November 25, 2007

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)

(..."நிலாச்சாரல்" மின்னிதழில் பிரசுரமான எனது கட்டுரையின் கடந்தவாரத் தொடர்ச்சி)... சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்..... தொடர்ந்து படிக்கத் தயவுசெய்து இணைப்பில் செல்க...http://www.nilacharal.com/ocms/log/11260710.asp

கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர். பல கவிதை நூல்களையும், கவிதை பற்றிய நூல்களையும் எழுதியவர்.
1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன?
சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது கூண்டுதான்.
2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ளன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?
விமர்சகர்களின் பக்குவமின்மை
3. நிறைவேறாத காதல் கவிதைகள் பலவற்றை நீங்கள் எழுதியமைக்கு காரணம்?
கவிஞர் காதல் கவிதைகளை பாடினால் தன் வாழ்க்கை அனுபவத்தை பாடுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நான் காதலின் பல விதமான மனோபாவங்களைப் பாடியுள்ளேன். குறிப்பாக நிறைவேறாத கவிதைகளின் பாதிப்பு எனலாம்.
4. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் கவிதைகள் எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டின் அவலத்தைச் சுட்டிக்காட்டுவது ஒரு நோக்கம். அரசியல் தெரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தடையில்லை. திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை செய்வது போல் வருபவர்களைப் பிரவேசித்ததால் ஏற்பட்ட சீரழிவுகளை எல்லோரும் அறிவர்.
5. ஆயிரம் திருநாமம் பாடி உருவமற்ற ஒரே கடவுள் என்று குறிப்பதன் நோக்கம் என்ன?
இறைவனுக்கு உருவமில்லையே தவிர, பெயர்கள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதங்களெல்லாம் இணையக்கூடிய ஒரு கொள்கையில் இணைப்பதுதான் என் நோக்கம்.
6. சமூகச் சீர்கேடுகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?
பொருள் வேட்கையின் காரணமாக, நவ நாகரிக வாழ்க்கை முறை காரணமாக, நேர்மை, உண்மை, சுய மரியாதை போன்ற விழுமியங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. இதனால் உலகளவில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு காணப்படுகிறது. கவிஞன் ஒரு பரிபூரணமான அழகிய உலகத்தைக் காணவிரும்புகிறான். அவன் கண் முன்னால் அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கிறபோது அவன் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
7. முரண் கவிதைகள் பெரிதும் எழுதிய கவிஞராகக் கருதப்பெறும் நீங்கள் அங்கதக் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளீர்களே? குறிப்பாக, நளினமாக அங்கதம் செய்கிறீர்களே?
இயல்பாகவே அங்கத உணர்வு எனக்கு பிடிக்கும். கவிதையின் இயல்புகளில் அங்கதமும் ஒன்று. நளினமாகத் தாக்குவதுதான் நாகராகம். தாக்கபடுபவனும் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. அவனை எதிரியாக்கிக் கொள்ளக்கூடாது. சமூக குறைபாடுகளைக் சுட்டும்போது அங்கதத்தின் வழியாகச் சுட்டுவது ஒரு வழி.

இன்றைய குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்


அறத்துப்பால் : அழுக்காறாமை

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை - அஞ்சு ஜார்ஜ்

நான் கடந்து வந்த பாதையில், நான் சந்தித்த சாவல்கள் ஏராளம். அது ஒரு கரடுமுரடான பாதை. கிரிக்கெட்டிற்கு கோடி கோடியாக கொட்டி ஸ்பான்சர் செய்ய நிறைய நிறுவனங்கள் முன் வருகின்றன. 'முதல் மரியாதை', 'தனி மரியாதை' தரப்படுகிறது. ஆனால், மற்ற விளையாட்டுக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதிலும் தடகள வீரர்களை கண்டு கொள்வதேயில்லை. பொருளாதார ரீதியில்தான் இப்படி என்றால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த சந்தோஷத்தையோ அல்லது தோல்வியடைந்தால் அந்த வருத்தத்தையோ பகிர்ந்து கொள்ளக்கூட ஆள் கிடையாது என்பது வருத்தமளிக்கும் உண்மை" - அஞ்சு ஜார்ஜ், தடகள வீராங்கனை

பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்

  • கொல்கத்தாவில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது : இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் கடந்த புதனன்று வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்திந்திய சிறுபான்மை கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இத்ரிஸ் அலி என்ற அவர், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவில் அடைக்கலம் தரக்கூடாது என்று கூறி நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். அன்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு மேற்குவங்க அரசு வற்புறுத்தியது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் போன்றவை கடும் எதிர்ப்புதெரிவித்தன. தற்போது, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவிற்கு திரும்பி வந்தால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் கூறுகின்றார்
  • கிளிநொச்சி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலிலும் வேறு இரண்டு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களிலும் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றர்கள் என்றும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிஃப் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சவுதி அரேபியாவில் இருந்து லாகூருக்கு சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் அடைந்து இருக்கும் நவாஸ் ஷெரிஃப் அதை முடித்து நாடு திரும்புவதற்கு கடந்த மூன்று மாதத்தில் நடத்தும் இரண்டாவது முயற்சி இது. விமானத்தில் பிபிசியிடம் பேசிய நவாஸ் ஷெரிஃப் தன்னுடைய லட்சியம் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முறியடிப்பதுதான் என்பதால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்புடன் ஒத்துப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அவரது வருகையையொட்டி லாகூரில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் செப்டம்பரில் இடம்பெற்றது போல உடனடியாக நவாஸ் ஷெரிப்பை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பது போல தெரியவில்லை என பார்வையாளர்கள் கூறுகின்றனர்
  • தாக்குதலில் ஏராளமான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஆப்கான் அதிகாரிகள் : ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பாக்தியாவில் ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளுடன் நடைபெற்ற மோதலில் ஏராளமான தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்
  • அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை கடுமையாக சாடியுள்லார் ஆங்கிலிக்கன் திருச்சபை தலைவர் : உலகம் முழுவதும் சுமார் எழுபது மில்லியன் ஆங்கிலிக்கன் திருச்சபையை பின்பற்றுவோரின் தலைவரான டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார்.
    இங்கிலாந்து திருச்சபையின் தலைவரும், கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்புமான ரோவன் வில்லியம்ஸ் அவர்கள், பிரதானமாக முஸ்லிம் வாசகர்களையே கொண்ட பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு இக்கருத்துக்களை தெரிவித்தார். பலத்தை தவறாக பயன்படுத்தும் அமெரிக்காவின் போக்கை முற்காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடந்து கொண்ட முறையோடு அவர் ஒப்பிட்டுள்ளார். அத்தோடு உலகம் முழுவதும் செல்வாக்கை பெற முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு இராக்கை ஒரு உதாரணமாக எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
  • மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் ஆர்ப்பாட்டம் : மலேசியாவில் அரசின் தடையை மீறி தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்திய இந்திய சிறுபான்மை மக்களுடன் மலேசிய பொலிஸார் மோதியுள்ளனர். நகரத்தின் மைய பகுதியில் விடியற்காலை குழுமிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்த பொலிஸார் குறைந்தப்பட்சம் ஐம்பது பேரை கைது செய்தனர். மலேசியாவில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மை மலாய் அரசாங்கத்தால் தாங்கள் பாரப்பட்சமாக நடத்தப்படுவதாக இந்தியர்கள் கோபமாக இருக்கின்றனர். இந்த பேரணி இன பதட்டத்தை அதிகரிக்கும் எனக் கூறி இந்த பேரணிக்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்