November 13, 2016

காவேரி தண்ணீர் உரிமை பிரச்சினை - விழிப்புணர்ச்சி பாடல்




 வணக்கம் ! 
வேறுபாடற்ற மத மற்றும் இன உணர்வு கொண்ட மக்கள் வாழும் இந்திய தேசத்தில் நாளும் நடந்தேறுகிறது கலகங்கள். விட்டுக்கொடுத்து வாழும் தன்மை மலுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் உரிமைகளை உரத்துக் கேட்டும் மறுக்கப்படுகிறது. நியாமான உரிமைகள் உதாசீனப்படுத்தப்படும் எந்த இடத்திலும் போர்க்குணத்துடன் போராட்டங்கள் முளைக்கும் காவேரி நீர் பங்கீடு குறித்த பிரச்னைகளில் அரசியலுக்கு உட்பட்ட நிலையில் மற்றும் இனப் பற்றுதல் என்ற முறையில் பல வன்முறைகள் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டது கண்டு வெகுண்டதன் வெளிப்பாடு இந்தப் பாடல். தயவுசெய்து கூடுமானவரை பகிரவும். மிக்க நன்றி! 

பாடல் வரிகள்…

தொகையாறா
தமிழ்நாட்டு ரத்தநாளம்
காவேரி ஆறு – அத
தவறவிட்டா விவசாயம்
என்னவாகும் கூறு
 
கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்


பல்லவி 1
இங்க நீவேற நான்வேற இல்ல - வேணாம்
நமக்குள்ள பேதங்கள் கொள்ள
நாம பாரத அன்னைக்கி பொறந்தோம்
அத பாதிபேர் இன்னைக்கி மறந்தோம்

மேடு பள்ளங்கள்
மண்ணுல கிடக்கட்டும்
ஓடும் வெள்ளங்கள்
அணைகள கடக்கட்டும்


கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்


சரணம் 1
வானத்த எதிர்பாத்து
பாதி வாழ்க்கை போச்சி
வயவரப்பு செழிச்சாதான்
எங்களுக்கு மீட்சி

இலவசமா கேட்கவில்லை
இத்தனைக்கும் நாங்க
எளக்காரமா பாக்குறீங்க
எப்பவுமே நீங்க

தரை வெடிச்சிக் கெடக்குதுபார்
தாயோட பூமி
ஒருபோகம் அறுப்பறுக்க
ஒத்தவழி காமி


கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்


சரணம் 2
உங்களுக்குக் கோபம் என்ன
உடன்பொறந்த உறுப்பா
எங்களுக்கும் கோபம் வரும்
எழுந்து நிப்போம் நெருப்பா

வருஷத்துக்கு மூனு மாசம்
கெஞ்சிக்கிட்டே இருக்க
வார்த்தைகள மதிக்காம
ஏளனமா மறுக்க

அடங்கிப்போக காரணமே
தாய் பிள்ளை என்று
அடிக்கடி ஏன் அடிதடிகள்
தேவையில்லை இன்று


கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்


சரணம் 3
பழிக்குப் பழி தீர்வுன்னா
பகுத்தறிவு எதுக்கு
ஆத்திரம்தான் கண்ணை மூடும்
அறிவை நீ செதுக்கு

எக்கச் சக்க சேதாரம்
யாருக்கென்ன லாபம்
கரைவேட்டி வன்முறைக்கு
காட்டுகிற தூபம்

அணைக்கட்டி தேக்கி வையி
அது உன் தண்ணீரு
அண்டை நாட்டு மனுஷனாநீ
இந்தியனா கூறு


கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம்


சரணம் 4
தமிழ்மறைய தெறந்து பாத்தா
வீர தீரம் தெறிக்கும் – உங்க
வன்முறைய தெறந்து பாத்தா
மானம் ரோசம் சிரிக்கும்

அன்புகாட்டு சக உயிர்மேல்
என்பதையும் படிச்சோம்
புலியக்கூட முறத்தைக்கொண்டு
தொரத்தி நாங்க அடிச்சோம்

ஒருத்தியோட கோபம் பொங்கி
மதுரை பத்தி எரிஞ்சது
ஒன்னுகூடி தமிழன் வந்தா
ஒங்க கதை முடிஞ்சது


கோரஸ்
ஆகச் சிறந்த தேசம் - இதில்
வாழ்வது சந்தோஷம்
ஆனா வாழ்க்கை நாசம் - மெல்ல
ஆகுது படுமோசம் !

July 02, 2016

"வதம்" தமிழ் திரைப்பட படப்பிடிப்பின்போது