June 10, 2007

தமிழோசை

தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்

கடந்த வியாழக்கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு பஸ்களில் சுயவிருப்பத்திற்கும் மாறாக அனுப்பிவைத்த சம்பவத்திற்கு இலங்கை அரசு இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இலங்கை அரசின் சார்பில் இதற்கான பகிரங்க வருத்தத்தினை இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.


மேலும் "BBC" இன்றைய (ஜுன் 10 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

No comments: