November 18, 2007

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை : ஒரு உண்மைக் கதை - நவின் (Nawin)

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்! எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க..http://www.nilacharal.com/ocms/log/11190714.asp

இன்றைய குறள்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

அறத்துப்பால் : அழுக்காறாமை

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா?

கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா? அப்படியானால் உங்களது கிரெடிட் கார்டின் எண்ணைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தவோ, தரவோ வேண்டாம். ஏனெனில், உங்கள் கிரெடிட் கார்டு எண் வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் அதைப் பயன்படுத்தி உங்கள் பணத்தைச் சுருட்டிவிட முடியும். இத்தகைய நூதன மோசடிக்கு ஒரு புதுவித சாஃப்ட்வேர் உதவுகிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல். எனவே, அவ்வப்போது உங்களின் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுபோல தனி நபர் கடன் பெறுவதற்கோ அல்லது வேறு உபயோகத்துக்கோ கிரெடிட் கார்டின் "இருபக்க ஜெராக்ஸ் நகல்களை' யாருக்கும் கொடுக்கக்கூடாது.
கிரெடிட் கார்டு மோசடி அதிகரிப்பு: சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை. நீங்கள் "எலக்ட்ரானிக்ஸ் டேட்டா கேப்சர்' என்ற இயந்திரத்தில் "ஸ்வைப்' செய்தால் உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்.
தற்போதோ கிரெடிட் கார்டு இல்லாமலேயே, அதாவது கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உங்களது பெயரில் பணத்தைச் சுருட்டிவிட முடியும். சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது ஃபிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும். தடுப்பது எப்படி? இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட்டுக் காலம் குறித்து தகவல் தெரிவிக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிட வேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மறக்காதீர் பாஸ்வேர்ட் எண்ணை!
கிரெடிட் கார்டு மட்டுமில்லாது டெபிட் கார்டு மோசடிகளும், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண் டாக்டர் ஒருவரின் டெபிட் கார்டு திருடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் டாக்டரின் செல்போனில் இருந்த டெபிட் கார்டு எண்ணை அந்த நபர் தெரிந்து கொண்டார். பின்னர் டெபிட் கார்டை திருடிச் சென்று, பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பாஸ்வேர்ட் முக்கியம்...:
டெபிட் கார்டுகளின் பாஸ்வேர்ட் (ரகசிய இலக்க எண்கள்) நினைவில் வைத்திருப்பது அவசியம் என்கிறது போலீஸ். சிலர் தங்களது செல்போனில், ரகசிய எண்களை பதிவு செய்து வைக்கின்றனர். இன்னும் சிலர் டெபிட் கார்டுகளுக்கான உறைகளிலேயே தங்களது ரகசிய இலக்க எண்களை எழுதி வைக்கின்றனர். அதுபோல எழுதி வைக்கக்கூடாது. சில நேரங்களில் டெபிட் கார்டு தொலைந்து போகும் பட்சத்தில், யாராவது எடுத்து பணத்தை எடுத்துவிட வாய்ப்புள்ளது என்று போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.

கையில்லா ரவிக்கை அணிந்து நடித்தால் அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

தமிழ்த் திரையுலகில் வயது வந்தோர்க்கு மட்டும் என்ற சான்றிதழுடன் வெளிவந்த முதல் படம் வெண்ணிற ஆடை - இயக்கிவர் ஸ்ரீதர். "இந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கையில்லா ரவிக்கை அணிந்திருந்த காரணத்தினால் மட்டுமே இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது எனக்கு வியப்பளித்தது" - ஸ்ரீதர் (சத்தியமாக இது கற்பனையோ காமெடியோ இல்லை... உண்மை : ம்ம்....என்ன செய்ய? "கையில்லா ரவிக்கை எங்கே? ரவிக்கையில்லா கதாநாயகிகள் எங்கே?")

வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம்

  • மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது : மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரிரு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது
  • வட இலங்கை வன்முறை - புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல் : இலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • திருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது : இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்
  • பாகிஸ்தான் மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை எழுபத்தைந்தை தாண்டியது : பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பராச்சினாரில் சுனி மற்றும் ஷியா முஸ்லிம் குழுக்கள் இடையே தொடர்ந்து வரும் மோதலில் எழுபத்தைந்து பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
    இருத்தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மோர்டர் மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்
  • வங்கதேசத்தில் நிவாரணப் பணிகள் தீவிரம் : கடந்த வியாழனன்று கடும் சூறாவளி தாக்கிய வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் சுறுசுறுப்படைந்து வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் தபன் சௌத்ரி இந்தப் புயலை ஒரு தேசியப் பேரனர்த்தம் என்று வர்ணித்துள்ளார்
  • பர்மாவை இடைநீக்கம் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது 'ஆசியான்' : ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பர்மாவை இடைநீக்கம் செய்யுமாறு அமெரிக்க செனட் விடுத்த கோரிக்கையை அவ்வமைப்பின் தலைவர் நிராகரித்துள்ளார்
  • திமிங்கல வேட்டையை ஆரம்பித்துள்ளது ஜப்பான் : ஜப்பானை சேர்ந்த கப்பல்கள் திமிங்கல வேட்டைக்காக தென் கடற்பகுதியை நோக்கி பயணித்து வருகின்றன. இந்த வேட்டையின் போது பல ஆண்டுகளில் முதன்முறையாக ஹம்பேக் எனப்படும் திமிங்கலமும் வேட்டையாடப்படும். கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒப்புதல் மூலம் இந்த வகை திமிங்கலம் வேட்டையாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஹம்பேக் திமிங்கிலத்தின் எண்ணிக்கை வேட்டையாட கூடிய அளவுக்கு அதிகரித்து விட்டதாக கூறியுள்ள ஜப்பான், இந்த பயணத்தின் போது ஐம்பது ஹம்ப்பேக் திமிங்கலங்களையாவது கொல்வது என முடிவு செய்துள்ளது. சர்வதேச சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதை ஜப்பான் கெடுத்துக் கொள்ளப் போகிறது என ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது