பத்தோடு திரும்பவும் இந்தியா வந்து இலைபோட்டு, அந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும், வெறியோடும், கனவோடும் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களனைவருக்கும் இந்தப் படத்தின் மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

இன்றைய குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

அறத்துப்பால் : விருந்தோம்பல்

"ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று, அனுஷ்டானத்திற்கு ஏற்ற அளவு யோகத்தின் பயன் உண்டு"
- சுவாமி சித்பவானந்தர்

சல்மான்கான் சிறையில் : தமிழோசை

  • நடிகர் சல்மான்கான் இந்தியாவில் அரிய வகை மான் ஒன்றை கொன்றதற்காக தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் முறையீடு செய்தார். ஆனால் இந்த முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சல்மான் கான் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உரிய விடுப்புகளை பெறாமல், பணிக்கு வராமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • சீனாவில் பெண் கருக்கலைப்பு தொடர்பில் புதிய சட்டம்
  • சுமார் 80 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள கிரேக்கத்துக்கு ஐரோப்பிய நாடுகள் விரைந்து உதவிகளை அனுப்பிக் கொண்டுள்ளன.
  • மேலும் இன்றைய (ஆகஸ்ட் 25 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஃபாக்ஸ் மூவி டோன் செய்திக்காக "மகாத்மா காந்தி" அவர்களின் நேர்முகம்

August 24, 2007

இப்படியும் சிலர்!!

சீரழிக்கும் சீரியல்கள் : மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை

தொலைக்காட்சிக்கு எஜமான் ஒவ்வொரு குடும்பத்தலைவியும்தான்! குடும்பத்தலைவியே கொண்டவனை இழந்தவளைப்போல மெகாசீரியலுக்காகக் குமுறிக் குமுறி அழும்போது எப்படி எஜமானியாக இருக்கமுடியும். அமெரிக்காவில் கேபிள் தொலைக்காட்சிகளின் வரும் கண்ட கருமாந்தரத்தையும் குழந்தைகள் பார்க்கக் கூடாதென்று சட்டமே வைத்துள்ளார்கள். அப்படிக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்றால் குழந்தைகள் இல்லாதபோது அதை ரிமோட் மூலமாகமாவே தேர்வுசெய்து தனியாகப் பணமோ, க்ரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தித்தான் பார்க்கமுடியும். ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனி அறையே ஒதுக்கித் தரவேண்டும். இதற்கெல்லாம் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக்கூடாதென்பதற்காகவே. சில தவிர்க்கமுடியாத காட்சிகள் வந்தால், அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே, குழந்தைகள் பார்க்கவேண்டாம், பெற்றோர் கவனிப்பு அவசியம் என்று முதலில் தெரிவித்துவிட்டுத்தான் ஒளிபரப்புகிறார்கள். இது கிட்டத்தட்ட தணிக்கைக் குழுவைவிட சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
(மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை). ஆகமொத்தம் எவற்றையெல்லாம் குழந்தைகள் பார்க்கக் கூடாதோ அவற்றை நம் தாய்மார்கள் கட்டுப்படுத்த முடியாது. புரட்சிப்பெண்களாயிற்றே!
எனது குறைந்த பட்ச வேண்டுகோள்!
இந்தச் சிறிய தீப்பொறியை, புரட்சியை நமது தமிழ் நண்பர்கள், இணையம் உபயோகிக்கும் நண்பர்கள், குழுமங்களில் உரையாடும் நண்பர்களின் குடும்பங்களிலிருந்து தொடங்குவோம். சிறுதுளி பெருவெள்ளம், நாம் இன்று தொடங்கினால் குறைந்த பட்சம் நம் பேரன், பேத்திகளுக்காவது உபயோகமாக இருக்குமல்லவா? இன்றே தொடங்குவோமா? இதுபற்றிய ஒரு கட்டுரை "குமுதம்" இதழில் வந்ததை நான் உங்களுக்கு இங்கே தருகிறேன்.
சீரழிக்கும் சீரியல்கள்

ஒரு பக்கம் ‘குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம்’ என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே’ என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி?
தரணியின் சொந்த சித்தப்பாவையே திருமணம் செய்து கொள்கிறாள். சரி, அத்தோடு இவர்கள் ‘புரட்சி’ முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. தரணியிடம் பூஜா சொல்வது... ‘‘இப்பவும் எனக்கு குழந்தை பிறந்தால் அது உன் மூலமாகத்தான் பிறக்கணும்’’ எப்படியிருக்கு ‘கல்கி’ தொடரின் மூல முடிச்சு? ‘கணவருக்காக’ சீரியலில் இன்னும் விபரீதம்... இன்னும் அபத்தம்... உயிருக்கு உயிரான இரண்டு தோழிகள். நட்புக்காக செய்யும் எத்தனையோ வித தியாகங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒருத்தியின் கணவரை இன்னொருத்தி திருமணம் செய்து கொண்டு தோழிக்கே துரோகம் செய்ய நினைக்கிறாள்.அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. நம் டி.வி. சீரியல்களின் கதாசிரியர்கள் பேப்பரை எடுத்து இரண்டு என்ற போட்டு ஆரம்பிப்பது பிள்ளை சுழி என்று நீங்கள் நினைக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை அதற்கு அர்த்தம். இரண்டு பெண்டாட்டி சப்ஜெக்ட். எந்த சீரியலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம், சூழ்நிலை என்று புருடா விட்டு, இரண்டு பெண்களை நாயகனுடன் சேர்த்து, கூடவே கொடுமைக்கார அத்தையையும் கொண்டு வந்துவிட்டால் வேலை முடிந்தது! ஒரு மகாமகத்திற்கு இழுக்கலாம். ஒரு கட்டத்தில் கதாசிரியருக்கே எங்கே ஆரம்பித்தோம் என்று மறந்துபோகும்வரை!
மனைவி சீரியலில் அரசு என்கிற அரசியல்வாதி ஒரு பெண்ணைக் காதலித்து, ஏமாற்றி அவள் தற்கொலை செய்து கொண்டதும், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அந்தப் பெண் தன்னம்பிக்கை உள்ளவளாம். போராடுகிற குணமுள்ளவளாம். ‘நீ போடா டுபாக்கூர்’ என்று வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள். அவளையும் விடாமல் தொடர்ந்து டார்ச்சர் தருகிறான் அரசு. அப்பவும் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். நடிகை அரசை சைக்கோதனமாக காதலிக்க, இவளை வச்சு பணம் சம்பாதிக்க முடியாது என்கிற ஆதங்கத்தில் அம்மாக்காரியோ இவர்களை பிரிக்க நினைக்கிறாள். ‘அரசு ஆம்பிளையே இல்லை’ என்று அவள் புது கரடிவிட, ‘என் முதல் மனைவிக்கு பிறந்தது என் குழந்தை’ என்று அரசு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறான். உடனே நடிகை தன் கணவர் அரசுவின் முதன் மனைவியின் லேட்டஸ்ட் புருஷனிடம் படையெடுத்து இது என் அரசுவுக்கு பிறந்தது. எனக்கே சொந்தம்’’ என்று கூச்சல்போட.. ஐயோ கடவுளே.. வெள்ளைக்காரன்கூட இவ்வளவு ‘முற்போக்காக’ சிந்திப்பானா என்று பிரிட்டிஷ் கதாசிரியர்களிடம் கேட்க வேண்டும்!
‘செல்வி’யில் இரண்டாவது கல்யாணத்திற்காகவே தாமரையை கோமாவில் தள்ளுகிறார்கள். தாமரையின் அப்பாவும், அம்மாவுமே செல்வியின் காலில் விழுந்து ‘நீதான் என் மாப்பிள்ளை ஜி.ஜே.வின் இரண்டாவது மனைவியாக வேண்டும்’ என்று கதறுகிறார்கள். செல்வி ஒப்புக்கொண்டு மாலை மாற்றிக்கொண்டு ஜி.ஜே.யின் கருவை சுமக்க, இப்போது... தாமரை கோமாவிலிருந்து வழித்தெழ வேண்டாமா? இரண்டு பெண்டாட்டிகள் தவிக்க வேண்டாமா?அதே சீரியலில் பிரமாண்டமான முதுகுடன், வில்லத்தனம் செய்துகொண்டு பிரச்னைக்கு அலையும் ரஞ்சனி கேரக்டரை பாருங்கள். நல்ல புருஷனை உதாசீனம் செய்துவிட்டு, தவறான உறவில் தாய்மை அடைந்துவிட்டு, அதையும் மறைத்து கணவனோடு உறவாடுகிறாள். இன்னும் மோசம். மாயா கேரக்டர். தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணத்திற்கு முன்பு ஹோட்டல் ரூமிற்கு அழைக்கும் அளவுக்கு பாரதி காணாத புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிறாள்.
‘கோலங்கள்’ கதையும் என்ன வாழ்கிறது? ஏகப்பட்ட தவறான உறவுகள்... அபி அவளது தங்கைகள் மற்றும் தம்பியும் ஆதித்யாவின் அப்பாவிற்குப் பிறந்தவர்கள். அவர் அபியின் அம்மாவை முதல் தாரமாக மணந்துவிட்டு, பிறகு அவர்களை அம்போ என விட்டுவிட்டு மும்பைக்கு ஓடி ஆதித்யாவின் அம்மா கல்பனாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டவராம். ‘பாதை’ சீரியலில் மோகன் என்கிற பாத்திரம் வரிசையாக நான்கு பெண்களை ஏமாற்றுகிறது!இப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால், ஒருநாள் போதாது. ஒரு குமுதம் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்! முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க, சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை, இவை எல்லாமே குடும்ப சீரியல்கள், மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல் பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! செல்வியில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு, அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக, தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள்.
மனைவி சீரியலில் தன் கணவர் அரசுவை உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில், சைக்கோதனமான நடிகை, பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட, வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும், முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.அவர்கள் ஆதங்கம் நியாயமானது. ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது, குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தன் கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் ஒரு செய்தி. ‘‘சீரியல்தான் எனக்கு அந்த துணிச்சலைக் கொடுத்தது’’ என்கிறார் படு காஷுவலாக.
நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும், சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார்.
அவ்வளவு ஏன், பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன், மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம் பட்சமாகி விடுகிறது. சீரியல் பிசாசுகளையும், அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது! இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!
நன்றி : குமுதம்

இன்றைய குறள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்
அறத்துப்பால் : விருந்தோம்பல்

"புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்க முடியாது"

- ஸ்ரீ ராமகிருஷ்ணர்

தமிழோசை

  • விளையாட்டுத் துறையில் ஊக்க மருந்து உபயோகித்ததாக கண்டறியப்பட்டு ஆறு மாதத்திற்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு வீரரும் அடுத்து நடைபெறக் கூடிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை இழந்து விடுவார்கள்
  • இலங்கையின் வடக்கே ஓமந்தை சோதனைச் சாவடி இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது
  • குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் விடயத்தில் பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் அரசுகள் புதிய வழிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன
  • சீனாவில் எட்டு கிலோ யுரேனியத்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாக ஒரு கூட்டம் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த எட்டு கிலோ யுரேனியத்தை சீன அரசு தேடி வருகிறது.
  • இன்றைய (ஆகஸ்ட் 24 வெள்ளிக்கிழமை 2007) "அஅஅ" செய்திகளுக்கு இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 23, 2007

எக்காலத்துக்கும் பொருந்துவது "திருக்குறள்" மட்டுமல்ல, இந்த மாமேதையின் சொற்பொழிவும்தான்! நான்கு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோமா?


குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை ஜூலை 5, 2003 வாழ்த்துக்கள் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நாளும் கோளும் ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் preference என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்". அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார்.
இவ்வாறாக நான் ஜூலை 25-ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், "சந்திரசேகர் லிமிட்" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படி பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.
இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "I am the universe and universe is my conciousness" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது. The Creator நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்", என்றேன்.
இவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. வானகம் திறந்து வழிவிடும் அந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு
செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறந்தாலும் ஞானமும்
கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே
இந்தப் பாடல் நன்றாக இருந்ததா? இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள்.
அந்தக் குறள்:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
இதன் பொருள் என்ன? The higher you aim you will raise to that level. You will succeed. This is the message. இரண்டு ஆசைகள் நான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன். அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா? இதுவா உண்மை நிலை? நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார்? என்ன குலம்? எந்த நாடு? எந்த மதம்? என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார். இந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும். PURA நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும். இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும். இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம் இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும்
இந்த லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
எனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ஆ.ப.ஜெ அப்துல் கலாம், 5.7.2003 இது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டது.

கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது. அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95-இலக்கம். அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா? இதற்கு விடை காண, வரலாற்றை விவரிக்க வேண்டும். 1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு, பழைய சென்னை மாகாணத்திலிருந்த எல்லையோரப் பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, சித்திரதுருகம், கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளுடனான தனி வரலாறு உண்டு. பத்திராவதி, சிக்கமக்ளூர், சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள், கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர். கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை. பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர். முசுலிம்களோ, பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கன்னடரோ, கருநாடகத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர். தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர். பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும், ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும், பம்பாய் மாகாணத்திருந்து சிலபகுதிகளையும், மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கருநாடக மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் பிழைப்புத் தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் "மொழிவழியில்" கன்னடருக்கு அரிந்துகொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும். அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள், இப்பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், இப்பகுதியில் தொன்று தொட்டுவாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லித் தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர். இந்நிலையில், பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம். பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத்தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராசராசதேவனால் வெல்லப்பட்டன. மாகடிப் பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான். இன்று எலவங்கா என்றழைக்கப்படும், பெங்களுர் பகுதி சோழவள நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. அதற்கு "இலைப்பாக்கநாடு" என்று பெயர். இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோழர்கள் ஆட்சியில் "எலவக்கா" என்றாகி பிறகு "எலவங்கா" என்று திரிந்தது. சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலைநகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால், தமிழ் கங்கர் எனப்பட்டனர். Source : (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )
தொடரும்
அன்புடன்அரவிந்தன்
பெங்களூர்