December 24, 2008

ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்

ரங்கநாத்..... முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. `ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார். அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த 'ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள 'ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், 'எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9068&lang=ta&Itemid=163

December 16, 2008

நக்கிப்பிழைக்கும் சிங்களப் பொன்சேகனின் கொக்கரிப்புகள்!

ஈராக்கிற்குச் சென்ற சியார்ச் புச்சிற்கு (George W Bush) அந்நாட்டு மிடையக்காரர் ஒருவர் செருப்பால் அடி கொடுத்து அவமானம் செய்திருக்கிறார். ஈராக்கில் போர் தொடுத்து பல ஆயிரம் பேர்களைக் கொன்று குவித்த வெறுப்பில் அப்படி நடந்தது என்று அவரும் அந்நாட்டு மக்களும் சொல்வதாக செய்திகள் சொல்லுகின்றன.


அமெரிக்க நாட்டுக்கு வெட்கமான சூழல்தான் :

1987ல் சிங்களத்திற்கு ஆதரவாக இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி நடந்து கொண்டு, அந்நாட்டிற்குப் பயணம் செய்தபோது, தமிழர்களுக்கு எதிராக காங்கிரசு அரசும், சிங்கள அரசும் செய்த அரசியலுக்கு உடந்தையாக இராசீவ் காந்தி இருந்த போதும், இந்தியாவை சிங்களச் சிறுசக்தியின் கையாளாகவே இராசீவ் ஆக்கிய போதும் கூட, இந்தியாவின் மேலும் இந்தியர்களின் மேலும் உள்ள வெறுப்பாலும் பகையாலும் அந்நாட்டின் அரணவீரர் ஒருவர் இராசீவ்காந்திக்குக் கொடுக்கப்பட்ட அரச வரவேற்பின்போது துப்பாக்கியாலேயே அடித்தார். அப்பொழுது இந்தியாவே வெட்கப்பட்டது. அரசியலின் வயதும் வரலாற்றின் வயதும் மிகப் பெரியது; இந்திய அரசு மற்றும் அரசியல்வாதிகளின் காலை நக்கி உதவி பெற்று பிழைப்பை ஓட்டும் பொன்சேகன் அதே இந்திய அரசியல்வாதிகளைக் கோமாளி என்கிறான்.
புச்-ஐ ஈராக்கியன் ஒருவன் செருப்பால் அடித்ததும் இராசீவை சிங்களன் ஒருவன் துப்பாக்கியால் அடித்ததும் பகை வெறுப்பின் வெளிப்பாடுகள்தானே.

இந்தியாவின் பகை நாடுகளுடன் மிகுந்த நட்பு கொண்டுள்ள சிங்களர்கள் இந்தியாவை எப்பொழுதும் பகைவராகவே கருதுபவர்கள். இந்திய வெறுப்பு என்பது சிங்களர்களின் குருதியில் ஊறிய ஒன்று.

ஈராக்கின் அமெரிக்க, புச் வெறுப்பினால் எப்படி ஒரு தனியர் அந்நாட்டின் தலைவரை செருப்பால் டித்தாரோ, அதே வெறுப்பைத்தான் சிங்களர் இந்தியாவின் மேலும் இராசீவ் காந்தியின் மேலும் கொண்டிருந்தனர், கொண்டிருக்கிறார்கள். தீராத அழுக்காறு கொண்டுள்ள அந்தச் சிங்களத்திற்குப் பரிந்து கொண்டுதான் இந்தியாவும் காங்கிரசும் இராசீவ் காந்தியின் கொலைக்கு முன்னரும் சரி பின்னரும் சரி தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களச் சிறுமைக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கின்றன. இந்தியாவை என்றைக்கும் வெறுக்கும் சிங்களர்களுக்கு ஆதரவாக, இந்தியாவின் பகை நாடுகளின் பேரன்பையும் பேராதரவையும் பெற்றுள்ள சிங்களத்திற்கு ஏன் இந்தியா இத்தனை பரிவு காட்டுகிறது?

குறைந்த பட்சம் தமிழ்நாட்டு அழுகுனிகளும், பொய்யர்களும், காங்கிரசுக்காரர்களும் இராசீவ் காந்தி சிங்களவனால் அடித்து அவமானப் படுத்தப்பட்டது இராசீவ் மரணத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதனை ஒத்துக் கொள்வார்கள். இராசீவ் காந்தியை அடித்து அவமானப் படுத்திய சிங்களவர்களைக் குளிர்விக்க இராசீவ் காந்தியின் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை 10,000 தமிழர்களுக்கு மேல் கொன்று குவித்தது.
அப்படிச் சிங்களவர்களைக் குளிர்விக்க வேண்டிய கட்டாயம் இராசீவ் குடும்பத்திற்கும் காங்கிரசுக்கும் என்ன?
10000-த்துக்கும் மேலான தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசும், காங்கிரசும், அதற்குப் பின்னால் பன்னாட்டுச் சதி என்று சொல்லப்படுகிற இராசீவ் கொலையை தமிழ் நாட்டளவில் விசாரிக்கப்பட்ட கொலையை ஈழத்தமிழர்கள் என்றளவில் நிறுத்திவிட்டு, மீண்டும் 2004-ல் ஆட்சிக்கு வந்தபின் மேலும் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குக் காரணம் என்ன?

இப்படி இராசீவ் குடும்பம், இராசீவ் காலத்திலே 10000க்கும் மேலான தமிழர்களைக் கொன்று தனது சிங்கள நேயத்தைக் காட்டியும், பின்னர் இராசீவ் மறைந்த பின்னர், சோனியாகாந்தியும் மன்மோகனும் சிங்களர்களுக்கு நேயமாக இருந்து தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தும், சிங்களனின் இந்திய எதிர்ப்பும், வெறுப்பும், பகையும் துளியும் குறையவில்லை.

அதனால்தான் இன்றைக்குப் பொன்சேகன் என்ற சிங்களப் படைத்தலைவன், "இந்திய அரசியல் வாதிகள் கோமாளிகள்" என்று சொல்கிறான்.

சிங்களன் தொடர்ந்து இந்தியர்களை அவமானப் படுத்தவேண்டிய காரணமும் என்ன?

அன்று இந்திய நாட்டின் தலைமை அமைச்சரான இராசீவ் காந்தியை அடித்ததும் அதே சிங்கள அரணவன்தான். இன்றைக்கு இந்திய நாட்டின் அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்பவனும் அதே சிங்கள அரணவன்தான்.

இப்படித் தொடர்ந்து பக்கத்துப் பகை நாடான சிங்களனிடம் தொடர்ந்து அவமானத்தை இந்தியாவிற்கு அள்ளிக்கொண்டு வரும் பணியைத்தான் இராசீவ் குடும்பத்தினரும், காங்கிரசுக் கட்சியும், நாராயணனும், சிவசங்கரனும் இன்ன பிறரும் செய்து கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து பல்லாயிரம் தமிழர்களை சிங்களனுக்குப் பந்தி வைத்துவிட்டவர்கள்.

இருப்பினும், இந்திய அரசியல்வாதிகள் உலகிலே எந்த நாட்டிலும் இல்லாத சனநாயகத்திற்குச் சொந்தக்காரர்கள். இந்த அரசியல்வாதிகளின் பல்குரல்களையும் பலத்த குரல்களையும் பற்றிப் பேச, இனவெறியிலும், நாசகாரத்திலும், அடக்குமுறையிலும் ஊறிப்போன சிங்களவனுக்கு சிறு அருகதையும் கிடையாது.
செயலலிதாவாகட்டும், தமிழகக் காங்கிரசுக் காரர்களாகட்டும், கருணாநிதி ஆகட்டும் இன்ன பிற இந்திய அரசியல்வாதிகளாகட்டும் - அவர்கள் எம் நாட்டு மக்கள், எமது மக்களுக்காக ஒரு கணமேனும் உழைத்த அரசியல்வாதிகள்.

எமது ஊரிலே பழமொழி சொல்வார்கள். "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று. எமது இந்திய அரசியல்வாதிகளின் அருமையும் எமது சனநாயகத்தின் அருமையும், இனவெறியில் ஊறித்திளைக்கும் பண்பாடற்றவர்களுக்கு மட்டும்தான் கோமாளித்தனமாக இருக்கும்.

எமக்குள், எமது இந்திய நாட்டுக்குள், எமது அரசியல்வாதிகளுக்குள், எமது கட்சிகளுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும்.

அது எமது சனநாயகத்தின், ஒரு மாபெரு பன்முகக் குமுகத்தின் அடிப்படை நாதம்!

அதன் வேர்களும் விழுதுகளும் ஆகிய எமது இந்திய அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொல்ல அறிவும் பண்பாடும் அற்ற வெறியர்களால் மட்டுமே முடியும். அந்த வெறிக் குணத்தைத்தான் சிங்களத்தின் அரணனான பொன்சேகன் காட்டுகிறான்.

வைகோ என்ற எமது தமிழ்-இந்திய அரசியல்வாதி ஏற்ற கொள்கையில் என்றும் நிற்பவர்!


எமது நாட்டின் சனநாயகத்திலே வைகோவின் அரசியல் நிலையிலே எமது மக்கள் அவரின் மாற்றங்களைக் கிடுக்கக் கூடும்! இது எமது சனநாயக அரசியலிலே மிகச் சாதாரணம். சிலர் கிடுக்குவதால் வைகோ எமது நெஞ்சை விட்டு அகன்றவர் இல்லை. தமிழர் நெஞ்சங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்காத இடம் வைகோவிற்கு உண்டென்பது முட்டாள்களுக்குப் புரியாது என்பது போலவே பொன்சேகனுக்கும் புரியவில்லை.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=8582&lang=ta&Itemid=163

December 09, 2008

சர்ச்சைக்குரிய பாபர் மசூதியின் பாரம்பரிய வரலாறும் அதன் திசை திருப்பப்பட்ட சோடிப்புகளும்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது. 'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://manuneedhy.googlepages.com/Babari_Masjid_History.pdf