April 08, 2007

அப்போதெல்லாம்
என்னை உன்னுடன்
அழைத்துப்போகாமல் செல்லும்
உன் பயணத்திற்காக
நான் அழுது புரண்டிருக்கிறேன்
என் தேம்பல் தீர்வதற்குள் நீ
திரும்பி வந்துவிடுவாய்....
ஆனால்
இப்போதும் அலறித்துடிக்கிறேன்....நீ
வரவேயில்லை....

எப்போது அப்பா வருவீர்கள்?
????????????????????????????

நாங்கள் பார்க்காத
நீண்டநாள் பயணம் இதுதானாம்...
அம்மா சொல்கிறாள்....

"தந்தையின் மரணம்"

- வேதனையுடன் உங்கள் வாரிசுகள்।

பாலா - சென்னை

1 comment:

Anonymous said...

hi nawin,
its very good