May 07, 2007

"கலாச்சாரச் சீர்கேடு"

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
எதிர்வரும் 20 - 25 ஆண்டுகளில் "இந்தியா உலக நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கும்" என்ற நமது கனவுகள் எங்கே? இந்தத் தலைமுறைகள் போய்க்கொண்டிருக்கும் பாதைகள் எங்கே? எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பது உண்மைதான். அதே கையில் இருக்கக் கூடிய சிகரெட்'டைப் போல ஊதித் தள்ளிவிடுவார்களோ என ஒரு புறம் அச்சமாகவும் உள்ளது. எது எப்படியோ? நமது இந்தியா முன்னேறி உலக நாடுகள் வியக்கும் வண்ணம் உயர்ந்து நிற்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அமெரிக்க மங்கையர்கள் போல அனைவரின் கையிலும் சிகரெட்-களும் உயர்ந்து நிற்கும். பிறகு அனைவரும் சொல்வார்கள் "தாயைப்போல பிள்ளை நூலைப்போல ஜீன்ஸ்" என்று. சிகரெட் பிடிப்பதென்று முடிவெடுத்தபின் யார் பார்த்தாலென்ன? சவூதி அரேபிய மோக்கா என நினைத்துக்கொண்டு கலாச்சாரத்தை சந்திசிரிக்க வைக்கும் இந்தத் தலைமுறையை .......ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க பாரதம்!!

No comments: