October 22, 2007

உறவின் கதை - குறும்படம்

இன்றைய குறள்

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும், இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

தமிழ்நாட்டில் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது - மருத்துவர் இராமதாசு

"அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் எந்தப் பிரச்சினை என்றாலும் அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். ஒரே குரலில் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். முழங்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இங்குதான் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையையும் இப்படிதான் அரசியலாக்கினார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே அனைத்துப் பிரச்னைகளிலும் அப்போதிருந்தே இப்படித்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்" - மருத்துவர் இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக செயல்பட இருக்கிறார்

  • வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள். போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார். தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ். தமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/10/071018_transrose?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1
  • தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே மாதிரியான பாட நெறிக்கான பரிந்துரைகள் : மாணவிகள்தமிழகத்திலுள்ள உயர்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த கல்வியாளர் முத்துகுமரன் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
  • அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் பெரும் தாக்குதல் : இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் புராதன நகராகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடபகுதிக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க விமானப்படைத்தளத்தின் மீது தரையிலும், வான்பரப்பிலும் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்
  • குர்து போராளிகள் பிரச்னைக்கு ராஜீய தீர்வுக்கு துருக்கி முயற்சி : துருக்கி நிலப்பரப்பில் குர்த் இன போராளிகளின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவதற்காக இராக்கிற்குள் துருப்பினரை அனுப்புவதற்கு முன்பாக ராஜீய முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து வழிகளையும் துருக்கி முயன்று பார்க்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி பாபகன் கூறியுள்ளார்
  • கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல் : கென்யாவின் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல்கள் நடப்பதற்கு வழிசெய்யும் முகமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கென்ய அதிபர் ம்வாய் கிபேகி அவர்கள் இன்று கலைத்திருக்கிறார்
  • நியூயார்க் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிவு : அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்து கவலைகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து நியூ யார்க் பங்கு சந்தையில் பங்குகளின் விலை மீண்டும் சரிந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை டவ் ஜோன்ஸ் பங்கு சந்தை திறந்தபோது தொழிற்சாலை பங்குகள் சராசரி கிட்டத்தட்ட ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இது 2.6 ஆறு சதவீதம் சரிந்திருந்தது