September 30, 2007

கவியரசு கண்ணதாசனின் குரலில் "அர்த்தமுள்ள இந்துமதம்"

சேதுசமுத்திரத்தில் ஆரம்பித்து இராமாயணம், மகாபாரதம் வரை சர்ச்சை கிளம்பியுள்ள இந்த நேரத்தில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய சொற்பொழிவை அவர் குரலாலேயே கேட்கத்தோன்றியது. எனவே இந்தப் பதிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இது மட்டுமல்ல இன்னும் இது சம்பந்தமான பதிவுகளும், இதைப்பற்றிய அவரின் குரலும் தொடர்ந்து வரும்...
Powered by eSnips.com

இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்கா இதயங்களே! இதோ ஓர் இதயத்தின் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!!

"இன்று இதயதினம்"



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம்!?

  • சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு? : பொதுமக்கள் கேள்வி


சென்னை : தமிழகத்தில் பந்த் நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வழக்கம்போல பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதலே மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடச் சொல்லி வற்புறுத்தப்பட்டன. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் சுப்ரீம் கோர்ட் தடை என்ன ஆச்சு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பஸ்சுக்காக காலையில் இருந்து மணிக்கணக்கில் காத்திருந்த ‌பொதுமக்கள் அரசு பஸ்கள் இயக்கப்படாததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

  • உண்ணாவிரதம் துவங்கினார் கருணாநிதி : ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு


சென்னை : தி.மு.க. அறிவித்த முழு அடைப்புக்கு சுப்ரிம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையொட்டி சென்னை வாலாஜா சாலை அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு இரவோடு இரவாக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத மேடைக்கு வந்து அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். அவருடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காங்கிஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.‌கே.வாசன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதேப்போல தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

  • கோவையில் கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சு பதட்டம்


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை சாய்பாபா காலனியில் ஓருசில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த ஒரு கும்பல் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியது. கற்களை வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

  • தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை : பந்த் இல்லை என்பது கண்துடைப்பு


சென்னை : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (1ம் தேதி) பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்திற்கு சுப்ரிம் கோர்ட் நேற்று அதிரடியாக தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சேது திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அறிவித்தார். பந்த் இல்லை என்று தெரிவித்திருந்தாலும் மாநிலம் முழுவதும் பஸ்கள் எதுவும் இன்று ஓடவில்லை. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி என அனைத்து நகரங்களிலும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த் இல்லை என்பது வெறும் கண்துடைப்பாகிப் போனது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.

  • மதுரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு


மதுரை : முழு அடைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயக்கப்பட்ட தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்டது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் மீது மர்ம கும்பல் கற்களை வீசியது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.



பிளாக்மெயிலுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் : வி.எச்.பி. கருத்து


அகமதாபாத் : சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று (1ம்தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசுவ இந்து பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா, கருணாநிதியின் உண்ணாவிரதம் பிளாக்மெயில் போல உள்ளது என்றார். சுப்ரிம் கோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சி தரத் தக்கதாக இருப்பதாகவும் தொகாடியா கூறியுள்ளார்.

இன்றைய குறள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவு நிலைமை என்பதற்கு அழகாகும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

பொன்மொழி

"தோல்வி மூலம் நாம் பெறப்போகும் உத்திகளுக்காகவேணும் மனிதன் தோல்வியுறவேண்டும்"

  • திமுக-வின் முழு அடைப்புக்கு உச்சநீதிமன்றம் தடை : திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கட்கிழமையோ அல்லது அதன் பிறகு வேறு எந்த நாளிலுமோ இந்தப் போராட்டத்தை நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் வழக்கத்துக்கு மாறாக சிறப்பு அமர்வு மூலம். பி.என். அகர்வால் மற்றும் பி.பி. நவ்லேகர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்தது.
    ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதம்ஸ் பாலம் பகுதியை இடிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன. உண்ணாவிரதம் இருக்கிற போகிறார் தமிழக முதல்வர் அதை எதிர்த்து அதிமுக சார்பிலும் மேலும் சிலரது சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை ஞாயிற்றுகிழமை காலை மூன்று மணி நேரம் நடைபெற்றது. பந்த் என்று தீர்மானித்த பிறகும் அதற்குத் தடை விதிக்கத் தவறியதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் உரிமைகளைவிட பொதுமக்களின் உரிமைதான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இந்த விசாரணையின்போது அனைத்துத் தரப்பினரும் ஆச்சரியப்படும் வகையில் சேதுசமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவதை எதிர்க்கவில்லை என்று திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்தப் பிரச்சினையைப் பற்றி இப்போது நீதிமன்றம் கவலைப்படவில்லை என்றும் பந்த் நடத்தப்படுவது சரியா என்பதுதான் கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். யாருக்கு எதிராக பந்த் நடத்துகிறீர்கள்? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த நீதிமன்றத்துக்கு எதிராகவா? என்று நீதிபதிகள் கேட்டனர். சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே பந்த் நடத்த நீதிமன்றம் தடை விதித்துவிட்டாலும் அதற்குப் பதிலாக திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அறிவித்துள்ளார்
  • சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறது இலங்கையின் வல்லுநர் குழு : இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக்கு அண்மையாக சர்ச்சைக்குரிய இந்தியாவின் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடரப்பட்டால் இலங்கையின் கடல் வாழ் உயிரினங்களுக்கு, மூலப்பொருட்களுக்கும் அது கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென இந்தத்திட்டம் குறித்து ஆராந்துவரும் இலங்கை நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவரான லங்கா ஹைட்ரோலிக் இன்ஸ்டிடியூட்டின் நிறைவேற்று அதிகாரி, மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகள் இந்தியத் தரப்பினரைவிட நன்கு விரிவான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கடலின் தற்போதைய ஓட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதோடு, இங்கே கடலின் மடியில் வாழக்கூடிய தாவரங்கள், மற்றும் உயிரினங்களிற்கும் அவை எதிர்வுகூற முடியாத அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கடலின் மடியில் இருப்பதாகக் கூறப்படும் இராமர் சேது அணையின் குறுக்காக சுமார் 167 கிலோமீற்றர்கள் நீளமாக வெட்டப்படவுள்ள இந்தக் கப்பல் கால்வாய்த்திட்டம் குறித்த இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஏற்கனவே இலங்கை வெளிநாட்டமைச்சிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் : இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற உலக சாம்பியனுக்கான செஸ் போட்டியின் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை அவர் வெற்றி பெற்றார். இந்தப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தமிழோசையிடம் ஆனந்த் தெரிவித்தார். இந்தப் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது என்றும், முக்கியமாக ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரை கிருஷ்சுக்கை வெற்றி கொண்டது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியை திங்கட்கிழமை விளையாட்டு அரங்கத்தில் கேட்கலாம்.
  • மன்னார் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது : இலங்கையின் வடமேற்கே மன்னார் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசியபாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கள்ளிக்குளம் முன்னரங்க பகுதியிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் நிராகரிப்பு : ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை தலிபான்கள் சார்பில் பேசவல்லவர் நிராகரித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் அன்னியப் படைகள் இருக்கும் வரையில் தலிபான்கள் ஒரு போதும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டார்கள் என காரி யூசப் அஹமதி என்ற அப்பேச்சுவார்த்தையாளர் கூறினார்
  • எகிப்தில் சிக்கித்தவித்த பாலஸ்தீனர்கள் காசா திரும்ப அனுமதி : கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக எகிப்தில் சிக்கித்தவித்து வந்த 85 பாலஸ்தீனர்கள், காசாவிற்கு திரும்புவதற்கு எகிப்து அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்

நீ மனிதனாகிறாய்

"எப்போது மற்றவரின் துன்பத்தை உன்னுடையதாய் நினைக்கிறாயோ அப்போதுதான் நீ மனிதனாகிறாய்"

ஐ.ஒ.தூரிகை (I.O.Brush)