June 06, 2007

வாழ்ந்த தெய்வம்

வாழ்ந்த தெய்வம்
வான் நோக்கிச் சென்றுவிட்டால்
வராத கண்களிலும்
வற்றாத கண்ணீர் வரும்.
பூமிதன்னில் சேவைசெய்து

புனிதமாகியது
போதுமென்றென்னி
வானகம் சென்றாயோ

அங்கும் உன் புனிதப்
பாதம் பதிக்க
தாயே!

உன்னால் என் தாயகத்துக்குப் பெருமை!
நீர் இப்பூவுலகில் இல்லாவிட்டாலென்ன
உன்னை வானுலகிலாவது சந்திக்கமாட்டேனா?

அதற்காகவேணும் நான் அங்கு வரவேண்டும்!

என் வாழ்நாளில் நேரடியாக என் கண்களால் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்து பலமுறை முயற்சித்துக் கடைசிவரை பார்க்கவே முடியாமல் போன என் இன்னொரு தாய்! ஏதோ அவர் நினைவு வந்தது, அதனால் இதனை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

No comments: