September 07, 2007

இயக்குனர் மணிரத்னம்

இளம் இசைக்குயில் ஜனனி

இன்றைய குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்

அறத்துப்பால் : இனியவை கூறல்

ஓசாமா பின்லாடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

கைரோ: முன்று ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த பின்லாடன் தற்போது அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பின்லாடன் வழக்கத்துக்கு மாறாக கேசத்திற்கு டை அடித்து காணப்பட்டார். வெள்ளை டர்பன் மற்றும் வெள்ளை உடையணிந்து காட்சியளித்தார்.30 நிமிடம் ஓடிய அந்த வீடியோவில் அமெரிக்கர்கள் தங்களுக்கே உரிய அதிகாரப்போக்கினை நிறுத்தாத காரணத்தால் ஈராக் போர் முடிவடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் விதமாக மீண்டும் ஓர் பெரிய அளவு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கைவிடுத்ததுடன், அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதன் மூலம் போர் நிறுத்தம் நிகழலாம் எனவும் மதமாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்கிறார்

"எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் மகிழச் செய்கிறவனாகவும் ஒருவன் இருக்க முடியாது. சந்திரன் குளிர்ந்த அமுத கிரணங்களை உலகிற்கு வழங்குகிறான். முழு நிலவைக் கண்டு எல்லா உயிர்களும் உவகையுறுகின்றன. ஆனால் முழு நிலவைக்கண்டு தாமரை குவிந்து விடுகின்றது. சந்திரன் தாமரைக்கு என்ன தீங்கு செய்தான்? ஒன்றுமேயில்லை. சந்திரனைப் போல் உலகுக்கு நன்மை செய்யும் நல்லோரைக் கண்டு சில புல்லோர்கள் இகழ்வார்கள்; வெறுப்பார்கள்; பகைப்பார்கள்; அதனால் நல்லோர்க்கு ஒன்றும் குறைவு உண்டாகாது"

இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு : உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு : இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப் பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள்
முள்ளிக்குளம் பகுதியை கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு :
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் தென்பகுதி கரையோரக் கிராமமாகிய முள்ளிக்குளம் பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன
தமிழ் கட்சிகளின் வருகையைக் கண்டித்து மட்டக்களப்பில் துண்டுப் பிரசுரம் : இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ,ஈ.பி.டி.பி.உட்பட சில தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு சென்னன் படை என்ற பெயரில் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ''ஆலவட்டம் பிடிப்போருக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கும் எச்சரிக்கை" என்ற தலைப்பில் இது தொடர்பான பிரசுரங்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனை வரி 10 வீதமாக அதிகரிப்பு : இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 40 சதவீதத்தினர் தொலைபேசி இணைப்புக்களைக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ள இலங்கை அரசு, நாட்டில் சுமார் 6.3 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகளும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது
மேலும் தொடர்ந்து இன்றை (செப்டம்பர் 07 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு கீழுள்ள இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews