July 28, 2007

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

கொட்டாவி நல்லதா கெட்டதா?

ஆவ்வ்வ்வ்... என்று, கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பவர்களை பார்த்தால், "என்ன, சரியா துங்கலியா?" என்று சிலர் கேட்பர்.
கொட்டாவி மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினத்துக்கும் வரும்.

சோர்வு மற்றும் துõக்கத்துக்கான அறிகுறி என்று தான் இதுவரை, கொட்டாவியை பற்றி டாக்டர்கள் பலரும் சொல்லி வந்தது! ஆனால், சமீபத்தில் அமெரிக்க நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், புது தகவல்கள் கிடைத்துள்ளன.

நியூயார்க் அல்பேனி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்கள், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அவர்கள் கூறியது :

கொட்டாவி, நல்லது தான். துõக்கமில்லாமல் இருப்போருக்கு வருவது தான் கொட்டாவி, அதனால், சோர்வு தான் ஏற்படும் என்று சொல்வதெல் லாம் சரி தானா என்ற கேள்வியை, இப்போது கிடைத்துள்ள மருத்துவ உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.

உடலில், ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு அளவில் மாற் றம் ஏற்படும் போது, கொட்டாவி ஏற் படும். கொட்டாவி விடுவதில் இருந்து தான் இந்த இரண்டின் அளவுகள் சீராகின்றன என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால், கொட்டாவி ஏற்பட, ஆக்சிஜனோ, கார்பன்-டை-ஆக்சைடோ காரணம் அல்ல என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளை இயக்கத்தை சீராக்கவே, கொட்டாவி வருகிறது. மூளை இயக் கம் துவண்டு போகாமல், அதை மேலும், வலுப்படுத்தவே, கொட்டாவி வருகிறது என்பது தான் உண்மை என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

நாங்கள் 44 பேரை வைத்து, இதற்கான சோதனையை செய்தோம். அவர்களில் சிலர், சிரித்தபடி இருந்தனர். சிலர், வீடியோ படம் பார்த்தபடி இருந்தனர். இப்படி ஆளாளுக்கு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். எல்லாரும் சில முறையாவது கொட்டாவி விட்டனர். மூக்கில் வெற்றிடம் உள்ளது. அதில் உள்ள ரத்த நாளங்கள், மூளைக்கு குளிர்ந்த ரத்தத்தை அனுப்பும் போது, இப்படி கொட்டாவி ஏற்படுகிறது என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு. ஏ.சி. அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும். வீடியோ பார்ப்பது, படிப்பது, எழுதுவது போன்ற செயல்களின் போதும், கொட்டாவி வரும்.

சங்கீத ஜாதிமுல்லை பாடலைப் பாடிய இந்தச் சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு, சங்கீதக் கலாநிதி, பத்மபூசன் டாக்டர் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் விருதும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார். ஆனால் இந்தச் சிறுவனுக்கு இதைவிட பெரிய பரிசே கொடுத்தாலும் தகும்

அபர்ணா

இன்னொரு திறமையான பாடகி உருவாகிக்கொண்டிருக்கிறார்

குதிரை வண்டி தான் இவரின் சொகுசு கார் புதுச்சேரி
உலக உருண்டையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வாகனங்களை பயன் படுத்துவதை குறைக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளில் சைக்கிள்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ருத்ரமூர்த்தி என்பவர், தனது போக்குவரத்திற்கு தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்திய ரேக்ளா குதிரை வண்டியை பயன் படுத்தி வருகிறார். "எங்கள் குடும்பத்தில் தாத்தா காலத்தில் இருந்தே குதிரை வண்டிகளை பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு, காருக்கு ஆகும் டீசல் செலவுத் தொகையை பயன்படுத்தி, குதிரை வண்டியில் ஒரு மாதத்திற்கு பயணம் செய்யலாம். கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் என எங்கு செல்ல வேண்டி இருந்தாலும் குதிரை வண்டி சவாரிதான். தொடர்ச்சியாக 50 கி.மீ. பயணம் செய்து விட்டு, குதிரைக்கு சற்று ஓய்வு கொடுத்துப் பின்னர் பயணத்தை தொடர்கிறேன். குதிரைக்கு அரை கிலோ கொள்ளு மற்றும் ஏழு கிலோ அருகம்புல் ஆகியவைதான் உணவு' என்கிறார் ருத்ரமூர்த்தி

இன்றைய குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய (ஜுலை 28) "BBC" செய்திகள்கேட்க இணைப்பில் செல்க
BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.10 ஈகை

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

எல்லோருக்கும் கொடுத்துத் தானும் இசைபட வாழும் நற்பண்பைக் கொண்டவர், மக்கள் நிறைந்த ஊரின் நடுவே உள்ள, நல்ல பழம் கொடுக்கும் பெண் பனை மரம் போன்றவர். தான் மட்டும் உண்டு பிறருக்குக் கொடுத்து உதவாத மனிதர்நட்ட நடுக்காட்டில் உள்ள ஆண் பனை மரம் போன்றவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Those who give are like the female palm tree surrounded by the terrace in the midst of the village. They live beloved by many. Men who eat without giving to others, though their family is flourishing, are like the male palm in a burning-ground


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar