May 02, 2007

'தண்ணீர் தேசம்' - கவிப்பேரரசு வைரமுத்து

அனுபவம் வேண்டுமா –
இளமையை இழ…
ஆயுள் வேண்டுமா –
போகம் இழ...
கவிதை வேண்டுமா –

உன்னை இழ…
காதல் வேண்டுமா –
இதயத்தை இழ….
வளர்ச்சி வேண்டுமா –

தூக்கத்தை இழ…
வரவு வேண்டுமா –
வியர்வையை இழ…

என் தந்தை எழுதிய "உண்மையான உழவனுக்குத் திருநாளேது" என்ற கவிதைக்கு கிடைத்த பரிசு இந்தத் 'தண்ணீர் தேசம்'. (அந்தக் கவிதையை வெகுவிரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.) அப்போதுதான் நான் இதனைப் படிக்க நேர்ந்தது. இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்று. எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் கம்ப்யூட்டர் மூலமாகவே நீங்களும் படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
(பின் குறிப்பு : நான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே படித்துவிட்டேன்)
தொடர்ந்து படிக்க தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும்.
http://navneethsmart.googlepages.com/ThanneerDesam.pdf



No comments: