June 20, 2007

உலக அகதிகள் நாள்

உலகில், இன்றைய நிலையில் வன்முறைகளால் குறைந்தது 44 மில்லியன் பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்று
ஐ நா மதிப்பிடுகிறது.



தமிழ் நெட் இணையதளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. மேலும் மிக முக்கியமான செய்திகளை "BBC" தமிழோசை வழங்கியிருக்கிறது. முழு செய்திகளையும் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.BBCTamil.com Radio Player



கங்கை அமரன் @ ஜாலிஅமரன்

'மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'
'தம்தன தம்தன தாளம் வரும் - புது ராகம் வரும் - அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்'
'ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது..'
'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே'

மனசில் இனிய நினைவுகளை எழுப்பும் பல பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் கங்கை அமரனிடம் பேசியதிலிருந்து... Please 'click' the link

இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா?

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து. Please click here..http://sadnyvadai.blogspot.com/2007/06/blog-post.html

இன்றைய குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

இலக்கியம் என்பது

நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும், மூட நம்பிக்கைக்கும், சிறிதும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்.

- பெரியார்

"நான்மணிக்கடிகை"


தமிழ்பால் தீராத காதலும், பற்றும், மரியாதையும் கொண்ட எத்தனையோ நபர்களில் இவரும் ஒருவர். திரு.ஆதியக்குடி சம்பத், தற்சமயம் சவூதி அரேபியாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். நம்மைப்போல் தமிழ்மேல் பற்றிருக்கும் எவருக்கும் அவர்பால் பற்றிருப்பது ஆச்சர்யமில்லைதான். நான் நெடுநாட்களாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் தொடர்ந்து எழுதி "தமிழ்ச்சேவை" செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். சுவாசிக்கக்கூட நேரமில்லா வேலைப் பளுவுக்கு இடையிலும் தன்னாலான தமிழ்த்தொண்டை அங்கிருந்து நமக்காகச் செய்யத் தயாராயிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுவார்..ஆவலோடு காத்திருப்போம். இன்று "நான்மணிக்கடிகை"யிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன் தருகிறார். நன்றி.

கள்வம்என் பார்க்கு துயில் இல்லை, காதலிமாட்டு

உள்ளம்வைப்பார்க்கும் துயில் இல்லை, ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயில் இல்லை, அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்.

தமிழ் விளக்கம் :

நான்கு வகையான மனிதர்களுக்கு கண்ணுறக்கம் வராது:

1.பிறர் பொருளை அவருக்குத்தெரியாமல் அபகரிப்பவர்க்கு

2.மனமொத்த அன்புக் காதலியிடம் மனதைக் கொடுத்தவர்க்கு

3.எப்படியாவது பெரும்பொருள்ச் சேர்த்துத் தனவந்தனாகிவிடவேண்டுமென்று சதா எண்ணிக்கொண்டிருப்பவர்க்கு

4.அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பெரும்பொருளைக் காத்துக்காத்துக் கிடப்பவர்க்கு

ஆங்கில விளக்கம் :

In the song which follows, the theme is about four different groups of people who cannot sleep well at night, namely, the thief, a person in love, the person after money and the miser looking after his money: