September 29, 2007

5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

1. சர்க்கரை நோய் என்றால் என்ன?


முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்றுபார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்றுவைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.


2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?


பல காரணங்களால் இது நிகழலாம். தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம். இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.


3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?


பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிக பசி, மிக வேகமாக எடை குறைதல், அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப் பையில் தொற்று நோய்


5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?


இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை. பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு

இன்றைய குறள்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

அறத்துப்பால் : நடுவு நிலைமை

கிழக்குக் கடற்கரைச்சாலை - நமது சென்னை


கோவை குண்டு வெடிப்பு அப்துல் நாசர் மதானி விடுதலை

கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தீர்ப்பு : தமிழகத்தின் கோவை நகரில் 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முதல் தண்டனை வழங்கத் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, 41 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது
திமுகவின் முழு அடைப்புக்குத் தடை இல்லை : இதனிடையே, சேதுசமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் அக்டோபர் முதலாம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முழு அடைப்புப் போராட்டத்தைத் தடை செய்ய முடியாது என நீதிபதிகள் அறிவித்தனர்.
எச்ஐவி தொற்றிய தாயின் குழந்தை பராமரிப்பு யார் வசம்? வட இந்திய மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால், அவரது 9 வயது பெண் குழந்தையை அவருடைய பராமரிப்பில் விட முடியாது என்று அந்த மாநிலத்தில் இருக்கும் கீழ் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மத்தியில், இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எச்ஐவி தொற்றை காரணம் காட்டி தங்களுக்கான அடைப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக இவர்களுக்கான குழுக்கள் குரல் கொடுத்தன. இந்த பின்னணியில் சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் இன்று தடை விதித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, எச்ஐவி தொற்றுக்கு உள்ளான பெண்கள் கூட்டமைப்பின் தலைவி பி.கவுசல்யா அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
திருகோணமலை கடற்பரப்பில் கடுமையான மோதல் : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக் கடற்பரப்பில், இலங்கைக் கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளின் அமைப்பின், கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் மோதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர்வரை கொல்லப்பட்டதாகவும் கடற்புலிகளின் 3 படகுகளை கடற்படையினர் நிர்மூலம் செய்ததாகவும், இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்
வவுனியா மற்றும் மன்னாரில் வீடுகள் கையளிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என இப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள 230 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகை தந்த பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இன்றைய (செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

விட்டமின்கள்

விட்டமின் E, விட்டமின் C, B விட்டமின்கள், விட்டமின் D, கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்பு : சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே
இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

விட்டமின் E:
தினசரி அளவு அபாய அளவு 15mg (சிந்தெடிக் Eயில் 33 IU அளவு) 1000 IU அளவு - உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக் கூடியது. கண்ணில் காட்ராக்ட் ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'ஜெப்ரி ப்ளும்பெர்க்' என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த விட்டமினைப் பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளை உறைந்து போக வாய்ப்புண்டு (Haemorrhage). மேலும் ரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.

விட்டமின் C:
தினசரி அளவு அபாய அளவு பெண்களுக்கு 75mg ஆண்களுக்கு 90mg தொடர்ந்து 2000mgக்கு மேல் விட்டமின் C - யால் சளி தடுக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சளி பிடிக்கும் ஆரம்பகட்டங்களில் அதிக அளவு விட்டமின் C - யை தினமும் உட்கொள்பவர்களுக்கு சளியின் தாக்கம் குறைவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்குத் தேவையான அளவு சராசரியாக ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றில் கிடைக்கிறது. புகைப் பிடிப்பவர்கள் மேலும் ஒரு 35mg அளவு உட்கொள்ள வேண்டும். அபாய அளவு மீறினால் வயிற்றுப் பிடிப்பு, மூச்சடைப்பு, கழிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளில் 200mg அளவைத் தாண்டினாலே குடலின் உறிஞ்சும் தன்மை குறையும், குடலில் வருகின்ற கழிவுப் பொருட்களில் நீர் உறிஞ்சப்படாவிட்டால் மலம் கழிச்சலாகப் போகும்.

B விட்டமின்கள்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் 1.3mg 50 வயதிற்கு மேல் ஆண்கள் 1.7mg பெண்கள் 1.5mg 1000mgக்கு அதிகமான போலிக் அமிலம். B6 - 100mg. போலிக் அமிலம் (Folic Acid) (B12 மற்றும் B6) இதயத்தைப் பாதுகாக்கும், பிறப்பில் ஏற்பட்ட குறைகளை நீக்கும், வயோதிகத்திலும் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ரத்ததில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine) எனும் பொருளின் அளவைச் சீராக வைத்திருக்கும். இந்த அளவு
உயர்ந்தால் இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதலியவைகளுக்கு வழி வகுக்கக் கூடியது. கொஞ்ச நாளாகவே மூளை வழக்கமான சுறுசுறுப்போடு இல்லையே என்று தோன்றினால் உங்களுக்கு விட்டமின் B12 குறைபாடு இருக்கலாம். இதன் அளவு மிகக் குறைந்தால் தளர்வு, நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும். வயோதிகர்களுக்கு உணவிலிருந்து B12ஐப் பெறும் தன்மை குறைவதால் அவர்களுக்கு B12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அபாய அளவைத் தாண்டினால் போலிக் அமிலம் B12 குறைபாட்டை நிறைவு செய்வதற்கு பதிலாக நரம்புச் சிதைவில் முடியும். தொடர்ந்து அதிக அளவு உட்கொண்டால் நிலை தடுமாற்றம், மரத்துப் போதல், தசை பலவீனம், நரம்புச் சிதைவு ஆகியவை ஏற்படக் கூடும். ஆனால் தேவையான அளவை மிஞ்சும் ஆபத்து சாதாரணமாக ஏற்படுவதில்லை.

கால்சியம்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயது வரை 1000mg 50 வயதுக்கு மேல் 1200mg - 2500mg வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும். அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.

விட்டமின் D:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் - 200 IU 50 முதல் 70 வரை - 400 IU 70 வயதிற்கு மேல் - 600 IU தொடர்ந்து 1000 - 2000 IU - கால்சியம் மட்டும் தனியே உடலுக்கு பயனளிக்காது. அத்துடன் இந்த 'சூரிய ஒளி' விட்டமினும் கிடைக்கபெற வேண்டும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை நமது உடல் ஏற்றுக் கொள்வதற்கு விட்டமின் D உதவி செய்கிறது. இது பால், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற மிகச் சில உணவுப் பொருள்களில்
மட்டுமே கிடைக்கிறது. ஆனால் சூரிய ஒளி உடலில் படும்போது தோலின் அடியில் இது உற்பத்தியாகிறது. ஆகையால் நீங்கள் வெயிலே படாதவராகவோ, மொடாப் பால்குடியராகவோ இல்லாவிட்டால் உங்களுக்குத் தேவையான அளவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அபாய அளவைத்
தாண்டி தொடர்ந்து உட்கொண்டால் மூச்சடைப்பு, தளர்ச்சி, இதயத் துடிப்பு
வேறுபாடு ஆகியவை ஏற்படக்கூடும்.

மக்னீசியம்:
தினசரி அளவு அபாய அளவு ஆண் - 420mg பெண் - 320mg 320mg - பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து
உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350mg-க்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும்
ஏற்படும்.

இரும்பு:
தினசரி அளவு அபாய அளவு பெண் 50 வயதிற்குள் - 15mg 75mg - குழந்தைகள், விடலைகள் (Teenagers), குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம்
ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.

பருத்திவீரன் முதல் பனிக்கட்டிப் பென்(ண்)குயின்

அடி என்னடி ராக்கம்மா

பின்னனிப்பாடகி கலகல...கல்பனா